Wednesday, March 13, 2024

எப்போது நிரந்தர வேலை கிடைக்கும்?

 ID: 202419


தஎ
பி. தேதி: 17.06.1992
நேரம்: 11.20 காலை.
ஊர்: கரூர்.
தற்போது வேலை இல்லை. எப்போது நிரந்தர வேலை கிடைக்கும். உடல் நிலை குறைபாடு பற்றி சொல்லவும்.

பதில்:
நீங்கள் பிறந்தது ஆனி மாதம் பூராடம் நக்ஷத்ரம் தனுசு ராசி. சிம்ம லக்னத்தில் பூரம் சாரம் பெற்றிருக்கிறீர்கள். ராகு தசை சனி புத்தி நடக்கிறது. இன்னும் 1 வருடம் பாக்கி இருக்கிறது. 2025 பிப்ரவரி வரை சிறிது சிரமமான காலகட்டம். அதன் பின் வாழ்வில் மாற்றங்கள் வரும். நீங்கள் நினைத்தது நடக்கும். எடுக்கும் முயற்சிகள் பலிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். தினசரி சிவபுராணம் சொல்லி வரவும்.


Tuesday, March 12, 2024

திருமணம் எப்போது?

 

ID: 202417
கேள்வி:
பிறந்த தேதி: 20-08-1991; நேரம்: இரவு 10:05; ஊர்: கோயம்புத்தூர். திருமணம் எப்போது?
பதில்:
நீங்கள் பிறந்தது ஆவணி மாதம் 4ம் தேதி. லக்னம் மேஷம் - அசுபதி பாத சாரம். தனுசு ராசி - மூல நட்சத்திரம். உங்களுக்கு தற்போது சந்திர தசை - சனி புத்தி நடக்கிறது. சந்திர பகவான் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி. மேலும் அவர் பாக்கிய ஸ்தானத்தில் அவரது நட்பு வீட்டில் சஞ்சரிக்கிறார். உங்களுடைய பாக்கிய ஸ்தானம் குரு பகவானின் வீடாகும். சனி பகவான் 10க்குடையவர். அவரது வீட்டிலேயே ஆட்சி நிலையில் இருக்கிறார். இது விஷேஷமான அமைப்பாகும். திருமணத்திற்கு 7 - 8 ஆகிய இடங்கள் முக்கியமாக கருதப்படுகிறது. 7 மற்றும் 8க்குடைய சுக்கிர பகவானும், செவ்வாய் பகவானும் இணைந்து சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார்கள். இது அவர்களுக்கு பகை வீடாகும். 30 வயதைக் கடந்தவர் என்பதால் உங்களுக்கு இவர்கள் இருப்பால் தோஷம் ஒன்றுமில்லை. கோச்சாரப்படி குருபகவானின் ஒன்பதாம் பார்வை உங்களின் ராசியைப் பார்ப்பதால் உங்களுக்கான திருமண ஆகக்கூடிய நேரமாக இப்போது இருக்கிறது.
செவ்வாய் பகவான் மற்றும் சுக்ர பகவானை வணங்க திருமணம் விரைவில் கை கூடி வரும். முருகப்பெருமான் மற்றும் மஹாலட்சுமி தேவியை தொடர்ந்து வணங்கி வர நன்மையே நடக்கும்.

பொருளாதார நிலைமை குறித்தும், கடன்கள் எப்போது தீரும் என்பது குறித்தும்.

ID:202418

கேள்வி:
பிறந்த தேதி: 09-03-1963; நேரம்: இரவு 08:01; ஊர்: வேலூர். பொருளாதார நிலைமை குறித்தும், கடன்கள் எப்போது தீரும் என்பது குறித்தும்.
 
பதில்:
உங்கள் ஜாதகப்படி நீங்கள் பிறந்தது மாசி மாதம் 25ம் தேதி. கன்னி லக்னம் - ஹஸ்தம் பாதசாரம். சிம்ம ராசி - பூரம் நட்சத்திரம். உங்களுக்கு 15-07-2024 வரை குரு தசை - சனி புத்தி நடந்து கொண்டிருக்கிறது. அதன் பிறகு புதன் புத்தி தொடங்குகிறது. புதன் பகவான் உங்கள் ஜாதகப்படி தொழில் ஸ்தான அதிபதி ஆவார். மேலும் குரு பகவான் சுகஸ்தான அதிபதி ஆவார். குரு பகவான் ஆட்சியாகவும் இருக்கிறார். இருவரின் ஆசிர்வாதமும் சேர்ந்து வரும் போது உங்கள் பொருளாதார நிலை உயர வாய்ப்பிருக்கிறது. அதவாது இந்த குரு தசையில் புதன் புத்தியில் உங்களின் பொருளாதார பிரச்சனைகள் தீர வழி பிறக்கும். 2025 - அக்டோபர் மாதத்திற்குள் உங்களின் கடன்கள் குறைந்து நிம்மதியாக இருப்பீர்கள். கவலை வேண்டாம்.
 
குரு பகவான் வரும் சித்திரை மாதம் உங்கள் ராசியைப் பார்க்கிறார். உங்களின் நிலை உயரும் நேரம் இந்த காலகட்டமே. தினமும் புதன் அதிபதி பெருமாள் மற்றும் குரு பகவானையும் பிரார்த்தனை செய்து வர உங்களின் பிரச்சனைகள் தீரும்.


Wednesday, March 6, 2024

குல தெய்வ வழிபாட்டை விட்டு விடாதீர்கள்

 அவன் சொன்னான்
இவன் சொன்னான்னு
குல தெய்வ வழிபாட்டை விட்டு விடாதீர்கள். 

அதுவே என்றும் நம்மை காக்கும்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542

எனது ஜாதகம் சுத்த ஜாதகமா

SD

1.4.1991,
பிறந்த நேரம் 6.50 இரவு,
பிறந்த இடம் அரூர்.
எனது ஜாதகம் சுத்த ஜாதகமா எனக்கு எப்போது திருமணம் நடக்கும்தெரிவிக்கவும் சார்
 
பதில்:
நீங்கள் பிறந்தது பங்குனி மாதம் - ஸ்வாதி நக்ஷத்ரம் - துலா ராசி - கன்னியா லக்னம் - சித்திரை 1ம் பாதம். சனி தசை சுக்கிர புத்தி நடக்கிறது. ஏழாமிடத்தில் சூரியன் இருக்கிறார். பொதுவாக சூரியன் ஏழாமிடத்திலோ அல்லது லக்னத்திலோ இருந்தால் தோஷம் என்று சாஸ்திரம் சொல்கிறது. ஆனாலும் சப்தமாதிபதி குரு பகவான் உச்சமாக இருப்பது சிறப்பு. வரும் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு உங்களுக்கு நல்லபடியாக திருமணம் நடைபெறும். வரும் பெண் சொந்தமில்லை - அசல். ஒரே பெண்ணாக இருக்க மாட்டாள். குழந்தை பாக்கியம் சிறப்பு. ஒருமுறை ஏகாதச ருத்ர ஹோமம் செய்யவும்.

Sunday, March 3, 2024

எனக்கு எந்த தொழில் செய்தால் சிறப்பாக இருக்கும். எனது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்.

 Name: AJ D O B : 29 / 03 / 1991, 4.20 AM, KUMBAKONAM. எனக்கு எந்த தொழில் செய்தால் சிறப்பாக இருக்கும். எனது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும். 

 

பதில்: பங்குனி மாதம் பூரம் நக்ஷத்ரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு தற்போது ராகு தசை புதன் புத்தி நடக்கிறது. கும்ப லக்னத்தில் சதயம் சாரம் பெற்று இருக்கிறீர்கள். தற்போதைய நேரம் மிகுந்த அலைச்சலையும் விரையத்தையும் உண்டாக்கலாம். அலுவலக மேலாண்மை போன்ற வேலை உங்களுக்கு கிடைக்கும். அதே போல் கன்சல்டண்ட், ஏற்பாட்டாளர் போன்ற வேலைகளும் சிறப்பாக இருக்கும். திருமணம் 2025ல் நடக்கும். நல்ல வாழ்க்கை அமையும். தினசரி முன்னோர்கள் வழிபாடு செய்யவும். குலதெய்வத்தை பிடித்துக் கொள்ளவும். 

 

#astrologer #horoscopetoday #dinapalan #ஜோசியர் #tamilastrology
#dailyhoroscope #rasipalan #perungulamramakrishnan
 


Saturday, March 2, 2024

அரசாங்க வேலைக்கு அல்லது நிரந்தர பணிக்கு வாய்ப்பு உள்ளதா

 பெயர்: க.ஜெ

பிறந்த தேதி : 03.03.2001.
பிறந்த நேரம்: மதியம் 1.05.
பிறந்த ஊர் : அரியலூர்.
அரசாங்க வேலைக்கு அல்லது நிரந்தர பணிக்கு வாய்ப்பு உள்ளதா, வீடு கட்டும் யோகம் உள்ளதா, திருமணம் எந்த வயதில் நடைபெறும்.

பதில்:
மாசி மாதம் ரோகினி நக்ஷத்ரம் ரிஷப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ராகு தசை சூர்ய புத்தி நடக்கிறது. மிதுன லக்னத்தில் பிறந்துள்ள உங்களுக்கு ராகு பகவான் லக்னத்திலேயே சுய சாரம் பெற்று பலமாக சஞ்சரிக்கிறார். மிக நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. அரசு வேலைக்கு முயற்சிக்கவும். கண்டிப்பாக கிடைக்கும். 27 வயது பூர்த்தியான பின் திருமணத்திற்கு முயற்சிக்கவும். திருமணத்திற்கு பிறகு சொந்த வீடு அமையும். 
 

Sunday, February 25, 2024

குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும்.

 ஷாலினி
D.O.F. 12.10.1989
Tlme. 9.24.p.m
Birth place. Pattukkottai
திருமணமாகி 6  வருடமாகிறது. குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும்.

பதில்:
நீங்கள் பிறந்தது வ்ருச்சிக லக்னம் - அனுஷம் 3ம் பாதம் சாரம். புரட்டாசி மாதம் சதய நக்ஷத்ரத்தில் பிறந்துள்ளீர்கள். தற்போது சனி தசை ராகு புத்தி நடக்கிறது. சனி பகவான் தைரிய சுகாதிபதியாக இருக்கிறார். அவர் தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் சாரம் பெற்று சிம்மத்தில் அம்சம் பெற்றார். இந்த வருடம் சித்திரையிலிருந்து அடுத்த சித்திரைக்குள் நல்லபடியாக குழந்தை கிடைக்கும். பரிகாரம் ஏதும் தேவையில்லை.

குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டிய குறிப்புகள்:

 குழந்தை பிறந்தவுடன்  செய்ய வேண்டிய குறிப்புகள்:
⦁    எந்த நக்ஷத்ரமும் நல்ல நக்ஷத்ரம்தான்
⦁    எந்த ராசியும் நல்ல ராசிதான்
⦁    எந்த லக்னமும் நல்ல லக்னம்தான்
⦁    எந்த கிரகமும் நல்ல கிரகம்தான்
⦁    யோகங்களை பெரிதாக பார்க்க வேண்டிய அவசியமில்லை
⦁    கரிநாள் – தனிய நாள் – பஞ்சகம் – ராகு காலம் – எமகண்டம் – குளிகை என எதுவும் பார்க்கவேண்டிய அவசியமில்லை.
⦁    குழந்தை பிறந்தவுடன் ஜோதிடரிடம் ஆலோசனை செய்து பெயர் வைக்கவும். முடிந்தவரை வீட்டிலுள்ள பெரியவர்களின் பெயரையோ அல்லது குல தெய்வத்தின் பெயரையோ வைக்கவும்.
⦁    குழந்தை பிறந்தவுடன் பிறப்புச் சான்றிதழ் வாங்குவது அவசியம்
⦁    குழந்தை பிறந்தவுடன் ஏதேனும் தானம் செய்யவும்.



 

 

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
குரு பரம்பரை ஜோதிடம்
+91 7845 11 9542

Monday, February 19, 2024

கடந்த 3 நாட்களாக திருநெல்வேலி சீமையில் சுற்றிய போது சில தகவல்கள்

 கடந்த 3 நாட்களாக திருநெல்வேலி சீமையில் சுற்றிய போது சில தகவல்கள்:

1. இன்னும் பல இடங்களில் சாலை வசதி சரியாகவில்லை.

2. பல குடும்பத்தினர் இன்னும் வெள்ளத்தின் கஷ்டங்களில் இருந்து வெளியே வரவில்லை.

3. பெரும்பாலான பொருட்கள் அனைத்துமே தொலைத்திருக்கிறார்கள்.

4. பலர் தொழிலை இழுத்து மூடி விட்டனர்.

5. கிட்டத்தட்ட 15 வருடங்கள் பின்னோக்கி இருப்பதை பார்க்க முடிகிறது.

6. பலருக்கு அரசு கொடுத்த 6000 நஷ்ட ஈடு பற்றவில்லை.

7. பலர் வாகனங்களை இழந்திருக்கிறார்கள்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845119542