Saturday, July 16, 2011

ராசிபலன்கள் - விளக்கம்

அனைவருக்கும் வணக்கம்.

கடந்த சில வாரங்களாக ராசிபலன்கள் நான் அனுப்பி கொண்டிருக்கிறேன் எனபதை அறிவீர்கள். அதில் சிலருக்கு சந்தேகங்கள் ஏற்பட்டு உள்ளது. அதை கேள்வி பதில் வடிவத்தில் கொடுக்கிறேன்.

கேள்வி: தாங்கள் எழுதும் ராசிபலன்களை சந்திர ராசிக்கு பார்க்க வேண்டுமா?

பதில்: சந்திரன் இருக்கும் ராசிக்கோ அல்லது லக்னத்திற்கோ பார்க்க வேண்டும்.


கேள்வி: தாங்கள் எழுதும் பலன்களை எல்லோருக்கும் பொதுவானதா?

பதில்: ஆம். ஆனால் நான் கொடுத்திருக்கும் பலன்கள் கோட்சார பலன்களே(அதாவது தற்கால கிரஹநிலைப்படி உள்ளவை). இவை ஜாதகத்திற்கு ஜாதகம் மாறுபடலாம்.


கேள்வி: நியுமராலஜி படி எனக்கு பலன்கள் பார்க்க முடியுமா?

பதில்: மன்னிக்கவும். எனக்கு நியுமராலஜி பற்றி தெரியாது.


கேள்வி: என்னுடைய லக்னம் மீனம். ராசி கடகம். நான் எதற்கு பலன் பார்க்க வேண்டும்?

பதில்: நீங்கள் மீனத்திற்குத்தான் பலன்கள் பார்க்க வேண்டும். என் வரையில் நான் சொல்வது பொதுவாக ராசிக்கு பலன்கள் பார்ப்பதை விட லக்னத்திற்கு பலன்கள் பார்ப்பது சிறந்தது.



நன்றி.

Rasi Balan - In English - from july 16 to july 31

ஆங்கிலத்தில்  ராசிபலன் வழங்குபவர்: சௌ.சார்மிலி சிவபாண்டி
Forecast in English: By Sow.Charmili Sivapandy

Aries(Mesham):  This is a time for your happiness to increase. This is a good time to buy properties and make investments. There may be a little difference of opinion in the family but it shall pass. Take care whilst driving. Praying to Lord Muruga every Tuesday will help with your problems. Take advice from others before doing anything.

Taurus(Rishabam): This is the time to finish the works started a while back. Good tidings from out of town will reach you. Please pay attention to your children. It is a time for adjusting to your spouse’s necessities. The relationship with your siblings will grow stronger. Praying to Lord Perumal on Fridays and Lord Ganesha everyday will bring you prosperity.

Gemini(Mithunam):  This is a period of increased happiness in your family. This is the time for overseas travel or for starting things connected with foreign countries. This is the time for restarting discontinued studies and winning cases with property disputes. Pregnant women are asked to be cautious. Offering prayers to Lord Perumal on Wednesdays and to your ancestors’ everyday will bring prosperity.

Cancer(Kadagam): This is the time for a change. Your inability to make decisions due to emotional turmoil will change. You may take bold actions. Small arguments may arise with your children but it will pass. You may not be recognised for your work at your office. But your work will not go a waste, you will get the due rewards. Praying to Lord Shiva on Mondays will be good tidings.

Leo(Simham): Small difference of opinions with your family members may happen but will soon resolve. There will be an improvement on the educational front. There will be increased affection from your parents. This is a good time for investments and job promotions. There will be good tidings from overseas. Offering prayers to Lord Shiva on Sundays will bring good tidings.

Virgo(Kanni):  You are asked to seek advice in matters in which you are indecisive. Do not while away the 
time in which you will be able to seek answers for problems. The time for a change in emotional distress is nearing. Please avoid difference of opinions with your parents and spouse. Please pay attention to money matters. Please avoid any unnecessary investments.  Offering Prayers to Lord Perumal on Wednesdays and to your ancestors on the new moon day will be prosperity.

Libra(Thulam): This is a time to think before you make a promise to someone. This is a time where the amount of expenditure may scare you. This is a time where you will be recognised for your work at your work place. For those who are unmarried, auspicious news awaits you.  The difference of opinion with your father will soon disappear. Praying to your ancestral deity on Saturdays and goddess Mahalakshmi on Fridays will bring you prosperity.

Scorpio(Vrichigam):  This is a time to think things through before communicating with others. You will be appreciated at your work place.  There will be happy tidings in your family. You will be able take a confident step in any work. Offering Prayers to Amman on Tuesdays will bring prosperity.

Sagittarius(Dhanus):  There may be problems at your work place but you will be recognised for your work. For some, successful marriage arrangements will be made. There will be a profit in relation to things connected with the overseas. Some may have a difference of opinion with their parents. There will be a good relationship with your life partner. Offering prayers to Lord Anchinaya on Thursdays will bring prosperity.

Capricon(Magaram) :  This is a period where you will be able to get things done smoothly. You will be able to obtain assets such as properties and vehicles. There will be good relation with your children. There will be a good relationship with your maternal side relatives. Lighting lamps (nei vilaku) every Saturday at your nearby Vishnu temple will help with your problems.

Aquarius(Kumbham):  The disturbing happenings of the past few days will change. Attention towards your children is needed. A new beginning with a long separated friend will take place. You relations, in foreign countries, will begin preparations to return to their home country.  The difference of opinion with your siblings will resolve.

Pisces(Meenam): This is a period for you to fulfil the requirements of your family. Your speeches will be recognised in the society. This is a time for your talent to shine. A long time property dispute will be resolved thanks to your verbal skills. The difference of opinion with you your spouse will resolve itself. There may be problems at your work place. Offering prayers to the deity of your choice on Thursdays will bring good tidings.


Tuesday, July 12, 2011

ராசிபலன்: ஜூலை 15 முதல் 31 வரை

குறிப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள ராசிபலன்கள் பொதுவானைவையே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் மாறலாம்.






மேஷம்: உற்சாகமான மனநிலையை உடைய செவ்வாயை ராசிநாதனாக கொண்ட மேஷ ராசி வாசகர்களே உங்களுடைய சந்தோஷம் பெருகும் காலமிது. சொத்துக்கள் வாங்குவதற்கும் முதலீடுகள் செய்வதற்கும் ஏற்ற நேரமிது. குடும்பத்தில் சின்ன சின்ன கருத்து மோதல்கள் ஏற்பட்டு மறையும். கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. வாகனங்களை பிரயோகப்படுத்தும் போதும் கவனத்துடன் செயல்படவும். செவ்வாய்கிழமை தோறும் முருகனை வழிபடுங்கள். அனைத்து பிரச்சனைகளும் தீரும். 

ரிஷபம்: அனைவரையும் சுலபமாக தன்பால் ஈர்க்கும் சுக்கிரனை ராசியாதிபதியாக கொண்ட ரிஷப ராசி வாசகர்களே நீண்ட நாட்கள் தள்ளிப் போட்ட காரியங்களை செய்யும் காலகட்டத்தில் இருக்கிறீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி ஒன்று உங்களை வந்தடையும். பிள்ளைகளின் மேல் கவனம் தேவை. வாழ்க்கைத்துணையுடன் ஒத்துப் போக வேண்டி வரும். சகோதர சகோதரிகளிடம் பாசம் அதிகரிக்கும். கல்வி, பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தக்க ஆலோசனைகள் பெற்று எதையும் செய்யுங்கள். வெள்ளிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவதும், தினமும் வினாயகரை வழிபடுவதும் உங்களுக்கு நன்மையைத் தரும். 

மிதுனம்: அறிவால் அனைவரையும் வளைக்கும் புதனை அதிபதியாக கொண்ட மிதுன ராசி வாசகர்களே குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் அதிகரிக்கும் கால கட்டத்தில் இருக்கிறீர்கள். வெளிநாடு செல்வதற்கும், வெளிநாடு சம்பந்தபப்ட்ட விஷயங்களை தொடங்குவதற்கும் ஏற்ற காலமிது. விட்டுப் போன கல்வியை தொடர்வதற்கும், சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் வெல்வதற்கும் ஏற்ற காலமிது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. கர்ப்பிணிப் பெண்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறது. புதன்கிழமைதோறும் பெருமாளை வழிபடுவதும், தினமும் முன்னோர்களை வழிபடுவதும் நன்மையைத் தரும். 

கடகம்: அழகால் அனைவரையும் ஈர்க்கும் கடக ராசி வாசகர்களே சீக்கிரமே உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுக்க முடியாமல் இருந்த காலகட்டம் மாறும் தருணமிது. தைரியமாக எந்த காரியத்தையும் செய்யலாம். பிள்ளைகளுடன் சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகள் வந்து மறையும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்குள்ள அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம். எனினும் உங்கள் உழைப்பு வீணாகாது. அதற்குண்டான பலன் நிச்சயம் உண்டு. திங்கட்கிழமைதோறும் சிவனை வழிபடுவது மிகுந்த நனமையைத் தரும். 

ஸிம்ஹம்: எதிலும் ராஜாவாக வலம் வரும் சூரியனை அதிபதியாக கொண்ட ஸிம்ஹ ராசி வாசகர்களே தேவையுள்ள சுபச்செலவுகள் வந்து பயமுறுத்தும் காலகட்டத்தில் இருக்கிறீர்கள். குடும்பத்தினருடன் சின்னச் சின்ன கருத்து மோதல்கள் வந்து மறையும். தாய் தந்தையுடன் பாசம் அதிகரிக்கும். கல்வியில் முன்னேற்றம் உண்டு. லாபமான முதலீடுகள் செய்வதற்கும் வேலை மாறுவதற்கும் உள்ள உற்சாகமான காலமிது. வெளிநாடு சம்பந்தப்பட்ட யோகம் கைகூடி வரும். ஞாயிற்றுக்கிழமைகளில் சிவனை வழிபடுவது சாலச்சிறந்தது. 

கன்னி: தனது குழந்தைத்தனத்தால் அனைவரையும் ஈர்க்கும் புதனை அதிபதியாக கொண்ட கன்னி ராசி வாசகர்களே முடிவெடுக்க முடியாமல் திணறும் காரியங்களுக்கு தக்க ஆலோசனைகள் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது. எந்த ஒரு நேரத்தையும் வீணாக்க வேண்டாம். உங்களுக்குள்ள கவலைகள் மாறும் காலகட்டம் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது என்பதை உணருங்கள். தாய் தந்தையாருடனும், வாழ்கைத்துணையுடனும் கருத்து மோதல்கள் வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. தேவையில்லாத அனாவசிய முதலீடுகள் வேண்டாம். புதன்கிழமைதோறும் பெருமாளை வழிபடுவதும், அமாவாசை தோறும் முன்னோர்களை வழிபடுவதும் நன்மையைத் தரும். 


துலாம்: அனைவரையும் தனது அழகால் ஈர்க்கும் சுக்கிரனை அதிபதியாக கொண்ட துலாம் ராசி வாசகர்களே நீங்கள் வாக்கு கொடுப்பதற்கு முன் யோசித்து கொடுக்கவும். செலவுகள் வந்து பயமுறுத்தும் காலகட்டமிது. தொழில் செய்யும் இடத்தினில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும் காலகட்டமிது. திருமணத்தடை நீங்கி அதற்கான காலகட்டம் வந்து விட்டது. தந்தையாருடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் மறையும். சனிக்கிழமை தோறும் முன்னோர் வழிபாடும் வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி வழிபாடும் ஏற்றம் தரும். 

விருச்சிகம்: அனைத்திலும் வேகம் கொண்ட செவ்வாயை அதிபதியாக கொண்ட விருச்சிக ராசி வாசகர்களே எதிலும் வேகம் இருந்தாலும் விவேகமும் அவசியம் என்பதை உணருங்கள். எந்த ஒரு விஷயத்தையும் யாரிடமும் தெரிவிக்கும் முன் யோசனை அவசியம். வேலை செய்யும் இடத்தினில் பாராட்டுக்கள் கிடைக்கும். குடும்பத்தினில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். மிக தைரியமாக எந்த காரியத்திலும் இறங்குவீர்கள். செவ்வாய்க்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து வர நன்மைகள் அதிகரிக்கும். 

தனுசு: அடுத்தவரின் அங்கீகாரத்திற்கு மதிப்பளிக்கும் குருவை அதிபதியாக கொண்ட தனுசு ராசி வாசகர்களே சில நேரங்களில் வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகள் வரலாம். இருந்தும் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு திருமண ஏற்பாடுகள் கைகூடி வரும். வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் லாபம் கிடைக்கும். தாய் தந்தையருடன் சிலருக்கு கருத்து மோதல்கள் வரலாம். வாழ்க்கைத்துணையுடன் உறவு பிரகாசிக்கும். வியாழக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு நன்மையைத் தரும். 

மகரம்: எதிலும் வாதத் திறமையால் ஜெயிக்கும் சனியை அதிபதியாக கொண்ட மகர ராசி வாசகர்களே கனிவுடன் எதையும் செய்யும் காலகட்டத்தில் இருக்கிறீர்கள். சொத்து, வீடு, வாகனம் போன்ற நன்மைகள் அமையும். வீட்டினில் நல்ல பெயர் கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் மேல் வைக்கும் பாசம் அதிகரிக்கும். தாய் வழி உறவினர்களுடன் உறவு பிரகாசிக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி ஒன்று உங்களுக்கு வந்து சேரும். சனிக்கிழமைகளில் அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபட தீராத பிரச்சனைகள் தீரும். 

கும்பம்: எதிலும் தங்களது முக்கியத்துவத்தை உணர்த்தும் சனியை அதிபதியாக கொண்ட கும்ப ராசி வாசகர்களே கடந்த சில நாட்களாக இருந்த சுணக்க நிலை மாறும். பிள்ளைகளின் மேல் கவனம் தேவை. நீண்ட நாட்களாக பிரிந்து இருந்த நண்பர்கள் உங்களுடன் சேர்வர். வெளிநாடுகளில் உள்ள அன்பர்கள் தாயகம் திரும்பும் முயற்சியினில் ஈடுபட துவங்கும் நேரமிது. பாதியில் விட்டு இருந்த கல்வியை சிலர் தொடர்வர். சகோதர சகோதரிகளிடம் இருந்து வந்த கருத்து மோதல்கள் மறையும். சனிக்கிழமைதோறும் முன்னோர் வழிபாடு அவசியம். இயலாதவர்களுக்கும் தங்களால் முடிந்த உதவிகள் செய்யுங்கள். 

மீனம்: நட்பினை கற்பாக கொண்ட குருவை அதிபதியாக கொண்ட மீன ராசி அன்பர்களே தங்கள் குடும்பத் தேவைகளையும் நிறைவேற்றும் கால கட்டத்தில் இருக்கிறீர்கள். உங்கள் பேச்சுக்கும் சமுதாயத்தில் அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் தைரியம் பிரகாசிக்கும் காலமிது. நீண்ட நாட்களாக இருந்து வந்த சொத்து பிரச்சனைகள் தங்களது வாக்கு சாதுர்யத்தால் தீரும். வாழ்க்கைத் துணையுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் மறையும். வேலை செய்யும் இடத்தினில் பிரச்சனைகள் வரலாம். வியாழக்கிழமைகளில் தங்களுக்கு பிடித்த இஷ்ட தெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள்.



குறிப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள ராசிபலன்கள் பொதுவானைவையே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் மாறலாம்.

Friday, July 8, 2011

ஒரு தாயின் கண்ணீர்!

ஒரு தாயின் கண்ணீர்!
==================

இரத்தப்புற்றுநோயால் பீடிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 15 வயது சிறுவன் நீரஜ் பற்றி, “சிறுவனின் உயிரைக் காப்போம்” என்ற தலைப்பில் சென்ற மாதம் இக் குழுமத்திலும் பிற குழுமங்களிலும் ஓர் பதிவு வெளியிட்டிருந்தேன்.

அவன் விரைவில் நலம்பெற வேண்டி நாம் அனைவரும் பிரார்த்தனைகள் செய்த போதிலும், இறைவனின் முடிவு வேறொன்றாய் இருந்திருக்கிறது. சிறுவனின் இரத்த ஓட்டத்தால் புற்றுநோய்க்கிருமிகள் அவனது மூளையைப் பாதித்து, கை, கால்கள் செயலிழந்த நிலையில் சில நாட்கள் இருந்து, சென்ற 3.7.2011 மாலை சென்னை அரசு பொதுமருத்துவமனையில் உயிரிழந்தான். அவனது மரணச்செய்தி எங்கள் ‘அலைபேசி குறுஞ்செய்தி (Mobile SMS) கவிஞர்கள் குழும’ நண்பர்களால் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங் களிலுள்ள அனைத்து நண்பர் களுக்கும் தெரியப்படுத்தப்பட்டு, கண்ணீர் அஞ்சலி கவிதைகளும், அவனது தாய் திருமதி சுமதி அவர்களுக்கு அனுதாபச்செய்திகளும் வந்து குவிந்தவண்ணம் இருந்தன.

3 ஆண்டுகளுக்கு முன்பு தன் கணவனை இழந்து, நோயுற்ற இந்த ஒரே புதல்வனை எப்படியேனும் காப்பாற்றிவிடவேண்டுமென்ற முயற்சியில், 3 ஆண்டுகள் மருத்துவமனைகளிலேயே காலத்தைக் கழிக்கவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு, விடா முயற்சியோடு புதல்வனுக்கு மருத்துவச் சிகிச்சையை அளித்து வந்த தாய் திருமதி சுமதி (சேலம்)யின் பொறுமையும், தன்னம்பிக்கையும் வேறு எந்த தாய்க்கும் இருந்திருக்காது என்பது அவரோடு பழகிய என் போன்ற நண்பர்களுக்குத்தான் தெரியும்.

திருமதி சுமதியின் துயரம் விரைவில் மறைந்து, அவரது எதிர்காலம் வளமானதாக மலர நமது அனைவரின் பிரார்த்தனைகள் துணை நிற்கட்டும்! சிறுவனின் நோய் தீர பிரார்த்தனை செய்தும், தங்களாலியன்ற நிதியுதவி அளித்து உதவியவர்களுக்கும் சுமதி சார்பில் இதன் மூலம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

- கிரிஜா மணாளன்
(செயலாளர், உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம் ( திருச்சி மாவட்டக்கிளை)
Email: girijamanaalanhumour@gmail.com

Wednesday, July 6, 2011

அழகர் கோவில் கும்பாபிஷேகம் - ஹரிமணிகண்டன்


திருமாலிருஞ்சோலை என்றும், தென்திருப்பதி என்றும் போற்றி புகழப்படும் புண்ணியஸ்தலமானது மதுரையை அடுத்த அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்ததாக கூறப்பட்ட இக்கோவிலில் கடந்த 1995-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது.
  
பின்னர் அதைத் தொடர்ந்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாலாலய பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவில் ராஜகோபுரம், மூலவர் சன்னதி, தங்க விமானம், கல்யாண சுந்தரவல்லி தாயார், ஆண்டாள் மற்றும் உபசன்னதிகள் புதுப்பிக்கப்பட்டு அங்குள்ள கோபுரங்கள், சிலைகள் வர்ணம் பூசப்பட்டு முழு வீச்சில் பணிகள் முடிந்தது.   பணிகள் நிறைவு பெற்றதையொட்டி அரசு உத்தரவின்பேரில் வருகிற 10-ந்தேதி அன்று மகா கும்பாபிஷேக விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டது. 

6-ந்தேதி மாலை யாக சாலை பூஜைகள் தொடங்கு கிறது. 7, 8 ஆகிய நாட்களுக்கு யாகசாலை பூஜை நடக்கிறது. 10-ந்தேதி காலை 9 மணியில் இருந்து 9.15 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
 
கள்ளழகர் கோவிலில் உள்ளா பள்ளியில் எங்களது "பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை" சார்பில் விருந்து 20000 பேருக்கு அளித்துக்கொண்டு இருக்கின்றாம்.  

விருந்துக்கு சேவை செய்யஅழைக்கிறோம் விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

We need volunteers for feast service ,if you are interests please register with us.

Pazhamutirsolai Thiruarul Murugan Bhaktha Sabhai
C/o Chamundi Vivekanandan
Chamundi Supari
New 41 old 20/3  West Tower Street ,Madurai -625 001
Cell: 94424 08009,Shop: 0452-2345601

Mr. Chamundi Vivekanandan is my father, Now i am in chennai , 
Regarding above feast call /drop me.



Thank & Regards

Harimanikandan.V
H/P   :            +91 9841267823      
end_of_the_skype_highlighting

Saturday, July 2, 2011

இன்றைய பஞ்சாங்கம் - 02-07-2011

In Tamil - பஞ்சாங்கம் - 02-07-2011

வருஷத்தின் பெயர் : கர வருஷம்
மாதம் :
ஆனி மாஸம் 17ம் தியதி; ஆங்கிலம் ஜூலை 02 2011
அயணம் : உத்தராயணம்
ரிது : கிரீஷ்ம ரிது
கிழமை : வெள்ளிக்கிழமை
திதி :
பிரதமை மாலை மணி 02.09 வரை பின் துவிதியை
நக்ஷத்திரம் :
புனர்பூசம் நக்ஷத்ரம் இரவு மணி 11.46 வரை பின் பூசம்
யோகம் :
துருவம்  யோகம் நாழி 04.24
கரணம் :
கரணம் நாழி 20.23
சூரிய உதயம் :
காலை மணி 6.06
சூரிய அஸ்தமனம் :
மாலை மணி 6.35
அஹசு :
நாழிகை 31.33
லக்ன இருப்பு :
மிதுனம் -  நாழி 02.32
இராகு காலம் :
காலை  09.06 முதல் 10.36 வரை
எமகண்டம் :
மாலை 01.36 முதல் 03.06 வரை
சூலம் :
கிழக்கு


o வியா செ  கே சூரி புத சுக் 
o
இன்றைய கிரஹநிலை
o
o o
o ரா o சனி


-------------------------------------------------
இன்றைய நாளின் சிறப்பு:-
சந்திராஷ்டம நக்ஷத்ரங்கள்: கேட்டை, மூலம்.
சந்திர தரிசனம்.
----------------------------------------
நவக்ரஹ பாதசார விவராதிகள்

க்ருஹம் நக்ஷத்ரம் பாதம்
சூரியன் திருவாதிரை 3
சந்திரன் கடகம் (29.33 நாழிகைக்குப் பிறகு) -
செவ்வாய் உரோஹினி 2
புதன் பூசம் 2
குரு அசுபதி 4
சுக்ரன் மிருகசீரிஷம் (47.44 நாழிகைக்குப் பிறகு) 4
சனி வக்ர நிவர்த்தி -
ராகு கேட்டை 4
கேது மிருகசீரிஷம் 2

Friday, July 1, 2011

தூத்துக்குடி வானொலியில் கவிஞர் இரா .இரவி


1.07.2011 இன்று 8.30 இரவு 8.30 மணி முதல்8.45 மணி வரை படைப்பரங்கத்தில் தூத்துக்குடி அகில இந்திய பன்னாட்டு வானொலியில்  ,கவியரசு கண்ணதாசன் ,அன்னை தெரசா, இயற்கை நேசம் பற்றிய கவிதைகளும், பல்வேறு ஹைக்கூ  கவிதைகளும் கவிஞர் இரா .இரவி வாசிக்கின்றார்.கேட்டு   மகிழுங்கள் .