Tuesday, June 27, 2017

நட்சத்திரங்களுக்கான ஒரு வரி பலன்கள்

நட்சத்திரங்களுக்கான ஒரு வரி பலன்கள்




27 நக்ஷத்ரகாரர்களுக்கான ஒரு வரி ராசிபலன்கள்:
மிக மிக துல்லியமான கணிப்பு.

ஆடியில் நிகழும் ராகு கேது பெயர்ச்சி - ஆவணியில் நடக்க போகும் குருப் பெயர்ச்சி - மார்கழியில் மாறப் போகும் சனிப் பெயர்ச்சியைக் கொண்டு கணிக்கப்பட்டது.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

பரம்பரை ஜோதிடர் - புரோகிதர்



Mobile: +91 7845 11 9542


அசுபதி 
ஆடிக்குப் பிறகு சிறிது நற்பலன். ஆவணியில் மிக நல்ல பலன். மார்கழிக்குப் பிறகு பொற்காலம்.


பரணி 
ஆடிக்குப் பிறகு மனம் நிம்மதி பெறும். ஆவணியில் சந்தோஷம் அதிகரிக்கும். மார்கழிப் பிறகு யோகம்.

கிருத்திகை 
ஆடிக்குப் பிறகு சிறிது நிம்மதி. ஆவணியில் சுப நிகழ்வு. மார்கழிக்குப் பிறகு மன நிறைவு.

ரோகிணி 
ஆடிக்குப் பிறகு சுப நிகழ்வு. ஆவணியில் மன நிறைவு. மார்கழிக்குப் பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி - ஏற்றம்.

மிருகசீரிஷம் 
ஆடிக்குப் பிறகு தைரியம் மிளிரும். ஆவணிக்கு பிறகு உடல் நிலையில் கவனம். மார்கழிக்குப் பிறகு அனைத்து விஷயத்திலும் சிரத்தை தேவை.

திருவாதிரை 
ஆடிக்குப் பிறகு செல்வம் சேரும், பேச்சில் நிதானம் தேவை. ஆவணிக்கு பிறகு உடல் நிலையில் முன்னேற்றம், சுப நிகழ்ச்சிகளில் இருந்த தடை நீங்கும். மார்கழிக்குப் பிறகு வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை.

புனர்பூசம் 
ஆடிக்குப் பிறகு தேவைகள் நிறைவேறும். ஆவணிக்கு பிறகு சுப நிகழ்ச்சிகளில் இருந்த தடை நீங்கும். மார்கழிக்குப் பிறகு எந்த விஷயத்திலும் திட்டமிடல் அவசியம்.

பூசம் 
ஆடிக்குப் பிறகு தேக்கமடைந்த காரியங்கள் வேகம் பெறும். ஆவணிக்கு பிறகு வீடு மனை வாகன யோகம் ஏற்படும், கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். மார்கழிக்குப் பிறகு அனைத்து விதங்களிலும் நன்மை ஏற்படும்.

ஆயில்யம் 
ஆடிக்குப் பிறகு அதிர்ஷ்டம வேகம். ஆவணிக்கு பிறகு வீடு மனை யோகம். மார்கழிக்குப் பிறகு நன்மை.

மகம் 
ஆடிக்குப் பிறகு நன்மை. ஆவணிக்கு பிறகு யோகம். மார்கழிக்குப் பிறகு மாற்றம்.

பூரம் 
ஆடிக்குப் பிறகு தடைகள் நீங்கும். ஆவணிக்கு பிறகு தைரியம் மிளிரும். மார்கழிக்குப் பிறகு முன்னேற்றம்.

உத்திரம் 
ஆடிக்குப் பிறகு நன்மை. ஆவணிக்கு பிறகு மேன்மை. மார்கழிக்குப் பிறகு பொருளாதாரத்தில் முன்னேற்றம்.

ஹஸ்தம் 
ஆடிக்குப் பிறகு லாபம் மிகும். ஆவணிக்கு பிறகு பொருளாதார மாற்றம் . மார்கழிக்குப் பிறகு வீடு மனை வாங்குவதற்கான சூழல்.

சித்திரை 
ஆடிக்குப் பிறகு தொழிலில் ஏற்றம். ஆவணிக்கு பிறகு சுபநிகழ்வுகளால் மகிழ்ச்சி. மார்கழிக்குப் பிறகு திருமணம், சந்தாண பாக்கியம், வீடு மனை யோகம்.

ஸ்வாதி 
ஆடிக்குப் பிறகு மகிழ்ச்சி. ஆவணிக்கு பிறகு மனக்கலக்கம் நீங்கும். மார்கழிக்குப் பிறகு சுப நிகழ்வு, மன நிம்மதி.

விசாகம் 
ஆடிக்குப் பிறகு தொழிலில் மாற்றம். ஆவணிக்கு பிறகு சுபநிகழ்ச்சிகளில் இருந்த தடை நீங்கும், பொற்காலம். மார்கழிக்குப் பிறகு தைரியம் அதிகரிக்கும்.

அனுஷம் 
ஆடிக்குப் பிறகு பொருளாதார ஏற்றம். ஆவணிக்கு பிறகு ஆரோக்கியத்தில் மேம்பாடு. மார்கழிக்குப் பிறகு நிம்ம்ம்ம்ம்ம்மதி.

கேட்டை 
ஆடிக்குப் பிறகு பணத் தட்டுப்பாடு நீங்கும். ஆவணிக்கு பிறகு சுப விரையம். மார்கழிக்குப் பிறகு தடைகள் அகலும்.

மூலம் 
ஆடிக்குப் பிறகு வாகனங்களில் செல்லும் போது கவனம். ஆவணிக்கு பிறகு லாபம் அதிகரிக்கும் - தொழில் மாற்றம். மார்கழிக்குப் பிறகு சோம்பல் அதிகரிக்கும் - சிறிய விஷயத்திற்கும் திட்டமிடல் அவசியம்.

பூராடம் 
ஆடிக்குப் பிறகு பண விஷயங்களில் கவனம் தேவை. ஆவணிக்கு பிறகு உத்தியோக மாற்றம் - உயர்வு. மார்கழிக்குப் பிறகு பணிகளில் தேக்கம் ஏற்படலாம் - எச்சரிக்கை.

உத்திராடம் 
ஆடிக்குப் பிறகு முதலீடுகளில் கவனம் தேவை. ஆவணிக்கு பிறகு அரசாங்க அனுகூலம் - லாபம் கிடைக்கும். மார்கழிக்குப் பிறகு பணிகளில் உடல் நலத்தில் கவனம் - காரிய அனுகூலம்.

திருவோணம் 
ஆடிக்குப் பிறகு உறவினர்கள் - நண்பர்களிடம் கவனம் தேவை. ஆவணிக்கு பிறகு தொழில் மாற்றம் - ஏற்றம். மார்கழிக்குப் பிறகு திட்டமிட்ட காரியங்களில் தொய்வு - கவனம் தேவை.

அவிட்டம் 
ஆடிக்குப் பிறகு தேக்க நிலை மாறும். ஆவணிக்கு பிறகு தொழில் மாற்றம் - பதவி உயர்வு - இட மாற்றம். மார்கழிக்குப் பிறகு அனைத்து விஷயங்களிலும் சிரத்தை அவசியம்.

ஸதயம் 
ஆடிக்குப் பிறகு மிகப் பெரிய மாற்றம். ஆவணிக்கு பிறகு ஏற்றம். மார்கழிக்குப் பிறகு பொருளாதார முன்னேற்றம்.

பூரட்டாதி 
ஆடிக்குப் பிறகு புத்தியில் தெளிவு. ஆவணிக்கு பிறகு மாற்றம். மார்கழிக்குப் பிறகு தொழில் இருந்த தொய்வு நீங்கும்.

உத்திரட்டாதி 
ஆடிக்குப் பிறகு எந்த விஷயத்திலும் திட்டமிடல் அவசியம். ஆவணிக்கு பிறகு பொருளாதார மேம்பாடு. மார்கழிக்குப் பிறகு தொழில் விருத்தி.

ரேவதி 
ஆடிக்குப் பிறகு பொறுமை அவசியம். ஆவணிக்கு பிறகு லாபம் அதிகரிக்கும். மார்கழிக்குப் பிறகு செய்தொழிலில் மேன்மை.

Tuesday, June 20, 2017

ஒரு வரி பலன் - ரேவதி - பொது


ஒரு வரி பலன் - ரேவதி - பொது


ஆடிக்குப் பிறகு பொறுமை அவசியம். ஆவணிக்கு பிறகு லாபம் அதிகரிக்கும். மார்கழிக்குப் பிறகு செய்தொழிலில் மேன்மை.





பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் - 7845119542
Email: ramjothidar@gmail.com

ஒரு வரி பலன் - அவிட்டம் - பொது


ஒரு வரி பலன் - அவிட்டம் - பொது

ஆடிக்குப் பிறகு தேக்க நிலை மாறும். ஆவணிக்கு பிறகு தொழில் மாற்றம் - பதவி உயர்வு - இட மாற்றம். மார்கழிக்குப் பிறகு அனைத்து விஷயங்களிலும் சிரத்தை அவசியம்.

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் - 7845119542
Email: ramjothidar@gmail.com

ஒரு வரி பலன் - உத்திரட்டாதி - பொது


ஒரு வரி பலன் - உத்திரட்டாதி - பொது


ஆடிக்குப் பிறகு எந்த விஷயத்திலும் திட்டமிடல் அவசியம். ஆவணிக்கு பிறகு பொருளாதார மேம்பாடு. மார்கழிக்குப் பிறகு தொழில் விருத்தி.





பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் - 7845119542
www.kuppuastro.com
Email: ramjothidar@gmail.com

ஒரு வரி பலன் - பூரட்டாதி - பொது

ஒரு வரி பலன் - பூரட்டாதி - பொது




ஆடிக்குப் பிறகு புத்தியில் தெளிவு. ஆவணிக்கு பிறகு மாற்றம். மார்கழிக்குப் பிறகு தொழில் இருந்த தொய்வு நீங்கும்.

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் - 7845119542
www.kuppuastro.com
Email: ramjothidar@gmail.com

ஒரு வரி பலன் - ஸதயம் - பொது

ஒரு வரி பலன் - ஸதயம் - பொது






ஆடிக்குப் பிறகு மிகப் பெரிய மாற்றம். ஆவணிக்கு பிறகு ஏற்றம். மார்கழிக்குப் பிறகு பொருளாதார முன்னேற்றம்.



பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் - 7845119542
www.kuppuastro.com
Email: ramjothidar@gmail.com

Tuesday, June 13, 2017

ஊரின் வாஸ்து - தொகுப்பு பனிரெண்டு

ஊரின் வாஸ்து - தொகுப்பு பனிரெண்டு

வேண்டிய பலன்கள் உடனே நடைபெற நமது முன்னோர்கள் சில பரிகார முறைகளை ஊருக்கு வகுத்து வைத்திருந்தார்கள்.
ஊரில் எந்த அறுவடை (நெல், எள், கடலை, மிளகாய், உளுந்து, கோதுமை, காய்கறிகள் etc) நடந்தாலும் முதலில் எட்டு திசையில் இருக்கும் காவல் தெய்வங்களுக்கும் - ஊரின் பிரதான கோவிலுக்கும் படையல் படைப்பார்கள்.

இதே போன்று குடிமக்கள் கோவில்களிலும் தாங்கள் கொண்டு வந்திருக்கும் அறுவடை செய்த பொருட்களை படையல் படைப்பார்கள். ஊரில் ஏதேனும் பிரச்சனை என்றால் ஈசான்ய மூலை - எம மூலையில் இருக்கும் தெய்வங்களுக்கு காவு கொடுப்பார்கள்.

குறிப்பு: வீட்டில் அசைவம் சாப்பிடுபவர்கள் எக்காரணம் கொண்டு அக்னி மூலையிலோ அல்லது குபேர மூலையிலோ (South East or North) அசைவ பொருட்களை வைக்கக் கூடாது.

அக்னி மூலையில் இருக்கும் தேவதைக்கு தீ சம்பந்தமான வேண்டுதல்கள் இருக்கும். கன்னி மூலையில் இருக்கும் தேவதைக்கும் - ஈசான்ய திக்கில் இருக்கும் தேவதைக்கும் தீபம் சம்பந்தமான வழிபாடு இருக்கும்.

குறிப்பு:
இன்றைக்கும் வீட்டில் ஏதேனும் பூஜை நடந்தால் பூஜை நடக்கும் அறையில் கன்னி மூலையில் விளக்கு - நிறை நாழி அரிசி - சாணிப் பிள்ளையார் வைத்து வழிபடுகிறோம். பின்னாளில் சாணிப் பிள்ளையார் மஞ்சள் பிள்ளையாராகி - மஞ்சள் பிள்ளையார் கல் பிள்ளையாராகி - கல் பிள்ளையார் பிளாஸ்டிக் விநாயகராகி விட்டது.

வருண மூலையில் இருக்கும் தேவதைக்கு புஷ்பம் ப்ரியமாக இருக்கும். எனவே புஷ்பத்தை வைத்து வேண்டுதல் செய்வார்கள். வாயு மூலையில் இருக்கும் தேவதைக்கு வாத்தியங்கள் முழங்க படையல் படைப்பார்கள். அதிலும் காற்றினால் இசைக்கப்படும் வாத்தியங்கள் என சொல்லலாம்.




குறிப்பு:
நமது வீட்டில் யாரேனும் இசைப் பயிற்சி மேற்கொண்டிருந்தால் அதிலும் காற்றுக் கருவிகள் பயிற்சி செய்து கொண்டிருந்தால் வீட்டின் வாயு மூலையில் (North West corner) தினமும் இரவு வைத்து விட்டு காலையில் எடுத்து பயிற்சி செய்தால் சீக்கிரமே கற்றுக் கொள்ள முடியும்.

தொடரும்....


பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் - +91 7845119542
www.kuppuastro.com
ramjothidar@gmail.com

ஒரு வரி பலன் - உத்திராடம், திருவோணம் - பொது

ஒரு வரி பலன் - உத்திராடம் - பொது
ஆடிக்குப் பிறகு முதலீடுகளில் கவனம் தேவை. ஆவணிக்கு பிறகு அரசாங்க அனுகூலம் - லாபம் கிடைக்கும். மார்கழிக்குப் பிறகு பணிகளில் உடல் நலத்தில் கவனம் - காரிய அனுகூலம்.



ஒரு வரி பலன் - திருவோணம் - பொது
ஆடிக்குப் பிறகு உறவினர்கள் - நண்பர்களிடம் கவனம் தேவை. ஆவணிக்கு பிறகு தொழில் மாற்றம் - ஏற்றம். மார்கழிக்குப் பிறகு திட்டமிட்ட காரியங்களில் தொய்வு - கவனம் தேவை.
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் - 7845119542
www.kuppuastro.com
Email: ramjothidar@gmail.com

Monday, June 12, 2017

ஆனி மாத சந்திராஷ்டம தினங்கள் - இங்கிலீஷ் தேதிக்கு இணையாக

ஆனி மாத சந்திராஷ்டம தினங்கள் - இங்கிலீஷ் தேதிக்கு இணையாக
மேஷம்: ஜூலை 5 - 6 
ரிஷபம்: ஜூலை 7 - 8 - 9
மிதுனம்: ஜூலை 10 - 11
கடகம்: ஜூன் 15 - 16, ஜூலை 12 - 13 - 14
சிம்மம்: ஜூன் 17 - 18 - 19, ஜூலை 15 - 16
கன்னி: ஜூன் 20 - 21  
துலாம்: ஜூன் 22 - 23
விருச்சிகம்: ஜூன் 24 - 25
தனுசு: ஜூன் 26 - 27 
மகரம்: ஜூன் 28 - 29
கும்பம்: ஜூன் 30, ஜூலை 1 - 2
மீனம்: ஜூலை 3 - 4

ஊரின் வாஸ்து - தொகுப்பு பதினொன்று



ஊரின் வாஸ்து - தொகுப்பு பதினொன்று

குடி மக்கள் வழிபாடு:
ஒவ்வொரு சாதியினராக இருந்தாலும் ஒவ்வொரு சாதிக்குள்ளும் பல்வேறு குடிமக்கள் கோவில்கள் இருந்தது - இருக்கின்றது.

உதாரணமாக அந்தணர் சாதியினரில் வேதம் சொல்லும் வேதியர்களுக்கு அம்மன் சம்பந்தப்பட்ட தேவதையோ - கணியர் குழுவினருக்கு அய்யனார் தேவதையோ - பார்ப்பனர் குழுவினருக்கு முருகனோ இருக்கலாம். இந்த குடிமக்கள் தேவதைகள் அனைத்தும் ஊரின் பிரதான தேவதைக்கு கட்டுப்பட்டு இருக்கும். 

குறிப்பு: கணியர் வம்சத்தில் வந்த எங்கள் குடும்பத்திற்கு அய்யனார் குல தெய்வம்.

இதே போன்று ஊரில் அனைத்து சாதியினருக்கும் சேர்த்து கூடுமானவரை 64 தெய்வங்கள் இருக்கும். ஒவ்வொரு திசையிலும் 8 தெய்வங்கள் வீதம் 8 திசைகளுக்கு எட்டு தெய்வங்கள் இருக்கும். ஊரின் பிரதான கோவிலுக்கு 100 அடி வரை இந்த குடி மக்கள் கோவில் இருக்காது. பின்னாட்களில் பிரதான கோவிலில் அருகிலேயே இந்த குடிமக்கள் கோவில் கொண்டு வரப்பட்டது. தற்போதைய காலகட்டத்தில் இந்த குடிமக்கள் வழிபாடு சுருங்கி விட்டது எனலாம். 




ஒவ்வொரு திசையில் இருக்கும் எட்டு குடிமக்கள் கோவிலிலும் மிகச் சிறந்த சக்தி வெளிப்படும். ஒரு குழுவினர் இன்னோரு குழுவினரின் குடிமக்கள் கோவிலுக்குச் செல்ல மாட்டார்கள். பிரசாதம் உட்கொள்ள மாட்டார்கள். ஏதேனும் வேண்டுதல் இருந்தால் எடுத்துக்காட்டாக மழை வேண்டி பிரார்த்தனை இருந்தால் வருண மூலையில் இருக்கும் குடிமக்கள் கோவில்கள் சிறப்பு வழிபாடு செய்வார்கள். அந்த ஊரில் ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால் அக்னி மூலையில் இருக்கும் குடிமக்கள் கோவிலில் பிரார்த்தனை செய்வார்கள். அடிக்கடி துர் மரணம் சம்பவித்தால் எம திசையில் இருக்கும் குடிமக்கள் கோவில்களில் சிறப்பு வேண்டுதல்கள் செய்வார்கள். 

குடிமக்கள் வழிபாடு இன்றும் சேர நாட்டில் பல இடங்களிலும் - கொங்கு நாட்டில் சில இடங்களிலும் இருப்பதை கண் கூடாக பார்க்க இயலும். 

திருநெல்வேலி பகுதியில் இன்றும் இருக்கும் குடிமக்கள் வழிபாட்டில் இருக்கும் சில தெய்வங்கள்: தென்னை மரத்தடியான் - வாய்க்கான் கரையான் - கரடி சாமி - சிரசாமி - உள்ளப்பன் - அருதப்பன் - மருதப்பன் - சோலையான் - குளக்கரை சாமி - பேச்சியம்மன் - வண்டிமலைச்சி - புள்ளச்சி - சரிச்சி, இன்னும் பல.

வேண்டிய பலன்கள் உடனே நடைபெறுவதற்கு..... அடுத்த பதிவில் தொடரும்...

ஊரின் வாஸ்து - தொகுப்பு பத்து

ஊரின் வாஸ்து - தொகுப்பு பத்து
ஊரின் ப்ரதான கோவிலில் வருடத்திற்கு இரண்டு திருவிழாக்கள் நடத்தப்படும். ஒரு திருவிழா உத்தராயணத்திலும் (தை முதல் ஆனி வரை ) இன்னொன்று தக்ஷிணாயத்திலும் (ஆடி முதல் மார்கழி வரை) நடத்தப்படும். 

உத்தராயணத்தில் நடத்தப்படும் விழா மக்களுக்கானது. தக்ஷிணாயத்தில் நடத்தப்படும் விழா தேவதைகளுக்கானது.

ஊரின் கிழக்குக் கடைசியில் ஏதேனும் ஒரு அம்மன் ஆலயமோ அல்லது ஏதேனும் ஒரு காவல் தெய்வமோ இருக்கும். அந்த கோவிலுக்காகவே தக்ஷிணாயன திருவிழா நடத்தப்படும். 

தக்ஷிணாயன திருவிழாவின் போது எட்டுத் திக்கிலிருக்கும் தேவதைகளுக்கும் பிரதான தெய்வம் விருந்து கொடுப்பதாக ஐதீகம். 

நாளாவட்டத்தில் இரண்டு திருவிழா ஒரு திருவிழாவாக சுருங்கி இப்போது சில கோவில்களில் இதுவும் நடப்பதில்லை. 

புஷ்ப யாகம்:
புஷ்ப யாகம் என்றவுடன் அனைவரும் புஷ்பத்தினாலேயே ஹோமம் - யாகம் செய்வார்கள் என நினைக்கலாம். ஆனால் புஷ்ப யாகம் என்றால் பூக்களினாலேயே பிரதான தேவதைக்கு அதனுடைய நக்ஷத்ரத்தின் போது அபிஷேகம் செய்வது. உதாரணமாக இந்த பிரதான தேவதை பெருமாளாக இருந்தால் திருவோண நக்ஷத்ரத்தன்று  நடைபெறும். மிக மிக முக்கியமான விஷயம் - கோவிலுக்கு சம்பந்தபட்டவர்கள் யாரையும் விடாமல் இந்த யாகத்திற்கு அழைக்க வேண்டும். அப்படி இல்லாத பக்ஷத்தில் தேவதை திருப்தி கொள்ளாது.



தொடரும்...

ஒரு வரி பலன் - மூலம் - பொது

ஒரு வரி பலன் - மூலம் - பொது
ஆடிக்குப் பிறகு வாகனங்களில் செல்லும் போது கவனம். ஆவணிக்கு பிறகு லாபம் அதிகரிக்கும் - தொழில் மாற்றம். மார்கழிக்குப் பிறகு சோம்பல் அதிகரிக்கும் - சிறிய விஷயத்திற்கும் திட்டமிடல் அவசியம்.



பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் - 7845119542
www.kuppuastro.com
Email: ramjothidar@gmail.com

ஒரு வரி பலன் - கேட்டை - பொது

ஒரு வரி பலன் - கேட்டை - பொது
ஆடிக்குப் பிறகு பணத் தட்டுப்பாடு நீங்கும். ஆவணிக்கு பிறகு சுப விரையம். மார்கழிக்குப் பிறகு தடைகள் அகலும்.



பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் - 7845119542
www.kuppuastro.com
Email: ramjothidar@gmail.com

Sunday, June 11, 2017

அனைத்து விதமான கர்ம தோஷங்களுக்கும் உரிய பரிகாரம்

அனைத்து விதமான கர்ம தோஷங்களுக்கும் உரிய பரிகாரம்:
உலகத்தில் பிறக்கக்கூடிய அனைத்து குழந்தைகளுமே ஏதேனும் கர்மவினைகளோடே பிறக்கிறது. 

நாக தோஷம் - களத்திர தோஷம் - மாங்கல்ய தோஷம் - செவ்வாய் தோஷம் - கேந்திராதிபத்திய தோஷம் என பல விதமான தோஷங்கள் இருக்கிறது. முன்னோர்கள் வழியில் ஏதேனும் சாபம் இருக்கலாம். உதாரணமாக குல தெய்வ சாபம் - பிதுர் தோஷம், சாபம் - பெண் சாபம் என 16 விதமான சாபங்கள் சொல்லப்படுகிறது. 



இதன் மூலமாகவும் நாம் செய்யக்கூடிய - ஆரம்பிக்கக்கூடிய காரியங்களில் ஏதேனும் தடை தாமதம் ஏற்படலாம். இன்னும் சிலருக்கு ஒரு காரியம் முடிவடையும் என நினைக்கும் போது அந்த காரியமே முடியாமல் போகலாம். 

இதற்கான எளிமையான பரிகாரம் வீட்டில் காயத்ரி ஹோமம் செய்வது. 1008 ஆவர்த்தி காயத்ரி தேவிக்கு அன்னம் - நெய் வைத்து ஹோமம் செய்வதன் மூலம் சாபத்தின் கடுமையைக் குறைக்க முடியும்.

குறிப்பு:
தினமும் வீட்டில் ஹோமம் செய்வதற்குப் பெயர் அக்னி ஹோத்திரம். இதில் ஏதேனும் ஒரு செப்புப் பாத்திரத்தில் வரட்டி வைத்து பச்சரிசி மற்றும் நெய்யைக் கொண்டு காயத்ரி மந்திரம் சொல்லி ஹோமம் செய்வார்கள். இப்படி தினமும் ஹோமம் செய்பவர்களுக்கு தோஷங்கள் அண்டாது.


பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் - +91 7845119542
www.kuppuastro.com
Email: ramjothidar@gmail.com

ஒரு வரி பலன் - அனுஷம் - பொது

ஒரு வரி பலன் - அனுஷம் - பொது
ஆடிக்குப் பிறகு பொருளாதார ஏற்றம். ஆவணிக்கு பிறகு ஆரோக்கியத்தில் மேம்பாடு. மார்கழிக்குப் பிறகு நிம்ம்ம்ம்ம்ம்மதி.



பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் - 7845119542
www.kuppuastro.com
Email: ramjothidar@gmail.com

ஒரு வரி பலன் - விசாகம் - பொது

ஒரு வரி பலன் - விசாகம் - பொது
ஆடிக்குப் பிறகு தொழிலில் மாற்றம். ஆவணிக்கு பிறகு சுபநிகழ்ச்சிகளில் இருந்த தடை நீங்கும், பொற்காலம். மார்கழிக்குப் பிறகு தைரியம் அதிகரிக்கும்.
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் - 7845119542
www.kuppuastro.com
Email: ramjothidar@gmail.com

ஹோம நிமித்தம்

ஹோம நிமித்தம்:
இன்று காலை மஹாகணபதி ஹோமம் செய்யும் போது கணபதி ஹோமம் முடிந்து ம்ருத்யுஞ்சய ஹோமம் ஆரம்பிக்கும் போது அழகிய பசு மாடு ஒன்று சரியாக வீட்டின் வாசலில் வந்து நின்றது. சிறிது நேரம் கழித்து அதனுடைய கன்றும் பின்னாலேயே வந்தது. இது மிக மிக அருமையான நிமித்தமாகும். 

குறிப்பு:
கடைசியில் ப்ரஸ்ணம் பார்க்கும் வந்த லக்னம் - சிம்மம். லக்னாதிபதி மறையவில்லை. ஆயுள் ஸ்தானாதிபதி குரு அவருடைய ஸ்தானத்தைப் பார்க்க ஆயுசு தீர்க்கம். மேலும் அர்த்தாஷ்டமம் இருந்தாலும் லக்னாதிபதி சனியைப் பார்ப்பதன் மூலம் தோஷம் நிவர்த்தியாகிறது. 

ஆயுசு - ஆரோக்கியம் - தொழில் உத்தமம் என கொள்ளப்பட்டது.

வாழ்த்துக்கள்.

Friday, June 9, 2017

ஒரு வரி பலன் - ஸ்வாதி - பொது

ஒரு வரி பலன் - ஸ்வாதி - பொது
ஆடிக்குப் பிறகு மகிழ்ச்சி. ஆவணிக்கு பிறகு மனக்கலக்கம் நீங்கும். மார்கழிக்குப் பிறகு சுப நிகழ்வு, மன நிம்மதி.
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் - 7845119542
www.kuppuastro.com
ramjothidar@gmail.com

ஆக்குப்பிறை விளக்கு

ஆக்குப்பிறை விளக்கு:
ஒரு சிறிய காமாக்ஷி விளக்கோ அல்லது மண் அகல் விளக்கையோ ஆக்குப்பிறையில் அதாவது கிச்சனில் ஏற்றி வையுங்கள். தினமும் சமைத்தவுடன் அந்த விளக்கிற்கு நிவேதனம் செய்த பின் சாப்பிட்டால் எந்த நோயும் வராது. 



குறிப்பு:
சைவம் சமைத்தால் மட்டும் நிவேதனம் செய்யவும். அசைவம் சமைக்கும் போது விளக்கேற்றாமல் இருப்பதே நல்லது.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் - +91 7845119542
Web: www.kuppuastro.com
Email: ramjothidar@gmail.com

ஒரு வரி பலன் - சித்திரை - பொது

ஒரு வரி பலன் - சித்திரை - பொது
ஆடிக்குப் பிறகு தொழிலில் ஏற்றம். ஆவணிக்கு பிறகு சுபநிகழ்வுகளால் மகிழ்ச்சி. மார்கழிக்குப் பிறகு திருமணம், சந்தாண பாக்கியம், வீடு மனை யோகம்.
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் - 7845119542
www.kuppuastro.com

ஒரு வரி பலன் - ஹஸ்தம் - பொது

ஒரு வரி பலன் - ஹஸ்தம் - பொது
ஆடிக்குப் பிறகு லாபம் மிகும். ஆவணிக்கு பிறகு பொருளாதார மாற்றம் . மார்கழிக்குப் பிறகு வீடு மனை வாங்குவதற்கான சூழல்.
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் - 7845119542
www.kuppuastro.com

ஒரு வரி பலன் - உத்திரம் - பொது

ஒரு வரி பலன் - உத்திரம் - பொது
ஆடிக்குப் பிறகு நன்மை. ஆவணிக்கு பிறகு மேன்மை. மார்கழிக்குப் பிறகு பொருளாதாரத்தில் முன்னேற்றம்.
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் - 7845119542
www.kuppuastro.com

ஒரு வரி பலன் - மகம், பூரம்

ஒரு வரி பலன் - மகம் - பொது
ஆடிக்குப் பிறகு நன்மை. ஆவணிக்கு பிறகு யோகம். மார்கழிக்குப் பிறகு மாற்றம்.
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் - 7845119542

ஒரு வரி பலன் - பூரம் - பொது
ஆடிக்குப் பிறகு தடைகள் நீங்கும். ஆவணிக்கு பிறகு தைரியம் மிளிரும். மார்கழிக்குப் பிறகு முன்னேற்றம்.
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் - 7845119542
www.kuppuastro.com

Wednesday, June 7, 2017

முன்னோர்களை வழிபடுவதற்கான எளிய பரிகாரம்:

முன்னோர்களை வழிபடுவதற்கான எளிய பரிகாரம்:
நமது முதல் தெய்வம் முன்னோர்கள்தான். எனவே தினமும் அவர்களை வணங்கியபின் எதையும் ஆரம்பிப்பது நன்மையைத் தரும். 


வீட்டில் இருக்கும் இறந்து போன பெரியவர்கள் போட்டோவின் முன் தினமும் காலையில் குளித்து முடித்தவுடன் 1 டம்ளர் காய்ச்சிய பால் மற்றும் 1 டம்ளர் தண்ணீர் வைத்து வணங்க வேண்டும்.



வணங்கிய பின் பாலை வீட்டிலிருக்கும் அனைவரும் சாப்பிட்டு விடலாம். தண்ணீரை சாப்பிட வேண்டாம். தினமும் தண்ணீரை மாற்ற வேண்டும். பழைய தண்ணீரை ஏதேனும் மரத்திலோ அல்லது மொட்டை மாடியிலோ விட்டு விடலாம்.

அனுபவப் பூர்வமான இந்த பரிகாரம் எனது ஆதிகுரு பெருங்குளம் குப்பு ஜோஸ்யர் அவர்களால் 100 வருடத்திற்கு முன் சொல்லப்பட்டதாகும்.

குறிப்பு:
முன்னோர்கள் போட்டொ இல்லாதவர்கள் ஏதேனும் ஒரு கண்ணாடி வாங்கி அதில் முழுவதுமாக சந்தணம் பூசி பயன்படுத்தலாம். அதற்கு பால் - தண்ணீர் படைக்கவும்.

Tuesday, June 6, 2017

நேர்மறை எண்ணங்களை வரவைப்பதற்கும் எதிர்மறை எண்ணங்களை அழிக்க வைப்பதற்குமான ஒரு பரிகாரம்:

நேர்மறை எண்ணங்களை வரவைப்பதற்கும் எதிர்மறை எண்ணங்களை அழிக்க வைப்பதற்குமான ஒரு பரிகாரம்:


தினமும் வீட்டில் விளக்கு ஏற்றுவதன் மூலம் பல வகையான நன்மைகளைப் பெற முடியும். அதிலும் மண் அகல் விளக்கில் தினமும் வீட்டில் விளக்கேற்றுவதன் பலன் அளப்பரியாதது. வீட்டில் விளக்கு ஏற்றும் போது நல்லெண்ணை மற்றும் நெய் கலந்து விளக்கு ஏற்றுவது சிறந்தது.




வீட்டில் பஞ்ச முக மண் அகல் விளக்கில் தினமும் தீபம் ஏற்றி வணங்கினால் எதிர்மறை எண்ணங்கள் அகலுவதோடு நேர்மறை எண்ணங்கள் சூழும். அதிலும் தினமும் மாலை 6 - 7க்குள் மண் அகல் விளக்கை ஏற்றி குல தெய்வத்தை வணங்கினால் எல்லா விதமான தோஷங்களும் நீங்கும். சுப நிகழ்ச்சிகளில் நீடித்து வந்த சுணக்க நிலை மாறும்.

எதிர்மறை சக்திகளை விரட்டுவது எப்படி?

எதிர்மறை சக்திகளை விரட்டுவது எப்படி?

நேர்மறை சக்திகள் வருவதற்கு எதிர்மறை சக்திகள் மிகப் பெரிய தடையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 

முதலாவதாக வருடத்திற்கு ஒருமுறை வீட்டில் ஏதேனும் ஒரு ஹோமம் செய்வது நல்லது. 

இரண்டாவதாக எதிர்மறை சக்திகளை விரட்டுவதில் பசு மாட்டின் கோமியம் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது எனலாம். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை வீட்டிற்கு  முன் வெளியில் இருக்கும் இடத்தை வெள்ளிக்கிழமை தோறும் பசு மாட்டின் சாணத்தால் மொழுகுவார்கள். தினமும் வீட்டின் வாசலை காலையில் தெளிக்கும் போதும் சாணம் கலந்து தண்ணீர் தெளிப்பார்கள். தற்போது அது பரவலாக குறைந்து வருகிறது. ஆனாலும் மேற்கு மண்டலத்தில் இப்போதும் இதை கண் கொண்டு பார்க்க முடிகிறது. 

சரி விஷயத்திற்கு வருவோம், வெள்ளிக்கிழமை தோறும் பசு மாட்டின் சாணம் அல்லது கோமியம் எடுத்து வந்து தூய மஞ்சள் பொடியுடன் கலந்து வீடு முழுவதும் மாவிலையால் தெளிக்கவும். தெளித்த பின் வீட்டில் தனல் உண்டாக்கி சாம்பிராணி தூபம் போடவும். 

இதை செய்வதன் மூலம் கெட்ட கனவுகள் அகலும். தம்பதிகளுக்குள் அன்னியோன்னியம் ஏற்படும். கண் திருஷ்டி நீங்கும். சுப காரியங்களில் இருக்கக் கூடிய தடைகள் அகலும்.

குறிப்பு:
வெள்ளிக்கிழமை மாலை 6 - 7 செவ்வாய் ஹோரையாகும். முக்குண வேளையை பொறுத்தவரை சாத்வீக வேளையாகும். இந்த நேரத்தில் செய்வது மிகவும் நன்மையைத் தரும். 

தொடரும்....

இன்றைய ராசிபலன் - 06.06.2017 - செவ்வாய்கிழமை

இன்றைய ராசிபலன் - 06.06.2017 - செவ்வாய்கிழமை

சுட்டி: http://kuppuastro.com/today.php

ஊரின் வாஸ்து - தொகுப்பு ஒன்பது:

ஊரின் வாஸ்து - தொகுப்பு ஒன்பது:

ஒவ்வொரு ஊரிலும் சுடுகாடு அல்லது இடுகாடு தர்மராஜனின் திசையான தெற்கில் அமைந்திருக்கும். சுடுகாடு அல்லது இடுகாடு அமைந்திருக்கும் இடத்தில் கட்டாயம் நீர் நிலைகள் இருக்கும். சில ஊர்களில் சுடுகாடு இருக்காது. பல ஊர்களுக்கு சேர்ந்த மாதிரி அமைத்திருப்பார்கள். சு(இ)டுகாடு அமைந்திருக்கும் இடத்திற்கு அருகில் கட்டாயமான முறையில் சிவன் ஆலயம் அல்லது ஐயனார் அல்லது ஏதேனும் அம்மன் ஆலயம் அமைக்கப்பட்டிருக்கும்.

ஊரின் பிரதான தெய்வம் வருடத்திற்கு ஒரு முறை இந்த ஆலயத்திற்கு விஜயம் செய்யும். மேலும் ஊரில் யாராவது இறந்து அந்த பிரதான தேவதை விஜயம் இங்கு செய்ய நேரிட்டாலும் நீத்தார் கடமையை நிறுத்த மாட்டார்கள்.
யாராவது இறந்து போனால் தீட்டு ஏற்படும். அதனை நீக்குவதற்காக ஊரைச் சுற்றியிலும் எட்டு திசைகளிலும் இருக்கும் காவல் தெய்வங்களுக்கு அக்னி ரீதியாக சுத்தம் செய்வார்கள்.
ஊரின் பிரதான கோவிலின் கொடியேற்றத்தின் போது ம்ருத்ஸங்கிரணம் - அங்குரார்ப்பணம் என ஒரு விழா செய்வார்கள். ம்ருத் என்றால் வடமொழியில் மண் என்று பொருள்.





