Tuesday, November 23, 2010

பெயர் ராசிப்படி எப்படி நக்ஷத்திரம் கண்டுபிடிப்பது?

ஒருவர் என்னிடம் தொடர்பு கொண்டு "ஐயா என்னிடம் ஜாதகமே இல்லை. நான் எப்படி உங்கள் பலன்களை அறிந்து கொள்வது?" என்று என்னிடம் கேட்டார். இதே போல் பல பேருக்கு சந்தேகம் உள்ளது. அவர்களுக்காக இந்த குறிப்பு. உதாரணமாக இளங்கோ என்று ஒருவர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருடைய பெயரின் முதல் எழுத்தை எடுத்துக் கொள்வோம். நமது உதாரண பெயரில் "" என்பது முதல் எழுத்து. அதற்குண்டான நாம நக்ஷத்ரம் - கார்த்திகை 2ம் பாதம்.[பார்க்க திருநெல்வேலி வாக்கியப்பஞ்சாங்கம் - விரோதி வருஷம் - பக்கம் 40]. எனவே இளங்கோ ரிஷப ராசியில் வருவார். எனவே இளங்கோ ரிஷப ராசி பலன்களை பார்க்க வேண்டும். இன்னொரு உதாரணம்: பிரபாகர் என்று ஒருவர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம், அவருடைய பெயரின் முதல் எழுத்து "பி" , அவரது நக்ஷத்ரம் உத்திரம் 4ம் பாதத்தில் வரும். எனவே பிரபாகர் கன்னி இராசி. அவர் கன்னி இராசிகளுக்குடைய பலன்களை பார்க்க வேண்டும்.

[குறிப்பு: மேற்கண்ட முறையில் பலன் பார்ப்பது, பொதுவான பலன்களைத் தருமே தவிர 100% பலன்களைத் தராது]

இருந்தாலும் இந்த முறையில் யார் யாருக்கு எந்தெந்த நக்ஷத்ரம் வரும் என்ற டேபிளை நாளைக்கு நான் கொடுக்கிறேன்,

No comments: