வருஷத்தின் பெயர் | : | நந்தன வருஷம் |
மாதம் | : |
ஆனி மாஸம் 06ம் தியதி - ஜூன் 20 2012
|
அயணம் | : | உத்தராயணம் |
ரிது | : | க்ரீஷ்ம ரிது |
கிழமை | : | புதன்கிழமை |
திதி | : |
பிரதமை இரவு 10.06 வரை பின் துவிதியை
|
நக்ஷத்திரம் | : |
திருவாதிரை பின்னிரவு 2.48 வரை பின் புனர்பூசம்
|
யோகம் | : |
வ்ருத்தி 56.18
|
கரணம் | : |
கிம்ஸ்துகனம் 9.01 பின் பவ 40.27வரை
|
சூரிய உதயம் | : |
சூரிய உதயம் 05.55
|
சூரிய அஸ்தமனம் | : |
மாலை மணி 6.30
|
அஹசு | : |
நாழிகை 31.35
|
லக்ன இருப்பு | : |
மிதுனம் 1.46
|
இராகு காலம் | : |
மதியம் 11.55 முதல் 1.25 வரை
|
எமகண்டம் | : |
காலை 7.25 முதல் 8.55 வரை
|
சூலம் | : |
வடக்கு - வடகிழக்கு பரிகாரம்: பால்
|
o | o | கேது குரு சுக்(வ) |
சூர் சந் புதன் |
o |
இன்றைய கிரஹநிலை
|
o | |
o | செவ் | ||
o | ராகு | o | சனி(வ) |
-------------------------------------------------
----------------------------------------
நவக்ரஹ பாதசார விவராதிகள்
க்ருஹம் | நக்ஷத்ரம் | பாதம் |
சூரியன் | மிருகசீர்ஷம் | 4 |
சந்திரன் | மிதுனம் | - |
செவ்வாய் | உத்திரம் | 1 |
புதன் | திருவாதிரை | 4 |
குரு | கிருத்திகை | 2 |
சுக்ரன் | ரோகினி | 1 |
சனி | சித்திரை | 1 |
ராகு | அனுஷம் | 2 |
கேது | க்ருத்திகை | 4 |
முன்னோர்கள் வழிபாடு - மிக முக்கியம் (பழைய பதிவு புதுப் பொலிவுடன்)
முதலில் ஒன்றை தெளிவாக சொல்லி
விடுகிறேன். இங்கு சொல்லப்படும் கருத்துக்கள் அனைத்தும் எனது தனிப்பட்ட
கருத்துக்களே. இவையனைத்தும் ஆதாரபூர்வமாகவும் யதார்த்தமாகவும் ஆராய்ந்து
பார்த்துதான் சொல்லப்படுகிறது. யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்க ஜோதிடம் ஒன்றும்
கடைச்சரக்கல்ல. அது புனிதமானது.
எதற்காக நமது கலாசாராத்தில்
முன்னோர் வழிபாடு வந்ததென்றால் நான் இந்த பூமிக்கு வர முக்கிய காரணம்
அவர்கள்தான் அதனால்தான், நமது மதத்தில் முன்னோர் வழிபாடு. சரி விஷயத்திற்கு
வருவோம். என்றெல்லாம் வணங்க வேண்டும், யாரெல்லாம் வணங்க வேண்டும் என்பது
பற்றி பார்ப்போம்.
இதை நாம் கீழ்க்கண்டவாறு பிரிக்கலாம்.
[1] தாய் தந்தை
இருவரும் இருப்பவர்கள்
[2] தாய் அல்லது தந்தை
யாராவது ஒருவர் இல்லாதவர்கள்
[3] தாய் வழி தந்தை
வழி பாட்டி, தாத்தா இருப்பவர்கள் அல்லது இருவரில் ஒருவர் இருப்பவர்கள்
[4] தாய் தந்தை இருவருமே இல்லாதவர்கள் ஆனால் கல்யாணம்
ஆகாதவர்கள்
[5] தாய் தந்தை இருவருமே இல்லாதவர்கள் ஆனால் கல்யாணம் ஆனவர்கள்
யார் என்றாலும் இந்த ஐந்திற்குள் அடங்கி விடுவார்கள் என
நினைக்கிறேன்.
சரி தொடரலாம்..
தாய் தந்தை இருப்பவர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம் என
கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவர்களுக்கு பின் சொல்கிறேன்.
தாய் தந்தை இறந்தவர்களுக்கு மேற்கொண்டு
சில நடைமுறைகளை சொல்ல போகிறேன். அதை கவனமுடன் படிப்பதோடு மட்டுமில்லாமல், நடைமுறையிலும்
கொண்டு வருவது தங்களுடைய சந்ததிகளுக்கு நன்மை பயக்கும். முதலில் எத்துனை
பேருக்கு தமது தாய் தந்தையர் இறந்த தேதி, நேரம் தெரியும்.
தெரியவில்லையென்றால் தெரிந்து கொண்டு படிக்க ஆரம்பியுங்கள்.
தெரிந்தவர்கள் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நன்று. அவர்கள் இறந்த
தேதிக்குண்டான திதி தெரியுமா? (திதி தெரியாதவர்களுக்கு: தங்கள் முன்னோர்கள் இறந்த தேதி
கொடுத்தால் திதி கண்டுபிடித்து தரப்படும் - 1900 முதல் 2010 வரை - இலவச சேவை).
இப்போது தங்களுக்கு திதி
கிடைத்திருக்கும்.
முன்னோர்களை வழிபட
என்னென்ன முறைகள் உள்ளன?
அவர்கள் இறந்த திதி வருடா
வருடம் வரும், அன்று கட்டாயம் தர்ப்பணம் செய்ய வேண்டும். தர்ப்பணத்திற்கு
கட்டாயம் கறுப்பு எள்தான் பயன்படுத்த வேண்டும். கட்டாயம் கீழ்க்கண்ட
பெயர்களை சொல்லி செய்ய வேண்டும்.
தாய் வழி
|
தந்தை வழி
|
உங்கள் தாயாரின் தகப்பனார் - தாயார்
|
உங்கள் தகப்பனாரின் தகப்பனார் - தாயார்
|
உங்கள் தாயாரின் தாத்தா - பாட்டி
|
உங்கள் தகப்பனாரின் தாத்தா - பாட்டி
|
உங்கள் தாயாருடைய தகப்பனாரின் தாத்தா - பாட்டி
|
உங்கள் தகப்பானாருடைய தகப்பனாரின் தாத்தா - பாட்டி
|
மேற்கண்டவர்களுக்கு கட்டாயம்
தர்ப்பணம் செய்தல் வேண்டும். சில பிரிவினரில் தந்தை வழி மட்டும் செய்தால்
போதுமானது என கருதப்படுகிறது. மேலும் உங்கள் ரத்த சம்பந்தப்பட்ட உறவுகள்
இறந்திருந்தால் கட்டாயம் சேர்த்துக் கொள்ளலாம். உங்கள் தகப்பனாருடன் பிறந்தவர்கள்
இறந்திருந்து அவர்களுக்கு குழந்தைகள் இல்லாமல் இருந்தால்
கட்டாயம் சேர்த்துக் கொள்ளலாம். இனி கேள்வி பதில் வடிவில் சில் விஷயங்களை
பார்க்கலாம்.
கேள்வி: தர்ப்பணம் செய்யும் முறைகளை சொல்லுங்களேன்?
பதில்: முதலில் அவரவர்கள்
வீட்டில் இறந்தவர்களுக்கு உண்டான திதி கண்டுபிடித்திருப்பீர்கள்
என நினைக்கிறேன். அந்த திதி ஒவ்வொரு வருஷமும் வரும் போதும் தர்ப்பணம் கொடுக்க
வேண்டும். தாய் தந்தை இருவருமே இருப்பவர்களுக்கு தர்ப்பணம் செய்ய அதிகாரம்
கிடையாது. தாயோ தந்தையோ இல்லாதவர்கள், அல்லது இருவருமே
இல்லாதவர்கள் தர்ப்பணம் செய்யலாம். நேற்று கொடுத்த டேபிளை மீண்டும் கொடுக்கிறேன்.
தாயார் இல்லாவிட்டால்
தாயார் பெயர்
|
தந்தையார் இல்லாவிட்டால்
தந்தை பெயர்
|
உங்கள் தாயாரின்
தகப்பனார் - தாயார்
|
உங்கள் தகப்பனாரின்
தகப்பனார் - தாயார்
|
உங்கள் தாயாரின்
தாத்தா - பாட்டி
|
உங்கள் தகப்பனாரின்
தாத்தா - பாட்டி
|
உங்கள் தாயாருடைய தகப்பனாரின் தாத்தா - பாட்டி
|
உங்கள் தகப்பானாருடைய தகப்பனாரின் தாத்தா - பாட்டி
|
நல்லது. மேற்சொன்னதில்
சிலருக்கு 14 பெயர்களும் வரலாம். சிலருக்கு தெரியாமல் இருக்கலாம். தெரிந்து வைத்துக்
கொள்வது மிகவும் நன்மையைத் தரும். பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கிடைத்தாலும்
வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
கேள்வி: சிரார்த்தம், தர்ப்பணம் அன்று விரதம்
அனுஷ்டிக்கவேண்டிய முறைகள் என்னென்ன?
பதில்: முதலில் தர்ப்பணம்
செய்யும் நாள் அன்று காலை சாப்பிடக் கூடாது. மதியம் சாப்பிடலாம்.
கத்திரிக்காய், வாழைக்காய் கட்டாயம் இடம்
பெற்றிருக்க வேண்டும். வெங்காயம், பூண்டு, மாமிசம்
உண்ணுதல் கூடாது. மிளகு சேர்ப்பதும்
நன்மையைத் தரும். புரிகிறதா? பச்சரிசி
உண்ண வேண்டும். இரவு சாதம் சாப்பிடுதல் கூடாது. இட்லி, தோசை, சப்பாத்தி
சாப்பிடலாம். தர்ப்பணம் செய்யும் முதல் நாளும் விரதம் இருக்க
வேண்டும். கண்டிப்பாக மாமிசம் சாபிடக்கூடாது.
கேள்வி: தாய் தந்தையர் இருப்பவர்கள் எப்படி
வணங்கலாம்?
பதில்: தினமும் காக்கைக்கு சாதம் வைத்தும், முன்னோர்களை
தினமும் வணங்கியும் வரலாம். பிதுர் நாட்களில் விரதம் இருந்தும் வரலாம்.
கேள்வி: தர்ப்பணம்
செய்யும் முறைகள் - மந்திரம்:
பதில்: மந்திரம் வேண்டுவோர் - மெயில் செய்தால்
அனுப்பித் தரப்படும்.(தேவைப்படுவோருக்கு மட்டும்), தமிழ், சமஸ்கிருதம் இரண்டிலும் கிடைக்கும்.
ஒரு செட்டின் விலை - ரூபாய்.75 மட்டும்.
அமாவாசை தர்ப்பணத்திற்குரிய மந்திரம், 12 மாதத்திற்கு பவித்ரம், தெர்ப்பை, கூர்ச்சம், பூணூல், விசேஷமாக தயாரிக்கப்பட்ட இயற்கை விபூதி ஆகியவை அனுப்பி வைக்கப்படும்.
[என்னுடைய இமெயில் – ramjothidar@gmail.com]
கேள்வி:
என்றெல்லாம் தர்ப்பணம் செய்யவேண்டும்?
பதில்: ஒரு வருடத்தில் தாய் தந்தையர்
இறந்த திதிகளை தவிர என்றெல்லாம் தர்ப்பணம் செய்தல் வேண்டும் என்று
கீழ்க்கண்ட டேபிளில் கொடுத்திருக்கிறேன்.
ஒவ்வொரு தமிழ்
மாத பிறப்பன்றும்
|
-
|
12 நாட்கள்
|
ஒவ்வொரு மாத
அமாவாஸ்யை
|
-
|
12 நாட்கள்
|
மனு
|
-
|
14 நாட்கள்
|
யுகம்
|
-
|
4 நாட்கள்
|
வைதிருதி
|
-
|
12 நாட்கள்
|
வியாதீபாதம்
|
-
|
12 நாட்கள்
|
மஹாளயம்
|
-
|
16 நாட்கள்
|
அஷ்டகா
|
-
|
1 நாள்
|
அன்வஷ்டகா
|
-
|
1 நாள்
|
திஸ்ரோஷ்டகா
|
-
|
12 நாட்கள்
|
மொத்தம்
|
-
|
96 நாட்கள்
|
எங்கெங்கு தர்ப்பணம் செய்யலாம்?
அயோத்யா, மாயா, மதுரா, காசி, காஞ்சிபுரம், அவந்திகா,
பூரி போன்ற நகரங்களிலும், கங்கை, காவிரி, தாமிரபரணி போன்ற நீர்நிலைகளிலும் இதை
செய்யலாம்.
தாய் தந்தையர் இருப்பவர்கள் முன்னோர்களை எவ்வாறு
வணங்க வேண்டும்?
நாம் கொடுத்துள்ள தர்ப்பண நாட்களில் காலையில்
எழுந்து குளித்து முன்னோர்களின் போட்டோ முன் சாம்பிராணி புகை காமித்து சாதம்
வைத்து வணங்கி அந்த சாதத்தை காக்கைக்கு இட வேண்டும்.
1 comment:
மிக விளக்கமான பகிர்வு.இன்றைய அசசர உலகில் 96 தர்ப்பணங்கள் சாத்தியமா?
Post a Comment