Friday, January 3, 2020

ஜோதிட கேள்வி பதில் - பகுதி 02

கேள்வி:
TY - மதுராந்தகம் - இது எனது மகனின் ஜாதகம் - அவனின் கல்வி நிலை எப்படி இருக்கும்?

பிறந்த தேதி: 15.06.2010; நேரம்: 9.01 காலை; பிறந்த இடம்: கோவை





பதில்:
உங்கள் மகனிற்கு சோழிப் பிரஸ்ணம் பார்த்த போது வந்த லக்னம் - தனுசு. உங்கள் பேரன் பூசம் நஃக்ஷத்ரம் - கடக ராசி, கடக லக்னம் - பூச நக்ஷத்ர சாரம். 9 வயது முடிந்தது. சனி திசை குரு புத்தி சுக்கிரன் அந்தரம். ரண ருண பாக்கியாதிபதி திசை - சப்தம அஷ்டமாதிபதி புத்தி - சுக லாபாதிபதி அந்தரம். சனி திசை 2021 மார்ச்சோடு முடிகிறது. ஆயுள் பாவம் நன்றாக இருக்கிறது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கல்வியைப் பொருத்தமட்டில் தொழில் நூட்பம் சார்ந்ததாக  இருக்கும். கணக்கு வழக்கு சார்ந்த தொழிலாக இருக்கும். லக்னத்திலேயே சுகாதிபதி சுக்கிரன் சம்பந்தம் பெற்றிருப்பதால் எந்த செயலிலும் வேகம் இருக்கும்.  படிப்பில் சாதனைகள் புரிவான். வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் வாதத்திறமை மிகுந்திருக்கும். தனது வாய் சாமர்த்தியத்தின் மூலம் மிகப் பெரிய நபராய் வருவான். 

No comments: