Sunday, July 29, 2012

சிந்திக்க சில விஷயங்கள்... {கேவலமான உண்மைகள்.}

சிந்திக்க சில விஷயங்கள்...

{கேவலமான உண்மைகள்.}

1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!!

2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!

3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!!

4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட அம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!!

5.ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை..!!

6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன..!!

7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான இரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!!

8.மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

9.கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!!

10.பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலமாவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை..!!!

11.குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்...!!!!

எழுதியவர்: ரோமிங் ராமன்

Tuesday, July 17, 2012

பஞ்சாங்கம் மற்றும் குறள்

In Tamil - பஞ்சாங்கம் - 17.07.2012




வருஷத்தின் பெயர் : நந்தன வருஷம்
மாதம் :
ஆடி மாஸம் 02ம் திகதி - ஜூலை 17 2012
அயணம் : உத்தராயணம்
ரிது : க்ரீஷ்ம ரிது
கிழமை : செவ்வாய்கிழமை
திதி :
திரயோதசி காலை மணி 8.32 வரை பின் சதுர்த்தசி
நக்ஷத்திரம் :
மிருகசீரிஷம் காலை மணி 8.33 வரை பின் புனர்பூசம்
யோகம் :
த்ருவம் 18.25
கரணம் :
வணிஜை 6.16 வரை பின் பத்ரம் 37.45
சூரிய உதயம் :
சூரிய உதயம் 06.02
சூரிய அஸ்தமனம் :
மாலை மணி 6.16
அஹசு :
நாழிகை 31.23
லக்ன இருப்பு :
கடகம் மணி 2.08
இராகு காலம் :
காலை 7.32 முதல் 9.02 வரை
எமகண்டம் :
காலை 10.32 முதல் 12.02 வரை
சூலம் :
கிழக்கு பரிகாரம்: தயிர்

  o கேது
குரு சுக்(வ)
புதன் சந்
o
இன்றைய கிரஹநிலை
சூர்
o o
o ராகு o செவ் சனி(வ)


-------------------------------------------------
இன்றைய நாளின் சிறப்பு:-
சந்திராஷ்டம நக்ஷத்ரங்கள்: விசாகம், அனுஷம்
மாஸ சிவராத்திரி, கரிநாள்.

.


----------------------------------------
நவக்ரஹ பாதசார விவராதிகள்

க்ருஹம் நக்ஷத்ரம் பாதம்
சூரியன் புனர்பூசம் 4
சந்திரன் மிதுனம் -
செவ்வாய் ஹஸ்தம் 1
புதன் புனர்பூசம் 1
குரு ரோகினி 2
சுக்ரன் ரோகினி 4
சனி சித்திரை 1
ராகு அனுஷம் 2
கேது க்ருத்திகை 4


இன்றைய குறள்: அழுக்காறாமை
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.
பொருள்: பிறர் உயர்வு கண்டு மகிழாமல் பொறாமைப்படுபவன், அறத்தால் வரும் புண்ணியத்தை வேண்டா என மறுப்பவன் ஆவான்.

Monday, July 16, 2012

காஞ்சி குமரக்கோட்டம்

முருகப்பெருமான் மற்றும் வள்ளி, தெய்வானை திருவுருவங்கள் நாகம் குடைபிடித்த நிலையில் காஞ்சிபுரம் குமரக்கோட்டத்தில் காணப்படுகின்றன. இது இங்கு மட்டுமே காணப்படும் விசேஷ உருவமாகும். முருகப்பெருமானுக்கு 5 தலை நாகம் குடை பிடித்திருக்கிறது. வள்ளி, தெய்வானைக்கு 3 தலை நாகம் குடை. இந்த திருக்கோலத்தை கல்யாணசுந்தரர் கோலம் என்பர். சுப்பிரமணியருக்கு வைகாசி பிரம்மோற்சவத்தில் 11ம் நாள் வள்ளியுடன் திருக்கல்யாணம் நடக்கிறது. ஐப்பசி கந்தஷஷ்டி திருவிழாவில் தெய்வானையுடன் திருமணம். மிகவும் அபூர்வமான இந்த திருக்கோலத்தை வழிபட்டால் எல்லா வகையான நாக தோஷங்களும் நீங்கும். கால சர்ப்ப தோஷம் அகலும். திருமணத்தடைகள் விலகி கன்னிப் பெண்களுக்கு திருமணம் கைகூடி வரும்.

இன்றைய பஞ்சாங்கம் 16.07.2012 - குறள்

In Tamil - பஞ்சாங்கம் - 16.07.2012




வருஷத்தின் பெயர் : நந்தன வருஷம்
மாதம் :
ஆடி மாஸம் 01ம் திகதி - ஜூலை 16 2012
அயணம் : உத்தராயணம்
ரிது : க்ரீஷ்ம ரிது
கிழமை : திங்கட்கிழமை
திதி :
துவாதசி காலை மணி 6.58 வரை பின் திரயோதசி
நக்ஷத்திரம் :
ரோகினி காலை மணி 6.22 வரை பின் மிருகசீரிஷம்
யோகம் :
விருத்தி 17.48
கரணம் :
தைதுலம் 15.55 வரை பின் கரஜி 34.19 வரை
சூரிய உதயம் :
சூரிய உதயம் 06.02
சூரிய அஸ்தமனம் :
மாலை மணி 6.16
அஹசு :
நாழிகை 31.24
லக்ன இருப்பு :
கடகம் மணி 2.12
இராகு காலம் :
காலை 7.32 முதல் 9.02 வரை
எமகண்டம் :
காலை 10.32 முதல் 12.02 வரை
சூலம் :
கிழக்கு பரிகாரம்: தயிர்

  o சந் கேது
குரு சுக்(வ)
புதன்
o
இன்றைய கிரஹநிலை
சூர்
o o
o ராகு o செவ் சனி(வ)


-------------------------------------------------
இன்றைய நாளின் சிறப்பு:-
சந்திராஷ்டம நக்ஷத்ரங்கள்: ஸ்வாதி, விசாகம்.
தக்ஷிணாயன புண்ணியகாலம், தர்ப்பணம், க்ருஷ்ணபக்ஷ சோம மஹாபிரதோஷம்.

.


----------------------------------------
நவக்ரஹ பாதசார விவராதிகள்

க்ருஹம் நக்ஷத்ரம் பாதம்
சூரியன் புனர்பூசம் 4
சந்திரன் மிருகசீரிஷம் -
செவ்வாய் ஹஸ்தம் 1
புதன் புனர்பூசம் 1
குரு ரோகினி 2
சுக்ரன் ரோகினி 4
சனி சித்திரை 1
ராகு அனுஷம் 2
கேது க்ருத்திகை 4


இன்றைய குறள்: அழுக்காறாமை
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.

பொருள்: எவர் இடத்தும் பொறாமை கொள்ளாதிருப்பதை ஒருவன் பெற்றால் சீரிய சிறப்புகளுள் அது போன்றது வேறு இல்லை.


Friday, July 13, 2012

நாட்டுநடப்பு







இணையத்திலிருந்து எடுத்தது.

கார்ட்டூனுக்கு இருக்கும் சக்திக்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு.

என்றைக்கு ஈழத்தமிழர்கள் சாவுக்கு கிரியாஊக்கியாக காங்கிரஸூம் அதன் கூட்டணி கட்சிகளும் இருந்ததோ அன்றே எங்கள் குடும்பத்தினர்கள் 50 பேர்களுக்கும் மேற்பட்டவர்கள் கூடி காங்கிரஸூக்கு ஓட்டு போட மாட்டோம் என உறுதிமொழி எடுத்திருக்கிறோம். ஏஸி அறையில் உட்கார்ந்து கொண்டு முந்திரி பக்கோடா சாப்பிட்டுக் கொண்டு வெளிநாட்டு சிகரெட்டை ஊதிக்கொண்டு இருக்கும் பதாரிகளுக்கு ஏழைகளின் கஷ்டம் தெரியாது. இந்த ....... எல்லாம் கொண்டு போய் வயல்வெளிகளிலும் வியர்க்க வியர்க்க வேலை வாங்கினால் தெரியும் உழைப்பின் அருமை. ஏழைகளிடம் ஆட்டையைப்  போட்ட பரம்பரை சொத்துக்களை வைத்துக் கொண்டு வாழும் மனிதர்களுக்கு தெரியாது 1 ரூபாயின் மதிப்பு.


Thursday, July 12, 2012

நல்ல தீர்த்தத்தில் பிறக்கும் சங்கு

உவர்நீரில்தான் சங்கு பிறக்கும் ஆனால் நல்ல தீர்த்தத்தில் சங்கு பிறக்கிறது. அதுவும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான். இந்த அதிசயம் நடக்கும் இடம் திருக்கழுக்குன்றம். இங்குள்ள வேதபுரீஸ்வரர் திருக்கோவில். கோவில் தீர்த்தத்திற்கு சங்கு தீர்த்தம் என்று பெயர். இதில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நல்ல சங்குகள் தோன்றுகின்றன. சங்குகள் தோன்றுவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் குளத்தில் உள்ள நீரின் நிறம் பெரிதும் மாறுகிறது. இந்த நிற மாறுபாட்டை மக்கள் தெரிந்து கொண்டு குளத்தில் துணி துவைப்பது, குளிப்பது முதலானவற்றை நிறுத்தி விடுவார்கள். சங்கு என்றைக்கு தோன்றி இருக்கிறதோ அதற்கு முதல் நாள் குளத்தில் ஆயிரக்கணக்கான குமிழ்கள் தோன்றிக் கொண்டே இருக்கும். மறுநாள் குளத்தின் ஏதாவது ஒரு பகுதியில் சங்குகள் காணப்படும். அந்தச் சங்குகள் மந்திரமுறைப்படி சேகரிக்கப்படும். மேள தாளங்கள் முழங்க கோவிலுக்கு கொண்டு சென்று அபிஷாகத்திற்குப் பயன்படுத்தப்படும்.
 
 

கணித்தமிழ் வல்லுநர் மா.ஆண்டோபீட்டர் மறைவு

கணித்தமிழ் வளர்ச்சியின் முன்னோடியும், சி.எஸ்.சி, சாப்டுவியூ நிறுவனத்தின் நிறுவுநரும், கணித்தமிழ்ச்சங்கத்தை நிறுவிப் பணிபுரிந்தவரும், பலநூல்களின் ஆசிரியருமான திரு.மா.ஆண்டோபீட்டர் அவர்கள் இன்று(12.07.2012) அதிகாலை 1.30 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். தந்தைபெரியார் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். உத்தமம் அமைப்பில் இணைந்து பணிபுரிந்தவர்.

ஆண்டோ பீட்டர்
அவர்களை இழந்து வருந்தும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அவர்தம் மாணவர்களுக்கும் நிறுவனத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.

மா.ஆண்டோபீட்டர் வாழ்க்கைக்குறிப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் 26.04.1967 இல் பிறந்தவர். இருபதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். கணினி,இணையம்,அச்சத்துறை சார்ந்த பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். மென்பொருள் தயாரிப்பு, இணையப்பக்கம் வடிவமைப்பில் ஈடுபட்டவர். இவரின் மறைவு தமிழ் இணையத்துறைக்குப் பேரிழப்பு.



மூலம்: http://muelangovan.blogspot.in/

ஆண்டோ பீட்டரின் ப்ளாக்: http://www.antopeter.blogspot.in/

நெஞ்சை நிமிர்த்தி வாழ்ந்த ஆண்டோ -
நீவிர் வாழ்ந்தது சில ஆண்டோ
படைத்தீர் பல சாதனைகளை ஆண்டோ
உம்மைத் தவிர எங்களுக்கு வேறுண்டோ


பஞ்சாங்கம் - 12.07.2012

In Tamil - பஞ்சாங்கம் - 12.07.2012






வருஷத்தின் பெயர் : நந்தன வருஷம்
மாதம் :
ஆனி மாஸம் 28ம் தியதி - ஜூ்லை 12 2012
அயணம் : உத்தராயணம்
ரிது : க்ரீஷ்ம ரிது
கிழமை : வியாழக்கிழமை
திதி :
நவமி இரவு 1.15 வரை பின் தசமி
நக்ஷத்திரம் :
அசுபதி (அஸ்வினி) இரவு 10.48 வரை பின் பரணி
யோகம் :
ஸூகம் 12.15
கரணம் :
தைதுலம் 15.55 வரை பின் கரஜி 48.07 வரை
சூரிய உதயம் :
சூரிய உதயம் 06.08
சூரிய அஸ்தமனம் :
மாலை மணி 6.36
அஹசு :
நாழிகை 31.11
லக்ன இருப்பு :
மிதுனம் 0.16
இராகு காலம் :
மதியம் 1.38 முதல் 3.08 வரை
எமகண்டம் :
காலை 6.08 முதல் 7.38 வரை
சூலம் :
தெற்கு பரிகாரம்: நல்லெண்ணை

சந் o கேது
குரு சுக்(வ)
சூர்
o
இன்றைய கிரஹநிலை
புதன்
o o
o ராகு o செவ் சனி(வ)


-------------------------------------------------
இன்றைய நாளின் சிறப்பு:-
சந்திராஷ்டம நக்ஷத்ரங்கள்: உத்திரம், ஹஸ்தம்
.


----------------------------------------
நவக்ரஹ பாதசார விவராதிகள்

க்ருஹம் நக்ஷத்ரம் பாதம்
சூரியன் புனர்பூசம் 2
சந்திரன் மீனம் -
செவ்வாய் ஹஸ்தம் 1
புதன் புனர்பூசம் 3
குரு ரோகினி 1
சுக்ரன் ரோகினி 4
சனி சித்திரை 1
ராகு அனுஷம் 2
கேது க்ருத்திகை 4



இன்றைய குறள்: அழுக்காறாமை

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.

பொருள்: உள்ளத்தில் பொறாமை இல்லாமல் வாழும் குணத்தை, ஒருவன் தனக்குரிய ஒழுக்கமாகக் கொள்ள வேண்டும்.

Wednesday, July 11, 2012

பஞ்சாங்கம் - 11.07.2012

கடந்த 1 வார காலமாக வேறு வீடு மாற்ற வேண்டி இருந்ததால் Broadband Connection Address மாற்ற வேண்டி இருந்தது. இன்றுதான் புதிய வீட்டிற்கு கனெக்‌ஷன் வந்தது. இனி தவறாமல் எங்களுடைய பதிவுகள் வரும்.

நன்றி.


In Tamil - பஞ்சாங்கம் - 11.07.2012




வருஷத்தின் பெயர் : நந்தன வருஷம்
மாதம் :
ஆனி மாஸம் 27ம் தியதி - ஜூ்லை 11 2012
அயணம் : உத்தராயணம்
ரிது : க்ரீஷ்ம ரிது
கிழமை : புதன்கிழமை
திதி :
அஷ்டமி இரவு 11.29 வரை பின் நவமி
நக்ஷத்திரம் :
ரேவதி இரவு 8.27 வரை பின் அஸ்வினி
யோகம் :
அதிகண்டம் 11.26
கரணம் :
பாலவம் 11.56 கௌலவம் 43.43
சூரிய உதயம் :
சூரிய உதயம் 06.08
சூரிய அஸ்தமனம் :
மாலை மணி 6.36
அஹசு :
நாழிகை 31.11
லக்ன இருப்பு :
மிதுனம் 0.16
இராகு காலம் :
மதியம் 12.08 முதல் 1.38 வரை
எமகண்டம் :
காலை 7.38 முதல் 9.08 வரை
சூலம் :
வடக்கு பரிகாரம்: பால்

சந் o கேது
குரு சுக்(வ)
சூர்
o
இன்றைய கிரஹநிலை
புதன்
o o
o ராகு o செவ் சனி(வ)


-------------------------------------------------
இன்றைய நாளின் சிறப்பு:-
சந்திராஷ்டம நக்ஷத்ரங்கள்: பூரம், உத்திரம்
ஏயர்கோன் கலிக்காமர் பூஜை.


----------------------------------------
நவக்ரஹ பாதசார விவராதிகள்

க்ருஹம் நக்ஷத்ரம் பாதம்
சூரியன் புனர்பூசம் 2
சந்திரன் மீனம் -
செவ்வாய் உத்திரம் 4
புதன் புனர்பூசம் 3
குரு ரோகினி 1
சுக்ரன் ரோகினி 4
சனி சித்திரை 1
ராகு அனுஷம் 2
கேது க்ருத்திகை 4

Tuesday, July 10, 2012

சுப்ரமணிய புஜங்கம் - பாகம் ஆறு

பாடல்: ஒன்பது

ரணத்தம்ஸகே மஞ்ஜுலே(அ)த்யந்த சோணே
மநோஹரி லாவண்ய பியூஷ பூர்ணே!
மர: ஷட்பதோ மே பவக்லேச தப்தஹ:
ஸதா மோததாம் ஸ்கந்த தே பாதபத்மே!!


பொருள்: மென்குரல் எழுப்பும் அன்னப்பறவைகள் பொருந்திய்வைகளும் மிகுந்த செந்நிறம் உள்ளவையும், மனதை வசீகரிக்கக் கூடிய அமிர்தத்தால் நிறைந்தவையும், இணையற்ற அழகுள்ளவையுமான உன்னுடைய மென்பலர்ப் பாதங்கள் எனும் செந்தாமரையில், சம்சாரபந்ததினால் தவிக்கின்ற எனது மனம் என்ற வண்டானது எப்போதும் வட்டமிட்ட வண்ணமாய் இருப்பதால் களிப்பை அடைகிறது.


பாடல்: பத்து

ஸுவர்ணாப திவ்யாம்பரைர் பாஸமாநாம்
க்வணத் கிங்கிணீ மேகலா சோபமாநாம்!
லஸத்தேம பட்டேந வித்யோத்தமாநாம்
கடிம் பாவயே ஸ்கந்த தே தீப்யமாநாம்!!


பொருள்: கலியுக வரதனே! பொன் போல் ஒளிரும் தகதகக்கும் வஸ்திரங்களால் மறைக்கப்பட்டதும், இனிய ஒலியெழுப்பும் மன்மணிச் சதங்கைகளால் அலங்கரிக்கப்பட்ட ஒட்டியாணம், அரைஞான் இவற்றால் சோபிக்கிறதாயும், ஜொலிக்கும் பட்டாடையால் அலங்கரிக்கப்பட்டதாயும் உள்ளதால், மிகுந்த சோபையோடு விளங்குகிறதென்றாலும், இவை ஏதும் இல்லாமலே சுயமாகவே மிகுந்த அழகுடன் விளங்கக் கூடிய உனது இடைப் பிரதேசத்தை என் மனதில் எண்ணித் தியானிப்பேனாக.


பாடல்: பதினொன்று

புலிந்தேச கந்யா கநாபோக துங்க-
ஸ்தநாலிங்கநாஸக்த காச்மீர ராகம்!
நமஸ்யாம்யஹம் தாரகாரே தவோரஹ:
ஸ்வபக்தாவநே ஸர்வதா ஸாநுராகம்!!


பொருள்: தாரகனைக் கொன்ற சுப்ரமண்ய ஸ்வாமியே, வேடுவர் குலத்துதித்த வள்ளியின் பெரும் கனதனங்கள் இரண்டையும் தழுவியதால் அவற்றை அலங்கரித்த குங்குமச் சுவடுகளைத் தான் பெற்றதால் சிவப்பு நிறம் அடைந்த்தாயும், அன்றி எப்போதும் தனனை அண்டியவர்களைப் பாதுகாக்கும் விஷயத்தில் தன்னுள் ஏற்படும் ஆசைக் கனவின் கனிவினால் வெளியிலும் சிவந்த்தாயும் உள்ள உன்னுடைய பரந்த மார்பை எண்ணி நான் நமஸ்கரிக்கிறேன்.

பாடல்: பனிரெண்டு

விதௌ க்லுப்த தண்டான் ஸ்வலீலாத்ருதாண்டான்
நிரஸ்தேபசுண்டான் த்விஷத் காலதண்டான்!
ஹதேந்த்ராரி ஷண்டான் ஜகத்ராண சௌண்டான்
ஸதா தே ப்ரசண்டான் ஸ்ரயே பாஹூதண்டான்!!


பொருள்: பிரம்மாவிடம் பிரவணத்தின் பொருளை உணர்த்தும்படி வற்புறுத்தியதும், அண்டங்கள் யாவற்றையும் விளையாட்டாகத் தாங்கியதும், யானையின் துதிக்கையைப் பற்றி அதன் மதத்தை அடக்கியதும், யமனை த்வம்ஸம் செய்ததும், தேவர் தலைவன் இந்திரனுக்கு எதிரியான சூரன், தாரகன், சிங்கமுகன் ஆகிய அசுரர்களைக் கொன்றதும் உலகைக் காக்கும் காரியங்களில் அதிக ஈடுபாடு கொண்டதும், எதிரிகளுக்கு பயத்தை கொடுப்பதுவுமான உனது வலிமைமிக்க பன்னிரு கரங்களையும், ஆறுமுகக் கடவுளே, நான் துணை நாடுவேனாக.


பாடல்: பதிமூன்று

ஸதா: சாரதா ஷண்ம்ருகாங்கா யதி ஸ்யுஹூ:
ஸமுத்யந்த ஏவ ஸ்திதாஸ்சேத் ஸமந்தாத்!
ஸதா பூர்ணபிம்பாஹா: கலங்கைச்ச ஹீநஸ்:
ஸதா தவந்முகாநாம் ப்ருவே ஸ்கந்த ஸாம்யம்!!

பொருள்:

தொடரும்......

Monday, July 2, 2012

சென்னையில் நவசண்டி மஹா யாகம்

Nava Chandi Maha Yagnam Invite:
Sathguru Sri Lalithananda Maha  Swamigal, a great sage of Infinite Enlightenment and a Siddha Maha Purusha, who lived in Sacred Thiruvannamalai and later became one with Lord Arunachaleswara, continues to guide suffering humanity through the journey of life from a numinous plane. The Jayanthi Mahotsavam of this Peerless Divine Master is being celebrated by His disciples on  14th & 15th July. 2012 in a befitting manner. Special Homams, Poojas, Vedic Chanting and Annadhanam will be performed.

Goddess Aadhi Parasakthi encompasses Creation, Protection and Destruction in the Universe. She Protects the humanity from drifting towards self destruction & from Nature’s fury and Bestows with eternal peace & prosperity. This special homam is dedicated to Her Supreme Benevolence. Participation in this homam will provide resolution of / relief from Property disputes, litigations, hurdles in performing wedding due to Curse of women / maidens in the earlier birth(s), lack of peace, mental fatigue, curse of cobra, childlessness, infertility / impotence, incompatibility between spouses, results not commensurate with hard work put in, hurdles in career growth / employment and lack of focus on studies by children. Peace will prevail and Prosperity will abound.                     

Contributions for this great event can be made to the bank details given below.

Name: Kannan Kumaraswamy
Bank : HDFC Bank LTD
Branch : Nungambakkam Chennai 
Account # :  00821140151667 
IFS Code: HDFC0000082

Bank Address:
No.40, Nungambakkam Highroad, (near ganpat hotel)
Nungambakkam - Chennai - 600 034

For Western Union Money Transfer:
Name: Kannan Kumaraswamy
Phone Number: 9841222143
Address : 8/34, Usha Nagar 1st street
Ullagaram Chennai - 600 091.


For further information visit our website : www.kondaiya.info

Sathguru beckons you all! Visit and receive the Grace of Sathguru!!

This worship is open to all, irrespective of Religion, Caste, Creed and Race.








சுப்ரமணிய புஜங்கம் - பாகம் ஐந்து

பாடல்: ஏழு

மஹாம்போதி தீரே மஹாபாப சோரே
முநீந்த்ராநுகூலே ஸுகந்தாய சைலே!
குஹாயம் வஸந்தம் ஸ்வபாஸா லஸந்தம்
ஜநார்த்திம் ஹரந்தம் ஸ்ரயாமோ குஹம் தம்!!


பொருள்: பெரிய கடலின் கரையில் விளங்குகிறதும், மகா பாபங்களை நசிக்கச் செய்கிறதும், முனிவர்கள் தவம் செய்வதற்கு உரித்தான அருவிநீரும், சுகந்த மூலிகைகளும் நிறைந்ததுமான சுகந்த பர்வதத்தின் குகையினுள் வாசம் செய்பவரும், தன் இயல்பான ஜோதிர்மய தேஜஸினால் ஒளிபரப்புகிறவரும், இவ்வுலகிற் பிறந்த ஜீவராசிகள் அனைத்தின் துன்பங்களைப் போக்குகிறவராகவும் உள்ள குகனை நாம் வணங்கி பேறு பெறுவோம்.


