Sunday, January 5, 2020

ஜோதிட கேள்வி பதில் - பகுதி 04

கேள்வி: எனக்கு எப்போது திருமணம் நடைபெறும்?

MM - தஞ்சை
 
பிறந்த தேதி: 27.01.1987; நேரம்: 11.10 இரவு; இடம்: தஞ்சை


 



பதில்:
உங்களுக்கு சோழிப் பிரஸ்ணம் பார்க்கும் போது வந்த லக்னம் - கடகம். நீங்கள் பிறந்தது பூராடம் நக்ஷத்ரம் - தனுசு ராசி, கன்னி லக்னம்.  தற்போது உங்களுக்கு  33 வயது நடக்கிறது. செவ்வாய் தசை சனி புத்தி குரு அந்தரம். தைரிய அஷ்டமாதிபதி தசை பஞ்சம ரண ருணாதிபதி புத்தி. செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார். ஆயுசு தீர்க்கம். ஆரோக்கிய நன்றாக உள்ளது. இடவொட்டு கால சர்ப்ப தோஷத்தில் பிறந்திருக்கிறார்.  செவ்வாய் ஏழாம் பாவத்தில் இருப்பதால் சிறிது திருமண தடை இவருக்கு உண்டு. ஆனால் 33 வயது பூர்த்தியான பின் திருமணம் நிச்சயம் உண்டு. திருமணம் சார்ந்த முடிவுகள் எடுக்கும் போது சிறிது சுணக்கம் ஏற்படும். 2020 பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு இவருக்கு திருமணம் நடைபெறும். திருமண வாழ்வு மிக இனிமையானதாக இருக்கும். திருமணம் நடைபெற்ற பின் இவருக்கு சகலவித  ஐஸ்வர்யங்களும் வந்து சேரும். ஏதேனும் ஒரு சிறிய கோவிலில் நாகபிரதிஷ்டை செய்வதன் மூலம் சர்ப்பதோஷம் அகலும். மேலும் முன்னோர்களை  நினைத்து ஒவ்வொரு அமாவாசையும் வழிபாடு மேற்கொள்வது அவசியம்.

No comments: