Monday, December 6, 2010

செவ்வாய் தோஷம் - குஜ தோஷம்

செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குப் பரிகாரம் இருக்கிறதா?

இதைப் பற்றியே தனியாக ஒரு பதிவு போட வேண்டி வரும். சரி, உங்கள் ஜாதகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் "ல" என்றோ அல்லது "லக்னம்" என்றோ அல்லது "Asc" என்றோ[ஆங்கில ஜாதகங்கள் மட்டும்] போட்டுருக்கும், அதுதான் உங்களது லக்னம். அதிலிருந்து Clockwise ஆக எண்ணுங்கள், செவ்வாய் அமர்ந்திருக்கும் இடத்தை எண்ணுங்கள். எண்ணிவிட்டீர்களா? கிடைத்திருக்கும் விடை: 2, 4, 7, 8, 10, 12 ஆகிய விடை உங்களுக்கு கிடைத்தால் உங்களுக்கு செவ்வாய்தோஷம் இருக்கிறது என்று பொருள். ஆனால் கீழ்க்கண்ட நிலையில் ஏதாவது ஒரு Exception இருந்தால் உங்களுக்கு செவ்வாய் தோஷம் நிவர்த்தி உண்டு, நீங்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என்பதில்லை. [ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும்]

[1] நீங்கள் மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய லக்னங்களிலோ இராசியிலோ பிறந்தவர் என்றால் உங்களுக்கு தோஷம் கிடையாது.


[2] நீங்கள் மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நக்ஷத்திரங்களில் பிறந்தவர் என்றால் உங்களுக்கு தோஷம் கிடையாது.


[3] உங்கள் ஜாதகத்தில் லக்னத்தையோ, 7ம் இடத்தையோ, 8ம் இடத்தையோ[பெண்களுக்கு மட்டும்] குரு பார்த்தால் உங்களுக்கு தோஷம் கிடையாது.


[4] 7ம் இடம்,, 8ம் இடம்[பெண்களுக்கு மட்டும்] மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய லக்னங்களாக வந்தால் உங்களுக்கு தோஷம் கிடையாது.


[5] செவ்வாய் அமர்ந்த நக்ஷத்திரக்கால் : மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நக்ஷத்திரங்களில் என்றால் உங்களுக்கு தோஷம் கிடையாது.


இதே போல் 100க்கும் மேற்ப்பட்ட Exceptions உள்ளன. எனவே செவ்வாய் தோஷம் என்றால் பயப்பட வேண்டியதில்லை.

பரிகாரம்: தினமும் கந்தஷஷ்டி கவசம் பாராயணம் செய்தல்

அறிவிப்பு

அனைவருக்கும் வணக்கம்.

யாம் எழுதிய குருப் பெயர்ச்சி பலன்களை படித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

அதில் பல பேருக்கு சந்தேகம் என்னவென்றால் தமது ஜாதகத்திற்கும் இதுதான் பலன்களா என்று. நான் அதிலேயெ குறிப்பிட்டிருக்கிறேன். நான் கொடுத்திருப்பது பொதுவான பலன்களே. இந்த பலன்கள் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும் என்று. எனவே நான் கொடுத்திருக்கும் பலன்கள் 30% - 40% சதவீதம் சரியாக இருக்கலாம். உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் வீற்றிருக்கும் இடம், திசா புத்தி பொறுத்து பலன்கள் மாறலாம்.

மேலதிக விபராதிகளுக்கு எமக்கு தனி மடலிடவும்.
--
ஜோதிடம் எமது தொழிலல்ல...எமது உயிர்.

அடியேன் தாஸன்
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)
நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர்
பிரமிட் பாண்டுரங்கா டிரஸ்ட் - ஸ்ரீ விட்டல் ஆஷ்ரமின் ஆஸ்தான ஜோதிடர்.
இருப்பு:சென்னை.
ஜோதிடம்: http://kuppuastro.blogspot.com/
செய்திகளின் விமர்சனங்கள்:http://newsjournalist.blogspot.com/

Tuesday, November 30, 2010

மீனம் - குருப் பெயர்ச்சி பலன்கள்



உங்களைப் பற்றி:

நட்புக்கும், பாசத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் மீன இராசி வாசகர்களே, நீங்கள் எல்லோரையும் எளிதில் நம்புபவர்கள். மனிதநேயம் அதிகம் கொண்டவர்கள். உழைப்புக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள்.

எப்படி இருக்கப் போகிறது இந்த குருப் பெயர்ச்சி:

இது வரை விரையஸ்தானத்தில் இருந்த குருபகவான் இனி ஸ்வயஸ்தானத்தில் அமர்ந்து என்னென்னெ பலன்கள் தரப்போகிறார் என்பதைப் பார்ப்போம்.

தடைபட்டிருந்த திருமணம், தடை பட்டிருந்த கல்வி, என தடையாக இருந்த அனைத்து காரியங்களும் தடைகள் விலகி ஒன்றன் பின் ஒன்றாக சிறப்பாக நடக்கும். அனைத்திலும் விரையம், எந்த பரிகாரம் செய்தாலும் எந்த நல்லதும் நடக்கவில்லை என அங்கலாய்ப்பவர்களுக்கும் நல்ல காலம் பிறந்து விட்டது. கடுஞ்சொற்கலை பேசுவதில் வல்லவரான நீங்கள் சற்று அதைக் குறைத்து கொள்ளுங்கள். உங்கள் மதிப்பு உயரும். அவ்வப்போது வீட்டில் உள்ளவர்களையும் நினைத்து பாருங்கள். நண்பர்கள் தேவைதான், அதற்காக எப்போதுமே நண்பர்கள்தான? ஆனால் ஒன்று நட்புக்காக உயிரையே கொடுக்கும் தியாகசுடர் நீங்கள். நல்லது. தைரியத்தை மற்றவருக்கும் ஊட்டுவீர்கள், ஆனால் உங்கள் அடிமனதில் சின்ன பயம் இருக்கும். இனி அந்த பயம் வேண்டாம். படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனம் தேவை. மற்றவருக்கு சொல்லி சொல்லி கொடுப்பது இருக்கட்டும். முதலில் நீங்கள் நன்று படியுங்கள். வீடு வாகனம் யோகம் சிறப்பாக அமையும். தாய் தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த கசப்பு நீங்கும். பிள்ளைகள் இல்லாதவர்கள் பாக்கியம் கிட்டும். பிள்ளைகள் உங்கள் மேல் பாசமாக இருப்பர். ஆனாலும் நீங்கள் அவர்கள் மேல் சின்ன சின்ன பயங்களை கொண்டிருக்கீறீர்கள். அவர்கள் மனசாட்சிக்கு பயப்படுகிறவர்கள். உஷ்ணம் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம். கவனம். வாழ்க்கைத்துணையுடன் உரசல்கள் எழலாம். விட்டு கொடுத்து, அனுசரித்து போங்கள். வாகனங்களை கையாளும்போது கவனம் தேவை. வேகம் கூடவே க்ஊடாது. ஒரு இடத்திற்கு கிளம்பும் முன் சீக்கிரம் கிளம்புங்கள். எந்நேரமும் டென்ஷணாகவே இருக்காதீர்கள். தந்தையாருடன் உறவு பிரகாசிக்கும். வேலை செய்யும் இடத்தினில் நல்ல ப்எயர் கிடைக்கும். சிலருக்கு அவார்டுகள் கிடைக்கலாம். எங்கு முதலீடு செய்வது என்பதனை தகுந்த ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று செய்யுங்கள். நீங்களாகவே எதிலும் முயற்சி செய்து பார்த்தல் கூடாது. நல்லதூக்கம், சாப்பாடு என வாழ்க்கையை நன்கு அனுபவிக்கிறீர்கள். மொத்ததில் தடைக்கற்களை சாதனைகளாக மாற்றும் வித்தைகள சொல்லிக் கொடுக்கும் விதமாக இருக்கும்.

நக்ஷத்திர ரீதியான பலன்கள்:

பூரட்டாதி 4ம் பாதம் : வெளியூர் பயணங்களால் அனுகூல்யம் உண்டு. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியையும் மகான்களையும் வியாழக்கிழமைகளில் தரிசனம் செய்து வாருங்கள்.

உத்திரட்டாதி : எதிரிகளின் பலம் என்ன என்று உங்களுக்கு தெரிய வரும். குழந்தைபாக்கியம் இல்லாதவர்களுக்கு பாக்கியம் கிட்டும். அனுமன் காயத்ரியை சொல்ல சொல்ல வாழ்வில் இனிதே நடக்கும்.

ரேவதி : உடல்நலம் சிறப்பாக இருக்கும். பதவி உயர்வும் இடமாறுதலும் கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். ஸ்ரீ மஹாவிஷ்ணுவை ஆராதனம் செய்தால் எல்லா நலமும் கிடைக்கும்.

குறிப்பு: இது மாணவ மணிகளுக்கு: விநாயகர் அகவல், ஸ்லோகம் படிப்பது நன்மையைத்தரும்.

லக்ன ரீதியான பலன்கள்:

லக்னம் இராசி பலன்கள் பரிகாரம்
மேஷம் மீனம் 60/100 சண்முக கவசம் படிப்பது
ரிஷபம் மீனம் 65/100 ஸ்ரீமஹால்க்ஷ்மி அஷ்டகம் சொல்வது
மிதுனம் மீனம் 60/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது
கடகம் மீனம் 70/100 ஸ்ரீசியாமளா தண்டகம் சொல்வது
ஸிம்ஹம் மீனம் 60/100 ஆதித்யஹ்ருதயம், மஹாலக்ஷிமி காயத்ரி, நாராயண காயத்ரி, நவக்ரஹ காயத்ரி சொல்வது
கன்னி மீனம் 50/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது, மகான்களை வழிபடவும்
துலாம் மீனம் 60/100 நவக்ரஹ ஸூக்தம் சொல்வது, ஸ்ரீஸூக்தம் சொல்வது
விருச்சிகம் மீனம் 70/100 கணபதி பூஜை மற்றும துர்ஹா ஸூக்தம் சொல்வது
தனுசு மீனம் 60/100 கோளறு பதிகம் சொல்லுங்கள், ஹனுமன் வழிபாடு
மகரம் மீனம் 70/100 குலதெய்வ வழிபாடு செய்வது மற்றும் முன்னோர்களை வழிபடுவது.
கும்பம் மீனம் 55/100 துர்க்கா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் மூகபஞ்சக சதீ சொல்வது
மீனம் மீனம் 55/100 தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் கணபதி உபநிஷத் சொல்வது
லக்னமே தெரியாது மீனம் 55/100 தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் கணபதி உபநிஷத் சொல்வது
குறிப்பு:

[1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது?

நீங்கள் மீனம் இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் மீனம் இராசியில் பிறந்து கும்பம் லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு 55% சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்: துர்க்கா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் மூகபஞ்சக சதீ சொல்வது. . எனக்கு லக்னமேத் தெரியாது ஆனால் மீனம் இராசி என்பவர்கள் தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் கணபதி உபநிஷத் சொல்வது.

[2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.

நக்ஷத்திர வாரியாக சில குறிப்புகள்:

* நக்ஷத்திரங்கள்
பலன்கள் பூரட்டாதி 4 உத்திரட்டாதி ரேவதி
இராசி மீனம் மீனம் மீனம்
இராசியாதிபதி வியாழன் வியாழன் வியாழன்
நக்ஷத்திர அதிபதி வியாழன் சனி புதன்
அதிதேவதைகள் அஜைகபாத் அகிர்புத்னியன் பூஷா
கணம் மனுஷ கணம் மனுஷ கணம் தேவ கணம்
நாடி பார்ஸுவ - வலது மத்ய நாடி பார்ஸுவ - இடது
மிருகம் சிங்கம் பசு யானை
பக்ஷி உள்ளான் குயில் வல்லூறு
விருக்ஷம் மாமரம்(தோமா) வேம்பு இலுப்பை
இரஜ்ஜு வயிறு தொடை இரஜ்ஜு பாதம்
வேதை நக்ஷத்ரம் உத்திரம் பூரம் மகம்
அதிர்ஷ்டம் தரும் எண்கள் 1, 3, 4, 5, 7, 9 1, 3, 4, 6, 7, 9 1, 3, 6, 7, 9
அதிர்ஷ்டம் தரும் திசைகள் கிழக்கு, மேற்கு கிழக்கு, தெற்கு கிழக்கு, தெற்கு
குறிப்பு:

அதிர்ஷ்டம் தரும் எண்களும், திசைகளும் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும். இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவானவையே.

கும்பம் - குருப் பெயர்ச்சி பலன்கள்



உங்களைப் பற்றி:

எதிலும் மனசாட்சிக்கு விரோதமான காரியத்தை செய்யாத கும்ப இராசி வாசகர்களே, நீங்கள் குடும்பபெருமையைக் காப்பவர்கள். பெரியவர்களை மதிப்பவர்கள். சமுதாய மாற்றத்திற்கு பாடுபடுபவர்கள்.

எப்படி இருக்கப் போகிறது இந்த குருப் பெயர்ச்சி:

இது வரை ஸ்வயஸ்தானத்தில் இருந்த குருபகவான் இனி தனஸ்தானத்தில் அமர்ந்து என்னென்னெ பலன்கள் தரப்போகிறார் என்பதைப் பார்ப்போம்.


எதிலும் ஏமாற்றம், பங்கு தாரர்களுடன் மனக்கசப்பு, வேலை செய்யும் இடத்தினில் கூடுதல் வேலைப்பளு என மிகப்பெரிய சவாலை சமாளித்திருக்கிறீர்கள். பாராட்டுகள். கடந்த ஒரு வருடகாலமாக கத்தி மேல் நடந்தது போல் இருத்ததல்லவா?இனி அந்த நிலை மெல்ல மெல்ல மாறும். பட்ட கஷ்டத்திற்கு அறுவடை செய்யும் காலம் வந்து விட்டது. செய்யாத தப்பிற்கெல்லாம் மாட்டி அவதிப்பட்டீர்களே அந்த நிலைமை மாறும். உங்கள் பேச்சிற்கும் அடையாளம் கிடைக்கும் காலமிது. சிறிய சிறிய செலவுகள் வந்து பயமுறுத்தியதே அந்த நிலைகளிலும் முன்னேற்றம் இருக்கும். எதிலும் தெய்வத்தை நம்பும் நீங்கள் உங்களுக்கு தெய்வம் உதவி செய்வதை மறந்து விடதீர்கள். தைரியமாக எதையும் எதிர் கொள்ள தயாராகுங்கள். உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை பிறக்கும் காலமிது. படிப்பு, வாகனம் ஆகியவற்றில் லாபம் உண்டு. சின்ன சின்ன இடையூறுகளை களைந்தால் உங்கள் சாதனைகளை பார்க்கலாம். தாய் தாய் வழி உறவினர்கள் மீது உங்களுக்கு நல்ல அபிப்ராயங்கள் எழும். பிள்ளைகள் மீது கவனம் தேவை. அவர்களிடம் அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்காதீர்கள். நீர் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம். தண்ணீரை காய்ச்சிக் குடிக்க பழகுங்கள். அலர்ஜியும் வரலாம். கவனம். வாழ்க்கைத்துணையுடன் தூரதேச பிரயாணங்கள் செய்யும் சூழ்நிலைகள் வரலாம். நண்பர்கள், உறவினர்களிடம் கவனம் தேவை. நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்றே தெரியாமல் நீங்கள் பழக வேண்டி வரலாம். தொழில் செய்யும் இடத்தில் இடமாற்றம், பணி பளு வரலாம். எதிர்கொள்ள தயாராகுங்கள். மிகுந்த சாமர்த்தியசாலியான நீங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்குவீர்கள். தூங்கப்போகும் முன், எங்கும் பயணிக்கும் முன் முன்னோர்கள் வழிபாடு முக்கியம். மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு பரிபூரண சுகத்தையும், அறிவையும் கொடுக்கும்.

நக்ஷத்திர ரீதியான பலன்கள்:

அவிட்டம் ,3,4ம் பாதம் : சிறுசிறு நீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம். தூக்கத்தைக் கட்டுப்படுத்தாதீர்கள். எந்த பிரச்சனையாக இருந்தாலும் உடனே மருத்துவரை அணுகவும். குடுமப வாழ்வில் பொறுமை தேவை. முருகனை வணங்குங்கள், முன்னின்று அனைத்தையும் நடத்துவான்.

ஸதயம் : இடையூறுகள் வந்தாலும் எடுத்த காரியத்தில் உறுதியாக இருங்கள். வீண் பேச்சு கூடவே கூடாது. வியாபார ரீதியாக போட்டிகள் வரலாம். வம்பு வழக்கு கூடவே கூடாது. துர்க்கையை வணங்கினால் எதிலும் வெற்றிதான்.

பூரட்டாதி 1,2,3 ம் பாதம் : பிள்ளைகளால் தொந்தரவு நேரலாம். வெளிவட்டாரபழக்கங்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். மனக்குழப்பம் ஏற்பட்டால் அருகிலிருக்கும் கோவிலுக்கு சென்று வரவும். வியாழபகவானை மனதில் நினைத்துக் கொண்டேஇருந்தால் மனதிடம் அதிகரிக்கும்.

குறிப்பு: இது மாணவ மணிகளுக்கு: அபிராமி அந்தாதியில் தனந்தரும் பாடலை படிப்பது நன்மையைத்தரும்.

லக்ன ரீதியான பலன்கள்:

லக்னம் இராசி பலன்கள் பரிகாரம்
மேஷம் கும்பம் 55/100 சஷ்டி கவசம் படிப்பது
ரிஷபம் கும்பம் 65/100 ஸ்ரீமஹால்க்ஷ்மி அஷ்டகம் சொல்வது
மிதுனம் கும்பம் 55/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது
கடகம் கும்பம் 65/100 ஸ்ரீசௌந்தர்யலஹரி சொல்வது
ஸிம்ஹம் கும்பம் 50/100 ஆதித்யஹ்ருதயமி சொல்வது
கன்னி கும்பம் 50/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது, மகான்களை வழிபடவும்
துலாம் கும்பம் 50/100 நவக்ரஹ ஸூக்தம் சொல்வது, ஸ்ரீஸூக்தம் சொல்வது.
விருச்சிகம் கும்பம் 60/100 கணபதி பூஜை மற்றும துர்ஹா ஸூக்தம் சொல்வது, முடிந்த வரையில் அம்பாள் நாமாவை சொல்வது
தனுசு கும்பம் 55/100 கோளறு பதிகம் சொல்லுங்கள், ஹனுமன் வழிபாடு
மகரம். கும்பம் 60/100 குலதெய்வ வழிபாடு செய்வது மற்றும் முன்னோர்களை வழிபடுவது.
கும்பம் கும்பம் 55/100 கோளறு பதிகம் சொல்லுங்கள், ஹனுமன் வழிபாடு, எள் விளக்கு எரிப்பது.
மீனம் கும்பம் 60/100 தன்வந்திரி ஸ்லோகம், காயத்ரி சொல்வது மற்றும் கணபதி உபநிஷத் சொல்வது
லக்னமே தெரியாது கும்பம் 55/100 கோளறு பதிகம் சொல்லுங்கள், ஹனுமன் வழிபாடு, எள் விளக்கு எரிப்பது.
குறிப்பு:

[1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது?

நீங்கள் கும்பம் இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் கும்பம் இராசியில் பிறந்து கடகம் லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு 65% சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்: ஸ்ரீசௌந்தர்யலஹரி சொல்வது. எனக்கு லக்னமேத் தெரியாது ஆனால் கும்பம் இராசி என்பவர்கள் கோளறு பதிகம் சொல்லுங்கள், ஹனுமன் வழிபாடு, எள் விளக்கு எரிப்பது.

[2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.

நக்ஷத்திர வாரியாக சில குறிப்புகள்:

* நக்ஷத்திரங்கள்
பலன்கள் அவிட்டம் 3,4 ஸதயம் பூரட்டாதி் 1,2,3
இராசி கும்பம் கும்பம் கும்பம்
இராசியாதிபதி சனி சனி சனி
நக்ஷத்திர அதிபதி செவ்வாய் இராகு குரு
அதிதேவதைகள் வஸுக்கள் வருணன் அஜைகபாத்
கணம் இராக்ஷஸ கணம் இராக்ஷஸ கணம் மனுஷ கணம்
நாடி மத்ய பார்ஸுவ - வலது பார்ஸுவ - வலது
மிருகம் பெண் சிங்கம் பெண் குதிரை சிங்கம்
பக்ஷி வண்டு அண்டங்காக்கை உள்ளான்
விருக்ஷம் வன்னி கடம்பு மாமரம்(தோமா)
இரஜ்ஜு சிரோ கழுத்து இரஜ்ஜு வயிறு
வேதை நக்ஷத்ரம் மிருகசீர்ஷம், சித்திரை ஹஸ்தம் உத்திரம்
அதிர்ஷ்டம் தரும் எண்கள் 1, 3, 4, 5, 7, 9 1, 3, 4, 6, 7, 9 1, 3, 6, 7, 9
அதிர்ஷ்டம் தரும் திசைகள் கிழக்கு, தெற்கு கிழக்கு, தெற்கு கிழக்கு, தெற்கு
குறிப்பு:

அதிர்ஷ்டம் தரும் எண்களும், திசைகளும் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும். இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவானவையே.

மகரம் - குருப் பெயர்ச்சி பலன்கள்



உங்களைப் பற்றி:

எதிலும் வழக்கு போடும் மகர ராசிக்காரர்களே நீங்கள் எவருக்கும் அஞ்சாமல் உண்மையைப் பேசுபவர்கள். எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்.

எப்படி இருக்கப் போகிறது இந்த குருப் பெயர்ச்சி:

இது வரை வாக்கு ஸ்தானத்தில் இருந்த குருபகவான் இனி மூன்றாமிடத்தில் அமர்ந்து என்னென்னெ பலன்கள் தரப்போகிறார் என்பதைப் பார்ப்போம்.


இதுவரை பட்ட காலிலேயே படும் என்பது போன்ற நிலை மாறும். நீங்கள் செய்யாத தவறுக்கெல்லாம் மாட்டிக் கொண்டீர்களே, இனி நீங்கள் அதிலிருந்து தப்பிப்பீர்கள். கோர்ட், போலீஸ் என்றிருந்த நிலைமை மாறும். இதுவரை இருந்த வந்த உங்களுக்கு எதிராக இருந்த நிலைமை மாறும். வாழ்க்கைத்துணையுடன் இருந்த பிணக்க நிலை மாறும். முன்கோபம், பிடிவாதம் நீங்கும். குடும்பத்தில் இருந்த வந்த மந்த நிலை மாறி உற்சாகம் துளிர்விடும். உங்களது வார்த்தைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். சிறியவர்களிடம் கூட கெட்ட பெயர் வாங்கினீர்களே? இனி அந்த நிலைமை மாறும். வரவுக்கு மேல் செலவு இருந்த நிலைமையும் மெல்ல மெல்ல மாறும். படிப்பில் மிகுந்த கவனம் தேவை. மிகுந்த நிதானமாக எந்த காரியத்தையும் செய்ய வேண்டும். வார்த்தைகளில் நிதானம் தேவை. தேவை இல்லாத இடங்களில் கருத்து கூற முயல வேண்டாம். கேட்டால் மட்டும் உதவி செய்யுங்கள். உதவி கேட்காதவர்களுக்காக நீங்களாக யாருக்கும் உதவி செய்தல் கூடாது. உடல் ஊனமுற்றோருக்கு உதவிகள் செய்யலாம். ஏழைக் குழந்தைகளை படிக்க வைத்தல் நலம் பயக்கும். எதற்கெடுத்தாலும் பிள்ளைகளை சத்தம் போடுவதை குறையுங்கள். உங்கள் பிள்ளைகள் உங்களை விட புத்திசாலிகள். தாய், தாய்வழி உறவினர்களுடன் உறவு பலிக்கும். வீடு, மனை வாங்குவதில் வரும் 3 மாதத்திற்கு சிக்கல் ஏற்பட்டு பின் சரியாகும். மருத்திவ செலவுகள் காத்திருக்கிறது. கவனம் தேவை. நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் மிகுந்த கவனம் தேவை. வாழ்க்கைத்துணைக்கு சந்தேகம் ஏற்படும்படி நடந்து கொள்வதை தவிருங்கள். த்ந்தாயாருடன் தர்க்கம் கூடவே கூடாது. நண்பர்களின் மீது கோபம் கொள்வதையும் தவிர்க்கவும். தொழில் செய்யும் இடத்தில் தர்க்கம் கூடாது. மேலதிகாரிகள் பளு கொடுக்கலாம். எதையும் செய்யும் திறமை உங்களிடம் இருப்பதை உணருங்கள்.அடுத்தவருக்கு சொல்லும் யோசனையை நீங்களும் கொஞ்சம் பயன்படுத்தி பாருங்களேன். அதீத கற்பனை கூடாது. அப்படியே கற்பனை செய்தாலும் மற்றவரிடம் சொல்லி மற்றவரை குழப்ப முயற்சிக்காதீர்கள். கலைஞர்களுக்கு பாராட்டுகளும், பரிசுகளும் குவியும் காலம் இது. மொத்தத்தில் இதுவரை இருந்த வந்த வறுமை மற்றும் மன உளைச்சல் நீங்கி செல்வவளமும், நிம்மதியும் ஏற்படும்.

நக்ஷத்திர ரீதியான பலன்கள்:

உத்திராடம் 2,3,4ம் பாதம் : உடல்நலம் உற்சாகமாக இருக்கும். அனைவரிடமும் நல்ல பெயர் எடுக்க வேகமும், விவேகமும் அவசியமாகும். சூர்யனை வணங்கி எதையும் ஆரம்பித்தால் வெற்றிதான்.

திருவோணம் : நண்பர்களால் அதிக நன்மைகள் கிடைக்கும். திருமணம் மற்றும் சுபகாரியங்கள் தங்குதடையின்றி நடக்கும். ஸ்ரீமஹாவிஷ்ணுவை வணங்குங்கள், நன்மைகள் பல கிடைக்கும்.

அவிட்டம் 1,2 ம் பாதம் : வியாபாரம் பெருகும். மிகவும் தைரியமாக உபதொழில் ஒன்றும் ஆரம்பிப்பீர்கள். உத்தியோக ரீதியாக அயல்நாடு செல்ல வேண்டி வரும். உடல்நிலை சிறப்பாக இருக்கும். முருகனை வணங்குங்கள், வாழ்வு சிறக்கும்.

குறிப்பு: இது மாணவ மணிகளுக்கு: ஸ்ரீ ஸரஸ்வதி ஸ்லோகம் படிப்பது நன்மையைத்தரும்.

லக்ன ரீதியான பலன்கள்:

லக்னம் இராசி பலன்கள் பரிகாரம்
மேஷம் மகரம் 60/100 சண்முக கவசம் படிப்பது
ரிஷபம் மகரம் 65/100 ஸ்ரீமஹால்க்ஷ்மி அஷ்டகம் சொல்வது
மிதுனம் மகரம் 60/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது
கடகம் மகரம் 70/100 ஸ்ரீசௌந்தர்யலஹரி சொல்வது
ஸிம்ஹம் மகரம் 60/100 ஆதித்யஹ்ருதயம், மஹாலக்ஷிமி காயத்ரி, நாராயண காயத்ரி, நவக்ரஹ காயத்ரி சொல்வது
கன்னி மகரம் 60/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது, மகான்களை வழிபடவும்
துலாம் மகரம் 60/100 நவக்ரஹ ஸூக்தம் சொல்வது, ஸ்ரீஸூக்தம் சொல்வது.
விருச்சிகம் மகரம் 65/100 கணபதி பூஜை மற்றும துர்ஹா ஸூக்தம் சொல்வது, முடிந்த வரையில் அம்பாள் நாமாவை சொல்வது
தனுசு மகரம் 60/100 கோளறு பதிகம் சொல்லுங்கள், ஹனுமன் வழிபாடு
மகரம் மகரம் 60/100 குலதெய்வ வழிபாடு செய்வது மற்றும் முன்னோர்களை வழிபடுவது.
கும்பம் மகரம் 60/100 துர்க்கா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் மூகபஞ்சக சதீ சொல்வது
மீனம் மகரம் 60/100 தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் கணபதி உபநிஷத் சொல்வது
லக்னமே தெரியாது மகரம் 70/100 குலதெய்வ வழிபாடு செய்வது மற்றும் முன்னோர்களை வழிபடுவது.s
குறிப்பு:

[1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது?

நீங்கள் மகரம்


இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் மகரம் இராசியில் பிறந்து மீனம் லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு 60% சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்: தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் கணபதி உபநிஷத் சொல்வது. எனக்கு லக்னமேத் தெரியாது ஆனால் மகரம் இராசி என்பவர்கள் குலதெய்வ வழிபாடு செய்வது மற்றும் முன்னோர்களை வழிபடுவது.

[2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.

நக்ஷத்திர வாரியாக சில குறிப்புகள்:

* நக்ஷத்திரங்கள்
பலன்கள் உத்திராடம் 2,3,4 திருவோணம் அவிட்டம் 1,2
இராசி மகரம் மகரம் மகரம்
இராசியாதிபதி சனி சனி சனி
நக்ஷத்திர அதிபதி சூரியன் சந்திரன் செவ்வாய்
அதிதேவதைகள் விஸ்வேதேவர் விஷ்ணு வஸுக்கள்
கணம் மனுஷ்ய கணம் தேவ கணம் இராக்ஷஸ கணம்
நாடி பார்ஸுவ - இடது பார்ஸுவ - வலது மத்ய நாடி
மிருகம் பசு பெண் குரங்கு பெண் சிங்கம்
பக்ஷி வலியன் காரை வண்டு
விருக்ஷம் பலாமரம் எருக்கு வன்னி
இரஜ்ஜு வயிறு கண்ட இரஜ்ஜு சிரோ
வேதை நக்ஷத்ரம் புனர்பூசம் திருவாதிரை மிருகசீர்ஷம், சித்திரை
அதிர்ஷ்டம் தரும் எண்கள் 1, 4, 5, 7, 9 1, 3, 6, 7, 9 1, 3, 6, 7, 9
அதிர்ஷ்டம் தரும் திசைகள் கிழக்கு, மேற்கு கிழக்கு, தெற்கு கிழக்கு, தெற்கு
குறிப்பு:

அதிர்ஷ்டம் தரும் எண்களும், திசைகளும் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும். இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவானவையே.

தனுசு - குருப் பெயர்ச்சி பலன்கள்

உங்களைப் பற்றி:

எதிலும் அப்பாவியாக இருக்கும் தனுசு இராசி வாசகர்களே, நீங்கள் மனசாட்சிக்கு விரோதமான காரியங்களை செய்ய மாட்டீர்கள். வானத்தில் கோட்டை கட்டுபவர்கள். பிறருக்கு கொடுத்து கொடுத்தே மகிழ்ச்சியடைவீர்கள். பொதுவாக நீங்கள் சாதுவானவர்.

எப்படி இருக்கப் போகிறது இந்த குருப் பெயர்ச்சி:

இது வரை மூன்றாவது ஸ்தானத்தில் இருந்த குருபகவான் இனி சுகஸ்தானத்தில் அமர்ந்து என்னென்னெ பலன்கள் தரப்போகிறார் என்பதைப் பார்ப்போம்.

இளைய சகோதரத்துடன் சின்ன சின்ன நெருடல்கள், வேலை கிடைப்பதில் குழப்பம், தகுதியற்ற வேலை, வேலை செய்யும் இடத்தில் குழப்பம், என ஒரு குழப்பமான சமயத்தில் குருப் பெயர்ச்சியை சந்திக்கின்றீர்கள். நல்லது. சின்ன சின்ன குழப்பங்களனைத்தும் மறையும் காலமிது. உங்கள் குடும்பத்தில் நல்ல நல்ல விஷயங்கள், விஷேசங்கள் நடக்கப்போகும் காலமிது. உங்கள் தைரியத்திற்கு இறைவனை வேண்டுங்கள். பாதியில் விட்ட படிப்பை தொடர வாழ்த்துக்கள். படிப்பில் சாதனைகள் புரிய வேண்டிய காலகட்டம் இது. தாயார் தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் குறையும். வீடு, மனை, வாகனம் யோகம் அமையும். நெடுநாளாக இந்த விஷயத்தில் இருந்த வந்த சுணக்க நிலை மாறும். பிள்ளைகளின் மேல் கவனம் வைக்க வேண்டிய நேரம் இது. முன்னோர்களை அமாவாசை தோறும் வழிபடவும். மறைவிடங்களில் சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம். கவனம் தேவை. வாழ்க்கைத்துணையுடன் இருந்த வந்த மனக்கசப்பு நீங்கி புதிய உத்வேகம் பிறக்கும். நல்ல நண்பர்களின் மூலம் பல நன்மைகளைப் பெறுவீர்கள். தந்தையாருடன் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து மறையும். நினைத்த இடத்தில் நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் அங்கீகரிக்கப்படுவீர்கள். தாய் தந்தை ஆரோக்கியத்தின் மீது கவனம் தேவை. அவர்களின் மருத்துவ செலவிற்கு சிறிது தொகையை செலவழிக்க வேண்டி வரலாம். லாபகரமான முதலீடுகளில் யாரையும் நம்பவேண்டாம். உங்கள் மீது யார் மிகுந்த அன்பு வைத்திருக்கிறார்களோ அவர்களை நம்பவும். மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி தடைபட்டிருந்த பாக்கியங்களை அள்ளித்தருவதுடன் பணம், பட்டம், பதவி ஆகியவற்றை தருவதாக அமையும்.

நக்ஷத்திர ரீதியான பலன்கள்:

மூலம்: எதிலும் அவசரம் கூடாது. எச்சரிக்கை தேவை. பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டாலும் செலவுகளும் முன் வந்து நிற்கும். ஹனுமனை வணங்கி எதையும் ஆரம்பித்தால் வெற்றி கிடைக்கும்.

பூராடம்: பேசுவதைக் குறையுங்கள் பாதி பிரச்சனை தீர்ந்து விடும். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டு நீங்கும். பண விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. திருமண முயற்சியில் வெற்றியடைவீர்கள். ஸ்ரீமஹாலக்ஷிமியை வணங்குங்கள், தன முன்னேற்றம் ஏற்படும்.

உத்திராடம் 1ம் பாதம் : உடல் நலத்தில் சற்று கவனமுடன் இருக்கவும். தந்தையாரின் உடல்நிலையில் கவனம் தேவை. உத்தியோகம் பார்க்கும் இடத்தில் மேலதிகாரிகளிடம் கவனமாக பழகவும். யாரையும் அனுசரித்து போனால் பிரச்சினை இல்லை. மஹான்களை வழிபட தடைபட்டிருந்த காரியங்கள் தடை விலகி நன்மை ஏற்படும்.

குறிப்பு: இது மாணவ மணிகளுக்கு: ஸ்ரீ விநாயகர் அகவல் படிப்பது நன்மையைத்தரும்.

லக்ன ரீதியான பலன்கள்:

லக்னம் இராசி பலன்கள் பரிகாரம்
மேஷம் தனுசு 55/100 கந்த ஷஷ்டி கவசம் படிப்பது
ரிஷபம் தனுசு 70/100 ஸ்ரீஸூக்தம் சொல்வது
மிதுனம் தனுசு 60/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது
கடகம் தனுசு 70/100 ஸ்ரீசௌந்தர்யலஹரி சொல்வது
ஸிம்ஹம் தனுசு 60/100 ஆதித்யஹ்ருதயம், மஹாலக்ஷிமி காயத்ரி, நாராயண காயத்ரி, நவக்ரஹ காயத்ரி சொல்வது
கன்னி தனுசு 50/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது, மகான்களை வழிபடவும்
துலாம் தனுசு 60/100 நவக்ரஹ ஸூக்தம் சொல்வது, ஸ்ரீஸூக்தம் சொல்வது.
விருச்சிகம் தனுசு 70/100 கணபதி பூஜை மற்றும துர்ஹா ஸூக்தம் சொல்வது, முடிந்த வரையில் அம்பாள் நாமாவை சொல்வது மற்றும் சண்முக கவசம் சொல்வது.
தனுசு தனுசு 60/100 கோளறு பதிகம் சொல்லுங்கள், ஹனுமன் வழிபாடு
மகரம் தனுசு 65/100 குலதெய்வ வழிபாடு செய்வது மற்றும் முன்னோர்களை வழிபடுவது.
கும்பம் தனுசு 50/100 லலிதா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் மூகபஞ்சக சதீ சொல்வது
மீனம் தனுசு 60/100 தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் கணபதி காயத்ரி சொல்வது
லக்னமே தெரியாது தனுசு 60/100 கோளறு பதிகம் சொல்லுங்கள், ஹனுமன் வழிபாடு
குறிப்பு:

[1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது?

நீங்கள் தனுசு இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் தனுசு இராசியில் பிறந்து கும்பம் லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு 50% சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்: லலிதா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் மூகபஞ்சக சதீ சொல்வது. எனக்கு லக்னமேத் தெரியாது ஆனால் தனுசு இராசி என்பவர்கள் கோளறு பதிகம் சொல்லுங்கள், ஹனுமன் வழிபாடு.

[2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.

நக்ஷத்திர வாரியாக சில குறிப்புகள்:

* நக்ஷத்திரங்கள்
பலன்கள் மூலம் பூராடம் உத்திராடம் 1ம் பாதம்
இராசி தனுசு தனுசு தனுசு
இராசியாதிபதி வியாழன் வியாழன் வியாழன்
நக்ஷத்திர அதிபதி கேது சுக்ரன் சூரியன்
அதிதேவதைகள் நிருதி ஜலதேவதை விஸ்வேதேவர்
கணம் இராக்ஷஸ் கணம் மனுஷ்ய கணம் மனுஷ்ய கணம்
நாடி பார்ஸுவ - வலது மத்ய பார்ஸுவ - இடது
மிருகம் பெண் நாய் ஆண் குரங்கு பசு
பக்ஷி செம்பரத்தி கௌதாரி வலியன்
விருக்ஷம் மராமரம் வஞ்சிமரம் பலாமரம்
இரஜ்ஜு பாதம் தொடை வயிறு
வேதை நக்ஷத்ரம் ஆயில்யம் பூசம் புனர்பூசம்
அதிர்ஷ்டம் தரும் எண்கள் 1, 3, 4, 7, 9 1, 3, 6, 7, 9 1, 3, 6, 7, 9
அதிர்ஷ்டம் தரும் திசைகள் கிழக்கு, வடக்கு கிழக்கு, தெற்கு கிழக்கு
குறிப்பு:

அதிர்ஷ்டம் தரும் எண்களும், திசைகளும் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும். இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவானவையே.

விருச்சிகம் - குருப் பெயர்ச்சி பலன்கள்



விருச்சிகம் இராசிக்குள்ள குருப்பெயர்ச்சி பொது பலன்கள்


உங்களைப் பற்றி:

எல்லோரிடமும் கண்டிப்பும் கட்டாயமும் உள்ள விருச்சிகம் இராசி வாசகர்களே, நீங்கள் எதிலும் சுறுசுறுப்பாக இருப்பவர்.துணிச்சலுக்கும், தைரியத்திற்கும் பெயர் போனவர். வாக்கு தவறாதவர்.

எப்படி இருக்கப் போகிறது இந்த குருப் பெயர்ச்சி:

இது வரை சுகஸ்தானத்தில் இருந்த குருபகவான் இனி என்னென்னெ பலன்கள் தரப்போகிறார் என்பதைப் பார்ப்போம்.



எதிர்பார்த்திருந்த தனலாபம், தேக ஆரோக்கியத்தில் நன்மை, தாயார் தாய் வழி உறவினர்களுடன் இருந்த சுமூக நிலைமை என அனைத்து நல்ல பலன்களும் அப்படியே தொடரப்போகும் காலமிது. நல்லது. எந்த இடத்திற்கு சென்றாலம் ஏதாவது ஒரு தடங்கல் வந்து கொண்டே இருந்ததல்லவா இனி அந்த நிலைமை மாறும். சொன்னால் சொன்ன நேரத்தில் உங்களால் இனி செல்ல முடியும். கடுஞ்சொற்கள் பேசுவதை சற்றே குறைத்து கொள்ளுங்கள். உங்கள் நற்மதிப்பை நீங்களே கெடுத்து கொள்ளாதீர்கள். செலவுகளைப் பற்றி கவலைப்படும் சமயம் வந்து விட்டது. ஆடம்பர செலவுகள் வேண்டாம். இளைசகோதரத்தின் மூலம் லாபம் கிடைக்கும் நேரமிது. சிறப்பான சுகங்களை அனுபவிக்க போகும் காலமிது. புத்தம் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். சந்தாண பாக்கியம் கிட்டும் காலமிது. தெய்வ யாத்திரை, புனித ஸ்தலங்களுக்கு செல்வது போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும் காலகட்டம் இது. முன்னோர்களை வழிபட மறக்க வேண்டாம். கோபம் கூடவே கூடாது. ரத்தம் சம்பந்தப்பட்ட வியாதி வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. கவனம் தேவை. வாழ்க்கைத்துணையுடன் உறவு சிறக்கும். நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். எதிரிகளை வீழ்த்த வியூகம் அமைப்பீர்கள். வழக்கு வியாஜ்ஜியங்களில் உங்கள் பக்கம் வெற்றி கிடைக்கும். தந்தையாருடன் உறவு பிரகாசிக்கும். பிதுரார்ஜித சொத்துக்கள் உங்களை வந்து அடையும் நேரமிது. பணி செய்யும் இடத்தினில் எச்சரிக்கை தேவை.சிலருக்கு பணியின் காரணமாக வெளிநாடு அயலூர் செல்ல வேண்டி வரலாம். லாபகரமான முதலீடுகள் செய்ய தயங்க வேண்டாம். எந்த முதலீடுகளையுமே குறுகிய காலம் செய்யாமல் நீண்ட காலமாக செய்யுங்கள். தாய் தந்தையரை வணங்கி எந்த காரியத்தையும் ஆரம்பித்தால் வெற்றியே. மொத்தத்தில் சோதனைகளை சாதனைகளாக மாற்றும் காலமிது.


நக்ஷத்திர ரீதியான பலன்கள்:

விசாகம் 4ம் பாதம்: போட்டிகள் பொறாமைகள் விலகும். சந்தையில் உங்கள் வியாபாரம் பெருகும். உடல்நிலை சிறப்பாக இருக்கும். வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றிகள் வந்து சேரும். சகோதர சகோதரி்களிடம் அன்பு கூடும். ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியை வணங்கினால் எல்லாம் தடையின்றி நடக்கும்.

அனுஷம்: சோதனைகள் விலகி சாதனைகள் வரும். தொழிலில் லாபம் கிடைக்கும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும். அன்னியோன்னியம் ஏற்படும். சுபகாரியங்கள் இனிதே நடக்கும். ஹனுமனை வணங்கி எதையும் ஆரம்பித்தால் வெற்றிதான்.

கேட்டை : தன லாபம், தன சேர்க்கை உங்களைத் தேடி வரும். சோம்பலை விடுங்கள். பிரிந்த சொந்தங்கள் தேடிவரும். ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் பெண்ணுக்கு நல்ல வரன் கிடைக்கும். எதிர்பாராத பயணத்தில் அனுகூலம் உண்டாகும். ஸ்ரீவிஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்லுங்கள், நனமைகள் தேடிவரும்.

குறிப்பு: இது மாணவ மணிகளுக்கு: ஸ்ரீ நவக்ரஹ வழிபாடு நன்மையைத்தரும்.

லக்ன ரீதியான பலன்கள்:லக்னம் இராசி பலன்கள் பரிகாரம்
மேஷம் விருச்சிகம் 70/100 கந்த ஷஷ்டி கவசம் படிப்பது
ரிஷபம் விருச்சிகம் 65/100 ஸ்ரீஸூக்தம் சொல்வது
மிதுனம் விருச்சிகம் 60/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது
கடகம் விருச்சிகம் 65/100 ஸ்ரீ லலிதா ஸகஸ்ரநாமம் சொல்வது
ஸிம்ஹம் விருச்சிகம் 60/100 ஆதித்யஹ்ருதயம், நவக்ரஹ காயத்ரி சொல்வது
கன்னி விருச்சிகம் 60/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முருகனை வழிபடுவது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது, மகான்களை வழிபடவும்
துலாம் விருச்சிகம் 65/100 கணபதி காயத்ரி, நவக்ரஹ ஸூக்தம் சொல்வது, ஸ்ரீஸூக்தம் சொல்வது.
விருச்சிகம் விருச்சிகம் 75/100 கணபதி பூஜை மற்றும துர்ஹா ஸூக்தம் சொல்வது, முடிந்த வரையில் அம்பாள் நாமாவை சொல்வது.
தனுர் விருச்சிகம் 70/100 அபிராமி அந்தாதி சொல்லுங்கள்
மகரம் விருச்சிகம் 65/100 குலதெய்வ வழிபாடு செய்வது மற்றும் முன்னோர்களை வழிபடுவது.
கும்பம் விருச்சிகம் 60/100 லலிதா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் மூகபஞ்சக சதீ சொல்வது, தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது.
மீனம் விருச்சிகம் 60/100 தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் கணபதி காயத்ரி சொல்வது
லக்னமே தெரியாது விருச்சிகம் 75/100 கணபதி பூஜை மற்றும துர்ஹா ஸூக்தம் சொல்வது, முடிந்த வரையில் அம்பாள் நாமாவை சொல்வது.
குறிப்பு:

[1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது?

நீங்கள் விருச்சிகம் இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் விருச்சிகம் இராசியில் பிறந்து கும்பம் லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு 60% சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்: லலிதா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் மூகபஞ்சக சதீ சொல்வது, தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது. எனக்கு லக்னமேத் தெரியாது ஆனால் விருச்சிகம் இராசி என்பவர்கள் கணபதி பூஜை மற்றும துர்ஹா ஸூக்தம் சொல்வது, முடிந்த வரையில் அம்பாள் நாமாவை சொல்வது.

[2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.


நக்ஷத்திர வாரியாக சில குறிப்புகள்:* நக்ஷத்திரங்கள்
பலன்கள் விசாகம் - 4 ம் பாதம் அனுஷம் கேட்டை
இராசி விருச்சிகம் விருச்சிகம் விருச்சிகம்
இராசியாதிபதி செவ்வாய் செவ்வாய் செவ்வாய்
நக்ஷத்திர அதிபதி வியாழன் சனி புதன்
அதிதேவதைகள் இந்திரன், அக்னி மித்திரன் இந்திரன்
கணம் இராக்ஷஸ் கணம் தேவகணம் இராக்ஷஸ் கணம்
நாடி பார்ஸுவ - இடது மத்ய பார்ஸுவ - வலது
மிருகம் பெண் புலி பெண் மான் ஆண் மான்
பக்ஷி செவ்வாக் சாதகம் சக்கிரவா
விருக்ஷம் விளா மகிழ் பிராய்
இரஜ்ஜு வயிறு தொடை பாதம்
வேதை நக்ஷத்ரம் கார்த்திகை பரணி அசுவதி
அதிர்ஷ்டம் தரும் எண்கள் 1, 3, 4, 6, 7, 9 1, 2, 3, 6, 7, 9 1, 3, 5, 6, 7, 9
அதிர்ஷ்டம் தரும் திசைகள் கிழக்கு, வடக்கு கிழக்கு, தெற்கு கிழக்கு
குறிப்பு:

அதிர்ஷ்டம் தரும் எண்களும், திசைகளும் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும். இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவானவையே.




--

துலாம் - குருப் பெயர்ச்சி பலன்கள்



உங்களைப் பற்றி:

"துலாத்தான் எங்கும் உண்டு" என்பதற்கேற்ப எல்லோரிடமும் நல்ல பெயரை எளிதில் சம்பாதித்து விடும் துலா இராசி வாசகர்களே, நீங்கள் தோல்வியைக்கண்டு துவளாதவர். போராட்ட குணம் உடையவர். எதிலும் முயற்சி செய்து வெற்றி காண வேண்டும் என்று விரும்புபவர்.

எப்படி இருக்கப் போகிறது இந்த குருப் பெயர்ச்சி:

இது வரை உங்களுக்கு பல விதமான முறையிலும் விரையங்களையும் லாபங்களாக்கிய குருபகவான் இனி என்னென்னெ பலன்கள் தரப்போகிறார் என்பதைப் பார்ப்போம்.

முயற்சி செய்த அளவுக்கு வெற்றி, ஆனால் நினைத்த இடத்திற்கு வரத்தடைகள் என அனைத்தும் இனி மாறும். முயற்சிகளை இருமடங்காக்குங்கள், வெற்றிகள் உங்களைத் தேடி வரும் காலமிது. உங்கள் பொன்னான நேரத்தை அடுத்தவருக்காக வீணாக்காதீர்கள். அடுத்தவரை பற்றி பேசாவிட்டாலும் நீங்கள் கூறியதாக சிலர் பற்ற வைக்க கூடும். கவனம் தேவை. யாரையும் முழுமையாக நம்பவேண்டாம். வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதை முடிந்த வரை தவிர்க்கவும். எந்த காரியத்திலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவெடுக்காதீர்கள். கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிறிது முயற்சி தேவை. வீடு, மனை வாகனம் வாங்கும் யோகம் அமையும். தாயார், தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் ஏற்பட்டு மறையும். முன்னோர்கள் வழிபாடு மிகவும் முக்கியமானது என்பதை உணர்ந்து அதை செய்ய மறவாதீர்கள். உடல்நிலையில் மிகுந்த கவனம் தேவை. வாகனங்களை கையாளும்போது எச்சரிக்கை தேவை. வாழ்க்கைதுணையுடன் உறவு சிறக்கும். புதிய நண்பர்களை தேர்ந்தெடுக்கும்போது கவனம் தேவை. தந்தையுடன் உறவு சிறக்கும். வேலை செய்யும் இடத்தினில் நல்ல பெயர் கிடைக்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு பொன்னான காலமிது. உங்கள் வியாபாராத்தை பெருக்கும் காலமிது. மிகவும் லாபகரமான முதலீடுகள் செய்வீர்கள். தூங்கப் போகும் முன் எந்த விதமான யோசனைகளும் வேண்டாம். ஏதேனும் பயணம் செய்ய நேர்ந்தால் சரியாக திட்டமிடவும். பொதுவில் இந்த குருப் பெயர்ச்சி தங்களுக்கு மிகவும் இனிதாக இருக்கும்.

க்ஷத்திர ரீதியான பலன்கள்:

சித்திரை 3, 4ம் பாதங்கள்: முடிந்தவரை கடன் வாங்காமிலிருப்பது நல்லது. எந்த தருணத்திலும் டென்ஷன் கூடவே கூடாது. செவ்வாய் கிழமையன்று முருகன் வழிபாடு நன்மையைத் தரும்.

ஸ்வாதி: மனதில் எதையும் வைத்திராமல் யாருடனாவது கலந்துரையாடுங்கள். முடிந்தவரை தனிமையைத் தவிருங்கள். வெளியூர் வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். பண விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கொடுக்கல் வாங்கலில் தகராறு வரலாம். முடிந்த வரை வெள்ளிக் கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வரவும்.

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள் : உற்சாகம் இல்லா காரியங்களில் ஈடுபட வேண்டாம். மனத்தை ஒருமுகப்படுத்தி எந்த காரியத்திலும் ஈடுபடுங்கள். அரசுவழியில் சோதனைகள் வரலாம் கவனம். கூட்டுதொழில் ஆரம்பிப்பதாய் இருந்தால் நன்கு பரிசீலித்து ஈடுபடவும். மகான்களை வழிபடவும்.

குறிப்பு: இது மாணவ மணிகளுக்கு: ஸ்ரீ ஸரஸ்வதி வழிபாடு நன்மையைத்தரும்.

லக்ன ரீதியான பலன்கள்:

லக்னம் இராசி பலன்கள் பரிகாரம்
மேஷம் துலாம் 60/100 சுப்பிரமணிய புஜங்கம் படிப்பது
ரிஷபம் துலாம் 60/100 விநாயகர் அகவல் படிப்பது மற்றும் ஸ்ரீஸூக்தம் சொல்வது
மிதுனம் துலாம் 55/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது
கடகம் துலாம் 65/100 ஸ்ரீ லலிதா ஸகஸ்ரநாமம் சொல்வது
ஸிம்ஹம் துலாம் 55/100 ஆதித்யஹ்ருதயம், மஹாலக்ஷிமி காயத்ரி, நாராயண காயத்ரி, ஹனுமத் காயத்ரி சொல்வது
கன்னி துலாம் 60/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது
துலாம் துலாம் 60/100 கணபதி காயத்ரி, நவக்ரஹ ஸூக்தம் சொல்வது, ஸ்ரீஸூக்தம் சொல்வது.
விருச்சிகம் துலாம் 60/100 கணபதி பூஜை மற்றும துர்ஹா ஸூக்தம் சொல்வது, முடிந்த வரையில் அம்பாள் நாமாவை சொல்வது.
தனுர் துலாம் 65/100 ஹனுமத் கவசம் சொலவது.
மகரம் துலாம் 65/100 கணபதி வழிபாடு மற்றும் குலதெய்வ வழிபாடு செய்வது மற்றும் முன்னோர்களை வழிபடுவது.
கும்பம் துலாம் 55/100 லலிதா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது.
மீனம் துலாம் 65/100 தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் துர்க்கா காயத்ரி சொல்வது
லக்னமே தெரியாது துலாம் 60/100 கணபதி காயத்ரி, நவக்ரஹ ஸூக்தம் சொல்வது, ஸ்ரீஸூக்தம் சொல்வது.
குறிப்பு:

[1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது?

நீங்கள் துலாம் இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் துலாம் இராசியில் பிறந்து மீனம் லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு 65% சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்: தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் துர்க்கா காயத்ரி சொல்வது. எனக்கு லக்னமேத் தெரியாது ஆனால் துலாம் இராசி என்பவர்கள் கணபதி காயத்ரி, நவக்ரஹ ஸூக்தம் சொல்வது, ஸ்ரீஸூக்தம் சொல்வது பரிகாரமாகும்.

[2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.

நக்ஷத்திர வாரியாக சில குறிப்புகள்:

* நக்ஷத்திரங்கள்
பலன்கள் சித்திரை - 3, 4 ம் பாதங்கள் ஸ்வாதி விசாகம் - 1, 2, 3 ம் பாதங்கள்
இராசி துலாம் துலாம் துலாம்
இராசியாதிபதி சுக்ரன் சுக்ரன் சுக்ரன்
நக்ஷத்திர அதிபதி செவ்வாய் இராகு வியாழன்
அதிதேவதைகள் துவஷ்டா வாயு இந்திராக்னி
கணம் இராக்ஷஸ் கணம் தேவகணம் இராக்ஷஸ் கணம்
நாடி மத்ய பார்ஸுவ - இடது பார்ஸுவ - இடது
மிருகம் பெண் புலி ஆண் எருமை ஆண் புலி
பக்ஷி மரங்கொத்தி தேனீ செவ்வாக்
விருக்ஷம் வில்வம் மருது விளா
இரஜ்ஜு தொப்புள் கழுத்து வயிறு
வேதை நக்ஷத்ரம் மிருகசீர்ஷம் அவிட்டம் உரோஹினி கார்த்திகை
அதிர்ஷ்டம் தரும் எண்கள் 1, 3, 4, 6, 7, 9 1, 2, 3, 6, 7, 9 1, 3, 6, 7, 9
அதிர்ஷ்டம் தரும் திசைகள் வடக்கு கிழக்கு, வடக்கு மேற்கு, வடக்கு
குறிப்பு:

அதிர்ஷ்டம் தரும் எண்களும், திசைகளும் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும். இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவானவையே.

கன்னி - குருப் பெயர்ச்சி பலன்கள்

கன்னி இராசிக்குள்ள குருப்பெயர்ச்சி பொது பலன்கள்

உங்களைப் பற்றி:

"கன்னியான் ஏய்க்கப்படுவான்" என்பதற்கேற்ப யாரையும் எளிதில் நம்பி விடும் பழக்கம் உடையவர். அடுத்தவருக்கு செய்யும் உபதேசத்தில் பாதியளவாவது நீங்கள் அதை கடைபிடியுங்கள். நீங்கள் இந்து மதத்தில் பிறந்தவர் என்றால் பொதுவாக உங்களுக்கு முருகன், விஷணு, ஐயப்பன் சம்பந்தப்பட்ட பெயர்கள் அமைந்திருக்கும். உங்களுக்கு பொதுவாக புத்தி கூர்மையுள்ள மதிநுட்பம் மிகுந்த வாழ்க்கைத்துணை அமைந்திருக்கும்.

எப்படி இருக்கப் போகிறது இந்த குருப் பெயர்ச்சி:

இது வரை உங்களுக்கு பல விதமான முறையிலும் விரையங்களை ஏற்படுத்திய குரு பகவான் இனி என்னென்னெ பலன்கள் தரப்போகிறார் என்பதைப் பார்ப்போம்.

மிகுந்த பொருட்செலவில் சுபவிரையங்கள், எடுத்த காரியங்களில் தடை, எதுவுமே நேர்மாறாக இருப்பது என கடந்த காலங்களை மிகுந்த சிரமத்துடன் கழித்தீர்களல்லவா, இனி வரும்காலம் மிகவும் நல்லகாலம். உங்கள் பேச்சை நீங்களே கேட்காமல் இருந்து வந்த நிலைமை மாறும். குடும்பத்தில் சின்ன சின்ன கருத்து மோதல்கள் வந்து மறையும். கடன் கொடுப்பதற்கு முன் ஒருமுறைகு இருமுறை யோசிக்கவும். வாக்கு கொடுப்பதற்கு முன் யோசனை செய்து கொடுக்கவும். காப்பாற்ற முடியாமல் போகலாம். தைரியம் சிறக்கும். அதற்காக அசட்டு தைரியம் எதிலும் கூடாது. இளைய சகோதரத்திடமிருந்து அனுகூலம் கிடைக்கும். வீடு, மனை, வாகனம் யோகம் உண்டு. பயன்படுத்தி கொள்ளவும். படிப்பில் கவனம் தேவை. எச்சரிக்கையுடன் நேரத்தை வீணாக்காமல் படிக்கவும். வெற்றி நிச்சயம். குறுக்கு வழிகளை நாடக்கூடாது. அவமானம் ஏற்படலாம். குழந்தைகளின் மீது சின்ன சின்ன பாரங்களை சுமத்தாதீர்கள். அவர்களுடன் உட்கர்ந்துபேசி முடிவு செய்யுங்கள். உடல்நிலையில் கவனம் தேவை. மருத்துவத்திற்கு என சேமிக்க பழகுங்கள். திடீர் செலவுகள் வந்து கடுப்பேற்றலாம். கவனம். வாழ்க்கைத்துணையுடன் அமைதியை கடைபிடியுங்கள். உங்கள் முரட்டுதனத்தை விட்டுவிட்டு சற்று இறங்கி வாருங்கள். உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். வாகனம், இயந்திரங்கள், நீர்நிலைகளில் கவனம் தேவை. சோம்பல் கூடவே கூடாது. தந்தையாருடன் நல்ல இணக்கமான சூழ்நிலை நிலவும். எவ்வளவு வேலை செய்து இவ்வளவு நாளும் நல்ல பெயர் கிடைக்கவில்லையே என ஏங்கியிருந்தீர்களே, இனி அந்த நிலை மாறும். உங்களுக்கு பணியிடத்தினில் அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். லாபகரமான முதலீடுகளில் முதலீடு செய்ய தகுதியானவர்களின் ஆலோசனைகளை பெற்று செய்யவும். தூங்கப்போகும் முன் வீண் கற்பனைகள், சந்தேகங்கள் கூடவே கூடாது. பொதுவில் இந்த குரு பெயர்ச்சி வருங்காலத்திற்கு அச்சாரம் போட வைக்கும்.

நக்ஷத்திர ரீதியான பலன்கள்:

உத்திரம் 2, 3, 4ம் பாதங்கள்: உடல்நலம் சம்பந்தமான விஷயங்களில் கவனம் தேவை. மூன்றாம் நபர் விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம். எந்த வேலையிலும் முழுமுயற்சி தேவை. ஆதித்யஹ்ருதயம் மற்றும் ஸ்ரீ விஷணு ஸகஸ்ரநாமம் சொல்வது பயனைத்தரும்.

ஹஸ்தம்: வேலை செய்யும் இடத்தினில் மிகுந்த கவனம் தேவை. செய்யாத தப்பிற்கு மாட்ட வேண்டி வரலாம். பேச்சை குறையுங்கள். தனிநபர் விமர்சனம், பாராட்டு கூடவே கூடாது. முடிந்த வரை நேர்மையை கடைபிடியுங்கள். கூடிய விரைவில் எதிர்பார்த்த திருமணம் நடக்கும். ஸ்ரீ லலிதா த்ரிசதி சொல்ல சொல்ல வாழ்வில் ஒளி பிறக்கும்.

சித்திரை 1, 2 ம் பாதங்கள் : வரவு செலவினங்களில் கவனம் தேவை. முதலீடுகள் செய்யும் முன் கவனம் தேவை. எந்த ஒரு காரியத்திலும் ஆரம்பத்திலுள்ள முயற்சியைக் குறைக்காமலிருந்தால் வெற்றி கிடைக்கும். ஸ்ரீ முருக வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

குறிப்பு: இது மாணவ மணிகளுக்கு: ஸ்ரீ ஹயக்ரீவர் வழிபாடு மற்றும் சரஸ்வதி தியானம் நன்மையைத்தரும்.

லக்ன ரீதியான பலன்கள்:

லக்னம் இராசி பலன்கள் பரிகாரம்
மேஷம் கன்னி 60/100 கந்த ஷஷ்டி கவசம் சொல்வது
ரிஷபம் கன்னி 65/100 ஸ்ரீ மன் நாராயணீயம் சொல்வது மற்றும் ஸ்ரீஸூக்தம் சொல்வது
மிதுனம் கன்னி 50/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது,மகான்களை வழிபடவும்
கடகம் கன்னி 60/100 புருஷ ஸூக்தம், நாராயண ஸூக்தம், விஷ்ணு ஸுக்தம் சொல்வது மற்றும் சூரிய வழிபாடு
ஸிம்ஹம் கன்னி 55/100 ஆதித்யஹ்ருதயம், மஹாலக்ஷிமி காயத்ரி, நாராயண காயத்ரி, ஹனுமத் காயத்ரி சொல்வது
கன்னி கன்னி 50/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது, மகான்களை வழிபடவும்
துலாம் கன்னி 65/100 கணபதி காயத்ரி, நவக்ரஹ மூலமந்த்ரம் சொல்வது, ஸ்ரீஸூக்தம் சொல்வது.
விருச்சிகம் கன்னி 65/100 கணபதி பூஜை மற்றும துர்ஹா ஸூக்தம் சொல்வது, முடிந்த வரையில் அம்பாள் நாமாவை சொல்வது.
தனுர் கன்னி 60/100 துர்க்கா மூலமந்த்ரம் மற்றும் ஹனுமத் கவசம் சொலவது.
மகரம் கன்னி 60/100 கணபதி வழிபாடு மற்றும் குலதெய்வ வழிபாடு செய்வது மற்றும் முன்னோர்களை வழிபடுவது.
கும்பம் கன்னி 50/100 லலிதா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் மூகபஞ்சக சதீ சொல்வது, தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது.
மீனம் கன்னி 55/100 தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் துர்க்கா காயத்ரி சொல்வது, வீட்டிலுள்ள முன்னோர்களை வழிபடவும்.
லக்னமே தெரியாது கன்னி 50/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது, மகான்களை வழிபடவும்
குறிப்பு:

[1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது?

நீங்கள் கன்னி இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் கன்னி இராசியில் பிறந்து மீனம் லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு % சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்: தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் துர்க்கா காயத்ரி சொல்வது, வீட்டிலுள்ள முன்னோர்களை வழிபடவும். எனக்கு லக்னமேத் தெரியாது ஆனால் கன்னி இராசி என்பவர்கள் விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது, மகான்களை வழிபடவும்.

[2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.

நக்ஷத்திர வாரியாக சில குறிப்புகள்:

* நக்ஷத்திரங்கள்
பலன்கள் உத்திரம் 2, 3, 4ம் பாதங்கள் ஹஸ்தம் சித்திரை - 1, 2 ம் பாதங்கள்
இராசி கன்னி கன்னி கன்னி
இராசியாதிபதி புதன் புதன் புதன்
நக்ஷத்திர அதிபதி சூரியன் சந்த்ரன் செவ்வாய்
அதிதேவதைகள் பகன் ஆதித்யன் துவஷ்டா
கணம் மனுஷ்ய தேவகணம் இராக்ஷஸ் கணம்
நாடி பார்ஸுவ - வலது பார்ஸுவ - வலது மத்ய
மிருகம் பசுமாடு எருமை பெண் புலி
பக்ஷி கழுகு பருந்து (கிளி) மரங்கொத்தி
விருக்ஷம் இலந்தை அத்தி வில்வம்
இரஜ்ஜு தொப்புள் ரஜ்ஜு தலை தொப்புள்
வேதை நக்ஷத்ரம் பூரட்டாதி ஸதயம் மிருகசீர்ஷம் அவிட்டம்
அதிர்ஷ்டம் தரும் எண்கள் 1, 3, 4, 5, 7, 9 1, 2, 3, 5, 7, 9 1, 3, 5, 7, 9
அதிர்ஷ்டம் தரும் திசைகள் கிழக்கு கிழக்கு, வடக்கு கிழக்கு
குறிப்பு:

அதிர்ஷ்டம் தரும் எண்களும், திசைகளும் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும். இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவானவையே.