Wednesday, May 31, 2017

ஊரின் வாஸ்து - தொகுப்பு ஏழு

ஊரின் வாஸ்து - தொகுப்பு ஏழு
ஊரில் ஏதேனும் விழாக்காலங்கள் என்று வரும் போது அந்த ஊரில் எந்த தானியம் அதிகமாக விளைகிறதோ அதையே பிரசாதமாக ஊரின் பிரதான தேவதைக்கு நைவேத்யம் செய்வார்கள். எட்டு திசைகளிலும் இருக்கும் காவல் தெய்வங்களுக்கு பலி கொடுப்பார்கள். அதிலும் முக்கியமாக ஈசான்யம் மற்றும் கன்னி மூலையில் இருக்கும் தெய்வங்களுக்கு கட்டாயமான முறையில் பலி உண்டு.




ஊரின் தண்ணீர் பாசனத்திற்கு ஈசான்ய மூலையில் உறுதியாக நீர் ஆதாரத்தை ஏற்படுத்தி இருப்பார்கள். அந்த நீராதாரம் அந்த ஊருக்கு மட்டுமன்றி அந்த ஊரின் அக்கம் பக்கத்து சிற்றூர்களுக்கும் கிடைக்குமாறு வழிவகை செய்வார்கள். சிற்றூர்களில் இருக்கும் மக்கள் தாங்கள் தெரிவிக்கும் நன்றியாக பிரதான ஊரின் கோவிலில் நடைபெறும் உற்சவத்தின் போது கலந்து கொள்வார்கள். பிரதான ஊரின் ஒவ்வொரு திசையிலும் அதிகபட்சமாக 6 ஊர்கள் வரை ஸ்தாபனம் செய்தார்கள். அதே போன்று பிரதான ஊரின் கொடி மரம் எட்டு திசையிலும் ஸ்தாபனம் செய்யப்பட்ட ஊர்களை வியாபித்துக் கொள்ளும்.

சிற்றூர்களில் உருவாக்கப்படும் சிறு கோவில்கள் - அது குடி மக்கள் கோவிலாக இருந்தாலும் சரி, ஊர்க் கோவிலாக இருந்தாலும் சரி, அனைத்து கோவில்களும் பிரதான ஊரின் கொடி மர தேவதைக்கு அடங்க வேண்டும்.

குறிப்பு:
குடி மக்கள் கோவில் என்பது ஒவ்வொரு சாதி குழுவிற்கும் அவர்களாகவே அமைத்துக் கொள்ளும் கோவில். ஊர்க் கோவில் என்பது அந்த ஊரிலுள்ள அனைத்து சாதியினருக்கும் பொதுவான கோவில்.

No comments: