Saturday, October 12, 2013

நவராத்திரி வழிபாட்டு முறை ஒன்பதாம் நாள் - தொடர் 10

நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்

அம்பாள்    ஸ்ரீபிராஹ்மி 

உருவ அமைப்பு    அன்ன வாகனம், கையில் ஏடு, ஜெபமாலை, கமண்டலம் கொண்டவள். நான்கு முகம் உடையவள்.


குணம்    சௌம்யம்


சிறப்பு    ஸ்ரீபிரும்மாவின் அம்சம்


நெய்வேத்யம்    சர்க்கரைப் பொங்கல், சுண்டல், பால் பாயாசம்


பூஜை செய்ய உகந்த நேரம்    காலை 9 - 10.30, மாலை 6 – 7.30


மலர்    மல்லிகை, செம்பருத்தி, கேந்தி


கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள்    11


பாட வேண்டிய ராகம்    கானடா, குறிஞ்சி


யார் யாரெல்லாம் வணங்க  வேண்டும்:


வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்    ரோகினி, ஹஸ்தம், திருவோணம்


திசை புத்தி நடப்பவர்கள்    சூரியன் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்


ஜாதக அமைப்பு உடையவர்கள்    லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் சூரியன் அல்லது ராகு இருப்பவர்கள்


விசேஷம்        வித்யாதாரிணி -  கல்வி, வித்தைகளுக்கு அதிபதி

எண் கணிதப் படி யாரெல்லாம் வணங்க வேண்டும்: பெயர் எண் 1 உடையவர்கள்


சொல்ல வேண்டிய பாடல்:

[1]    தனந்தரும்; கல்வி தரும்; ஒருநாளும் தளர்வறியா
        மனந்தரும்; தெய்வ வடிவுந்தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா
        இனந்தரும்; நல்லன எல்லாம் தரும்; அன்பர் என்பவர்க்கே
         கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.
  


[2] மூல மந்திரம்:  ஓம் - சிம் - பிராஹ்மயே - நம :


[3] காயத்ரி:  ஓம் தேவி பிராம்யை வித்மஹே மஹா சக்த்யைச தீமஹி தந்தோ தேவி பிரசோதயாத்!

ஐப்பசி மாத ஆன்மீக ஜோதிட குறிப்புகள்

ஐப்பசி மாத ஆன்மீக ஜோதிட குறிப்புகள்

Friday, October 11, 2013

முருகன் செய்திகள் - பாகம் 01

நம் அனைவருக்கும் தெரிந்தது ஈரோடு சென்னிமலை அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவில்.






அத்தலத்தின் சிறப்புகள்:
  • இத்திருக்கோவில் சுமார் 3000 வருடங்கள் பழமை வாய்ந்தது. 
  •  சித்தர்களுள் ஒருவரான பின்நாக்கு சித்தர் வாழ்ந்து முக்திய்டைந்த திருத்தலம்.
  •  ஸ்ரீஅருணகிரிநாதரின் திருப்புகழ் பாடப்பெற்று முருகப்பெருமானால் படிக்காசு வழங்கப் பெற்ற திருத்தலம்.
  •  ஸ்ரீபாலன் தேவராய ஸ்வாமிகளால், ஸ்ரீகந்தர் சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்ட திருத்தலம் 
  •  12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தானாகவே பொங்கி வழியும் மாமாங்க சுணை அமைந்துள்ள திருத்தலம் 
  •  வளர்பிறை சஷ்டி திருநாளில் விரதம் கடைபிடிப்போர் குழந்தைப்பேறு பெற்று வரும் திருத்தலம் 
  •  மூலவர் தினசரி அபிஷேகத்திற்கு எருதுகள் மூலம் படிவழியே திருமஞ்சனம் கொண்டு வரும் சிறப்பு பெற்ற திருத்தலம் 
  •  மூலவர் செவ்வாயாக அமைந்து மூலவரை சுற்றி நவக்கிரகங்கள் எட்டு நவக்கிரஹகங்களும் அழகிய தேவ கோஷ்டத்தில் பாங்குடன் அமைந்திருக்கும் திருத்தலம் 
  •  ஸ்ரீவள்ளி, ஸ்ரீதேவசேனா தேவியர் இருவரும் ஒரே கல்லில் பிரபையுடன் அமைக்கப்பட்டு தனிக்கோவிலாக வீற்றிருப்பது வேரெங்கும் காண முடியாதது.

