Tuesday, June 13, 2017

ஊரின் வாஸ்து - தொகுப்பு பனிரெண்டு

ஊரின் வாஸ்து - தொகுப்பு பனிரெண்டு

வேண்டிய பலன்கள் உடனே நடைபெற நமது முன்னோர்கள் சில பரிகார முறைகளை ஊருக்கு வகுத்து வைத்திருந்தார்கள்.
ஊரில் எந்த அறுவடை (நெல், எள், கடலை, மிளகாய், உளுந்து, கோதுமை, காய்கறிகள் etc) நடந்தாலும் முதலில் எட்டு திசையில் இருக்கும் காவல் தெய்வங்களுக்கும் - ஊரின் பிரதான கோவிலுக்கும் படையல் படைப்பார்கள்.

இதே போன்று குடிமக்கள் கோவில்களிலும் தாங்கள் கொண்டு வந்திருக்கும் அறுவடை செய்த பொருட்களை படையல் படைப்பார்கள். ஊரில் ஏதேனும் பிரச்சனை என்றால் ஈசான்ய மூலை - எம மூலையில் இருக்கும் தெய்வங்களுக்கு காவு கொடுப்பார்கள்.

குறிப்பு: வீட்டில் அசைவம் சாப்பிடுபவர்கள் எக்காரணம் கொண்டு அக்னி மூலையிலோ அல்லது குபேர மூலையிலோ (South East or North) அசைவ பொருட்களை வைக்கக் கூடாது.

அக்னி மூலையில் இருக்கும் தேவதைக்கு தீ சம்பந்தமான வேண்டுதல்கள் இருக்கும். கன்னி மூலையில் இருக்கும் தேவதைக்கும் - ஈசான்ய திக்கில் இருக்கும் தேவதைக்கும் தீபம் சம்பந்தமான வழிபாடு இருக்கும்.

குறிப்பு:
இன்றைக்கும் வீட்டில் ஏதேனும் பூஜை நடந்தால் பூஜை நடக்கும் அறையில் கன்னி மூலையில் விளக்கு - நிறை நாழி அரிசி - சாணிப் பிள்ளையார் வைத்து வழிபடுகிறோம். பின்னாளில் சாணிப் பிள்ளையார் மஞ்சள் பிள்ளையாராகி - மஞ்சள் பிள்ளையார் கல் பிள்ளையாராகி - கல் பிள்ளையார் பிளாஸ்டிக் விநாயகராகி விட்டது.

வருண மூலையில் இருக்கும் தேவதைக்கு புஷ்பம் ப்ரியமாக இருக்கும். எனவே புஷ்பத்தை வைத்து வேண்டுதல் செய்வார்கள். வாயு மூலையில் இருக்கும் தேவதைக்கு வாத்தியங்கள் முழங்க படையல் படைப்பார்கள். அதிலும் காற்றினால் இசைக்கப்படும் வாத்தியங்கள் என சொல்லலாம்.




குறிப்பு:
நமது வீட்டில் யாரேனும் இசைப் பயிற்சி மேற்கொண்டிருந்தால் அதிலும் காற்றுக் கருவிகள் பயிற்சி செய்து கொண்டிருந்தால் வீட்டின் வாயு மூலையில் (North West corner) தினமும் இரவு வைத்து விட்டு காலையில் எடுத்து பயிற்சி செய்தால் சீக்கிரமே கற்றுக் கொள்ள முடியும்.

தொடரும்....


பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் - +91 7845119542
www.kuppuastro.com
ramjothidar@gmail.com

No comments: