Wednesday, June 7, 2017

முன்னோர்களை வழிபடுவதற்கான எளிய பரிகாரம்:

முன்னோர்களை வழிபடுவதற்கான எளிய பரிகாரம்:
நமது முதல் தெய்வம் முன்னோர்கள்தான். எனவே தினமும் அவர்களை வணங்கியபின் எதையும் ஆரம்பிப்பது நன்மையைத் தரும். 


வீட்டில் இருக்கும் இறந்து போன பெரியவர்கள் போட்டோவின் முன் தினமும் காலையில் குளித்து முடித்தவுடன் 1 டம்ளர் காய்ச்சிய பால் மற்றும் 1 டம்ளர் தண்ணீர் வைத்து வணங்க வேண்டும்.



வணங்கிய பின் பாலை வீட்டிலிருக்கும் அனைவரும் சாப்பிட்டு விடலாம். தண்ணீரை சாப்பிட வேண்டாம். தினமும் தண்ணீரை மாற்ற வேண்டும். பழைய தண்ணீரை ஏதேனும் மரத்திலோ அல்லது மொட்டை மாடியிலோ விட்டு விடலாம்.

அனுபவப் பூர்வமான இந்த பரிகாரம் எனது ஆதிகுரு பெருங்குளம் குப்பு ஜோஸ்யர் அவர்களால் 100 வருடத்திற்கு முன் சொல்லப்பட்டதாகும்.

குறிப்பு:
முன்னோர்கள் போட்டொ இல்லாதவர்கள் ஏதேனும் ஒரு கண்ணாடி வாங்கி அதில் முழுவதுமாக சந்தணம் பூசி பயன்படுத்தலாம். அதற்கு பால் - தண்ணீர் படைக்கவும்.

No comments: