Thursday, January 2, 2020

ஜோதிட கேள்வி பதில் - பகுதி 01

கேள்வி: இது எனது பேத்தியின் ஜாதகம் - ஆயுள் - ஆரோக்கியம் எப்படி இருக்கும்?
எம்.என் - சென்னை.
பிறந்த தேதி: 31.03.2004; பிறந்த நேரம்: 10.36 இரவு; இடம்: நோய்டா;
பதில்:
உங்கள் ஜாதக விபரம்: ஆயில்யம் நக்ஷத்ரம் கடக ராசி, விருச்சிக லக்னம். உங்கள் பேத்திக்கு 12 வயது முடிந்து 13 நடக்கிறது. புதன் திசை குரு புத்தி செவ்வாய் அந்தரம். அஷ்டம லாபாதிபதி திசை தன பஞ்சமாதிபதி புத்தி. கேது தசை நடக்கிறது. ஆயுள் பாவம் மிகவும் நன்றாக உள்ளது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அதே வேளையில் அதிக புளிப்பு மற்றும் கார உணவுகளைத் தவிர்த்தல் நலம். மருத்துவம் சார்ந்த கல்வி. இசைத் துறையில் மிகவும் உன்னதமான நிலைக்கு வருவாள். 22 வயதில் சுக்கிர திசை ஆரம்பித்த பிறகு பேர் எடுப்பாள். பிரஸ்னம் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. இவள் ஜாதகத்தை வைத்து பார்க்கும் போது தாயார் தந்தையாருக்கு மிகவும் உன்னதமான காலகட்டமென்பது வரும் 2020 ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு தொடங்கும்.



ஆயுள் பாவம்:
ஒருவரது ஆயுள் பாவம் என்பது ஜாதகத்தில் எட்டாம் வீட்டைக் குறிக்கும். சனி கிரகம் ஆயுளுக்கு காரகனாவார். ஷட் பலத்தில் சனி கிரகம் பலம் பெற்றிருந்தால் ஆயுள் தீர்க்கம். அஷ்டவர்க்கத்தில் எட்டாம் பாவம் பலம் பெற்றிருந்தாலும் ஆயுள் அதிகம். ஆயுள் ஸ்தானாதிபதி பலம் பெற்றிருப்பது (அல்லது) ஆயுள் ஸ்தானம் பலம் பெற்றிருப்பது (அல்லது) ஆயுள் ஸ்தானாதிபதியையோ ஆயுள் ஸ்தானத்தையோ லக்னத்தையோ குரு பார்ப்பதாலும் ஆயுள் பலம் ஏற்படும். ஒரு வேளை லக்ன ரீதியாக ஆயுள் பலம் குன்றிருந்தால் விதி - மதி - கதி என்ற அடிப்படையில் லக்னத்தைத் தவிர்த்து சந்திரன் - சூரியன் இருக்கும் இடங்களை வைத்து தீர்மானம் செய்ய வேண்டும்.

No comments: