Sunday, March 11, 2012

கடக ராசி பலன்கள் - மார்ச் 14 முதல் 31 வரை

கடக ராசி பலன்கள் - மார்ச் 14 முதல் 31 வரை



மிதுன ராசி பலன்கள் - மார்ச் 14 முதல் 31 வரை

மிதுன ராசி பலன்கள் - மார்ச் 14 முதல் 31 வரை

ரிஷப ராசி பலன்கள் - மார்ச் 14 முதல் 31 வரை

ரிஷப ராசி பலன்கள் - மார்ச் 14 முதல் 31 வரை

மேஷ ராசி பலன்கள் - மார்ச் 14 முதல் 31 வரை

மேஷ ராசி பலன்கள் - மார்ச் 14 முதல் 31 வரை 

Friday, March 2, 2012

கும்பாபிஷேக அழைப்பு


சிவாய நம ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் ஸ்வாமிகள் கலந்து கொள்ளும் கும்பாபிஷேகங்கள் 

Wednesday, February 22, 2012

மார்ச் 1 - 15 ராசி பலன்கள்

ஆறாம் வீடு சிறப்பு தொகுப்பு

ஆறில் இருக்கும் கிரகங்கள்

ஆறாம் வீடு (பாவம்) ரண ருண ரோகஸ்தானம் எனப்படும். தாய்மாமன் பற்றியும் இந்த வீடு உணர்த்தும். கீழா விழுதல், தடைகள், சறுக்கல், சண்டைகள், மனநோய், சிறைவாசம் முதலியவை பற்றியும் இந்த இடத்திலிருந்து அறிய முடியும்.

நல்ல அமசங்களைப் பொறுத்தவரை லாபம், பணி செய்தல் இரண்டையுங்கூட இந்த இடத்திலிருந்த நாம் அறிந்து கொள்ளலாம்.

இந்த வீட்டுக்குரிய கிரகம் பலம் பெற்றிருந்தால் நலல்து. ஆனால் லக்னாதிபதியை விட ஆறாம் வீட்டதிபதி பலம் பெற்றிருப்பது நல்லதல்ல.
லக்னம் என்பது ‘தான்’ ஆறாம் வீடு என்பது ‘பகைவன்’.  இதிலிருந்து ஓர் உண்மையை நாம் அறிந்து கொள்ளலாம். தன் பகைவனை காட்டிலும் தான் பலமாக இருந்தால்தானே பகைவனை முறியடிக்கவும், வெற்றி காணவும் முடியும். ஆறாம் வீட்டதிபதி வலுத்து லக்னேசன் வலுவிழந்து இருந்தால் பகவரிடம் தோற்று அவரது அடிமையாகவும் நிலைகூட ஜாதகருக்கு ஏற்படலாம். அதே போல் நோய் சுமையை தாங்கும் சக்தியை கூட ஜாதகர் இழக்கக்கூடும். அதே வேளையில் லக்னாதிபதி ஆறாம் வீட்டு அதிபதியை காட்டிலும் ஆற்றல் பெற்றிருந்தால் ஜாதகருக்கு நோய் எதிர்ப்புத் தன்மை அதிகரித்து காணப்படும். ஆறாம் வீட்டு அதிபதி ஆட்சி உச்சம் பெற்று சுப பார்வை பெற்றிருந்து லக்னாதிபதியும் வலுப்பெற்று இருந்தால் ஜாதகருக்கு நோயற்ற சுக வாழ்வு அமையும். ஆனால் ஆறாம் வீட்டு அதிபதியுடன் பாபக்கிரஹங்கள் சேர்ந்து லக்னத்தில் இருந்தால் காயம் ஏற்பட வாய்ப்புண்டு.

ஆறாம் வீட்டு அதிபதி மறைந்திருந்தாலோ அஸ்தங்கம் ஆனாலோ ஜாதகருக்கு பகைவரை வெல்லும் பராக்கிரமம் ஏற்படும்.

முதலில் ஆறாம் வீட்டில் இருக்கும் கிரகங்களைப் பற்றிய விளக்கங்களைப் பார்போம். அவற்றைப் பற்றி அறிந்து கொள்வோம்.


6-ல் சூரியன்:
ஜாதகருக்கு பலமுண்டாகும். பகைவரால் அச்சம் உண்டாகும். ஆனால் பகைவரை வெல்லும் ஆற்ற்ல் ஏற்பட்டுவிடும். உயர்வாழ்வு அமையும். செல்வம் சேரும். சிற்றின்ப நாட்டம் அதிகமாகும். கௌரவமான பதவி, அரசு அந்தஸ்து கிடைக்கும். மனைவியின் நலம் சிற்சில நேரங்களில் பாதிக்கப்படும். கடுஞ்செலவு ஏற்படக்கூடும்.

6-ல் சந்திரன்:
ஜாதகருக்கு பகைவர்கள் அதிகமாவார்கள். வயிற்றிவலி காரணமாக உபாதைகள் ஏற்படலாம். பலவீனமான சந்திரன் என்றால் மற்றவகளின் சொற்களுக்கு அடிபணிய வேண்டி வரும். இந்த நிலையில் உள்ள ஜாதக்ருக்கு பொருத்தமான ஊழியர்கள் அமைவார்கள். இளமையில் ஜாதகருக்கும் சந்தோஷம் உண்டாகும். பலமான சந்திரன் என்றால் ஜாதகருக்குப் பெருமை, புகழ், பெருந்தன்மை, சுகவாழ்வு எல்லாம் அமைய வாய்ப்புண்டு.

6-ல் செவ்வாய்:
ஜாதகருக்கு சரீர பலம் ஏற்படும். பகைவரை முறியடிக்கும் வல்லமை உண்டாகும்.  சிற்றின்ப இச்சை அதிகமாக இருக்கும். ஜீரணசக்தி சரியாக இருக்கும். புகழ் பொருள் சேரும். கொப்புளங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பணம் நிரைய செலவாகும். உச்சம் அல்லது ஆட்சி செவ்வாய் என்றால் ஜாதகரை செவ்வாய் உயர்த்துவார். உத்தியோகம் முறையாக பார்த்து ஜீவனம் செய்வார்கள்.

6-ல் புதன்:
ஜாதகருக்கு பொதுவில் பகைவர்கள் இருக்க மாட்டார்கள். ஆனால் வாதப்பிரதிவாதங்கள் சச்சரவுகளுக்கு இடமுண்டு. பேச்சு கூர்மையானதாக இருக்கும். சோம்போறித்தனம் உண்டு. சரீர நோய் உண்டு. க்ஷயம் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம். பலமுள்ள புதனாக இருந்தால் 6ல் இருப்பது நன்மையே. இந்த நன்மை முழுமையாக கிடைப்பதற்கு சுபகிரஹங்களின் பார்வை அவசியம். பலன் பெற்ற புதனால் ஒருவர் தொழிலதிபர் ஆவதற்கு கூட வழியுண்டு.


தொடரும்.....

மீனம்: மார்ச் 1 - 15 ராசி பலன்கள்

மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) நட்புக்காக உதவிகள் புரியும் மீன ராசி வாசகர்களே ராசியில் புதன், இரண்டாமிடத்தில் சந்திரன், ராசிநாதன் குரு, சுக்கிரன், மூன்றாமிடத்தில் கேது, ஆறாமிடத்தில் செவ்வாய், எட்டாமிடத்தில் சனி, ஒன்பதாமிடத்தில் ராகு, பன்னிரெண்டாமிடத்தில் சூரியன் என கிரக நிலை உள்ளது. 12ம் தியதி புதன் உங்கள் ராசியிலிருந்து கும்பத்திற்கும், 14ம் தியதி சூரியன் உங்கள் ராசிக்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.

ராசிநாதன் குரு இரண்டில் அமர ராசியை செவ்வாய் பார்க்க குடும்பத்தில் உங்களுக்கு பெரிய பொறுப்பு தேடி வரும். உடல்நலத்தில் சிறு குரைபாடு வரலாம். இரண்டாம் வீடு பத்தாம் வீட்டிற்கு ஐந்தாம் வீடாக அமைவதால் நாவன்மையால் உங்கள் வேலைகளை சாதித்துக் கொள்வீர்கள். எனினும் குடும்ப ஸ்தானத்தை சனி பார்ப்பது சிறிய அளவிலான குழப்பத்தை தரலாம். ஆன்மீக சொற்பொழிவுகள், உபன்யாசங்கள் செய்வோருக்கு உகந்த காலமாகும்.

பத்தாம் வீட்டை குரு பார்ப்பதால் அரசாங்கத்தால் அனுகூலம் ஏற்படும். உடன்பிறந்த ஒருவருக்கு உங்களால் யோகம் கிடைக்கும். உங்களால் உங்களுக்கு பெருமையும் செல்வமும் கிடைக்கும். வாகன வழிகளில் விரையம் ஏற்படலாம். நிலம் வீடு வாகனம் வாங்கும் போது கவனம் தேவை. முதலீடுகள் செய்யும் போதும் கவனத்துடன் செய்யவும்.

பிள்ளைகளின் மேல் மிக எச்சரிக்கையாக இருக்கவும். தந்தையாருடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எதிரிகளின் தொல்லைகள், கடன்சுமைகள் அடங்கும். தாய் மாமனால் அனுகூலம் கிடைக்கும். தடைபட்டிருந்த திருமணம் இனிதே நடைபெறும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு பொருளும் புகழும் கூடும். அரசியலில் தொல்லைகள் விலகும். மாணவர்கள் கல்வியில் சாதனைகள் படைப்பர்.

சந்திராஷ்டம தினங்கள்: மார்ச் 11, 12, 13

பரிகாரம்: சனீஸ்வரரை வலம் வாருங்கள். தினமும் சிவாலயத்திற்கு சென்று வாருங்கள். (வைணவர்கள் விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்லுங்கள்)

கும்பம்: மார்ச் 1 - 15 ராசி பலன்கள்

கும்பம்: (அவிட்டம் 3, 4, ஸதயம், பூரட்டாதி 1, 2, 3) எதிலும் முழுமையாக ஈடுபடும் கும்ப ராசி வாசகர்களே ராசியில் சூரியன், இரண்டாமிடத்தில் புதன், மூன்றாமிடத்தில் சந்திரன், குரு, சுக்கிரன், நான்காமிடத்தில் கேது, ஏழாமிடத்தில் செவ்வாய், ஒன்பாதமிடத்தில் சனி, பத்தாமிடத்தில் ராகு என கிரக இயக்கம் காணப்படுகிறது. 12ம் தியதி புதன் உங்கள் ராசிக்கும், 14ம் தியதி சூரியன் உங்கள் ராசியிலிருந்து மீனத்திற்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.

ராசிநாதன் சனி சுக்கிரன் வீட்டில் அமர அவரை யோககாரரான சுக்கிரன் பார்க்க மிகவும் சாதகமான நிலையில் உள்ளது. எனினும் ராசியில் சூரியன் இருப்பது உகந்த இடமல்ல. எனவே உடல்நலத்தில் கவனம் தேவை. குடும்பஸ்தானத்தில் அஷ்டமாதிபதி புதன் இருக்க அவரை செவ்வாய் பார்ப்பதும் குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒத்துப்போக வேண்டியதை காட்டுகிறது. மூன்றாமிடத்தில் குரு இருப்பதால் சகோதர சகோதரிகளுடன் உறவு சிறக்கும். உடன்பிறந்தவர்களுக்கு உயர் பதவி கிடைக்கும்.

மன உறுதி அதிகரிக்கும். பயணத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.  பாராட்டுகளும் விருகளும் கிடைக்கும். மத நம்பிக்கை அதிகரிக்கும். ஆன்மீக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். அவர்களுக்கு புதிய வாகனம் வாங்கி கொடுப்பீர்கள். புதிய உத்தியோகம் கிடைக்கும். உங்கள் தொழில் மூலம் பணவரவு அதிகரிக்கும். ஏழில் இருக்கும் செவ்வாயால் எதிரிகள் உங்கள் முன் அடங்குவர். செம்பு, தங்க வியாபாரிகள் பெருத்த லாபம் அடைவர்.

கலைத்துறையில் உள்ளவர்களுக்கு வெளிநாடு பயணங்களால் பணவரவு அதிகரிக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு தைரியம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம்.

சந்திராஷ்டம் தினங்கள்: மார்ச் 09, 10, 11

பரிகாரம்: சனிபகவானுக்கு விளக்கு ஏற்றுவதும், ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் செய்வது நன்மையைத் தரும்.

மகரம்: மார்ச் 1 - 15 ராசி பலன்கள்

மகரம்: (உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2) அடுத்தவரின் உணர்வுகளையும் உணரும் மகர ராசி வாசகர்களே இரண்டாமிடத்தில் சூரியன், மூன்றில் புதன், நான்காமிடத்தில் சந்திரன், குரு, சுக்கிரன், ஐந்தாமிடத்தில் கேது, எட்டாமிடத்தில் செவ்வாய், பத்தாமிடத்தில் ராசிநாதன் சனி, லாபஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வீற்றிருக்கிறார்கள். 12ம் தியதி புதன் கும்பத்திற்கும், 14ம் தியதி அஷ்டமாதிபதி சூரியன் மீனத்திற்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.

மூன்றுக்கும் ஐந்துக்கும் ஏழுக்கும் உடையவர்கள் நான்கில் அமர ராசியாதிபதி பத்தில் இருக்க உங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேறும்.  குடும்பஸ்தானத்தில் அஷ்டமாதிபதி சூர்யன் அமர அவரை செவ்வாய் பார்ப்பது சரியல்ல. குடும்பத்தில் சின்ன சின்ன குழப்பங்கள் வந்து வந்து மறையும். எனினும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குரு சந்திர யோகத்தால் பாராட்டும் புகழும் கிடைக்கும். பிள்ளைகளின் மீது தனி கவனம் தேவை. சிலருக்கு பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வரலாம்.

வாகன வசதிகள் பெருகும். தாய்க்காக எந்த தியாகத்தையும் செய்து அதற்கான அங்கீகாரத்தை பெறுவீர்கள். மூன்றில் இருக்கும் புதனால் சகோதர சகோதரிகளிடையே பாசப் பிணைப்பு அதிகரிக்கும். கல்வி சம்பந்தமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு அதற்கான பாராட்டுதல்கள் பரிசுகளை ஆகியவற்றைப் பெறுவீர்கள். லாபத்தில் இருக்கும் ராகுவினால் இயந்திரம் சம்பந்தமான வியாபாரத்தில் செல்வம் பெருகும்.

சிலருக்கு பரம்பரை தொழிலில் லாபம் கிடைக்கும். உலக வாழ்க்கை, ஆன்மீக வாழ்க்கை இரண்டிலும் நாட்டம் அதிகரிக்கும். உங்கள் வளர்ச்சியினால் உங்கள் தந்தை சந்தோஷம் அடைவார். மன நல ஆலோசகர்களாக இருப்பவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். குறிப்பாக மருத்துவ தொழிலில் இருப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும்.

கலைஞர்கள் ரசிகர்களால் போற்றப்படுவார்கள். அரசியலில் உள்ளவர்களுக்கு பெரிய பொறுப்புகள் வந்து சேரும். மாணவர்களுக்கு பரிசுகளும் பாராட்டுதல்களும் கிடைக்கும்.

சந்திராஷ்டம் தினங்கள்: மார்ச் 07, 08, 09

பரிகாரம்: சூரிய ஆராதனையும், சுப்பிரமணிய ஆராதனையும் செய்யுங்கள்.