பாடல்: எட்டு

லஸத் ஸ்வர்ணகேஹே ந்ருணாம் காமதோஹே
ஸுமஸ்தோம ஸஞ்சந்ந மாணிக்ய மஞ்சே!
ஸமுத்யத் ஸஹஸ்ரார்க்க துல்ய ப்ரகாசம்
ஸதா பாவயே கார்த்திகேயம் ஸுரேசம்!!


பொருள்: ஜொலிக்கின்ற தங்கமயமான கர்ப்ப க்ருஹத்தில், மனிதர்களுக்கு மிகப் பிரியமான வரங்களைப் பொழிகின்ற தன்மையுள்ள, மணம்  மிகுந்த பலவித மலர்களால் நன்கு அலங்கரிக்கப்ப்ட்ட, மாணிக்க ரத்தினங்கள் இழைக்கப் பெற்ற கட்டிலில், ஆயிரம் உதய சூரியனுக்கு இணையான பிரகாசத்துடன் விளங்குகிறவனும், தேவர்களுக்கும் தெய்வமானருமாகிய கார்த்திகேயனை எப்போதும் தியானம் செய்வோம்.

பாடல்: ஒன்பது

ரணத்தம்ஸகே மஞ்ஜுலே(அ)த்யந்த சோணே
மநோஹரி லாவண்ய பியூஷ பூர்ணே!
மர: ஷட்பதோ மே பவக்லேச தப்தஹ:
ஸதா மோததாம் ஸ்கந்த தே பாதபத்மே!!


பொருள்:


தொடரும்.....

பஞ்சாங்கம் - 01.07.2012

In Tamil - பஞ்சாங்கம் - 02-07-2012




வருஷத்தின் பெயர் : நந்தன வருஷம்
மாதம் :
ஆனி மாஸம் 18ம் தியதி - ஜூ்லை 02 2012
அயணம் : உத்தராயணம்
ரிது : க்ரீஷ்ம ரிது
கிழமை : திங்கட்கிழமை
திதி :
சதுர்த்தசி மறுநாள் காலை 3.01 வரை பின் பௌர்ணமி
நக்ஷத்திரம் :
கேட்டை மாலை 6.19 வரை பின் மூலம்
யோகம் :
சுப்ரம் 43.36
கரணம் :
கரஜி 25.24 வணிஜை 52.39
சூரிய உதயம் :
சூரிய உதயம் 05.57
சூரிய அஸ்தமனம் :
மாலை மணி 6.30
அஹசு :
நாழிகை 31.32
லக்ன இருப்பு :
மிதுனம் 0.57
இராகு காலம் :
காலை 07.26 முதல் 08.56
எமகண்டம் :
காலை 10.26 முதல் 11.56
சூலம் :
கிழக்கு பரிகாரம்: தயிர்

o o கேது
குரு சுக்(வ)
சூர்
o
இன்றைய கிரஹநிலை
புதன்
o o
o ராகு சந் o செவ் சனி(வ)


-------------------------------------------------
இன்றைய நாளின் சிறப்பு:-
சந்திராஷ்டம நக்ஷத்ரங்கள்: ரோகினி, மிருகசீரிஷம்
அடியவர் அருணகிரியார் குருபூஜை


----------------------------------------
நவக்ரஹ பாதசார விவராதிகள்

க்ருஹம் நக்ஷத்ரம் பாதம்
சூரியன் திருவாதிரை 2
சந்திரன் விருச்சிகம் மறுநாள் காலை 03.01 வரை -
செவ்வாய் உத்திரம் 3
புதன் பூசம் 1
குரு கிருத்திகை 2
சுக்ரன் ரோகினி 3
சனி சித்திரை 1
ராகு அனுஷம் 2
கேது க்ருத்திகை 4

Sunday, July 1, 2012

பணிவான வேண்டுகோள்

அனைவருக்கும் பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸியரின் பணிவான வணக்கங்கள்.

கிட்டத்தட்ட ஒரு வருட கால இடைவெளிக்குப் பின் கடந்த வாரத்திலிருந்து எங்களுடைய ப்ளாக்கில் பஞ்சாங்கம் மற்றும் ஆன்மீக குறிப்புகளை அப்டேட் செய்து வருகிறோம். அப்படி அப்டேட் செய்தவுடன் நாங்கள் அதை கூகுள் குழுமங்கள், யாஹூ குழுமங்கள் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவற்றில் அதனுடைய லிங்க்கைப் போட்டு மின்னஞ்சல் அனுப்பி விடுவோம். 

அனைவருக்கும் இந்த இடத்தினில் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். நாங்கள் ஒன்றும் வேலை வெட்டி இல்லாமல் இந்த சேவையினைச் செய்வதில்லை. நாங்கள் ஏற்கனவே ஐடி துறையில் பணி செய்து வருகிறோம், இது தவிர ஜோதிடம், புரோஹிதம் செய்து வருகிறோம். இந்த வேலைகளோடுதான் தமிழில் தட்டச்சு செய்து அப்டேட் செய்து வருகிறோம். பலருக்கும் இந்த பதிவுகள் உபயோகமாகவும், மிகுந்த பயனளிப்பதாகவும் சொல்லி எங்களுக்கு மின்னஞ்சல் செய்திருக்கிறார்கள். இந்த சமயத்தில் பழையபடி சிலர் மீண்டும் எங்களை மிரட்டுவதும், நக்கல்கள், கிண்டல்கள் செய்வதும், விளம்பரத்திற்கா என கேட்பதும், கோபமாகவும் சொல்ல முடியாத நாக்கூசும் வார்த்தைகளாலும் மின்னஞ்சல்கள் செய்வதுமாக உள்ளனர். அந்த சில நபர்களுக்காக நாங்கள் மீண்டும் பின் வாங்க மாட்டோம். பாண்டிய மன்னனின் அரசவையிலும், பின் அதைச் சார்ந்த பாளையங்களிலும், நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கிராமத்தின் முதல் பட்டாதாரராகவும், கணியர் என்னும் பரம்பரையில் வந்தவர்கள் நாங்கள். இன்று நேற்றல்ல நாங்கள் ஜோதிடம் மற்றும் புரோஹிதம் தொழிலுக்கு வந்து. கிட்டத்தட்ட 12 தலைமுறைகளுக்கும் மேலாக இந்த ஜோதிடம் சார்ந்த தொழிலை சேவையாக செய்து வருகிறோம்.

மீண்டும் நாங்கள் பின் வாங்க மாட்டோம்.  அடுத்த ஆறு மாதத்திற்கான தேவையான பஞ்சாங்கக் குறிப்புகளை தயார் நிலையில் வைத்திருக்கிறேன். எனவே அடுத்த 180 நாட்களுக்கு தவறாமல் பஞ்சாங்கம் அப்டேட் ஆகும். மேலும் சுப்ரமணிய புஜங்கம் தொடர் போன்ற தோத்திரங்களும் அப்டேட் ஆகும். தற்போது நாலாயிர திவ்யப் பிரபந்தம் தொடருக்காக எங்களை தயார் செய்து வருகிறோம். கூடிய விரைவில் அப்டேட் ஆகும்.  இது தவிர கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட ஜோதிடம் சம்பந்தமான  இது வரை யாருமே தராத பதிவுகளை தயார் செய்து வருகிறேன், அதையும் அப்டேட் செய்து வருவேன்.

அந்த சிலருக்கு ஒரு வேண்டுகோள். தங்களுக்கு எங்களுடைய மின்னஞ்சல்கள் ஏதேனும் தொல்லைகள் கொடுத்தால் தயவுகூர்ந்து மன்னித்து Delete செய்து கொள்ளவும். எங்களால் இந்த சேவையினை நிறுத்த இயலாது. இனிமேலும் இது போன்ற மின்னஞ்சல்கள் எங்களுக்கு வந்தால் நாங்கள் அதை Delete செய்து விடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இனி இதுபோன்ற விளக்கங்களும் வராது.


இப்போதும் சொல்கிறேன்.

ஜோதிடம் எங்களது தொழிலல்ல...எங்களது உயிர்.

அடியேன் தாஸன்
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)
நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர்
இருப்பு:சென்னை.
ஜோதிடம்: http://kuppuastro.blogspot.com/