Wednesday, January 29, 2020

Tuesday, January 21, 2020

ஜோதிட கேள்வி பதில் - பகுதி 09

ஜோதிட கேள்வி பதில் - பகுதி 09

திருமதி.வளர், சென்னை
கேள்வி:
வாகன வசதி ஏற்படுமா?



பதில்:
மீன லக்னம் - விசாக நக்ஷத்ரம் -  விருச்சிக ராசியில் ஜெனித்துள்ள உங்களுக்கு தற்போது புத திசையில் ராகு புத்தி நடக்கிறது. 32 வயது பூர்த்தியாகி இருக்கிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் அனைத்து கிரகங்களின் சஞ்சாரம் அனுகூலமாக இருக்கிறது. குருவின் ராசி சஞ்சாரம் இருக்கிறது. உத்தியோகத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். வாகனவசதி உங்களுக்கு வரும் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு உண்டாகும். தினமும் முருகனை வணங்கி வாருங்கள்.

Friday, January 17, 2020

ஜோதிட கேள்வி பதில்: பகுதி 08

RV, சென்னை
கேள்வி: 
கடன் பிரச்சனை எப்போது தீரும்?



பதில்: 
சிம்ம லக்னம் - உத்திர நக்ஷத்ரம் - கன்னியா ராசியில் ஜெனித்துள்ள உங்களுக்கு தற்போது குரு திசையில் கேது புத்தி நடக்கிறது. உங்கள் ஜாதகப்படி கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக கடினமான சூழ்நிலை நிலவியது. தற்போது அனைத்து கிரகங்களும் வலுவாக உள்ள நிலையில் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் கடன் பிரச்சனை அகலும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்து வாருங்கள்.

Tuesday, January 14, 2020

நாளைய நாள் அதிர்ஷ்ட நாள்: 15 ஜனவரி 2020

நாளைய நாள் அதிர்ஷ்ட நாள்

15 ஜனவரி 2020


ராமானுஜர் வழி வந்தவங்கன்னு சொல்லிக்காதீங்கடா ....

டேய் பிக்காலிப் பயலுகளா நீங்க செத்து போகும் போது கூடவே கோவிலையும் சாமியையும் கட்டி கொண்டு போயுடுங்கடா. 

ராமானுஜர் வழி வந்தவங்கன்னு சொல்லிக்காதீங்கடா ....

குறிப்பு:
[1] இதை விட கெட்ட வார்த்தை வாயுலேர்ந்து வரும். மிகப் பொறுமையாக திட்டியிருக்கிறேன்.

[2] புரிய வேண்டியவர்களுக்கு இந்த பதிவு புரியும்.

[3] இதை பார்த்துட்டு இந்த பதிவு சம்பந்தபட்டவங்க போன் பண்ணாதீங்க. 

Monday, January 13, 2020

தை மாத விவாஹ முகூர்த்த நாட்கள்

தை மாத விவாஹ முகூர்த்த நாட்கள்


ஜோதிட கேள்வி பதில் பகுதி 07: சிவஸ்தலத்தில் ராஜகோபுரம் கட்ட முடியுமா?

ஜோதிட கேள்வி பதில் பகுதி 07

திரு.சேது - ராமநாதபுரம்
கேள்வி:
சிவஸ்தலத்தில் ராஜகோபுரம் கட்ட முடியுமா?

பதில்:
ப்ரஸ்ணம் பார்த்த தேதி: 13.01.2020 - திங்கட்கிழமை
நேரம்: காலை 9.00
இடம்: சென்னை

உங்களுக்கு ப்ரஸ்ணம் பார்க்கும் போது வந்த லக்னம்: தனுசு. லக்னத்தில் குரு ஆட்சியாக இருக்கிறார். பாக்கியாதிபதி சூரியனும் லக்னத்தில் இருக்கிறார். உங்களுடைய பூர்வ புண்ணிய ஸ்தானமும் பாக்கிய ஸ்தானமும் பலமாக இருக்கிறது. உங்களுடைய முன்னோர்கள் மிகவும் புண்ணியம் செய்தவர்களாக இருக்கிறார்கள். உங்களுக்குக் கட்டாயம் ராஜகோபுரம் கட்டும் வாய்ப்பு உண்டு. 



குறிப்பு:
ஒருவருடைய ஜாதகத்தில் கோவில்கள் சார்ந்த விஷயங்களைப் பார்க்கும் போது நவக்கிரகத்தில் குருவையும் - பூர்வ புண்ணிய ஸ்தானமும் - பாக்கிய ஸ்தானமும் பலம் பெற்றிருக்க வேண்டும். பூர்வ புண்ணிய ஸ்தானமும் பாக்கிய ஸ்தானமும் கெட்டுப் போயிருந்தால் கூட குரு பலம் பெற்றிருந்தால் தெய்வம் சார்ந்த விஷயங்களில் நாட்டம் இருக்கும். அதே வேளையில் அதே குரு பகவான் ஷட் பலத்திலும் அதிகமாக இருந்தால் கோவில் சம்பந்தபட்ட விஷயங்களில் ஈடுபாடும் உண்டு. புணருத்தாரணம் - நிர்மாணம் செய்வதற்கும் வாய்ப்புகள் ஏற்படும்.


பொங்கல் வைக்க நல்ல நேரம்

பொங்கல் வைக்க நல்ல நேரம்




Sunday, January 12, 2020

நாளைய நாள் வெற்றி நாள்: 13 ஜனவரி 2020

நாளைய நாள் வெற்றி நாள்



13 ஜனவரி 2020


ஜோதிட கேள்வி பதில் - பகுதி 06

ஜோதிட கேள்வி பதில் - பகுதி 06

கேள்வி:
திரு.K.U - வேலூர்
கடன் பிரச்சனை எப்போது தீரும்? ப்ரஸ்ணம் பார்த்து சொல்லவும்.





பதில்:
உங்களுக்கு சோழிப் பிரஸ்ணம் பார்த்ததில் வந்த லக்னம்: கும்பம். உங்களுக்கு 39 வயது நடக்கிறது. மேஷ ராசி கிருத்திகை நக்ஷத்ரம் - மகர லக்னம். ராகு திசை சந்திர புத்தி. ராகு பாக்கியஸ்தானத்திலும் சந்திரன் நான்காம்  இடத்திலும் இருக்கிறார்கள். ஆயுள் ஸ்தானத்தில் லக்ன தனாதிபதி சனி இருக்கிறார். சனி சூரியன் பரிவர்த்தனை பெற்றிருக்கிறார்கள். ஆயுசு தீர்க்கம். வாகனம் இயக்கும் போதும் பயணங்களின் போதும் கவனம் தேவை. கடன் பிரச்சனை வரும் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு படிப்படியாக குறையும். 2020ம் ஆண்டு உங்களுக்குப் பொற்காலமாக இருக்கும். ப்ரஸ்ணப்படி ஐந்தாமிடத்தில் ராகு இருக்கிறார். தந்தையார் ஸ்தானாதிபதி சுக்கிரன் பாதகாதிபதியுமாகிறார். தந்தைகாரகன் சூரியன் ஷட்பலத்தில் பலம் குன்றி இருக்கிறார். தந்தை வழி சொத்துக்கள்  கிடைப்பதில் அதிகமான விவாதங்களும் சண்டை சச்சரவுகளும் வரலாம். பொறுமையுடன் எதையும் எதிர்கொள்ளுங்கள். பிடிவாதத்தை தளர்த்திக்  கொள்ளவும். தினமும் ஜீவராசிகளுக்கு அன்னமிடவும்.

Monday, January 6, 2020

நாளை நாள் நமது வெற்றி நாள் - 07 ஜனவரி 2020

நாளை நாள் நமது வெற்றி நாள்
07 ஜனவரி 2020


ஜோதிட கேள்வி பதில் - பகுதி 05

ஜோதிட கேள்வி பதில் - பகுதி 05

கேள்வி:
ஐயா வணக்கம். நான் பிறந்தது 06.01.1970 - 00.15 - பாண்டிச்சேரி. நான் எப்போது வீடு கட்டுவேன்?
Mrs. KM - புதுச்சேரி






பதில்:
உங்களுக்கு 50 வயது பூர்த்தியாகிறது. செவ்வாய் திசை குரு புத்தி சனி அந்தரம் நடக்கிறது. தைரிய அஷ்டமாதிபதி திசை சுக சப்தமாதிபதி புத்தி. கேட்டை  நக்ஷத்ரம் - விருச்சிக ராசி, கன்னியா லக்னம். ஆயுசு தீர்க்கம். ஆரோக்யத்தில் கவனம் தேவை. காரம் சம்பந்தமான உணவுகளை தவிர்த்தல் நலம்.  உடம்பில் உஷ்ணம் ஏறாமல் பார்த்துக் கொள்ளவும். 15.02.2020க்குப் பின் சொந்த வீடு கட்டுவதற்கான அதிர்ஷ்டம் வரும். உங்கள் ஜாதகப்படி உங்களுக்கு  மேற்கு அல்லது வடக்கு தலைவாசல் நன்றாக இருக்கும். வேலையைப் பொறுத்தமட்டில் உங்களுக்கு வரக்கூடிய ஜூன் மாதத்திற்கு பின் பெரிய அளவில் ஏற்றம் இருக்கும். அடிக்கடி முருகன் ஆலயத்திற்குச் சென்று வருவதும் சந்திர தரிசனம் செய்வதும் பரிகாரமாக இருக்கும்.

Sunday, January 5, 2020

நாளை நாள் நமது வெற்றி நாள் 06 ஜனவரி 2020

நாளை நாள் நமது வெற்றி நாள்
06 ஜனவரி 2020




ஜோதிட கேள்வி பதில் - பகுதி 04

கேள்வி: எனக்கு எப்போது திருமணம் நடைபெறும்?

MM - தஞ்சை
 
பிறந்த தேதி: 27.01.1987; நேரம்: 11.10 இரவு; இடம்: தஞ்சை


 



பதில்:
உங்களுக்கு சோழிப் பிரஸ்ணம் பார்க்கும் போது வந்த லக்னம் - கடகம். நீங்கள் பிறந்தது பூராடம் நக்ஷத்ரம் - தனுசு ராசி, கன்னி லக்னம்.  தற்போது உங்களுக்கு  33 வயது நடக்கிறது. செவ்வாய் தசை சனி புத்தி குரு அந்தரம். தைரிய அஷ்டமாதிபதி தசை பஞ்சம ரண ருணாதிபதி புத்தி. செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார். ஆயுசு தீர்க்கம். ஆரோக்கிய நன்றாக உள்ளது. இடவொட்டு கால சர்ப்ப தோஷத்தில் பிறந்திருக்கிறார்.  செவ்வாய் ஏழாம் பாவத்தில் இருப்பதால் சிறிது திருமண தடை இவருக்கு உண்டு. ஆனால் 33 வயது பூர்த்தியான பின் திருமணம் நிச்சயம் உண்டு. திருமணம் சார்ந்த முடிவுகள் எடுக்கும் போது சிறிது சுணக்கம் ஏற்படும். 2020 பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு இவருக்கு திருமணம் நடைபெறும். திருமண வாழ்வு மிக இனிமையானதாக இருக்கும். திருமணம் நடைபெற்ற பின் இவருக்கு சகலவித  ஐஸ்வர்யங்களும் வந்து சேரும். ஏதேனும் ஒரு சிறிய கோவிலில் நாகபிரதிஷ்டை செய்வதன் மூலம் சர்ப்பதோஷம் அகலும். மேலும் முன்னோர்களை  நினைத்து ஒவ்வொரு அமாவாசையும் வழிபாடு மேற்கொள்வது அவசியம்.

Saturday, January 4, 2020

நாளைய நாள் நமக்கான நாள் 05 ஜனவரி 2020

நாளைய நாள் நமக்கான நாள்

05 ஜனவரி 2020


ஜோதிட கேள்வி பதில் - பகுதி 03

கேள்வி: அரசாங்க வேலை கிடைக்குமா?
PJ - சென்னை
பிறந்த தேதி: 12.11.1985; நேரம்: 8.15 இரவு; இடம்: சென்னை



பதில்:
உங்களுக்கு சோழிப் பிரஸ்ணம் பார்க்கும் போது வந்த லக்னம் - கன்னி. நீங்கள் பிறந்தது விசாகம் நக்ஷத்ரம், துலா ராசி, மிதுன லக்னம். உங்களுக்கு 34 வயது பூர்த்தியாகிறது. புதன் திசை சந்திரன் புத்தி செவ்வாய் அந்தரம். லக்ன சுகாதிபதி திசை லாபாதிபதி புத்தி - ரண ருண லாபாதிபதி அந்தரம். உங்கள் ஜாதகப்படி கடும் முயற்சிகளுக்குப் பிறகு உங்களுக்கு அரசாங்க வேலை கிடைக்கும். 36 வயதிற்குள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். ப்ரஸ்னப்படியும் தொழில் ஸ்தானத்தை சூரியன் - செவ்வாய் பார்க்கிறார்கள். கட்டாயமாக கிடைக்கும். வாழ்த்துக்கள்.

Friday, January 3, 2020

நாளைய நாள் நமது நாள் - 04 ஜனவரி 2020

நாளைய நாள் நமது நாள்
04 ஜனவரி 2020



ஜோதிட கேள்வி பதில் - பகுதி 02

கேள்வி:
TY - மதுராந்தகம் - இது எனது மகனின் ஜாதகம் - அவனின் கல்வி நிலை எப்படி இருக்கும்?

பிறந்த தேதி: 15.06.2010; நேரம்: 9.01 காலை; பிறந்த இடம்: கோவை





பதில்:
உங்கள் மகனிற்கு சோழிப் பிரஸ்ணம் பார்த்த போது வந்த லக்னம் - தனுசு. உங்கள் பேரன் பூசம் நஃக்ஷத்ரம் - கடக ராசி, கடக லக்னம் - பூச நக்ஷத்ர சாரம். 9 வயது முடிந்தது. சனி திசை குரு புத்தி சுக்கிரன் அந்தரம். ரண ருண பாக்கியாதிபதி திசை - சப்தம அஷ்டமாதிபதி புத்தி - சுக லாபாதிபதி அந்தரம். சனி திசை 2021 மார்ச்சோடு முடிகிறது. ஆயுள் பாவம் நன்றாக இருக்கிறது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கல்வியைப் பொருத்தமட்டில் தொழில் நூட்பம் சார்ந்ததாக  இருக்கும். கணக்கு வழக்கு சார்ந்த தொழிலாக இருக்கும். லக்னத்திலேயே சுகாதிபதி சுக்கிரன் சம்பந்தம் பெற்றிருப்பதால் எந்த செயலிலும் வேகம் இருக்கும்.  படிப்பில் சாதனைகள் புரிவான். வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் வாதத்திறமை மிகுந்திருக்கும். தனது வாய் சாமர்த்தியத்தின் மூலம் மிகப் பெரிய நபராய் வருவான். 

Thursday, January 2, 2020

நாளை நாள் நம் கையில் - 03 ஜனவரி 2020

நாளை நாள் நம் கையில்...

03 ஜனவரி 2020


2020 vaasthu dates


ஜோதிட கேள்வி பதில் - பகுதி 01

கேள்வி: இது எனது பேத்தியின் ஜாதகம் - ஆயுள் - ஆரோக்கியம் எப்படி இருக்கும்?
எம்.என் - சென்னை.
பிறந்த தேதி: 31.03.2004; பிறந்த நேரம்: 10.36 இரவு; இடம்: நோய்டா;
பதில்:
உங்கள் ஜாதக விபரம்: ஆயில்யம் நக்ஷத்ரம் கடக ராசி, விருச்சிக லக்னம். உங்கள் பேத்திக்கு 12 வயது முடிந்து 13 நடக்கிறது. புதன் திசை குரு புத்தி செவ்வாய் அந்தரம். அஷ்டம லாபாதிபதி திசை தன பஞ்சமாதிபதி புத்தி. கேது தசை நடக்கிறது. ஆயுள் பாவம் மிகவும் நன்றாக உள்ளது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அதே வேளையில் அதிக புளிப்பு மற்றும் கார உணவுகளைத் தவிர்த்தல் நலம். மருத்துவம் சார்ந்த கல்வி. இசைத் துறையில் மிகவும் உன்னதமான நிலைக்கு வருவாள். 22 வயதில் சுக்கிர திசை ஆரம்பித்த பிறகு பேர் எடுப்பாள். பிரஸ்னம் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. இவள் ஜாதகத்தை வைத்து பார்க்கும் போது தாயார் தந்தையாருக்கு மிகவும் உன்னதமான காலகட்டமென்பது வரும் 2020 ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு தொடங்கும்.



ஆயுள் பாவம்:
ஒருவரது ஆயுள் பாவம் என்பது ஜாதகத்தில் எட்டாம் வீட்டைக் குறிக்கும். சனி கிரகம் ஆயுளுக்கு காரகனாவார். ஷட் பலத்தில் சனி கிரகம் பலம் பெற்றிருந்தால் ஆயுள் தீர்க்கம். அஷ்டவர்க்கத்தில் எட்டாம் பாவம் பலம் பெற்றிருந்தாலும் ஆயுள் அதிகம். ஆயுள் ஸ்தானாதிபதி பலம் பெற்றிருப்பது (அல்லது) ஆயுள் ஸ்தானம் பலம் பெற்றிருப்பது (அல்லது) ஆயுள் ஸ்தானாதிபதியையோ ஆயுள் ஸ்தானத்தையோ லக்னத்தையோ குரு பார்ப்பதாலும் ஆயுள் பலம் ஏற்படும். ஒரு வேளை லக்ன ரீதியாக ஆயுள் பலம் குன்றிருந்தால் விதி - மதி - கதி என்ற அடிப்படையில் லக்னத்தைத் தவிர்த்து சந்திரன் - சூரியன் இருக்கும் இடங்களை வைத்து தீர்மானம் செய்ய வேண்டும்.