சுபகாரிய நிமித்தம்:
ஒரு ஜோதிடர் ப்ரஸ்ணம் பார்க்க ஆரம்பிக்கும் போது குழந்தையின் அழுகுரல் கேட்டால் கேட்க வந்த காரியம் நிச்சயம் நடக்கும்.
குலதெய்வத்திற்கான ப்ரஸ்ணம் பார்க்கும் போது கர்த்தா (யாருக்கு பார்க்க வேண்டுமோ அவர்) கொண்டு வந்த தாம்பூலத்தில் உள்ள வெற்றிலை நிமிர்ந்தில்லாமல் திரும்பி இருந்தால் குல தெய்வ அனுக்ரஹம் இல்லை என பொருள். அதே போன்று கொண்டு வந்திருக்கும் தாம்பூலத்தில் இருக்கும் வெற்றிலையில் ஐந்தாம் வெற்றிலை பின்னப்பட்டிருந்தாலும் இதே நிலைதான்.
ப்ரஸ்ணம் பார்க்கும் போது ஜோதிடரோ அல்லது கர்த்தாவோ நடுவில் எழுந்து செல்லக் கூடாது. ஒரு முறை உட்கார்ந்து விட்டால் ஜோதிட பலன்கள் முழுமை பெற்ற பின்னரே எழுந்திருக்க வேண்டும்.
தொடரும்.....
No comments:
Post a Comment