Tuesday, September 16, 2014



புரட்டாசி மாத ஜோதிட - ஆன்மீகக் குறிப்புகள் 
பெரிய பதிவு




சூர்யன்
ஆங்கில தேதி
தமிழ் தேதி
ம. நி.
நஷத்ரம்
17/9
புரட்டாசி 1
மா. 4.26
உத்தரம் 2
20/9
4
இ. 2.28
உத்தரம் 3
24/9
8
ப. 12.08
உத்தரம் 4
27/9
11
இ. 9.46
ஹஸ்தம் 1
1/10
15
கா. 7.23
ஹஸ்தம் 2
4/10
18
மா. 4.28
ஹஸ்தம் 3
7/10
21
. 1.33
ஹஸ்தம் 4
11/10
25
. 10.36
சித்திரை 1
14/10
28
. 7.09
சித்திரை 2
17/10
31
மறு. கா. 3.41
சித்திரை 3

சந்திரன்
ஆங்கில தேதி
தமிழ் தேதி
ம. நி.
ராசி
18/9
புரட்டாசி 2
இ. 12.23
கடகம்
21/9
5
ப. 11.53
சிம்ஹம்
23/9
7
இ. 11.21
கன்னி
26/9
10
கா. 9.13
துலாம்
28/9
12
மா. 4.39
விருச்சிகம்
30/9
14
இ. 9.47
தனுசு
2/10
16
. 1.09
மகரம்
4/10
18
மறு. கா. 3.37
கும்பம்
6/10
20
மறு. கா. 6.03
மீனம்
9/10
23
கா. 9.21
மேஷம்

செவ்வாய்
ஆங்கில தேதி
தமிழ் தேதி
ம. நி.
நஷத்ரம்
20/9
புரட்டாசி 4
இ. 2.45
அனுஷம் 4
25/9
9
ப. 1.53
கேட்டை 1
29/9
13
இ. 1.02
கேட்டை 2
4/10
18
. 12.10
கேட்டை 3
8/10
22
. 12.14
கேட்டை 4
13/10
27
. 2.58
மூலம் 1
17/10
31
மறு. கா. 5.42
மூலம் 2

புதன்
ஆங்கில தேதி
தமிழ் தேதி
ம. நி.
நஷத்ரம்
24/9
புரட்டாசி 8
மா. 4.00
ஹஸ்தம் 4 (வ)
29/9
13
மா. 5.02
ஹஸ்தம் 3 (வ)
3/10
17
கா. 6.11
ஹஸ்தம் 2 (வ)
7/10
21
. 11.09
ஹஸ்தம் 1 (வ.நி)
16/10
30
. 11.01
ஹஸ்தம் 2
17/10
31
கா. 7.34
ஹஸ்தம் 2

குரு
ஆங்கில தேதி
தமிழ் தேதி
ம. நி.
நஷத்ரம்
2/10
புரட்டாசி 16
. 12.43
ஆயில்யம் 3

சுக்ரன்
ஆங்கில தேதி
தமிழ் தேதி
ம. நி.
நஷத்ரம்
18/9
புரட்டாசி 2
கா. 6.44
பூரம் 3
20/9
4
இ. 12.11
பூரம் 4
23/9
7
மா. 5.39
உத்தரம் 1
26/9
10
கா. 10.18
உத்தரம் 2
28/9
12
இ. 2.25
உத்தரம் 3
1/10
15
மா. 6.31
உத்தரம் 4
4/10
18
கா. 10.38
ஹஸ்தம் 1
6/10
20
. 2.44
ஹஸ்தம் 2
9/10
23
மா. 6.50
ஹஸ்தம் 3
12/10
26
கா. 10.57
ஹஸ்தம் 4
14/10
28
மறு. கா. 3.04
சித்திரை 1
17/10
31
. 7.11
சித்திரை 2




சனி
ஆங்கில தேதி
தமிழ் தேதி
ம. நி.
நஷத்ரம்
15/10
புரட்டாசி 29
மா.6.08
விஷாகம் 2

புரட்டாசி மாத விசேஷங்கள்


ஆங்கிலம்
தமிழ்
குறிப்புகள்
17/9/2014
புரட்டாசி 1
மஹா வ்யதீ பாதம்
199/2014
3
க்ருஷ்ணபக்க்ஷ ஏகாதசி
20/9/2014
4
புரட்டாசி முதல் சனிக்கிழமை, க்ருஷ்ணபக்‌ஷ வைஷ்ணவ ஏகாதசி
21/9/2014
5
க்ருஷ்ணபக்‌ஷ மஹாப்ரதோஷம்
22/9/2014
6
மாஸ சிவராத்திரி, த்வாபரயுகாதி, சஸ்த்ரஹத மஹாளயம்
23/9/2014
7
ஸர்வ மஹாளய அமாவாஸ்யை
24/9/2014
8
மஹாளயபக்‌ஷ முடிவு, நவராத்திரி ஆரம்பம்
25/9/2014
9
சந்த்ர தர்சனம்
27/9/2014
11
சுக்லபக்‌ஷ சதுர்த்தி, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை
28/9/2014
12
சதுர்த்தி வ்ரதம்
29/9/2014
13
சுக்லபக்‌ஷ ஷஸ்டி
30/9/2014
14
ஷஷ்டி வ்ரதம்
2/10/2014
16
ஸரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை
3/10/2014
17
விஜயதசமி
4/10/2014
18
புரட்டசி மூன்றாவது சனிக்கிழமை, ச்ரவண வ்ரதம், சுக்லபக்‌ஷ ஸர்வ ஏகாதசி, சுக்ர அஸ்தமனம்
6/10/2014
20
சுக்லபக்‌ஷ (ஸோம) மஹாப்ரதோஷம்
7/10/2014
21
பௌர்ணமி, நடராஜர் அபிஷேகம்
8/10/2014
22
சந்த்ர க்ரஹணம்
11/10/2014
25
க்ருத்திகை, க்ருஷ்ணபக்‌ஷ (ஸங்கடஹர) சதுர்த்தி, புரட்டாசி நான்காவது சனிக்கிழமை
12/10/2014
26
சதுர்த்தி வ்ரதம்
13/10/2014
27
க்ருஷ்ணபக்‌ஷ ஷஷ்டி
14/10/2014
28
ஷஷ்டி வ்ரதம்



 புரட்டாசி மாத சனிக்கிழமை பரிகாரம்:

ஆங்கிலம்
தமிழ்
கிழமை
பரிகாரம்
20/9/2014
4
புரட்டாசி முதல் சனிக்கிழமை
இன்று பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபடுவது நன்மையைத் தரும்.
27/9/2014
11
புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை
இன்று பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வழிபட்டால் உத்தமம்.
4/10/2014
18
புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை
இன்று திருவோண நக்ஷத்ரமும் இருப்பதால் பெருமாளுக்கு ததியாராதனை செய்வது விஷேஷம் ஆகும்.
11/10/2014
25
புரட்டாசி நான்காவது சனிக்கிழமை
இன்று பெருமாள் கோவிலில் புறப்பாடு செய்தால் குடும்பத்திற்கு மிகுந்த நன்மை வந்து சேரும்.


புரட்டாசி மாத நடராஜர் அபிஷேகம்:

ஆங்கிலம்
தமிழ்
கிழமை
பரிகாரம்
7/10/2014
21
செவ்வாய்
இன்று நடராஜர் அபிஷேகம். சுவாமிக்கு 16 விதமான அபிஷேகங்களை செய்தால் முன்வினை தீரும்.




 புரட்டாசி மாத கிரக நிலை:



கேது
0
0
சந்
0

ராசி பீடம்
குரு
0
சுக்
0
செவ்
சனி
சூர்
புதன் (வ)
ராகு

கிரக மாற்றம்:
18/9 – இ. மணி: 12.23 கடக – சந்
21/9 – ப. மணி: 11.53 சிம்ம – சந்
23/9 – இ. மணி: 11.21 கன்னி – சந்
26/9 – கா. மணி: 9.13 துலா – சந்
26/9 – கா. மணி: 10.18 கன்னி – சுக்
28/9 – மா. மணி: 4.39 விருச் – சந்
30/9 – இ. மணி: 9.47 தனுசு -  சந்
2/10 – இ. மணி: 1.09 மகர – சந்
4/10 – இ. அதிகாலை: 3.37 கும்ப – சந்
7/10 – கா. மணி: 6.03 மீனம் – சந்
9/10 – கா. மணி: 9.21 மேஷ – சந்
11/10 – ப. மணி: 2.23 ரிஷப – சந்
13/10 – இ. மணி: 9.43 மிதுன – சந்
13/10 – ப. மணி: 2.58 தனுசு – செவ்
16/10 – கா மணி: 7.27 கடக - சந்



 
27 நக்ஷத்ரங்களுக்குண்டான பொது ராசி பலன்கள்


மேஷம்

அசுபதி:
இந்த மாதம் கெட்டகனவுகள் தோன்றும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களை விட்டு விலகி செல்லலாம். மனதில் நிலையான எண்ணம் இருக்காது. பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

பரணி:
இந்த மாதம் தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில்  ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

கார்த்திகை- 1:
இந்த மாதம் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வியில் அக்கறை காண்பிப்பீர்கள். பணதேவை பூர்த்தியாகும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.


பரிகாரம்: அம்மனை ஞாயிற்றுக்கிழமைகளில் எலுமிச்சையில் தீபம் ஏற்றி வணங்கி வர கஷ்டங்கள் தீரும். மனநிம்மதி உண்டாகும்.
அதிர்ஷ்ட ஹோரைகள்: வளர்பிறை: செவ்வாய், குரு; தேய்பிறை: செவ்வாய், புதன், சுக்கிரன்;


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ரிஷபம்


கார்த்திகை - 2, 3, 4:
இந்த மாதம் எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன்  பகை ஏற்படலாம். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும்.

ரோகினி:
தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் டென்ஷனுடன் காணப்படுவார்கள்.


மிருகசீர்ஷம் - 1, 2:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள்  உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே  கருத்து வேற்றுமை  ஏற்படும். சிற்றின்ப சுகம் குறையும். பிள்ளைகளுடன்  அனுசரித்துச் செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போதும் பயணங்களின்போதும் கூடுதல் கவனம் தேவை.


பரிகாரம்:  முருகன் கோவிலில் உள்ள வள்ளியம்மையை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.
அதிர்ஷ்ட ஹோரைகள்: வளர்பிறை: சந்திரன், சுக்கிரன், குரு; தேய்பிறை: சந்திரன், சுக்கிரன்


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மிதுனம்


மிருகசீர்ஷம் - 3, 4:
இந்த மாதம் எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மன உறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். பணவரத்து மன மகிழ்ச்சியைத் தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு  ஏற்படும்.


திருவாதிரை:
இந்த மாதம் உங்கள் வாக்கு வன்மையால் நன்மை ஏற்படும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும்.


புனர்பூசம் - 1, 2, 3:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு, வீண் அலைச்சல் குறையும். எதிர்பார்த்த அதிகாரம் அந்தஸ்து கிடைக்கும். சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.


பரிகாரம்: ஸ்ரீநரசிம்மருக்கு தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த காரிய அனுகூலம் கிடைக்கும்.  உத்தியோகம் தொடர்பான பிரச்சனை தீரும்.
அதிர்ஷ்ட ஹோரைகள்: வளர்பிறை: புதன், சுக்கிரன், குரு; தேய்பிறை: புதன், சுக்கிரன்



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~



கடகம்

புனர்பூசம் - 4:
இந்த மாதம் பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும்.  அதே நேரத்தில் அவர்களால் செலவும் வரும். உங்களது முயற்சிகளுக்கு இருந்த முட்டுகட்டைகள் அகலும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கையில் காசு புரளும்.


பூசம்:
இந்த மாதம் குடும்பத்தில் தேவையற்ற வீண் வாக்குவாதம் ஏற்படும். மற்றவர்களிடம்  அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது  காரிய வெற்றிக்கு உதவும். வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம். எதிலும் திருப்தி இல்லாத மனநிலை இருக்கும்.


ஆயில்யம்:
இந்த மாதம் பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். கடித போக்குவரத்து நன்மை தரும். தொழில் வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டிவரும். புதுவியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் சுமையாக வரும்.


பரிகாரம்: அருகிலிருக்கும் அம்மனுக்கு எலுமிச்சை மாலை சாத்தி இலுப்பை எண்ணை தீபம் ஏற்றி வணங்க போட்டிகள் விலகும். மனோ தைரியம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட ஹோரைகள்: வளர்பிறை: சூரியன், சந்திரன், குரு; தேய்பிறை: சூரியன், சந்திரன்


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~




சிம்மம்

மகம்:
இந்த மாதம் உத்தியோகஸ்தர்களுக்கு நிதானம் தேவை. சக ஊழியர்களுடன்  சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள். குடும்ப விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். கணவன், மனைவிக் கிடையே  மனம்விட்டு பேசுவது கருத்து வேற்றுமை  ஏற்படாமல் தடுக்கும்.


பூரம்:
இந்த மாதம் பிள்ளைகளிடம் கோபமாக பேசாமல் அன்பாக பேசுவது நல்லது. வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை.



உத்திரம் - 1:
இந்த மாதம் பணவரத்து தடைபடும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். கவனம் தேவை.  கெட்டகனவுகள் வரும். அதிக கோபத்தால் வீண்பகை உண்டாகலாம்.  அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது.



பரிகாரம்:  சிவன் கோவிலில் உள்ள நடராஜர் பெருமானை வணங்கி வர எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.
அதிர்ஷ்ட ஹோரைகள்: வளர்பிறை: சூரியன், செவ்வாய்; தேய்பிறை: சூரியன், குரு



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


கன்னி

உத்திரம் - 2, 3, 4:
இந்த மாதம் வீண் செலவுகள் ஏற்படும். வாகனம் மூலம் செலவு உண்டாகலாம். பயணசுகம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூடுதல் செலவை சந்திக்க நேரிடும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும்.



ஹஸ்தம்:
இந்த மாதம் தேவையான பணஉதவி கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.


சித்திரை - 1, 2:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் மனஅமைதி கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்கள் எதிர்காலம் பற்றிய சிந்தனை எழும்.


பரிகாரம்:  துளிசியை பெருமாளுக்கு அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்க மனகஷ்டம் நீங்கும். எல்லா நன்மை களும் உண்டாகும்.
அதிர்ஷ்ட ஹோரைகள்: வளர்பிறை: சந்திரன், புதன், சுக்கிரன்; தேய்பிறை: சூர்யன், புதன், சுக்கிரன்


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


துலாம்


சித்திரை - 3, 4:
இந்த மாதம் கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுகள் கூடும். பொறுப்புகள் அதிகரிக்கும்.


சுவாதி:
இந்த மாதம் வீட்டைவிட்டு வெளியே தங்க நேரிடும். தேவையில்லாத வீண் செலவுகள் உண்டாகும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்களுடன் வீண்பகை உண்டாகலாம். கவனமாக பேசுவது நல்லது. காய்ச்சல், சிரங்கு போன்ற நோய்கள் உண்டாகலாம். 


விசாகம் - 1, 2, 3:
இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைக்கும். புதிய ஆர்டர்கள் வரும்.


பரிகாரம்:  பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வணங்கி வர எல்லா நலனும் உண்டாகும். எதிர்ப்புகள் நீங்கும்.
அதிர்ஷ்ட ஹோரைகள்: வளர்பிறை: சந்திரன், செவ்வாய், சுக்கிரன்; தேய்பிறை: செவ்வாய், சுக்கிரன்



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


விருச்சிகம்

விசாகம் - 4:
இந்த மாதம் புதிய வேலை தேடுபவர்களுக்கு தாமதமானாலும் நல்லவேலை கிடைக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் மனதில் இறுக்கம் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.


அனுஷம்:
இந்த மாதம் குடும்பத்தில் வீண் வாக்குவாதம் ஏற்படும். பிள்ளைகள் மூலம் செலவு இருக்கும்.  அவர்களது  முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பீர்கள்.  பயணங்கள் செல்ல நேரலாம். உறவினர்களிடம் வீண்வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும்.


கேட்டை:
இந்த மாதம் கஷ்டம் நீங்கி சுகம் உண்டாகும்.  பணவரத்து கூடும்.  எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும்  சாமர்த்தியம் உண்டாகும். வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். 




பரிகாரம்: முருகனுக்கு அரளி மாலை கொடுத்து தீபம் ஏற்றி வணங்கி வர நோய் நீங்கும். மனகுழப்பம் தீரும்.
அதிர்ஷ்ட ஹோரைகள்: வளர்பிறை: செவ்வாய், குரு; தேய்பிறை: செவ்வாய், குரு


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


தனுசு

மூலம்:
இந்த மாதம் வேளை தவறி உண்ண வேண்டி இருக்கும். வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம்  எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும்.



பூராடம்:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன்முகம்  கொடுத்து பேசுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.


உத்திராடம் - 1:
இந்த மாதம் அக்கம்பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது. சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. பணம், காசுகள் சேரும். மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை  செய்து முடித்து பாராட்டு கிடைக்கப்பெறுவீர்கள்.




பரிகாரம்: மஞ்சள் வஸ்திரத்தை குருவுக்கு சாற்றி நெய் தீபம் ஏற்றி வணங்கி 11 முறை வலம் வரவும்.
அதிர்ஷ்ட ஹோரைகள்: வளர்பிறை: திங்கள், செவ்வாய், குரு; தேய்பிறை: ஞாயிறு, செவ்வாய், குரு

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


மகரம்

உத்திராடம் - 2, 3, 4:
இந்த மாதம் எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.  விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.



திருவோணம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும், எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன் காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம்.



அவிட்டம் - 1, 2:
இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல்கள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பணவரத்து திருப்தி தரும்.


பரிகாரம்: சனிக்கிழமைகளில் ஆஞ்சனேயரை  வெண்ணெய் சாற்றி வணங்கி வர துன்பமும், தொல்லையும்  நீங்கும். மனோதைரியம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட ஹோரைகள்: வளர்பிறை: சந்திரன், புதன், சுக்ரன்; தேய்பிறை: சந்திரன், சுக்ரன்


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


கும்பம்

அவிட்டம் - 3, 4:
இந்த மாதம் மனஉறுதி அதிகரிக்கும். சொத்துக்களை அடைவதில் தடைகள் ஏற்படும். உயர்நிலையில் உள்ளவர்களுடன் மனவருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை வரும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் கவனம் தேவை. வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம்.



ஸதயம்:
இந்த மாதம் எதிர்பார்த்த பண வரவு இருக்கும். வீட்டிற்கு தேவையான வசதிகள்  செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு உண்டாகும். பழைய சிக்கல்கள் தீர்வதில்  தாமதம் ஏற்படும்.


பூரட்டாதி - 1, 2, 3:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது. திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் எதிர்பாராத விருந்தினர் வருகையால் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம்.



பரிகாரம்: சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வணங்க உடல் ஆரோக்கியம் பெறும். வேலை பளு குறையும். பணப் பற்றாக்குறை குறையும்.
அதிர்ஷ்ட ஹோரைகள்: வளர்பிறை: சந்திரன், குரு, சுக்ரன்; தேய்பிறை: சந்திரன், குரு



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


மீனம்

பூரட்டாதி - 4:
இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். அவர்களுக்காக பாடுபடுவீர்கள்.  திட்டமிட்டு செய்தாலும் காரியங்களில் தடை ஏற்படும். எதிர்பாராத செலவு உண்டாகும்.


உத்திரட்டாதி:
இந்த மாதம் சொத்து மனை சம்பந்தமான காரியங்களில் தடை, தாமதம் ஏற்படலாம். உஷ்ணம் சம்பந்தமான நோய் ஏற்படும்.  வீண்பயம் ஏற்படும். ஏற்கனவே செய்த காரியங்களுக்கான பலனை அடைய வேண்டி இருக்கும். சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம்.



ரேவதி:
இந்த மாதம் வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம்  எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரலாம். சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள். எதிர்பாலினத்தாருடன் பழகும் போது கவனம் தேவை.




பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை நெய் தீபம் ஏற்றி வணங்க கடன்சுமை குறையும். தொழில் முன்னேற்றம் உண்டாகும். 
அதிர்ஷ்ட ஹோரைகள்: வளர்பிறை: செவ்வாய், புதன், குரு; தேய்பிறை: செவ்வாய், புதன், குரு


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~







புரட்டாசி மாத எண்ணியல் பலன்கள்:

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு: நாயகர் சூரியன்:
எந்த ஒரு வேலையையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்து வெற்றி பெறும் ஒன்றாம் எண் வாசகர்களே இந்த மாதம்  மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய் வரலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களை யோசித்து செய்வது நல்ல பலன் தரும். வாடிக்கையாளர்கள் பற்றிய வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணவரத்து திருப்தி தரும். ஆனால் எதிர்பார்த்த அளவு இருப்பது கடினம். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். புத்தி சாதூர்யத்தால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். பெண்களுக்கு முயற்சிகள் சாதகமான பலன்தரும். பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். வீண்கவலையை தவிர்ப்பது நல்லது.

சிறப்பான கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி
அனுகூலமான திசைகள்: தெற்கு, கிழக்கு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9
பரிகாரம்: சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்து வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கி மன அமைதி உண்டாகும்.


------------------------------------------------------------------------------
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு: நாயகர் சந்திரன்:
எந்த ஒரு காரியத்தையும் நிதானமாக செய்து முடிக்கும் இரண்டாம் எண் வாசகர்களே உங்களது கருத்துக்கு மற்றவர்களிடம் வரவேற்பு இருக்கும். பணவரத்து இருக்கும். தடைபட்ட காரியங்களை மீண்டும் செய்து முடிக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மனதில் புதிய உற்சாகமும், தைரியமும் உண்டாகும். தொழில் வியபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் சிந்தனை செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனகசப்பு மாறும். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். புதிய நண்பர்களின் சேர்க்கை அவரால் உதவி உண்டாகும். பெண்களுக்கு தடைபட்ட காரியங்களை செய்து முடிக்க மீண்டும் முயற்சிகள்  மேற்கொள்வீர்கள். உற்சாகம் உண்டாகும். மாணவர்களுக்கு: கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். கவலை நீங்கும்.


சிறப்பான கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி
அனுகூலமான திசைகள்: வடக்கு, வடமேற்கு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
பரிகாரம்: திங்கள்தோறும் லலிதாம்பாள் திரிசதி சொல்லி வழிபடவும்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு: நாயகர் குரு:
திட்டமிடுவதில் கெட்டிக்காரர்களான மூன்றாம் எண் வாசகர்களே  மிதுன ராசியினரே நீங்கள் எதிலும் சிக்காமல் நழுவுவதில் கெட்டிக்காரர். இந்த வாரம் கொடுத்த வாக்கை காப்பாற்றி அதன் மூலம் மதிப்பும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு திருப்தி தரும். சிக்கலான சில விஷயங்களை சாதூரியமாக பேசி முடித்து விடுவீர்கள். வீண் பயத்தை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் முன்பு இருந்ததை விட முன்னேற்றம் காண்பீர்கள்.  வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உத்தியோகஸ்தர்கள் தங்களது  சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும்  திறம்பட செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். தேவையற்ற வீண் பேச்சுக்களை  குறைப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி ஏற்படும். வாழ்க்கை துணையின் ஆதரவு உண்டு. பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடலாம். கோபத்தை தவிர்த்து பேசுவது நல்லது. பெண்களுக்கு சாதூரியமான பேச்சின் மூலம் சிக்கலான பிரச்சனைகளையும் தீர்த்து விடுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடலாம். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் அடைய பாடுபடுவீர்கள். கல்வி தொடர்பான பயணம் செல்ல நேரிடலாம்.

சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
அனுகூலமான திசைகள்: வடக்கு, மேற்கு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
பரிகாரம்: தினம்தோறும் குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:  - நாயகர் ராகு:
ஒரு காரியத்தை செய்யும் முன்பு அது சரியா தவறா என்று பல முறை மனதுக்குள் கேள்வி எழுப்பி பின்னர் ஒரு முடிவு எடுக்கும் நான்காம் எண் வாசகர்களே இந்த மாதம் சொத்து சார்ந்த விஷயங்களில் எல்லா வகையிலும் நல்ல பலன் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். வீண் பிரச்சனைகளில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான மனக்கவலை தோன்றி மறையும். ஆனால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆர்டர்கள் வாங்குவது தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிலும் நிதான மாக செயல்படுவதும் மற்றவர்களை அனுசரித்து போவதும் நல்லது. குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற நபர் மீண்டும் வந்து போவார்கள். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய நேரிடும். கோபத்தை குறைத்து இனிமையாக பேசுவதன் மூலம் குடும்பத்தில் அனுமதி உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். பெண்களுக்கு எந்த காரியத்தையும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது கவனம் தேவை. மாணவர்களுக்கு பாடங்களை மிகவும் நிதானமாக படித்து மனதில் பதிய வைத்துக்கொள்வது நல்லது. அடுத்தவர்களிடம் பழகும்போது கவனம் தேவை.


சிறப்பான கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
அனுகூலமான திசைகள்: வடக்கு, வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: ஞாயிறுதோறும் துர்க்கை அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி 7 முறை வலம் வரவும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:  நாயகர் புதன்:
அதிகார தோரணையுடன் காணப்படும் ஐந்தாம் எண் வாசகர்களே நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டீர்கள். உங்கள் வழி தனி வழி என்று செயல்படுவீர்கள். இந்த மாதம் மனதில் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். நல்லது எது கெட்டது எது என்று பிரித்து பார்த்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில திருப்பங்களால் காரிய வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரம் திருப்தி தரும். தொழிலில் முன்னேற்றம் காண வாய்ப்புகள் வந்து சேரும். நிதானமாக பேசுவதன் மூலம் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலர் கட்டளையிடுகின்ற பதவி கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் திடீர் செலவு ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அதன் மூலம் அவர்களின் நன்மதிப்பை பெறு வீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். வழக்குகளை தள்ளிப் போடுவதும் சமாதான முறையில் பேசி தீர்த்துக்கொள்வதும் நல்லது. பெண்களுக்கு தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் முயற்சி மேற்கொள்வது நல்லது. சக மாணவர்களுடன் நிதானமாக பேசி பழகுவது நன்மை தரும்.


சிறப்பான கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்
அனுகூலமான திசைகள்: வடக்கு, கிழக்கு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 5, 9
பரிகாரம்: புதன்கிழமைதோறும் ஐய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து அப்பம் நைவேத்யம் செய்து வழிபடவும்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:  நாயகர் சுக்கிரன்:
புத்தி கூர்மையுடன் செயல்பட்டு எந்த சிக்கலையும் தீர்க்கும் ஆறாம் எண் வாசகர்களே இந்த மாதம் எந்த ஒரு விஷயத்தையும் கவனமுடன் கையாள்வது நல்லது. முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து வெற்றி பெறுவீர்கள். தொழில் வியாபாரம் விறுவிறுப்படையும். கடந்த காலங்களில் இருந்த மந்த நிலை மாறும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் சொல்படி நடந்து கொள்வது நல்லது. பணவரத்து திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் கலகலப்பு இருக்கும். கூடவே மனதில் ஒருவித கவலையும் இருந்து வரும். வாழ்க்கை துணையுடன் எதையும் பேசி தீர ஆலோசித்து செய்வது நன்மை தரும். பிள்ளைகள் அன்பு செலுத்துவார்கள். ஆனால் அவர்களுக்காக செலவு செய்ய நேரிடும். பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தை யும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் சுறுசுறுப்பு காணப்படும். மற்றவர்களை விட கூடுதலாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும்.

சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி
அனுகூலமான திசைகள்: தெற்கு, மேற்கு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 6, 9
பரிகாரம்: வெள்ளிகிழமைதோறும் மஹாலக்ஷிமிக்கு குங்குமார்ச்சனை செய்யவும்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:  நாயகர் கேது:
அடுத்தவரை அனுசரித்து செல்வதில் கெட்டிக்காரர்களான ஏழாம் எண் வாசகர்களே இந்த மாதம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும். எதிர்பாராத சில சம்பவங்கள் நடக்கலாம். அதனால் உங்களுக்கு நன்மையும் உண்டாகலாம். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் எதிர்பார்த்ததை விட சற்று நிதானமாகவே நடக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்ற நிலை காண்பார்கள். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பு காணப்படும். வாழ்க்கை துணை உங்களை அனுசரித்து செல்வார். இதனால் மனதில் இருந்த கவலைகள் நீங்கும். உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் எதிர்காலம் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வழக்குகளில் நிதான போக்கு காணப்படும். பெண்களுக்கு எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் நன்மை உண்டாகும். மன குழப்பம் நீங்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சந்தேகங்கள் உண்டாகலாம். உடனுக்கு டன் அவற்றை கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.


சிறப்பான கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன்
அனுகூலமான திசைகள்: தெற்கு, கிழக்கு, தென்மேற்கு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 9
பரிகாரம்: வியாழக்கிழமைதோறும் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடவும்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


8, 17, 26  ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு: நாயகர் சனி:
எடுத்த காரியத்தை சோர்வடையாமல் தொடர்ந்து செய்து முடிக்கும் ஆற்றலுடைய எட்டா எண் வாசகர்களே இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடச் செய்யும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். எதிர்ப்புகள் விலகும். பயணம் மூலம் லாபம் கிடைக்க கூடும். புதிய நபர்கள் நட்பு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பேச்சின் இனிமை புத்திசாலித்தனம் இவற்றால் முன்னேற்றம் பெறுவார்கள். சிலருக்கு புதிய ஆர்டர்களும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பேச்சினால் மேல் அதிகாரிகளை கவர்ந்து விடுவார்கள். அதனால் எதிர்பார்த்த உதவியும் நன்மை யும் கிடைக்கும். ஆனால் பொருட்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் இருந்த இறுக்கம் நீங்கி மனம் மகிழ்ச்சியடையும் விதமாக சம்பவங்கள் நடக்கலாம். உறவினர் மூலம் தேவையான உதவியும் கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வழக்குகளை தள்ளிப்போடுவது நல்லது. பெண்களுக்கு எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் நன்மை உண்டாகும். ஆனால் குடும்ப விஷயங்களை கூறாமல் தவிர்ப்பது நல்லது.`
மாணவர்களுக்கு மற்றவர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடக்கும் முன்பு அது சரியா தவறா என்று யோசித்து பார்ப்பது நல்லது. பாடங்களை படிப்பதில் கவனம்தேவை.

சிறப்பான கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
அனுகூலமான திசைகள்: தெற்கு, தென்மேற்கு, மேற்கு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9
பரிகாரம்: சனிக்கிழமைதோறும்  ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாற்றி வழிபடவும்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு: நாயகர் செவ்வாய்:
அமைதியுடனும் சாந்தமாக பேசும் குணமும் உடைய ஒன்பதாம் எண் வாசகர்களே இந்த மாதம் எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். மனம் விரும்பியது போல செயல்படுவீர்கள். உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் சீராக இருக்கும். புதிய கிளைகள் தொடங்குவது போன்ற விரிவாக்க பணிகளை தள்ளி போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகள் டென்ஷனை கொடுப்பதாக இருக்கும். மேல் அதிகாரிகள் ஆதரவும் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படும். உறவினர் வருகை இருக்கும். குழந்தைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும். பெண்களுக்கு உங்களது செயல்களுக்கு இருந்த தடைகள் நீங்கும். பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. மாணவர்களுக்கு விரும்பியதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். புத்தகங்கள் கல்விக்கான உபகரணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது நல்லது.


சிறப்பான கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி
அனுகூலமான திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, கிழக்கு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9
பரிகாரம்: செவ்வாய்கிழமைதோறூம் வள்ளி தெய்வானையுடன் இருக்கும் முருகனுக்கு அபிஷேகம் செய்யவும்.



No comments: