Saturday, July 18, 2026

இன்று 18.07.2026 சனிக்கிழமை

 இன்று 18.07.2026 சனிக்கிழமை. ஆடி மாதத்தின் இரண்டாம் நாள். வளர்பிறை பஞ்சமி. வாராகி தேவி வழிபட நன்று. 





இப்படிக்கு, உங்கள் மனத்துக்கினியான் @ பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோதிடர். Mob: 7845119542.

Tuesday, July 14, 2026

இன்று 14.07.2026 செவ்வாய்கிழமை - அமாவாசை

இன்று 14.07.2026 

செவ்வாய்கிழமை. 

அமாவாசை. 



முன்னோர் வழிபாடு செய்ய நன்று. 

இப்படிக்கு, 

உங்கள் மனத்துக்கினியான் 

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோதிடர். 

Mob: 7845119542.

Sunday, July 12, 2026

இன்று 12 07 2026 ஞாயிற்றுக்கிழமை - நித்யாக்னி

இன்று

12 07 2026

ஞாயிற்றுக்கிழமை  



இன்று 

ஆனி ம்ருகசீரிஷம்

நித்யாக்னி 

சிறப்பாக நடைபெற்றது.



மண் பயனுற வேண்டும்.


அடியேன் தாசன்

மனத்துக்கினியான்

@

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

+91 78 45 11 95 42

Saturday, July 11, 2026

இன்று 11 07 2026 சனிக்கிழமை - நித்யாக்னி

 இன்று

11 07 2026

சனிக்கிழமை  





இன்று 

நித்யாக்னி 

சிறப்பாக நடைபெற்றது.






மண் பயனுற வேண்டும்.


அடியேன் தாசன்

மனத்துக்கினியான்

@

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

+91 78 45 11 95 42

அரசுப் பணி

வணக்கம். உங்கள் மனத்துக்கினியான், பரம்பரை ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன். 🙏


முதலில் ஒரு விஷயத்தை தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன்.


நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவன் அல்ல. எந்த இயக்கத்தையும் சார்ந்தவன் அல்ல. என் மனதில் தோன்றும் சமூக அக்கறையுள்ள கருத்துகளை மட்டுமே பகிர்கிறேன்.


2002-ஆம் ஆண்டு, நானும் அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற கனவோடு தயாரானவன். என் குருமாதரும், வளர்ப்புத் தந்தையுமான பெரியப்பாவின் ஆலோசனையின்படி மத்திய அரசுப் பணிகளுக்காக முயற்சி செய்தேன். அப்போது பாலையங்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் பல இளைஞர்கள் பகல் இரவு பாராமல் UPSC, TNPSC போன்ற தேர்வுகளுக்காக உழைத்ததை நேரில் பார்த்திருக்கிறேன்.


அந்த அனுபவம் எனக்கு ஒரு உண்மையை உணர்த்தியது.


அரசுப் பணி என்பது வெறும் வேலை அல்ல; ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கனவு, பல ஆண்டுகளாக அவர்கள் சிந்தும் வியர்வையின் பலன்.


இன்றும் ஒரு ஜோதிடராக என்னிடம் வருபவர்களில் ஏராளமான UPSC, TNPSC, SSC உள்ளிட்ட போட்டித் தேர்வு எழுதும் இளைஞர்கள் உள்ளனர். அவர்கள் எவ்வளவு அர்ப்பணிப்புடன் உழைக்கிறார்கள் என்பதை நான் நேரில் பார்க்கிறேன்.


கரூரில் நடைபெற்ற துயரமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த இழப்பை எந்த வார்த்தைகளாலும் ஈடு செய்ய முடியாது.


ஆனால், அந்தச் சம்பவத்திற்குப் பிறகு 31 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணை வழங்கப்பட்ட செய்தியைப் பார்த்தபோது, என் மனதில் ஒரு கேள்வி எழுந்தது.


அரசுப் பணி என்பது பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து, போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அடைய வேண்டும் என்று கனவு காணும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் இலக்கு. அந்த வாய்ப்புகளை இவ்வாறு வழங்குவது சரியான முன்னுதாரணமா?


இது யாரையும் குறை கூறுவதற்காக அல்ல. உயிரிழந்த குடும்பங்களுக்கு அரசு பல்வேறு நிவாரணங்கள், நிதி உதவி, கல்வி, வாழ்வாதார உதவிகள் வழங்கலாம்; அவை அவசியமானவை. ஆனால் அரசுப் பணி வழங்கும் கொள்கை குறித்து சமூகத்தில் ஆரோக்கியமான விவாதம் நடைபெற வேண்டும் என்பதே என் எண்ணம்.


இது அரசியலைப் பற்றிய பதிவு அல்ல; அரசுப் பணிக்காக பல ஆண்டுகள் போராடும் இலட்சக்கணக்கான இளைஞர்களின் கனவை நினைத்து எழுதிய ஒரு மனக்குரல் மட்டுமே.


நன்றி. 🙏

இன்று 11.07.2026 சனிக்கிழமை - கூர்ம ஜெயந்தி

 இன்று 11.07.2026

சனிக்கிழமை.
கூர்ம ஜெயந்தி.





இப்படிக்கு,
உங்கள் மனத்துக்கினியான்
@
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோதிடர்.
Mob: 7845119542

Friday, July 10, 2026

இன்று 10.07.2026 - வெள்ளிக்கிழமை

 இன்று 10.07.2026 வெள்ளிக்கிழமை. 





க்ருத்திகை விரதம் மற்றும் ஏகாதசி. 


இப்படிக்கு, 

உங்கள் 

மனத்துக்கினியான் 

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோதிடர். 


Mob: 7845119542.

Tuesday, July 7, 2026

இன்று 07 07 2026 செவ்வாய்கிழமை - நித்யாக்னி

 இன்று

07 07 2026

செவ்வாய்கிழமை  



இன்று 

ஆனி ரேவதி

தேய்பிறை அஷ்டமி

நித்யாக்னி 

சிறப்பாக நடைபெற்றது.



மண் பயனுற வேண்டும்.


அடியேன் தாசன்

மனத்துக்கினியான்

@

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

+91 78 45 11 95 42

இன்று 07.07.2026 செவ்வாய்கிழமை. தேய்பிறை அஷ்டமி. பைரவர் வழிபாட்டிற்கு உகந்த நாள்.


 இன்று 07.07.2026 செவ்வாய்கிழமை. 

தேய்பிறை அஷ்டமி. பைரவர் வழிபாட்டிற்கு உகந்த நாள். 


இப்படிக்கு,

உங்கள் 

மனத்துக்கினியான் 

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோதிடர். 

Mob: 7845119542

Monday, July 6, 2026

இன்று 06 07 2026 திங்கட்கிழமை - நித்யாக்னி

இன்று 06 07 2026 திங்கட்கிழமை  





இன்று 

ஆனி உத்திரட்டாதி

நித்யாக்னி 

சிறப்பாக நடைபெற்றது.






மண் பயனுற வேண்டும்.


அடியேன் தாசன்

மனத்துக்கினியான்

@

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

+91 78 45 11 95 42

உண்மையை ஆதாரத்தோடு பேசுவோம். ஜோதிடத்தின் மரியாதையை காப்போம்.

அனைவருக்கும் பரம்பரை ஜோதிடர் மனத்துக்கினியான் @ பெருங்குளம் ராமகிருஷ்ணனின் அன்பின் வணக்கங்கள். 🙏

சமீபத்தில் ஒரு வீடியோவை பார்த்தோம். அதை பார்க்கும்போது ஒரு ஜோதிடராக எங்கள் மனம் மிகவும் வருத்தமடைந்தது.

அந்த வீடியோவில், கரூர் சம்பவம், கும்பகோணம் மகாமக விழா நெரிசல் போன்ற துயர சம்பவங்களை அரசியல் தலைவர்களின் பதவியேற்புடன் தொடர்புபடுத்தி, "உயிர் பலி கொடுத்த பிறகுதான் ஆட்சி கிடைத்தது" என்ற வகையில் பேசப்பட்டிருந்தது.

இந்தக் கருத்து எந்த ஆதாரத்தின் அடிப்படையில் கூறப்படுகிறது என்பது எனக்குப் புரியவில்லை.

ஒரு எளிய கேள்வி...

ஜெயலலிதா அவர்கள் 24.06.1991 அன்று முதலமைச்சராகப் பதவியேற்றார். ஆனால் கும்பகோணம் மகாமக நெரிசல் சம்பவம் 18.02.1992 அன்று நடந்தது. அப்படியிருக்க, பின்னர் நடந்த ஒரு சம்பவத்தை முன்பே கிடைத்த பதவியுடன் எப்படி தொடர்புபடுத்த முடியும்?

அதேபோல், உயிர் பலி கொடுத்தால்தான் முதலமைச்சராக முடியும் என்றால், ஓ. பன்னீர்செல்வம் அவர்கள், எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள், மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆகியோர் முதலமைச்சரானபோது அப்படிப்பட்ட எந்த ஆதாரமும் உள்ளதா?






ஜோதிடம் என்பது பல்லாயிரம் ஆண்டுகள் கடந்த பழமையான ஒரு சாஸ்திரம். அதை ஆதாரமற்ற கருத்துகளாலும், பரபரப்பை உருவாக்கும் பேச்சுகளாலும் மக்களிடம் தவறாகப் புரியவைக்கக் கூடாது.

அரசு பதவியேற்கும் போது பஞ்ச மகார பலி என்பது சில இடங்களில் உண்டு. பாரம்பரிய சாஸ்திரங்களில் கூறப்படும் பஞ்ச மகார பலி என்பது மனித பலியைக் குறிக்காது. வரலாற்றிலும், சாஸ்திரங்களிலும் ராஜ்யாபிஷேக சடங்குகள் மனித பலியுடன் தொடர்புடையவை என்ற நம்பகமான ஆதாரங்கள் இல்லை.

”ஒரு பேட்டியை நடத்துபவரும், அதில் கருத்து தெரிவிப்பவரும் பேசும் விஷயங்களுக்கு முன் உரிய ஆதாரங்களை ஆய்வு செய்வது அவசியம்.”

ஜோதிடத்தை நேசிக்கும் ஒருவராகவும், பல தலைமுறைகளாக ஜோதிட சேவையில் இருக்கும் ஒருவராகவும், அரச குடும்பங்களுக்கு ஜோதிடம் பார்த்த பரம்பரையில் வந்த ஒருவராகவும் நாங்கள் சொல்வது - இதுபோன்ற ஆதாரமற்ற கருத்துகள் ஜோதிடத்தின் மதிப்பைக் குறைக்கக் கூடாது என்பதுதான் எங்கள் வேண்டுகோள்.

உண்மையை ஆதாரத்தோடு பேசுவோம்.
ஜோதிடத்தின் மரியாதையை காப்போம். 🙏

மண் பயனுற வேண்டும்.

அடியேன் தாசன்
மனத்துக்கினியான்
@
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 78 45 11 95 42

இன்று 06.07.2026 - திங்கட்கிழமை

 இன்று 06.07.2026 திங்கட்கிழமை. 

தேய்பிறை சஷ்டி. முருகன் வழிபாட்டிற்கு உகந்த நாள். 



இப்படிக்கு, 

உங்கள் மனத்துக்கினியான் 

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோதிடர். 

Mob: 7845119542

Sunday, July 5, 2026

இன்று 05 07 2026 ஞாயிற்றுக்கிழமை - நித்யாக்னி

 இன்று

05 07 2026

ஞாயிற்றுக்கிழமை  





இன்று 

ஆனி பூரட்டாதி

நித்யாக்னி 

சிறப்பாக நடைபெற்றது.






மண் பயனுற வேண்டும்.






அடியேன் தாசன்

மனத்துக்கினியான்

@

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

+91 78 45 11 95 42

Saturday, July 4, 2026

இன்று 04 07 2026 சனிக்கிழமை - நித்யாக்னி

 இன்று

04 07 2026
சனிக்கிழமை




இன்று
ஆனி சதயம்
நித்யாக்னி
ஸ்ரீவிஷ்ணு ஸகஸ்ரநாம ஹோமம்
சிறப்பாக நடைபெற்றது.




மண் பயனுற வேண்டும்.





அடியேன் தாசன்
மனத்துக்கினியான்
@
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 78 45 11 95 42

Friday, July 3, 2026

இன்று 03 07 2026 வெள்ளிக்கிழமை - நித்யாக்னி

 இன்று

03 07 2026

வெள்ளிக்கிழமை  





இன்று 

ஆனி அவிட்டம்

நித்யாக்னி 

சிறப்பாக நடைபெற்றது.






மண் பயனுற வேண்டும்.


அடியேன் தாசன்

மனத்துக்கினியான்

@

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

+91 78 45 11 95 42

இன்று 03.07.2026 சங்கடஹர சதுர்த்தி

 உங்கள் மனத்துக்கினியான், @ பெருங்குளம் ராமகிருஷ்ணன்




Thursday, July 2, 2026

இன்று திருவோண விரதம். உங்கள் மனத்துக்கினியான் @ பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

 இன்று திருவோண விரதம்.







உங்கள் மனத்துக்கினியான் @ பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்



Saturday, June 27, 2026

காயப்படுத்தியவர்கள் பலர் கை விடாத மனம் ஒன்று

 



காயப்படுத்தியவர்கள் பலர்
கை விடாத மனம் ஒன்று
அதுதான் நம்மை வெற்றியை நோக்கி அழைத்து செல்கிறது
அடியேன் தாசன்
மனத்துக்கினியான் @ Perungulam Ramakrishnan Josiyar
+91 78 45 11 95 42

என் வாழ்வின் முதல் ஹீரோ... என் முதல் குருநாதர்

 "என் வாழ்வின் முதல் ஹீரோ... என் முதல் குருநாதர்...

பெருங்குளம் வெங்கிடாஜல ஜோஸ்யர் @ கண்ணாமணி

- பரமபதிக்கும் வரை மாயக்கூத்தரையே சுவாசமாக கொண்டவர்
- பிறந்து 40-வது நாளிலிருந்து எங்களைத் தன் மகனாக வளர்த்து, வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் வழிகாட்டியவர்.
- பஞ்சாங்கம் வாசிப்பதிலிருந்து ஜோதிடத்தின் நுணுக்கங்கள் வரை எங்களுக்குக் கற்றுத் தந்த எங்கள் முதல் ஆசான்.
- கல்வியே மிகப் பெரிய செல்வம் என்று நம்பி, எத்தனை சிரமங்கள் வந்தாலும் எங்களை எம்.சி.ஏ. வரை படிக்க வைத்தவர்.
- அரசுப் பணியில் உயர்ந்த பதவியில் இருந்தும், நேர்மையை உயிராகக் காத்து வாழ்ந்த மனிதர்.

இன்று பெருங்குளம் வெங்கலாஜல ஜோதிடர் அவர்களின் 18-ஆம் ஆண்டு நினைவு நாளில், எங்கள் நன்றியையும் வணக்கத்தையும் கண்ணீருடன் சமர்ப்பிக்கிறோம்.

'குரு என்பது பாடம் மட்டும் சொல்லுபவர் அல்ல; வாழ்க்கையையே செதுக்குபவர்.'

எங்கள் வாழ்வை செதுக்கிய உங்களின் ஆசிகளும், நீங்கள் விதைத்த அறிவும், நேர்மையும் என்றென்றும் எங்களுடன் பயணிக்கும்.

உங்கள் நினைவு என்றும் அழியாமல் நிலைத்திருக்கும்.

ஓம் சாந்தி.
🙏

அடியேன் ராமானுஜ தாசன்
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 78 45 11 95 42

Tuesday, May 26, 2026

இன்று 26 05 2026 செவ்வாய்கிழமை இன்று வைகாசி ஹஸ்தம் குருப் பெயர்ச்சி சிறப்பு நித்யாக்னி

 இன்று

26 05 2026
செவ்வாய்கிழமை
இன்று
வைகாசி ஹஸ்தம்
குருப் பெயர்ச்சி சிறப்பு
நித்யாக்னி
சிறப்பாக நடைபெற்றது.
மண் பயனுற வேண்டும்.







அடியேன் தாசன்
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 78 45 11 95 42

Monday, April 27, 2026

இன்று 27.04.2026 திங்கட்கிழமை - நித்யாக்னி - ஏகாதசி சிறப்பு பாராயண ஹோமம்

 இன்று

27.04.2026
திங்கட்கிழமை

இன்று
நித்யாக்னி
ஏகாதசி சிறப்பு பாராயண ஹோமம்
சிறப்பாக நடைபெற்றது.










அடியேன் தாசன்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

+91 78 45 11 95 42

Sunday, April 26, 2026

அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி!!!!

 அனைவருக்கும் வணக்கம்.

எங்கள் பிறந்தநாளிற்கு 

வாழ்த்து தெரிவித்த 

அனைத்து நல் உள்ளங்களுக்கும் 

நன்றி!!!!





அடியேன் தாசன்

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்

+91 78 45 11 95 42

Saturday, April 25, 2026

சிவன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நடைபெற்ற யந்திர பூஜை மற்றும் கும்பாபிஷேக அனுபவம்

 சிவன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நடைபெற்ற யந்திர பூஜை மற்றும் கும்பாபிஷேக அனுபவம்

அன்பின் சொந்தங்களுக்கு வணக்கம்.
சமீபத்தில் அம்பத்தூரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோவிலில் நடந்த ஆன்மீக நிகழ்வில் நமக்கு கிடைத்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.
அந்த சிவன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த பலமுறை நாள் குறிக்கப்பட்டிருந்தாலும், பல்வேறு தடைகள் காரணமாக அது நிறைவேறாமல் தாமதமாகிக் கொண்டே இருந்தது.
அந்த சூழ்நிலையில், கோவில் நிர்வாகம் நம்மை அணுகி “பிரஸ்னம்” பார்த்து தீர்வு கூறுமாறு கேட்டுக் கொண்டனர். நாங்கள் பிரஸ்னம் பார்த்து, அந்த நிலத்திற்கும் கோவிலுக்கும் தேவையான சில முக்கியமான பிராயச்சித்தங்கள் மற்றும் ஆன்மீக பரிகாரங்களை பரிந்துரைத்தோம். மேலும், கோவில் வளம் பெறவும், கும்பாபிஷேகம் வெற்றிகரமாக நடைபெறவும் வேண்டிய அனைத்து வழிபாடுகளையும் நம் தலைமையில் செய்து கொடுத்தோம்.



அதன் பிறகு, கும்பாபிஷேகத்திற்கு வேறு ஒருவரை அவர்கள் தேர்வு செய்திருந்தாலும், கோவிலில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் நடைபெறும் யந்திர பூஜையை அடியேன் மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.
"யந்திர பூஜை என்பது கும்பாபிஷேகத்தில் மிகவும் முக்கியமான மற்றும் அவசியமான ஒரு ஆன்மீக நிகழ்வாகும். எனவே, எங்களது நித்ய அனுஷ்டான அனுபவத்துடன், அந்த கோவிலில் உள்ள அனைத்து யந்திரங்களுக்கும் முறையாக பூஜைகள் செய்து கொடுத்தோம்"
இறுதியாக, கடந்த வாரம் கும்பாபிஷேகம் சிறப்பாக நிறைவேறியது. கும்பாபிஷேகம் அன்று எங்களால் கலந்து கொள்ள இயலவில்லை. நேற்று கோவிலுக்கு சென்றோம். அப்போது கோவில் நிர்வாகம் சார்பாக எங்களுக்கு அளித்த மரியாதையும் அன்பும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
மண் பயனுற வேண்டும்.
அடியேன் தாசன்
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 78 45 11 95 42

Wednesday, April 8, 2026

08.04.2026 புதன்கிழமை இன்று நித்யாக்னி

 08.04.2026

புதன்கிழமை 


இன்று 

நித்யாக்னி

சிறப்பாக நடைபெற்றது.


அடியேன் தாசன்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

+91 78 45 11 95 42



Wednesday, March 25, 2026

25.03.2026 புதன்கிழமை - இன்று வஸந்த நவராத்திரி ஏழாம் நாள் நித்யாக்னி

 25.03.2026

புதன்கிழமை 


இன்று 

வஸந்த நவராத்திரி ஏழாம் நாள்

நித்யாக்னி

சிறப்பாக நடைபெற்றது.


அடியேன் தாசன்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

+91 78 45 11 95 42





Sunday, March 22, 2026

22.03.2026 ஞாயிற்றுக்கிழமை இன்று வஸந்த நவராத்திரி நான்காம் நாள் நித்யாக்னி

 22.03.2026

ஞாயிற்றுக்கிழமை 


இன்று 

வஸந்த நவராத்திரி நான்காம் நாள்

நித்யாக்னி

சிறப்பாக நடைபெற்றது.


அடியேன் தாசன்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

+91 78 45 11 95 42




Saturday, March 21, 2026

வர்க்கோத்தமம் - கிரகங்களின் பலம்

 🤔 வர்க்கோத்தமம் - கிரகங்களின் பலம்


ஜோதிடத்தில் வர்க்கோத்தமம் என்பது ஒரு கிரகம் ராசி சக்கரத்திலும் - நவாம்ச சக்கரத்திலும் - ஒரே ராசியில் இருப்பதைக் குறிக்கும் யோகம். இது அந்தக் கிரகத்துக்கு சிறப்பு வலிமை அளித்து, அதன் பலன்களை இரட்டிப்பாக்கும்.


வர்க்கோத்தமம் ஏற்படும் இடங்கள்:

👍ராசி நட்சத்திர பாதங்களின் அடிப்படையில் வர்க்கோத்தமம் உண்டாகும்:

மேஷம் - அஸ்வினி 1

ரிஷபம் - ரோகிணி 2

மிதுனம் - புனர்பூசம் 3

கடகம் - புனர்பூசம் 4

சிம்மம் - பூரம் 1

கன்னி - உத்திரம் 2 

துலாம் - சித்திரை 3 

விருச்சிகம் - அனுஷம் 4 

தனுசு - உத்திராடம் 1 

மகரம் - உத்திராடம் 2 

கும்பம் - சதயம் 3 

மீனம் - ரேவதி 4






👍 இந்தப் பாதங்களில் கிரகம் இருந்தால், நவாம்சத்திலும் அதே ராசியில் இருக்கும்.


கிரகங்களின் பலன்கள்

சூரியன்: அரசு - அரசாங்கம் - ஆட்சி - அதிகாரம் - தந்தை - ஆன்மா சம்பந்தப்பட்ட ஆய்வு, தொடர்பு

​சந்திரன்: மன வலிமை - கற்பனை - தாயார் வழி 

​செவ்வாய்: தைரியம் - ராணுவம்/காவல் - சொத்து - வாகனம் - அதிகாரம் - கோபம் - மருத்துவம்

​புதன்: பேச்சுத் திறன் - எழுத்து திறன் - கணிதம் - வியாபாரம்

குரு: ஞானம் - ஆன்மிகம் - போதனை - குலதெய்வம் - குழந்தை

சுக்கிரன்: அழகு - கலை - சுவை - தாம்பத்யம் - வாழ்க்கைத்துணை

சனி: பொறுமை - ஆயுள் - தொழில் - வெற்றி - கர்மா சம்பந்தப்பட்ட விஷயங்கள்

​ராகு: தந்தை வழி விஷயங்கள் - தோல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் - பெரிய அளவிலான வெற்றிகள்

கேது: தாய் வழி விஷயங்கள் - ஆன்ம பலம் - உடல் அமைப்பு

👍 லக்னம் வர்க்கோத்தமமாக இருந்தால் நீண்டாயுள், செல்வம் உண்டு. 

👍 சுபகிரகங்களுக்கு நல்லது

👍 பாபகிரகங்களுக்கு அதிக தீமை.


உதாரணம்:

குழந்தை பிறந்த தேதி: 15.05.1990; காலை 6.45; சென்னை

பெண் குழந்தை


இந்த ஜாதகத்தில் லக்னம் - சந்திரன் - சனி ஆகியோர் வர்க்கோத்தமம் அடைந்திருக்கிறார்கள்.

லக்னம் வர்க்கோத்தமம் என்பதால் மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர்.

சந்திரன் அஷ்டம ஸ்தானத்தில் வர்க்கோத்தமம் என்பதால் சந்திரன் தசையில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்.

பாக்கிய ஸ்தானத்தில் சனி வக்ர நிலை வர்க்கோத்தமம். தந்தை வழியில் கர்மா அதிகம் கொண்டவர். தந்தை வழி சொத்துக்கள் எதுவும் இவருக்கு வந்து சேரவில்லை. அதே வேளையில் இவர் சுயம்புவாக உழைத்து மிக நல்ல நிலையில் இருக்கிறார்.



🙏 அடியேன் தாசன் 

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

பரம்பரை ஜோதிடர்

+91 78 45 11 95 42


Friday, March 20, 2026

ஷோடசாம்சம் - 16 என்ற எண்ணின் மகத்துவம்

 ஷோடசாம்சம் - 16 என்ற எண்ணின் மகத்துவம்

🤔 16 என்ற எண் மிகவும் உயர்வு பொருந்தியது. ”ஷோடச கலா பூரணம்” என்பது அமாவாசையில் ஆரம்பித்து பௌர்ணமி வரை. 16 கலைகள் முதல் கலையில் ஆரம்பித்து 16வது கலையை அடைகிற போது சந்திரன் பூரண சந்திரன் ஆகிறது. 

வாழ்க்கையில் 16 விதமான செல்வங்களையும் உண்டா இல்லையா என்பதை ஷோடசாம்சத்தை கொண்டு ஆராய முடியும். ஷோடசாம்சம் என்பது ஒரு ராசியை 16 சம பிரிவாக பிரிப்பது. ஒரு பாகை 52 கலை 30 விகலை என்பது அம்சத்தில் ஒரு பாகமாகும். 

சந்தோஷம் - துக்கம் - வாகனம் - வீடு மண் மனை ன்றவற்றினை இதன் மூலம் அறிய முடியும். ஷோடசாம்சத்தில் ராகு கேதுவின் தொடர்பு மிக மிக முக்கியமானதாக கொள்ள வேண்டும். வாழ்க்கை சுகங்களை இதன் மூலமாக சுலபமாக கணக்கிட முடியும். 


ஷோடசாம்சம் அதாவது D16 chart என்பது ஜோதிடத்தில் பகுதி. இதன் மூலமாக ஆடம்பர வாழ்க்கை - நமக்கு சந்தோஷத்தை கொடுக்கக் கூடிய விஷயங்கள் - எப்படி கிடைக்கும் என்பதை நமக்கு காட்டும். 

வாகனப் பிராப்தி 

பணப்பரிவர்த்தனை 

விலை உயர்ந்த பொருட்கள் 

ஆடம்பரம் மூலமாக சந்தோஷம் 

வாகனங்கள் மூலமாக ஏற்படக்கூடிய விபத்து 

முன் ஜென்மத்தில் இருந்த பழக்கவழக்கங்கள் 

 ஆகியவற்றை நாம் கண்டுபிடிக்க முடியும். 


👍 பொதுவாக இந்த ஷோடசாம்சத்திற்கு சந்திரன், சுக்கிரன் மற்றும் ராகு - கேது வைத்து பலன்கள் கூற வேண்டும். ஷோடசாம்ச லக்னத்திற்கு 6 - 8 - 12 ஆம் இடங்களில் லக்னாதிபதியோ அல்லது தசா நாதனோ இருந்தால் பலன்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். இந்த ஷோடசாம்சத்தில் நாம் 1 - 4 - 8 - 9 - 12ம் இடங்களை முக்கியமாக எடுக்க வேண்டும்.

👍கோச்சாரம்:

 கோச்சார ரீதியாக நம்முடைய தசா நாதன் லக்னம் - ராசி - சூரியன் (விதி - மதி - கதி) ஆகிய ஸ்தானங்களுக்கு எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை வைத்து கோச்சார ரீதியாக பலன்களை நாம் கணிக்க வேண்டும்.


👍உதாரணம்:

குழந்தை பிறந்த தேதி:

ஆண்

30.04.2021

1.30 அதிகாலை

சென்னை






சித்திரை மாதம்

கேட்டை நக்ஷத்ரம் - விருச்சிக ராசி

மகர லக்னம் - அவிட்டம் 01ம் பாதசாரம்

புதன் தசை குரு புத்தி நடக்கிறது.


👍ஷோடசாம்ச லக்னம்: ரிஷபம்.

👍கிரகநிலை விபரம்:

1. லக்னத்தில் செவ் - சுக்கிரன். சுக்கிரன் ஆட்சி - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன் ஆட்சி - சுக ஸ்தானத்தில் சந்திரன். 

2. சுகஸ்தானத்தை செவ் - சனி பார்க்கக்கூடிய அமைப்பு. தசாநாதன் புதன் தனவாக்கு ஸ்தானத்தில் ஆட்சியாக இருப்பது சிறப்பு என்றாலும் - சுகஸ்தானத்தை இரண்டு பகை கிரகங்கள் பார்ப்பது சரி இல்லை. 

3. வீடு மண் மனை வாகன யோகம் இக்குழந்தைக்கு இருக்கிறது. 

4. புதன் தசை முடிந்து கேது தசையும் முடிந்து இக்குழந்தையின் 15 வயதில் ஆரம்பிக்கும் சுக்கிர தசை மிக யோகமானதாக இருக்கும். அதுவரை இக்குழந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நன்மை தரும்.


🙏 அடியேன் தாசன் 

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

பரம்பரை ஜோதிடர்

+91 78 45 11 95 42


Thursday, March 19, 2026

19.03.2026 வியாழக்கிழமை - இன்று வஸந்த நவராத்திரி முதல் நாள், நித்யாக்னி

 19.03.2026

வியாழக்கிழமை 


இன்று 

வஸந்த நவராத்திரி முதல் நாள்

நித்யாக்னி

சிறப்பாக நடைபெற்றது.


அடியேன் தாசன்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

+91 78 45 11 95 42





🤔 யோகி - அனுயோகி - அவயோகி - பாகம் 02

 🤔 யோகி - அனுயோகி - அவயோகி - பாகம் 02

யோகி கணிதம்:

குழந்தை பிறந்த தேதி:

ஆண்

30.04.2021

1.30 அதிகாலை

சென்னை


குழந்தை பிறந்த போது இருக்கும் கிரகநிலை:

சூரியன் - 15:28 - பரணி 01ம் பாதம்

சந்திரன் - 23:29 - கேட்டை 03ம் பாதம்


யோகி கணக்கீடு முறை:

சூரியன் பாகை + சந்திரன் பாகை + 93 பாகை 20 கலை  = யோகி. 


015.28

223.29

093.20

-------

332.17

--------


பூரட்டாதி நான்காம் பாதத்தின் மீது யோகி புள்ளி விழுகிறது.

எனவே யோகி குரு - அனுயோகி குரு ஆகும்.

எனவே பூரட்டாதி நக்ஷத்ரத்தில் இருக்கும் கிரகத்தின் தசை புத்தியில் இந்த ஜாதகருக்கு அனுகூலம் வந்து சேரும்.


அவயோகி பூரட்டாதியில் இருந்து 6ம் நக்ஷத்ரம் - க்ருத்திகை ஆகும். இந்த ஜாதகருக்கு க்ருத்திகையில் புதன் அமர்ந்திருக்கிறார். இவர் பிறக்கும் போது புதன் தசை கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் நடக்கிறது. இந்த எட்டு வருடங்களுமே இவர் ஜாதகத்தை பார்க்கும் போது குடும்பத்திற்கு சிரமத்தை கொடுக்கலாம். 

-------------------------------------------------------------

யோகி பலன்கள்

 🔥யோகி கிரகம் தனது திசையில் நல்ல பலன்களை கொடுப்பார். 

 🔥யோகி சாரத்தில் கிரகங்கள் அல்லது மனைவி நட்சத்திரம் இருந்தால் வாழ்க்கை உயர்வு, யோகங்கள் நடக்கும்.

 🔥இந்த மூலம் வேலை, செல்வம், உறவுகளில் மேன்மை ஏற்படும்.

அவயோகி பலன்கள்

அவயோகி திசையில் வருமான இழப்பு, வழக்கு பிரச்சனை, குடும்ப பாதிப்பு போன்ற கெடு பலன்கள் ஏற்படலாம்.

​லக்னாதிபதி அல்லது தசை கிரகம் அவயோகியாக இருந்தால் கடும் தடைகள் ஏற்படும். 

👍பரிகாரங்கள்

அவயோகி கிரகத்தின் தெய்வ வழிபாடு, அனைத்திலும் எச்சரிக்கையாக நடப்பது, தான தர்ம செயல்கள் தீமைகளைக் குறைக்கும்.

🙏 அடியேன் தாசன் 

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

பரம்பரை ஜோதிடர்

+91 78 45 11 95 42


Wednesday, March 18, 2026

இந்த நாள் இனிய நாள் 19.03.2026 -

 இந்த நாள் இனிய நாள் 19.03.2026


#astrologer #horoscopetoday #horoscope #dinapalan #ஜோசியம் #tamilastrologer
#dailyhoroscope #rasipalan #perungulamramakrishnan #trendingnow



🤔 யோகி - அனுயோகி - அவயோகி

 

🤔
யோகி - அனுயோகி - அவயோகி

சில ஜாதகங்களில் கிரகங்கள் உச்சமாகி ராஜயோகத்தை தரும் இடத்தில் இருந்தாலும் அந்த ஜாதகரின் வாழ்க்கை முழுவதும் துன்பத்திலேயே உளல்கிறது. இதற்கு காரணம் அவருக்கு யோகத்தை தர வேண்டிய கிரகங்கள் அவயோகியின் தொடர்பில் இருப்பது தான். ஒரு ஜாதகத்தை ஆராயும் போது முதலில் யோகி அனுயோகி அவயோகிகளை கண்டறிவதே முக்கியமாகும்.

யோகி கணக்கீடு முறை:
சூரியன் பாகை + சந்திரன் பாகை + 93 பாகை 20 கலை = யோகி.
இந்த மூன்றின் கூட்டுத் தொகையை மேஷத்தை முதலாக கொண்டு கணக்கிட எந்த நட்சத்திரத்தில் பாகை விழுகிறதோ அந்த நட்சத்திர அதிபதியே யோகி ஆகும்.
அந்த ராசியின் அதிபதி அனுயோகி.

யோகி நட்சத்திரத்தில் இருந்து கணக்கிட வரும் ஆறாவது நட்சத்திரத்தின் அதிபதி அவயோகியாகும்.
யோகியும் அனுயோகியும் நல்ல பலன்களையும் அவயோகி தீய பலன்களையும் தருவார்கள். ஒரு ஜாதகத்தில் யோகி என்பவர் மிகச்சிறந்த பலனை அந்த ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும் வழங்குவார். யோகி கெடாமல் நல்ல நிலையில் உள்ள ஜாதகங்கள் யோக ஜாதகங்கள் ஆகும். யோகியும் அனுயோகியும் தசா புத்திக்கு அப்பாற்பட்டு அந்த ஜாதகருக்கு நல்ல பலன்களை கொடுப்பார்கள். ஒரு ஜாதகத்தில் யோகியானவர் வக்ரம் நீசம் ஆகாமல் இருக்க வேண்டும் - நமக்கு நற்பலன்கள் கிடைக்கும். அவயோகி ஆறு அல்லது எட்டுக்குடையவரின் சாரமோ - அஸ்தங்கதமோ - வக்கிரமோ பெற்றிருந்தால் கெடுபலன்கள் குறையும். யோகி அவயோகியின் சாரம் பெற்றாலும் - அவயோகியானவர் யோகியின் சாராம் பெற்றாலும் கெடுப்பலன்களை கொடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
நாளை மீண்டும் தொடர்வோம்.

🙏
அடியேன் தாசன்
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பரம்பரை ஜோதிடர்
+91 78 45 11 95 42