நவராத்திரி வழிபாட்டு முறை எட்டாம் நாள் - தொடர் 9

நவராத்திரி வழிபாட்டு முறை - எட்டாம் நாள்


அம்பாள்    ஸ்ரீநரஸிம்ஹி



 




உருவ அமைப்பு    மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கரம் கொண்டவள். சிம்ம வாகனம்


குணம்    குரூரம் (சத்ருக்களை )


சிறப்பு    ஸ்ரீநரஸிம்மரின் அம்சம்


நெய்வேத்யம்    சர்க்கரைப் பொங்கல், பானகம், விடாப்பருப்பு


பூஜை செய்ய உகந்த நேரம்    காலை 10.30 - 12.00, மாலை 6 – 7.30


மலர்    துளஸி, மரிக்கொழுந்து, பச்சிலை


கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள்    8


பாட வேண்டிய ராகம்    காம்போதி


யார் யாரெல்லாம் வணங்க  வேண்டும்:


வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்    கார்த்திகை, உத்திரம், உத்திராடம்


திசை புத்தி நடப்பவர்கள்    சனி திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்


ஜாதக அமைப்பு உடையவர்கள்    லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் சனி அல்லது கேது இருப்பவர்கள்


விசேஷம்        சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுவிப்பவள்

எண் கணிதப் படி யாரெல்லாம் வணங்க வேண்டும்: பெயர் எண் 8 உடையவர்கள்


சொல்ல வேண்டிய பாடல்:

[1]    ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும் படைத்தும்,
       காத்தும், அழித்தும் திரிபவராம்; கமழ் பூங்கடம்பு
       சாத்தும்குழல் அணங்கே! மணம் நாறும் நின்தாள் இணைக்கு என்
       நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடத்தே.


[2] மூல மந்திரம்:  ஓம் - ஸ்ரீம் - நரஸிம்யை - நம :


[3] காயத்ரி:  ஓம் நரசிம்மாய வித்மஹே வஜ்ர நாகாய தீமஹி தன்னோ நரசிம்மி பிரசோதயாத்!

நவராத்திரி வழிபாட்டு முறை ஏழாம் நாள் - தொடர் 8

நவராத்திரி வழிபாட்டு முறை - ஏழாம் நாள்




அம்பாள்    ஸ்ரீமகாலக்ஷ்மி


உருவ அமைப்பு    கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் கொண்டவள்.


குணம்    சௌம்யம்


சிறப்பு    ஸ்ரீமஹாவிஷ்ணுவின் மனைவி


நெய்வேத்யம்    பால் சாதம், பால் பாயாசம்


பூஜை செய்ய உகந்த நேரம்    மாலை 6 – 7.30


மலர்    முல்லை, வெண்மை நிறமுடைய பூக்கள்


கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள்    11


பாட வேண்டிய ராகம்    கல்யாணி


யார் யாரெல்லாம் வணங்க  வேண்டும்:


வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்    பரணி, பூரம், பூராடம்


திசை புத்தி நடப்பவர்கள்    சுக்ர திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்


ஜாதக அமைப்பு உடையவர்கள்    லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் சுக்ரன் அல்லது சனி இருப்பவர்கள்


விசேஷம்        சகல சம்பத்தையும் தருபவள், செல்வத்தை அளிப்பவள், அன்புக்கு அடிபணிபவள்.

எண் கணிதப் படி யாரெல்லாம் வணங்க வேண்டும்: பெயர் எண் 6 உடையவர்கள்


சொல்ல வேண்டிய பாடல்:

[1]    தண்ணளிக்கு என்றுமுன்னே பலகோடிதவங்கள் செய்வார்
    மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் மதிவானவர் தம்
    விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ
    பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப்  பைங்கிளியே


[2] மூல மந்திரம்:  ஓம் - லம் - லக்ஷ்மியை - நம :


[3] காயத்ரி:  ஓம் மஹாதேவ்யைச வித்மஹே விஷ்ணு பத்யைச தீமகி தன்னோ லக்ஷ்மி பிரசோதயாத்!

Thursday, October 10, 2013

நவராத்திரி வழிபாட்டு முறை - ஆறாம் நாள் - தொடர் 7


நவராத்திரி வழிபாட்டு முறை - ஆறாம் நாள்


அம்பாள் கௌமாரி


உருவ அமைப்பு மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள்.


குணம் சௌம்யம்


சிறப்பு ஸ்ரீமுருகனின் அம்சம்


நெய்வேத்யம் தேங்காய் சாதம், தேங்காய் பால்


பூஜை செய்ய உகந்த நேரம் காலை 9 - 10.30, மாலை 6 – 7.30


மலர் செவ்வரளி


கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள் 7

பாட வேண்டிய ராகம்
காவடி சிந்து


யார் யாரெல்லாம் வணங்க வேண்டும்:


வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள் அசுபதி, மகம், மூலம்


திசை புத்தி நடப்பவர்கள் குரு திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்


ஜாதக அமைப்பு உடையவர்கள் லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் குரு அல்லது செவ்வாய் இருப்பவர்கள் விசேஷம் சகல பாவங்களையும் விலக்கிடுபவள். வீரத்தை தருபவள்.

எண் கணிதப்படி வணங்க வேண்டியவர்கள்: பெயர் எண் 9ல் பிறந்தவர்கள்


சொல்ல வேண்டிய பாடல்:


[1] பூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம்
காத்தவளே பின்கரந்தவளே! கறைக் கண்டனுக்கு
மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!
மாத்தவளே உன்னை அன்றிமற்றோர் தெய்வம் வந்திப்பதே!

[2] மூல மந்திரம்: ஓம் - சிம் - கௌமாரியை - நம :


[3] காயத்ரி: ஓம் சிகித் வஜாயை வித்மஹே வஜ்ர ஹஸ்தாயை தீமஹி தந்நோ: கௌமாரி ப்ரசோதயாத்

Wednesday, October 9, 2013

நவராத்திரி வழிபாட்டு முறை ஐந்தாம் நாள் - தொடர் 6

நவராத்திரி வழிபாட்டு முறை - ஐந்தாம் நாள்
 
 
 



அம்பாள்    மகேஷ்வரி


உருவ அமைப்பு:    திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து ரிஷப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள். பெரும் சரீரம் உடையவள்.


குணம்    சௌம்யம்


சிறப்பு:    ஸ்ரீசிவனின் அம்சம்


நெய்வேத்யம்:    புளியோதரை, உளுந்தன்னம் - இனிப்பு


பூஜை செய்ய உகந்த நேரம்:    காலை 9 - 10.30, மாலை 6 – 7.30


மலர் :   வில்வ இலை, மரிக்கொழுந்து


கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள்    11


பாட வேண்டிய ராகம்:   அடானா


யார் யாரெல்லாம் வணங்க  வேண்டும்:


வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்:    ஆயில்யம், கேட்டை, ரேவதி


திசை புத்தி நடப்பவர்கள்:    புதன் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்


ஜாதக அமைப்பு உடையவர்கள்:    லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் புதன் அல்லது கேது இருப்பவர்கள்


விசேஷம்:        கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.


சொல்ல வேண்டிய பாடல்:

[1]    ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன், அமரர்தங்கோன்
    போதிற் பிரமன், புராரி, முராரி, பொதியமுனி,
    காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்
    சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே

[2] மூல மந்திரம்:  ஓம் - மாம் - மகேஷ்வர்யை - நம :


[3] காயத்ரி: ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே சூல ஹஸ்தாயை தீமஹி தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்

Tuesday, October 8, 2013

திருப்பதி புறப்பட்டது ஆண்டாள் சூடிய மாலை

ஸ்ரீவில்லிபுத்தூர்: திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் கருடசேவையன்று, பெருமாளுக்கு சார்த்துவதற்கு, ஆண்டாள் சூடி களைந்த மாலை, நேற்று, ஸ்ரீவில்லித்தூரிலிருந்து சென்றது. 

திருவில்லிபுத்தூர் வடபத்ரசாயிக்கு, ஆண்டாள் சூடிய மாலை, தினமும் சார்த்தப்படுகிறது. இதேபோல், ஆண்டுதோறும், மதுரை சித்திரை திருவிழாவில், வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகருக்கும், ஸ்ரீரங்கத்தில், சித்திரை ரேவதி தேரோட்டத்தின் போது, ரங்கநாதருக்கும், ஆண்டாள் சூடிய மாலை சார்த்தப்படுகிறது. 


மேலும், திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில், ஆண்டுதோறும் புரட்டாசி பிரம்மோற்சவத்தின், ஐந்தாம் நாளான நாளை புதன்கிழமை 09-10-2013 அன்று மாலையில் நடக்கும் கருட சேவையில், ஆண்டாள் சூடி களைந்த மாலை பெருமாளுக்கு சார்த்தப்படும். 

இந்த ஆண்டு பிரம்மோற்சவத்திற்கு, மாலை அனுப்பும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. காலையில் ஆண்டாளுக்கு பெரிய மாலை, கிளி, பரிவட்டம் ஆகியன சார்த்தப்பட்டு, சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடந்தன. பின், மாடவீதி, கந்தாடை வீதி வழியாக, ஆண்டாள் சூடிய மாலையையும், கிளியையும் ஊர்வலமாக எடுத்து வந்தனர். 


அவற்றை, கோயில் ஸ்தானிகம் ரமேஷ் மற்றும் ஊழியர்கள், திருப்பதிக்கு கொண்டு சென்றனர்.

ஐப்பசி மாத ஆன்மீக ஜோதிட குறிப்புகள்


நவராத்திரி வழிபாட்டு முறை நான்காம் நாள் - தொடர் 5

நவராத்திரி வழிபாட்டு முறை - நான்காம் நாள்



அம்பாள்    வைஷ்ணவி


உருவ அமைப்பு    சங்கு சக்கரம் கதை வைத்திருப்பவள், தீயவற்றை அழிப்பவள். வாகனம்: கருடன் (சிலர் காக்கை என்றும் கூறுவர்)


குணம்    சௌம்யம்


சிறப்பு    ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அம்சம்


நெய்வேத்யம்    எலுமிச்சை சாதம், பானகம்


பூஜை செய்ய உகந்த நேரம்    காலை 10.30 - 12.00, மாலை 6 – 7.30


மலர்    மல்லிகை


கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள்    9 அல்லது 11


பாட வேண்டிய ராகம்    காம்போதி


யார் யாரெல்லாம் வணங்க  வேண்டும்:


வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்    பூசம், அனுஷம், உத்திரட்டாதி


திசை புத்தி நடப்பவர்கள்    செவ்வாய் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்


ஜாதக அமைப்பு உடையவர்கள்    லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் செவ்வாய் அல்லது சனி இருப்பவர்கள்


விசேஷம்        மங்களகாரியங்கள் நம் வீட்டில் எந்த விதமான தடங்கலும் இன்றி நடைபெற இன்று விரதம் இருத்தல் நன்று


சொல்ல வேண்டிய பாடல்:

[1]    உறைகின்ற நின் திருக்கோயிலில் நின்கேள்வர் ஒருபக்கமோ
       அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ அமுதம்
       நிறைகின்ற வெண்திங்களோ கஞ்சமோ எந்தன் நெஞ்சமோ
       மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே


[2] மூல மந்திரம்:  ஓம் - ஹ்ரீம் - யம் - வம் -வைஷ்ணவ்யை - நம :


[3] காயத்ரி: ஒம் ச்யாம வர்ணாயை வித்மஹே சக்ர ஹஸ்தாயை தீமஹி த்ன்னோ வைஷ்ணவீ ப்ரசோத்யாத் !!