செப்டம்பர் மாத விசேஷங்கள்:
01 - குலச்சிறையார் குருபூஜை
03 - குங்கிலியக் கலயனார் குருபூஜை
04 - மூலம் நக்ஷத்ரம்
05 - சுக்ல பக்ஷ ஸர்வ ஏகாதசி
06 - சுக்லபக்ஷ சனி மஹாபிரதோஷம், ஓணம் பண்டிகை
07 - நடராஜர் அபிஷேகம், திருவோண விரதம்
08 - பௌர்ணமி பூஜை - விரதம்
09 - மஹாளயபக்ஷ ஆரம்பம்
12 - கிருஷ்ணபக்ஷ சங்கடஹர சதுர்த்தி
13 - மஹாபரணி
14 - கிருத்திகை, கிருஷ்ணபக்ஷ சஷ்டி
16 - வைகானஸ ஸ்ரீஜெயந்தி, மத்யாஷ்டமி, பாஞ்சராத்ர ஸ்ரீஜெயந்தி
19 - கிருஷ்ணபக்ஷ ஏகாதசி
20 - புரட்டாசி முதல் சனிக்கிழமை, கிருஷ்ணபக்ஷ வைஷ்ணவ ஏகாதசி, ஆயில்யம் நக்ஷத்ரம்
21 - கிருஷ்ணபக்ஷ மஹாபிரதோஷம்
22 - மாஸ சிவராத்திரி, துவாபரயுகாதி, அருள்நந்திசிவாச்சாரியார் குருபூஜை
23 - சர்வ மஹாளய அமாவாசை
24 - மஹாளயபக்ஷ முடிவு, நவராத்திரி ஆரம்பம், உத்ரம் நக்ஷத்ர விரதம்
25 - சந்திர தரிசனம்
27 - சுக்லபக்ஷ சதுர்த்தி, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை, ஸ்வாதி நக்ஷத்ரம்
29 - சுக்லபக்ஷ சஷ்டி
30 - சஷ்டி விரதம்
செப்டம்பர் மாத கிரக பாதசார விபரங்கள்:
செப்டம்பர் மாத ராசிபலன்கள்:
01 - குலச்சிறையார் குருபூஜை
03 - குங்கிலியக் கலயனார் குருபூஜை
04 - மூலம் நக்ஷத்ரம்
05 - சுக்ல பக்ஷ ஸர்வ ஏகாதசி
06 - சுக்லபக்ஷ சனி மஹாபிரதோஷம், ஓணம் பண்டிகை
07 - நடராஜர் அபிஷேகம், திருவோண விரதம்
08 - பௌர்ணமி பூஜை - விரதம்
09 - மஹாளயபக்ஷ ஆரம்பம்
12 - கிருஷ்ணபக்ஷ சங்கடஹர சதுர்த்தி
13 - மஹாபரணி
14 - கிருத்திகை, கிருஷ்ணபக்ஷ சஷ்டி
16 - வைகானஸ ஸ்ரீஜெயந்தி, மத்யாஷ்டமி, பாஞ்சராத்ர ஸ்ரீஜெயந்தி
19 - கிருஷ்ணபக்ஷ ஏகாதசி
20 - புரட்டாசி முதல் சனிக்கிழமை, கிருஷ்ணபக்ஷ வைஷ்ணவ ஏகாதசி, ஆயில்யம் நக்ஷத்ரம்
21 - கிருஷ்ணபக்ஷ மஹாபிரதோஷம்
22 - மாஸ சிவராத்திரி, துவாபரயுகாதி, அருள்நந்திசிவாச்சாரியார் குருபூஜை
23 - சர்வ மஹாளய அமாவாசை
24 - மஹாளயபக்ஷ முடிவு, நவராத்திரி ஆரம்பம், உத்ரம் நக்ஷத்ர விரதம்
25 - சந்திர தரிசனம்
27 - சுக்லபக்ஷ சதுர்த்தி, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை, ஸ்வாதி நக்ஷத்ரம்
29 - சுக்லபக்ஷ சஷ்டி
30 - சஷ்டி விரதம்
செப்டம்பர் மாத கிரக பாதசார விபரங்கள்:
சூர்யன்
ஆங்கில தேதி
|
தமிழ் தேதி
|
ம. நி.
|
நஷத்ரம்
|
3/9
|
ஆவணி 18
|
இ. 11.20
|
பூரம் 2
|
7/9
|
22
|
கா. 9.49
|
பூரம் 3
|
10/9
|
25
|
இ. 8.17
|
பூரம் 4
|
14/9
|
29
|
கா. 6.23
|
உத்தரம் 1
|
17/9
|
புரட்டாசி 1
|
மா. 4.26
|
உத்தரம் 2
|
20/9
|
4
|
இ. 2.28
|
உத்தரம் 3
|
24/9
|
8
|
ப. 12.08
|
உத்தரம் 4
|
27/9
|
11
|
இ. 9.46
|
ஹஸ்தம் 1
|
சந்திரன்
ஆங்கில தேதி
|
தமிழ் தேதி
|
ம. நி.
|
ராசி
|
1/9
|
ஆவணி 16
|
கா. 9.02
|
வ்ருச்சிகம்
|
3/9
|
18
|
ப.1.56
|
தனுசு
|
5/9
|
20
|
மா.5.10
|
மகரம்
|
7/9
|
22
|
இ 7.35
|
கும்பம்
|
9/9
|
24
|
இ. 10.05
|
மீனம்
|
11/9
|
26
|
இ. 1.31
|
மேஷம்
|
14/9
|
29
|
கா. 6.45
|
ரிஷபம்
|
16/9
|
31
|
ப. 2.24
|
மிதுனம்
|
18/9
|
புரட்டாசி 2
|
இ. 12.23
|
கடகம்
|
21/9
|
5
|
ப. 11.53
|
சிம்ஹம்
|
23/9
|
7
|
இ. 11.21
|
கன்னி
|
26/9
|
10
|
கா. 9.13
|
துலாம்
|
28/9
|
12
|
மா. 4.39
|
விருச்சிகம்
|
30/9
|
14
|
இ. 9.47
|
தனுசு
|
செவ்வாய்
ஆங்கில தேதி
|
தமிழ் தேதி
|
ம. நி.
|
நஷத்ரம்
|
1/9
|
ஆவணி 16
|
இ. 7.26
|
விசாகம் 4
|
6/9
|
21
|
மா. 5.13
|
அனுஷம் 1
|
11/9
|
26
|
மா. 3.00
|
அனுஷம் 2
|
16/9
|
31
|
ப. 12.47
|
அனுஷம் 3
|
20/9
|
புரட்டாசி 4
|
இ. 2.45
|
அனுஷம் 4
|
25/9
|
9
|
ப. 1.53
|
கேட்டை 1
|
29/9
|
13
|
இ. 1.02
|
கேட்டை 2
|
புதன்
ஆங்கில தேதி
|
தமிழ் தேதி
|
ம. நி.
|
நஷத்ரம்
|
2/9
|
ஆவணி 17
|
ப. 2.47
|
ஹஸ்தம் 1
|
4/9
|
19
|
மறு. கா. 3.08
|
ஹஸ்தம் 2
|
7/9
|
22
|
மறு. கா. 5.10
|
ஹஸ்தம் 3
|
11/9
|
26
|
ப. 11.27
|
ஹஸ்தம் 4
|
16/9
|
31
|
ப. 2.25
|
சித்திரை 1
|
24/9
|
புரட்டாசி 8
|
மா. 4.00
|
ஹஸ்தம் 4 (வ)
|
29/9
|
13
|
மா. 5.02
|
ஹஸ்தம் 3 (வ)
|
குரு
ஆங்கில தேதி
|
தமிழ் தேதி
|
ம. நி.
|
நஷத்ரம்
|
13/9
|
ஆவணி 28
|
மறு. கா. 3.11
|
ஆயில்யம் 2
|
சுக்ரன்
ஆங்கில தேதி
|
தமிழ் தேதி
|
ம. நி.
|
நஷத்ரம்
|
1/9
|
ஆவணி 16
|
இ. 10.00
|
மகம் 1
|
4/9
|
19
|
மா. 3.28
|
மகம் 2
|
7/9
|
22
|
கா. 8.55
|
மகம் 3
|
9/9
|
24
|
இ. 2.22
|
மகம் 4
|
12/9
|
27
|
இ. 7.50
|
பூரம் 1
|
15/9
|
30
|
ப. 1.17
|
பூரம் 2
|
18/9
|
புரட்டாசி 2
|
கா. 6.44
|
பூரம் 3
|
20/9
|
4
|
இ. 12.11
|
பூரம் 4
|
23/9
|
7
|
மா. 5.39
|
உத்தரம் 1
|
26/9
|
10
|
கா. 10.18
|
உத்தரம் 2
|
28/9
|
12
|
இ. 2.25
|
உத்தரம் 3
|
சனி
ஆங்கில தேதி
|
தமிழ் தேதி
|
ம. நி.
|
நஷத்ரம்
|
9/9
|
ஆவணி 24
|
கா. 8.44
|
விஷாகம் 1
|
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
வாழ்க்கையில் முன்னேற்றமடைய வேண்டும் என்ற எண்ணத்தில் கடுமையாக உழைக்கும் தயங்காத மேஷராசியினரே இந்த மாதம் மற்றவர்களுடன் பகை ஏற்படலாம். சூரியன் ராசிக்கு 5ல் சஞ்சரிப்பதால் கெட்டகனவுகள் தோன்றும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களை விட்டு விலகி செல்லலாம். மனதில் நிலையான எண்ணம் இருக்காது. சுக்கிரன் ராசிக்கு 4ல் சஞ்சாரம் செய்வதால் தரும சிந்தனை உண்டாகும். பண நெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வியில் அக்கறை காண்பிப்பீர்கள். பெண்களுக்கு பணத்தேவை பூர்த்தியாகும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். சக மாணவர்களின் ஒத்துழைப்பு மனதிருப்தியை தரும். கலைத்துறையினருக்கு மற்றவர்களுடன் பகை ஏற்படலாம். கெட்டகனவுகள் தோன்றும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களை விட்டு விலகி செல்லலாம். அரசியலில் உள்ளவர்களுக்கு மனதில் நிலையான எண்ணம் இருக்காது. பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
அசுபதி:
இந்த மாதம் எதையும் புத்துணர்ச்சியுடன் எதிர் கொள்வீர்கள். நல்ல உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் இருக்கும். நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் மிகச் சாதுர்யமாக கையாளுவீர்கள். தாய் வழி சொந்தங்களுடன் இருந்த பிரச்சனைகள் சுமூகமாக முடியும்.
பரணி:
இந்த மாதம் எதிர்பார்த்த இடங்களில் வெற்றியை அடைய முடியும். எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கக் கூடிய சந்தர்ப்பம் வாய்க்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரியங்கள் நிகழும். விவசாயிகள், தொழிலாளர்களும் நன்மைகள் வந்து சேரும். சிற்சில திண்டாட்டங்களும் வந்து வந்து போகும்.
கார்த்திகை - 1:
இந்த மாதம் நண்பர்களுக்குள் விரோதம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் கவனம் தேவை. திருமண வாழ்வில் மகிழ்ச்சி நிலவும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கைகூடும். சந்தாண பாக்கியம் கிட்டும். உங்களது யோசனைகளை மற்றவர்கள் கேட்டும் அனுசரித்தும் செல்வார்கள்.
எச்சரிக்கை நாட்கள்: 1, 2, 3, 28, 29, 30
நலம் தரும் நாட்கள்: 15, 16, 17
பரிகாரம்: செவ்வாய்கிழமையில் துர்க்கை அம்மனை தரிசனம் செய்து தீபம் ஏற்றி வர காரிய தடைகள் நீங்கும். தொழில் வியாபாரம் சிறக்கும்.
அதிர்ஷ்ட ஹோரைகள்: வளர்பிறை: சந்திரன், செவ்வாய், குரு; தேய்பிறை: செவ்வாய், குரு;
------------------------------------------------------------
ரிஷபம்
(கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)
எத்தனை இடையூறுகள் வந்தாலும் எதிர்த்து நின்று காரிய வெற்றி காணும் ரிஷபராசியினரே இந்த மாதம் சூரியன் சஞ்சாரம் ராசிக்கு நான்கில் ஆட்சியாக இருப்பதால் எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படலாம். சுக்கிரன் சஞ்சாரம் ராசிக்கு மூன்றில் தொடங்குவதால் சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் டென்ஷனுடன் காணப்படுவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போதும் பயணங்களின் போதும் கூடுதல் கவனம் தேவை. பெண்களுக்கு எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை ஏற்படும். டென்ஷனை குறைத்து பாடங்களில் கவனம் செலுத்தி படிப்பது நல்லது. கலைத்துறையினருக்கு தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். அரசியலில் உள்ளவர்களுக்கு ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
கார்த்திகை 2, 3, 4:
இந்த மாதம் உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள். எதையும் ஆலோசனை செய்து முடிவெடுங்கள். தெய்வ நம்பிக்கைகளிலும் சடங்குகள் சமிபிரதாயங்களில் நாட்டம் அதிகரிக்கும். உங்களின் செயல்பாட்டினால் உங்கள் குடும்பத்திற்கு நன்மை ஏற்படும்.
ரோகினி:
இந்த மாதம் நிலம், வீடு, மனை ஆகியவற்றில் இருந்த சிக்கல்கள் விலகி நன்மையுண்டாகும். குடியிருக்கும் வீட்டினை மாற்றவும் சிலருக்கு வாய்ப்புண்டு. பணவரவில் ஓட்டம் இருக்கும். சுப காரியங்களுக்கான வாய்ப்புகள் தேடி வரும். கொடுக்கல் வாங்கலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கண் சம்பந்தப்பட்ட உபாதைகள் வரலாம். கவனம் தேவை.
மிருகசீரிஷம் 1, 2:
இந்த மாதம் தந்தையின் தொழில் வளம் பெருகும். குடும்ப பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். வெளிவட்டாரப் பழக்கங்கள் நன்மையை தரும். நற்செய்திகள் உங்களை தேடி வரும். உடன்பிறப்புகள் அனைவரும் சந்தோஷமாக இருப்பார்கள். அவர்களுக்காக சில தியாகங்களையும் செய்வீர்கள். வீடு நில புலன்கள் உங்களை வந்தடையும். அதிலுள்ள பிரச்சனைகளும் தீரும்.
எச்சரிக்கை நாட்கள்: 4, 5
நலம் தரும் நாட்கள்: 18, 19
பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்தை தரிசித்து 11 முறை வலம் வர பாவங்கள் நீங்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும்.
அதிர்ஷ்ட ஹோரைகள்: வளர்பிறை: சந்திரன், புதன், சுக்கிரன்; தேய்பிறை: புதன், சுக்கிரன்
------------------------------------------------------------
மிதுனம்
(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)
எப்போதும் சுறுசுறுப்பாக செயலாற்றும் மிதுன ராசியினரே நீங்கள் சுய கௌரவம் பார்ப்பவர்கள். இந்த மாதம் பணவரத்து மன மகிழ்ச்சியை தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். ராசிக்கு மூன்றில் சூரியனின் சஞ்சாரம் இருப்பதால் எதிர்ப்புகள் நீங்கும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். சுக்கிரன் சஞ்சாரத்தால் வாக்கு வன்மையால் நன்மையை தரும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு, வீண் அலைச்சல் குறையும். எதிர்பார்த்த அதிகாரம் அந்தஸ்து கிடைக்கும். சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். அதே நேரத்தில் அவர்களால் செலவும் வரும். பெண்களுக்கு உங்களது முயற்சிகளுக்கு இருந்த முட்டுகட்டைகள் அகலும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கையில் காசு புரளும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் நீங்கும். எதிர்காலம் பற்றிய திட்டம் தோன்றும். ஆசிரியர்களின் உதவி கிடைக்கும். கலைத்துறையினருக்கு எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படலாம். அரசியலில் உள்ளவர்களுக்கு சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும்.
மிருகசீரிஷம் 3, 4:
இந்த மாதம் குழந்தைகளின் கல்வி, நடத்தை மிகவும் நன்றாக இருக்கும்.பொன் பொருள் ஆபரண சேர்க்கை உண்டு. வியாபாரிகள் வெளிநாட்டு பயணம் செல்வார்கள். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் கை கூடி வரும். மகிழ்ச்சி தரும் தகவல்கள் வந்து சேரும். பிள்ளைகளுக்காக செலவுகள் செய்ய வேண்டி வரும்.
திருவாதிரை:
இந்த மாதம் வீடு, நிலம் வாங்குவதில் சிக்கல்கள் ஏற்படலாம். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். சென்ற நாட்களில் நடைபெறாத சில காரியங்கள் முக்கியஸ்தர்கள் மூலமாக இனிதே நிறைவேறும். சுபகாரிய விஷயங்கள் தொய்வு இல்லாமல் நடக்கும். மேலிடத்தில் உள்ள அதிகாரிகள் உங்களுக்கு அனுசரனையாக நடந்து கொள்வார்கள்.
புனர்பூசம் 1, 2, 3:
இந்த மாதம் வேலை செய்யும் இடத்தில் உள்ள பிரச்சனைகளை நிதானமான அணுகுமுறையுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.தொழில்துறையாளர்களுக்கு நன்றாக இருக்கும். ஊழியர்கள் அமைதியாகப் போவார்கள். பேங்க் பணப் பரிமாற்ற முறையில் தங்குதடையின்றி நடைபெறும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.
எச்சரிக்கை நாட்கள்: 6, 7
நலம் தரும் நாட்கள்: 20, 21
பரிகாரம்: புதன்கிழமைதோறும் வீட்டில் பஞ்சமுக தீபம் ஏற்றி வர கடன் பிரச்சனை குறையும். வீண் அலைச்சல் மனோபயம் குறையும்.
அதிர்ஷ்ட ஹோரைகள்: வளர்பிறை: சந்திரன், புதன், சுக்கிரன்; தேய்பிறை: சந்திரன், புதன், குரு;
------------------------------------------------------------
கடகம்
(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
அடுத்தவர் பிரச்சனைகளில் தீர்வு சொல்வதில் கெட்டிக்காரரான கடக ராசியினரே இந்த மாதம் திடீர் கோபம், வேகம் இருக்கலாம். ராசிக்கு இரண்டில் சூரியன் சஞ்சாரம் இருப்பதால் வாக்குவன்மை ஏற்படும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும். வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம். எதிலும் திருப்தி இல்லாத மனநிலை இருக்கும். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். வெளிநாட்டு போக்குவரத்து நன்மை தரும். தொழில் வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். புதுவியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் சுமையாக வரும். நிதானம் தேவை. சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள். குடும்ப விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவது கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும். பிள்ளைகளிடம் கோபமாக பேசாமல் அன்பாக பேசுவது நல்லது. வாகன வசதி உண்டாகும். பெண்களுக்கு அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. மாணவர்களுக்கு பதற்றம் கொள்ளாமல் நிதானமாக பாடங்களை படிப்பது நல்லது. சக மாணவர்களால் அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு பண வரத்து அதிகரிக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபம் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த கடன் வசதி கிடைக்கும். புதிய ஆர்டர்கள் வரும். உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவார்கள். நிலுவையில் உள்ள பணம் வரும்.
புனர்பூசம் 4:
இந்த மாதம் உடல்நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒத்துப்போக வேண்டும். உறவுகள் மற்றும் நண்பர்களுடன் உறவு சிறக்கும். உடன்பிறந்தவர்களுக்கு உயர் பதவி கிடைக்கும். மன உறுதி அதிகரிக்கும். பயணத்தில் ஆர்வம் அதிகரிக்கும். பாராட்டுகளும் விருதுகளும் கிடைக்கும்.
பூசம்:
இந்த மாதம் மத நம்பிக்கை அதிகரிக்கும். ஆன்மீக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். அவர்களுக்கு புதிய வாகனம் வாங்கி கொடுப்பீர்கள். புதிய உத்தியோகம் கிடைக்கும். உங்கள் தொழில் மூலம் பணவரவு அதிகரிக்கும். எதிரிகள் உங்கள் முன் அடங்குவர். செம்பு, தங்க வியாபாரிகள் பெருத்த லாபம் அடைவர்.
ஆயில்யம்:
இந்த மாதம் வெளிநாடு பயணங்களால் பணவரவு அதிகரிக்கும். தைரியம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம். நற்பெயரும் கீர்த்தியும் வந்து சேரும். பொருளாதார வசதிகளும் பெருகிடவும் வாய்ப்பான நாளிது.சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கவும் பாக்கியம் ஏற்படும்.
எச்சரிக்கை நாட்கள்: 8, 9
நலம் தரும் நாட்கள்: 22, 23
பரிகாரம்: அம்மனை எலுமிச்சை அபிஷேகம் செய்து வணங்க அடுத்தவர்களால் ஏற்படும் கெடுதல்கள் நீங்கும். மனதில் அமைதி பிறக்கும்.
அதிர்ஷ்ட ஹோரைகள்: வளர்பிறை: சந்திரன், சுக்கிரன்; தேய்பிறை: சந்திரன், சுக்கிரன்
------------------------------------------------------------
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
கொடுத்த வாக்கை காப்பாற்ற எதையும் செய்ய தயங்காத சிம்ம ராசியினரே இந்த மாதம் ராசியாதிபதி சூரியன் சஞ்சாரம் ராசியில் இருப்பதால் பணவரத்து தடைபடும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் கவனம் தேவை. கெட்ட கனவுகள் வரும். அதிக கோபத்தால் வீண்பகை உண்டாகலாம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது. சுக்கிரன் சஞ்சாரம் ஆடம்பர செலவுகளை ஏற்படுத்தும். வாகனம் மூலம் செலவு உண்டாகலாம். பயண சுகம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூடுதல் செலவை சந்திக்க நேரிடும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். தேவையான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி காரணமாக உடல் சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் மனஅமைதி கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்கள் எதிர்காலம் பற்றிய சிந்தனை எழும். பெண்களுக்கு கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுகள் கூடும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் அலட்சியம் காட்டாமல் இருப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் போது கவனம் தேவை.
கலைத்துறையினருக்கு கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுகள் கூடும். அரசியலில் உள்ளவர்களுக்கு வீட்டைவிட்டு வெளியே தங்க நேரிடும். தேவை யில்லாத வீண் செலவுகள் உண்டாகும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்களுடன் வீண்பகை உண்டாகலாம்.
மகம்:
இந்த மாதம் தடைபட்டிருந்த அனைத்து காரியங்களும் அடுத்தடுத்து நடைபெறப் போகிறது. வெள்ளை உள்ளத்துடன் உலவும் உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் நடக்கும். சுற்றியிருக்கும் சோம்பேறிகளிடமிருந்து உங்களை நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிரிகளின் தொல்லைகள் குறையும்.
பூரம்:
இந்த மாதம் குடும்பத்தில் உங்களுக்கு பெரிய பொறுப்பு தேடி வரும். உடல்நலத்தில் சிறு குறைபாடு வரலாம். இரண்டாம் வீடு பத்தாம் வீட்டிற்கு ஐந்தாம் வீடாக அமைவதால் நாவன்மையால் உங்கள் வேலைகளை சாதித்துக் கொள்வீர்கள். ஆன்மீக சொற்பொழிவுகள், உபன்யாசங்கள் செய்வோருக்கு உகந்த மாதம்.
உத்திரம் - 1:
இந்த மாதம் அரசாங்கத்தால் அனுகூலம் ஏற்படும். உடன்பிறந்த ஒருவருக்கு உங்களால் யோகம் கிடைக்கும். உங்களால் உங்களுக்கு பெருமையும் செல்வமும் கிடைக்கும். வாகன வழிகளில் விரையம் ஏற்படலாம். நிலம் வீடு வாகனம் வாங்கும் போது கவனம் தேவை. முதலீடுகள் செய்யும் போதும் கவனத்துடன் செய்யவும். பிள்ளைகளின் மேல் மிக எச்சரிக்கையாக இருக்கவும்.
எச்சரிக்கை நாட்கள்: 10, 11
நலம் தரும் நாட்கள்: 24, 25
பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவபெருமானையும், நந்தீஸ்வரரையும் அபிஷேக நேரத்தில் வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். நன்மை ஏற்படும்.
அதிர்ஷ்ட ஹோரைகள்: வளர்பிறை: சூரியன், புதன், சுக்கிரன்; தேய்பிறை: சூரியன், குரு, சுக்கிரன்;
------------------------------------------------------------
கன்னி
(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)
மற்றவர்களிடம் பிரியமாக நடந்து கொள்ளும் குணமுடைய கன்னி ராசியினரே இந்த மாதம் பொறுப்புகள் அதிகரிக்கும். சூரியன் சஞ்சாரம் ராசிக்கு 12ல் தொடங்குவதால் வீட்டைவிட்டு வெளியே தங்க நேரிடும். தேவையில்லாத வீண் செலவுகள் உண்டாகும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்களுடன் வீண்பகை உண்டாகலாம் கவனமாக பேசுவது நல்லது. காய்ச்சல், சிரங்கு போன்ற நோய்கள் உண்டாகலாம். சுக்கிரன் சஞ்சாரத்தால் பணவரத்து அதிகரிக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைக்கும். புதிய ஆர்டர்கள் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவார்கள். நிலுவையில் உள்ள பணம் வரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தாமதமானாலும் நல்லவேலை கிடைக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் மனதில் இறுக்கம் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அதே நேரத்தில் வாக்குவாதமும் ஏற்படும். பிள்ளைகள் மூலம் செலவு இருக்கும். அவர்களது முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பீர்கள். பெண்களுக்கு பயணங்கள் செல்ல நேரலாம். உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும், அன்றைய பாடங்களை அன்றைய தினமே படித்து விடுவது வெற்றிக்கு வழிவகுக்கும். கலைத்துறையினருக்கு குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவி ஒருவருக் கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் மனஅமைதி கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்கள் எதிர்காலம் பற்றிய சிந்தனை எழும்.
பொறுப்புகள் அதிகரிக்கும்.
உத்திரம் - 2, 3, 4:
இந்த மாதம் தந்தையாருடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எதிரிகளின் தொல்லைகள், கடன்சுமைகள் அடங்கும். தாய் மாமனால் அனுகூலம் கிடைக்கும். தடைபட்டிருந்த திருமணம் இனிதே நடைபெறும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும்.
ஹஸ்தம்:
இந்த மாதம் கலைத்துறையினருக்கு பொருளும் புகழும் கூடும். அரசியலில் தொல்லைகள் விலகும். மாணவர்கள் கல்வியில் சாதனைகள் படைப்பர். உங்கள் பக்கமுள்ள நியாயம் ஓங்கும். பிள்ளைகள் வழியில் மட்டற்ற மகிழ்ச்சிகள் வந்து சேரும். திருமண பாக்கியம் கைகூடி வரும்.
சித்திரை - 1, 2:
இந்த மாதம் நெடுங்காலமாக சந்தான பாக்கியம் கிட்டாதவர்களுக்கு வரப்பிரசாதம் கிடைக்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். விட்டுக் கொடுத்துப் போவார்கள். தந்தையாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.
எச்சரிக்கை நாட்கள்: 12, 13
நலம் தரும் நாட்கள்: 26, 27
பரிகாரம்: அருகிலிருக்கும் ஐயப்பன் மற்றும் பெருமாளை வணங்கி வர வாழ்வு வளம் பெறும்.
அதிர்ஷ்ட ஹோரைகள்: வளர்பிறை: சந்திரன், புதன், சுக்கிரன்; தேய்பிறை: சந்திரன், குரு, சுக்கிரன்;
------------------------------------------------------------
துலாம்
(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
அடுத்தவர்களை அதிகாரம் செய்யும் ஆர்வம் உள்ள துலா ராசியினரே இந்த மாதம் கஷ்டம் நீங்கி சுகம் உண்டாகும். சூரியன் சஞ்சாரம் ராசிக்கு 11ல் இருப்பதால் பணவரத்து கூடும். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சாரத்தால் வேளை தவறி உண்ண வேண்டி இருக்கும். வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன்முகம் கொடுத்து பேசுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அக்கம்பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். கலைத்துறையினருக்கு செலவுகளை ஏற்படுத்தும். வாகனம் மூலம் செலவு உண்டாகலாம். பயணசுகம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். அரசியலில் உள்ளவர்களுக்கு தேவையான பணஉதவி கிடைக்கலாம்.
சித்திரை - 3, 4:
இந்த மாதம் வருங்கால முன்னேற்றத்தைக் கருதி சில முயற்சிகளை எடுப்பீர்கள். அந்த முயற்சிகள் யாவும் வெற்றிகளைத் தரும். பயணங்களால் பொருள்சேர்க்கை ஏற்படும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உற்சாகத்துடன் அனைத்து காரியங்களிலும் ஈடுபடுவீர்கள்.
ஸ்வாதி:
இந்த மாதம் தந்தையின் ஆதரவு உண்டு. வழக்கில் வெற்றி அல்லது நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள பிரச்சினை முடிவில் செல்வம், உரிமை, அதிகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். தவறான வழிமுறைகளில் செல்வம் கரையவும் வாய்ப்புண்டு. எச்சரிக்கையாக இருக்கவும்.
விசாகம் - 1 , 2, 3:
இந்த மாதம் சகோதர சகோதரி வேலை நிமித்தம் வெளியூர் செல்ல வேண்டி வரலாம். அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். பிள்ளைகளிடம் அன்பு, பாசம் காட்டுவது நல்லது. கலைத்துறையினருக்கு மிக சிறந்த காலகட்டமிது. வாய்ப்புகள் தேடி வரும்.
எச்சரிக்கை நாட்கள்: 14, 15
நலம் தரும் நாட்கள்: 1, 28, 29
பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் மகாலக்ஷிமியை வழிபட்டுவர பொன்பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
அதிர்ஷ்ட ஹோரைகள்: வளர்பிறை: சந்திரன், சுக்கிரன்; தேய்பிறை: சந்திரன், சுக்கிரன்;
------------------------------------------------------------
விருச்சிகம்
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் உள்ள நல்லது கெட்டதை ஆராய்ந்து செயல்படும் விருச்சிக ராசியினரே, இந்த மாதம் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். ராசிக்கு 10ல் சூரியன் சஞ்சாரம் இருப்பதால் பணம், காசுகள் சேரும். மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். சுக்கிரன் சஞ்சாரம் ராசிக்கு 9ல் இருப்பதால் விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும், எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன் காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல்கள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். பெண்களுக்கு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பணவரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் கைகூடும். எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும். கலைத்துறையினருக்கு வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் கவனம் தேவை. அரசியலில் உள்ளவர்களுக்கு நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. கெட்டகனவுகள் வரும். அதிக கோபத்தால் வீண்பகை உண்டாகலாம்.
விசாகம் - 4:
இந்த மாதம் அரசியலில் குறுக்கு வழிகளில் ஈடுபட வேண்டாம். மாணவர்கள் கல்வியில் சிறப்பான தேர்ச்சியினைக் காண்பார்கள். சகோதரத்தின் வெளிநாடு பயணம் இனிதே நடைபெறும். சுயசார்பும் தன்னிறைவும் பெறுவீர்கள். தைரியம் பளிச்சிடும். புதிய வழக்குகளை சந்திக்க நேரிடலாம். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை நீங்கும்.
அனுஷம்:
இந்த மாதம் உடலில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு மறையும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு சிக்கல்கள் வந்து வந்து போகும். சிறைத்துறையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பயணம் தொடர்பான தொழில்களில் லாபம் கிடைக்கும்.
கேட்டை:
இந்த மாதம் புத்தி சாதுர்யத்தால் புகழையும், செல்வத்தையும் பெறுவீர்கள். எண்ணிய காரியங்களை திறமையாக செய்து முடிப்பீர்கள். பணவரவும் இருக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பயணம் செல்ல வேண்டி இருக்கும். சில முக்கியமான முயற்சிகள் அதிக உழைப் பின் பேரில் செய்ய வேண்டி இருக்கும். சொத்துக்கள் மீது கவனம் தேவை.
எச்சரிக்கை நாட்கள்: 16, 17, 18
நலம் தரும் நாட்கள்: 2, 3, 4
பரிகாரம்: அருகிலிருக்கும் ஆலயத்தில் இருக்கும் வள்ளி தேவசேனா சமேதராக உள்ள முருகபெருமானை அர்ச்சனை செய்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கி வாழ்வில் இன்பம் உண்டாகும்.
அதிர்ஷ்ட ஹோரைகள்: வளர்பிறை: சூரியன், செவ்வாய், குரு; தேய்பிறை: செவ்வாய், குரு;
------------------------------------------------------------
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
உல்லாசங்களிலும் கேளிக்கைகளிலும் அதிகநாட்டம் கொண்ட தனுசுராசியினரே இந்த மாதம் மனஉறுதி அதிகரிக்கும். ராசிக்கு 9ல் சூரியன் சஞ்சாரம் இருப்பதால் சொத்துக்களை அடைவதில் தடைகள் ஏற்படும். உயர்நிலையில் உள்ளவர்களுடன் மனவருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை வரும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் கவனம் தேவை. வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம். சுக்கிரன் சஞ்சாரத்தால் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். வீட்டிற்கு தேவையான வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு உண்டாகும். பழைய சிக்கல்கள் தீர்வதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது. திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் எதிர்பாராத விருந்தினர் வகையில் விரும்பத்தகாத வாக்கு வாதங்கள் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். அவர்களுக்காக பாடுபடுவீர்கள். பெண்களுக்கு திட்டமிட்டு செய்தாலும் காரியங்களில் தடை ஏற்படும். எதிர் பாராத செலவு உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் தாமதமாக நடக்கும். புதிய நட்புகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு எதிர்ப்புகள் நீங்கும். பணவரத்து மனமகிழ்ச்சியை தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். அரசியலில் உள்ளவர்களுக்கு எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும்.