இதில் செய்யக்கூடிய விஷயங்கள்:
பஞ்சபூதங்களை வணங்குவது. முதலில் அந்த ஊரிலுள்ள ஏதேனும் ஒரு நீர்நிலையிலிருந்து மண் எடுத்து வருவார்கள். அடுத்ததாக ஊரின் பிரதான நீர் நிலையிலிருந்து நீர் எடுத்து கும்ப கலசம் ஸ்தாபிப்பார்கள். பின் அக்னியை ஹோமத்தில் மூட்டி வேண்டுவார்கள். அடுத்ததாக அந்த அக்னியின் மூலமாக ஏற்படக்கூடிய புகை காற்றுடன் கலக்கும் போது காற்றினை வேண்டுவார்கள். ஹோமத்திலிருந்து ஏதாவது ஒரு ரூபத்தில் (ஓலை அல்லது தீச்சட்டி) அக்னியை எடுத்து ஊரின் எல்லைகளை வலம் வருவார்கள். இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் கடைசியாக ஒரு கும்பத்தை எடுத்துக் கொண்டு கோபுரம் அல்லது விமானத்தில் ஏறி ஆகாய தேவதையை வேண்டுவார்கள்.



தொடரும்.....

நேர்மறை சக்திகளை வீட்டிற்குள் கொண்டு வருவது எப்படி? - தொகுப்பு ஒன்று

நேர்மறை சக்திகளை வீட்டிற்குள் கொண்டு வருவது எப்படி? - தொகுப்பு ஒன்று
வீட்டினுள் இருக்கும் அறைகளில் ஒவ்வொரு அறையிலும் ஒரு விரிப்பு விரித்து ஏதேனும் ஒரு சிறிய செப்பு அல்லது பித்தளை அல்லது கண்ணாடி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கவும். இதனை காலையில் செய்வதே சிறந்தது. தினமும் காலையில் இந்த தண்ணீரை மாற்றவும். பழைய தண்ணீரை செடியிலோ அல்லது மொட்டை மாடியிலோ விட்டு விடவும்.



குறிப்பு:
சிவன் கோவிலிலும் பெருமாள் கோவிலிலும் கர்ப்பகிரஹத்தில் செப்புப் பாத்திரம் அல்லது பித்தளையில் தீர்த்தம் வைத்திருப்பார்கள். பெருமாள் ஆலயத்தில் கர்ப்பகிரகத்தில் கொடுக்கும் தீர்த்தத்தில் துளசியும் பச்சைக் கற்பூரமும் சேர்ப்பார்கள். சிவன் கோவிலில் கொடுக்கும் தீர்த்தத்தில் வில்வமும் மஞ்சள் பொடியும் கலந்திருக்கும். 

Monday, June 5, 2017

குழந்தை பிராப்தத்திற்கான ப்ரஸ்ணம்:

குழந்தை பிராப்தத்திற்கான ப்ரஸ்ணம்:
ஒரு நண்பர் இன்று குழந்தை பிறப்பதற்கான ப்ரஸ்ணம் பார்க்க வந்திருந்தார். ப்ரஸ்ணம் பார்க்கும் போது வந்திருந்த லக்னம் - மகரம்.





பலன் - வாக்கியப்படி:
சர லக்னம். லக்னாதிபதி சனி லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். லக்னத்தை குரு பார்க்கிறார். ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானமான ரிஷபத்தை ராசிநாதன் சனியும் சந்தாண காரகன் குருவும் பார்க்கிறார்கள். 100% சந்தாண ப்ராப்தி உண்டு. குரு தனது ஏழாம் பார்வையால் ரிஷபத்தை பார்க்கும் போது குழந்தை கட்டாயம் பிறக்கும்.

வாழ்த்துக்கள்.

Thursday, June 1, 2017

சுபகாரிய நிமித்தம்:

சுபகாரிய நிமித்தம்:
ஒரு ஜோதிடர் ப்ரஸ்ணம் பார்க்க ஆரம்பிக்கும் போது குழந்தையின் அழுகுரல் கேட்டால் கேட்க வந்த காரியம் நிச்சயம் நடக்கும். 

குலதெய்வத்திற்கான ப்ரஸ்ணம் பார்க்கும் போது கர்த்தா (யாருக்கு பார்க்க வேண்டுமோ அவர்) கொண்டு வந்த தாம்பூலத்தில் உள்ள வெற்றிலை நிமிர்ந்தில்லாமல் திரும்பி இருந்தால் குல தெய்வ அனுக்ரஹம் இல்லை என பொருள். அதே போன்று கொண்டு வந்திருக்கும் தாம்பூலத்தில் இருக்கும் வெற்றிலையில் ஐந்தாம் வெற்றிலை பின்னப்பட்டிருந்தாலும் இதே நிலைதான்.

ப்ரஸ்ணம் பார்க்கும் போது ஜோதிடரோ அல்லது கர்த்தாவோ நடுவில் எழுந்து செல்லக் கூடாது. ஒரு முறை உட்கார்ந்து விட்டால் ஜோதிட பலன்கள் முழுமை பெற்ற பின்னரே எழுந்திருக்க வேண்டும்.

தொடரும்.....