மூலம்:
இந்த மாதம் தொழில், வியாபாரம் செய்பவர்கள் தங்களது திறமையை வெளிபடுத்தி வியாபாரம் செய்ய வேண்டி இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஆர்டர் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூல் தாமதமாக இருந்தாலும் பணம் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். வேலை தொடர்பாக வெளியூரில் தங்க நேரிடலாம்.
பூராடம்:
இந்த மாதம் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கலாம். உடல் ஆரோக்கியம் ஏற்படும். எதிர் பாலினத்தாரால் லாபம் கிடைக்கக் கூடும். ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய நேரிடும். பணவரத்து கூடும். வீண் அலைச்சல் திடீர் கோபம் உண்டாகலாம்.
உத்திராடம் - 1:
இந்த மாதம் தொழிலில் காரிய வெற்றி தரும். மதிப்பும், அந்தஸ்தும் உயரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கடன் பிரச்சனைகள் தீரும். போட்டிகள் குறையும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தவை நல்லபடியாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சில விஷயங்களை தவறாக புரிந்து கொண்டு சங்கடப்பட வேண்டி இருக்கும்.
எச்சரிக்கை நாட்கள்: 19, 20, 21
நலம் தரும் நாட்கள்: 5, 6, 7
பரிகாரம்: அருகிலிருக்கும் சிவன் கோவிலில் உள்ள நவகிரக குருவை வணங்கி 7 முறை வலம் வர போட்டிகள் குறையும். மனம் தெளிவடையும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
அதிர்ஷ்ட ஹோரைகள்: வளர்பிறை: சூரியன், செவ்வாய், குரு; தேய்பிறை: செவ்வாய், குரு, சுக்கிரன்;
------------------------------------------------------------
மகரம்
(உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)
எந்த சூழ்நிலையிலும் முன்வைத்த காலை பின் வைக்காமல் தைரியமாக செயல்படும் மகர ராசியினரே இந்த மாதம் காரிய தடை தாமதம் ஏற்படலாம். சூரியன் சஞ்சாரம் ராசிக்கு 8ல் இருப்பது உஷ்ண சம்பந்தமான நோய் ஏற்படுத்தும். வீண்பயம் ஏற்படும். ஏற்கனவே செய்த காரியங்களுக்கான பலனை அடைய வேண்டி இருக்கும். சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம். வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. சுக்கிரன் சஞ்சாரத்தால் வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரலாம். சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள். எதிர்பாலினத்தாருடன் பழகும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். பார்ட்னர்களுடன் சேர்ந்து தொழில் செய்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. கடன் தொல்லை தலைதூக்கலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை, இடமாற்றம், அலைச்சல் போன்றவை இருக்கக்கூடும். குடும்பத்தில் அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மன வருத்தம் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. பெண்களுக்கு எதிலும் தேவையற்ற வீண் கவலை உண்டாகும். பயணங்கள் செல்ல நேரிடலாம். கடன் விஷயங்களில் கவனம் தேவை. மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது அவசியம். சக மாணவர்களுடன் நிதானமாக பழகுவது நல்லது. கலைத்துறையினருக்கு வாக்கு வன்மையால் நன்மையை தரும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும்.
உத்திராடம் - 2, 3, 4:
இந்த மாதம் வாக்குவன்மையால் நன்மை ஏற்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த இடைவெளி குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும்.பெண்களுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்வதால் வீண் அலைச்சல் உண்டாகலாம். காரிய வெற்றி பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும்.
திருவோணம்:
இந்த மாதம் உங்களின் சாமர்த்தியமான செயல்களால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள். உங்கள் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நன்மையைத் தரும். எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நன்மை தரும். திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு உதவும். பணவரத்து அதிகரிக்கும். அதே நேரத்தில் செலவும் கூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் - 1, 2:
இந்த மாதம் மனதில் துணிச்சல் உண்டாகும். அதனால் எதை பற்றியும் முன்பின் யோசிக்காமல் செயல்களில் இறங்கி விடுவீர்கள். தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். சரக்குகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது.
எச்சரிக்கை நாட்கள்: 22, 23
நலம் தரும் நாட்கள்: 8, 9
பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று கருடமூர்த்தியை வணங்கி, நெய் தீபம் ஏற்றி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். மன குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும்.
அதிர்ஷ்ட ஹோரைகள்: வளர்பிறை: புதன், சுக்கிரன்; தேய்பிறை: செவ்வாய், புதன், சுக்கிரன்;
------------------------------------------------------------
கும்பம்
(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)
நிதானமாக செயல்பட்டு படிப்படியாக முன்னேற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் கும்பராசியினரே இந்த மாதம் குறிக்கோளற்ற வீண் அலைச்சல் உண்டாகலாம். சூரியன் சஞ்சாரம் ராசிக்கு 7ல் இருப்பதால் சீரான கோளாறுகள் ஏற்படலாம். உடல்சோர்வு உண்டாகும். பணம் பலவழிகளிலும் செலவாகும். காரியதாமதம் ஏற்படும். அடுத்தவர்களுக்காக எந்த உத்தரவாதமும் கொடுக்காமல் இருப்பது நல்லது. சுக்கிரன் சஞ்சாரம் ராசிக்கு 6ல் இருப்பதால் வீண்கவலை ஏற்படும். வாகனங்களில் செல்லும்போது கவனம் அவசியம். நண்பர்கள் மூலம் கிடைக்க வேண்டிய உதவிகள் தாமதப்படும். தொழில் வியாபாரம் மந்தமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் உண்டாகும். புதிய ஆர்டர்கள் பிடிப்பது பற்றிய முயற்சிகள் வீணாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீணாக உழைக்க வேண்டி இருக்கும். சம்பளம் தாமதப்படலாம். அலுவலக பணிகளில் கூடுதல் கவனம் தேவை. குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை இருந்து வரும். கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை ஏற்பட்டு சுமுக உறவு இல்லாமல் இருக்கும். பிள்ளைகளின் நடவடிக்கைகள் மனதில் கவலையை ஏற்படுத்தும். பக்குவமாக அவர்களிடம் பேசுவது நல்லது. பெண்களுக்கு மற்றவர்களுக்காக எந்த உத்திரவாதங்களும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் உள்ள மந்தநிலை மாற கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது அவசியம். கலைத்துறையினருக்கு வாகனங்களில் செல்லும் போதும் பயணங்களின் போதும் கூடுதல் கவனம் தேவை. நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். அரசியலில் உள்ளவர்களுக்கு எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். பணவரத்து மனமகிழ்ச்சியை தரும்.
அவிட்டம் - 3, 4:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் செய்து முடிப்பதில் வேகம் காட்டுவார்கள். சக ஊழியர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும். உறவினர்கள் வருகை இருக்கும் அதே நேரத்தில் அவர்களுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.
ஸதயம்:
இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் கருத்து வேற்றுமை வருவதை தவிர்க்கலாம். பிள்ளைகளிம் அனுசரணையாக நடந்து கொள்வது நன்மைதரும். விருப்பங்கள் கைகூடும். ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சாரத்தால் பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.
பூரட்டாதி - 1, 2 ,3:
இந்த மாதம் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். புதன் சஞ்சாரம் 9ல் பெறுவதால் பணவரத்து கூடும். வாழ்க்கை துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும். வழக்கம்போல் வியாபாரம் இருந்தாலும் திடீர் பணதேவை ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த வேலையை செய்யும் முன்பும் அதுபற்றி அதிகம் யோசிப்பார்கள்.
எச்சரிக்கை நாட்கள்: 24, 25
நலம் தரும் நாட்கள்: 10, 11
பரிகாரம்: அருகிலிருக்கும் சிவன் கோவிலில் உள்ள அம்மனை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். வாழ்க்கை தரம் உயரும்.
அதிர்ஷ்ட ஹோரைகள்: வளர்பிறை: சந்திரன், புதன், சுக்கிரன்; தேய்பிறை: சந்திரன், குரு;
------------------------------------------------------------
மீனம்
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
கவலை, பயம் இல்லாமல் எப்போதும் மகிழ்ச்சியுடன் காணப்படும் மீன ராசியினரே இந்த மாதம் மற்றவர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். சூரியன் சஞ்சாரம் ராசிக்கு 6ல் இருப்பதால் பகைகளில் வெற்றி கிடைக்கும். பண வரத்து தாராளமாக இருக்கும். கையிருப்பு கூடும். இதுவரை இருந்த தொல்லைகள் நீங்கும். நீண்ட தூரப் பயணங்களால் லாபம் உண்டாகும். மனதில் தைரியம் பிறக்கும். சுக்கிரன் சஞ்சாரம் வாக்கு வன்மையால் ஆதாயத்தை பெற்று தரும். உயர்மட்ட பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பு கூடும். உங்களது உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். தொழில் போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கக் கூடும். மறைமுகமாக இருந்த எதிர்ப்புகள் விலகி மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி காணப்படும். பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். வாகனங்கள், சொத்துக்கள் வாங்க ஆர்வம் காட்டுவீர்கள். பெண்களுக்கு மற்றவர்களால் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணவரத்து திருப்திதரும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் நீங்கும். பாடங்கள் படிப்பதில் முழுகவனம் செலுத்துவீர்கள். கலைத்துறையினருக்கு இருந்த போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும். அரசியலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடங்களில் வெற்றியை அடைய முடியும். எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கக் கூடிய சந்தர்ப்பம் வாய்க்கும்.
பூரட்டாதி - 4:
இந்த மாதம் குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் பணதேவை உண்டாகலாம். துணிச்சலுடன் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள்.
உத்திரட்டாதி:
இந்த மாதம் பணவரத்து திருப்தி தரும். வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மைதரும். வீண் மனகுழப்பம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு உதவபோய் வீண் பிரச்சனையில் சிக்கி கொள்ளலாம். கவனமாக இருப்பது நல்லது. திடீர் கோபம் ஏற்படும். தேவையற்ற வீண் செலவுகளும் உண்டாகும். ஆன்மிக எண்ணம் ஏற்படும். விருப்பமான நபரை சந்திப்பதன் மூலம் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படலாம்.
ரேவதி:
இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் பெற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், வீண் அலைச்சலும் உண்டாகும். கவனமாக வேலைகளை செய்யாவிட்டால் மேல் அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம்.
எச்சரிக்கை நாட்கள்: 26, 27
நலம் தரும் நாட்கள்: 12, 13
பரிகாரம்: அருகிலிருக்கும் சித்தர் சமாதிகளை தரிசித்து வர மன அமைதி கிடைக்கும். காரிய அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட ஹோரைகள்: வளர்பிறை: சந்திரன், புதன், சுக்கிரன்; தேய்பிறை: சந்திரன், புதன், குரு;
------------------------------------------------------------
No comments:
Post a Comment