Monday, August 21, 2017

கிரகநிலையை பொறுத்தவரை

இன்றைய தேதியில் அதாவது ஆவணி மாதம் 05ம் தேதி - ஆங்கிலம் 21 ஆகஸ்டு 2017 - திங்கட்கிழமைக்கான கிரகநிலையை பொறுத்தவரை:
முற்பகல் 11.56 முதல் மதியம் 2.01 வரை விருச்சிக லக்னம் - லக்னத்தில் சனி இருக்கிறார். அரசு கிரகமான சூரியன் சிம்மத்தில் ஆட்சியாக இருக்கிறார். லக்னாதிபதி பாதகஸ்தானமான கடகத்தில் பலமற்று காணப்படுகிறார்.




மதியம் 2.01 முதல் 4.13 வரை - தனுசு லக்னம் - இந்த நேரத்தில் இணைவு ஏற்பட்டால் ஆட்சி கவிழும் கிரக நிலையே நீடிக்கிறது.
மாலை 4.13 முதல் 6.19 வரை மகர லக்னம். இந்த வேளையில் இணைவு என்பது மிகக் கெட்ட பலன்களையே கொடுக்கும். லக்னத்தில் கேது இருப்பதாலும் அஷ்டமாதிபதி சூரியன் வலுவாக இருப்பதாலும் மிகப் பெரிய பிரச்சனைகள் ஏற்படும்.

Thursday, August 17, 2017

ஆவணி மாத ஆன்மீகக் குறிப்புகள்

ஆவணி மாத ஆன்மீகக் குறிப்புகள்


ஆகஸ்ட்-17
ஆவணி-01
ஆவணி மாஸப் பிறப்பு. விஷ்ணுபதி புண்ய காலம்.
ஆகஸ்ட்-18
ஆவணி-02
க்ருஷ்ணபக்ஷ ஸர்வ ஏகாதசி
ஆகஸ்ட்-19
ஆவணி-03
க்ருஷ்ணபக்ஷ (சனி) மஹாப்பிரதோஷம்
ஆகஸ்ட்-20
ஆவணி-04
மாஸ சிவராத்திரி
ஆகஸ்ட்-21
ஆவணி-05
ஸர்வ அமாவாஸ்யை. புகழ்த்துணையார், அதிபத்தர் குருபூஜை
ஆகஸ்ட்-22
ஆவணி-06
வாஸ்துபுருஷன் நித்திரை விட்டெழுதல். இளையான்குடி மாறனார் குருபூஜை.
ஆகஸ்ட்-23
ஆவணி-07
சந்த்ர தர்சனம், கல்கி ஜயந்தி
ஆகஸ்ட்-24
ஆவணி-08
மறைஞான சமபந்தர் குருபூஜை
ஆகஸ்ட்-25
ஆவணி-09
சுக்லபக்ஷ சதுர்த்தி, கரிநாள், விநாயக சதுர்த்தி
ஆகஸ்ட்-27
ஆவணி-11
சுக்லபக்ஷ ஷஷ்டி
ஆகஸ்ட்-29
ஆவணி-13
குலச்சிறையார் குருபூஜை
ஆகஸ்ட்-31
ஆவணி-15
குங்கிலியக்கலையனார் குருபூஜை
செப்டம்பர்-02
ஆவணி-17
குருப்பெயர்ச்சி. குருபகவான் காலை மணி 9.31க்கு கன்யா ராசியிலிருந்து துலாராசியில் ப்ரவேசிக்கிறார். சுக்லபக்ஷ ஸர்வ ஏகாதசி
செப்டம்பர்-03
ஆவணி-18
சுக்லபக்ஷ மஹாப்ரதோஷம். வாமன ஜயந்தி
செப்டம்பர்-04
ஆவணி-19
ஓணம் பண்டிகை. ஸ்ரவண வ்ரதம். நடராஜர் அபிஷேகம்(மாலை)
செப்டம்பர்-05
ஆவணி-20
பௌர்ணமி
செப்டம்பர்-06
ஆவணி-21
மஹாளயபக்ஷ ஆரம்பம்
செப்டம்பர்-09
ஆவணி-24
க்ருஷ்ணபக்ஷ (ஸங்கடஹர) சதுர்த்தி
செப்டம்பர்-10
ஆவணி-25
மஹா பரணி
செப்டம்பர்-11
ஆவணி-26
கிருத்திகை. க்ருஷ்ணபக்ஷ ஷஷ்டி,
செப்டம்பர்-13
ஆவணி-28
பாஞ்சாராத்திர ஸ்ரீ ஜயந்தி. மத்யாஷ்டமி. கரிநாள்
செப்டம்பர்-14
ஆவணி-29
மஹாவ்யதீபாதம்
செப்டம்பர்-16
ஆவணி-31
க்ருஷ்ணபக்ஷ ஸர்வ ஏகாதசி. செருத்துணையார் குரு பூஜை.



போர் மூழுமா?

போர் மூழுமா?

அதிக சொந்தங்கள் என்னிடம் கேட்கும் கேள்வி.

தற்போதுள்ள சூழ்நிலையில் இந்தியா - சீன யுத்தம் வராது.

மேலும் குரு பெயர்ச்சிக்குப் பிறகான காலகட்டத்தில் ராஜாங்க ரீதியில் அதிக அன்னியோன்னியம் ஏற்பட்டு முடிவு மக்களுக்கு சாதகமாக இருக்கும்.





12.02.2019க்குப் பிறகு கேது சனியுடன் தனுசு ராசியில் இணையும் போது மிதுன ராசியில் இருக்கும் ராகுவிற்கு சனி பார்வை ஏற்படும். அந்த சமயத்தில் மிகப் பெரிய போர் அபாயம் உலக நாடுகளில் ஏற்படும். 

ஆனாலும் குருவின் சார பலனால் மிகப் பெரிய அளவில் உயிர்சேதம் தவிர்க்கப்படும். 

12.02.2019 முதல் 10.10.2020 வரையில் சில காலம் 
ராகு மிதுன ராசியில் சுய சாரம் பெறும் காலகட்டத்தில் சனி பகவான் சூரியன் சாரத்தில் இருப்பார். ராஜாங்க ரீதியாக ஏமாற்று வேலைகள் மற்றும் சொல்லொன்னாத் துயரம் நிறைய நடக்கும். உதாரணமாக ஆயுத கொள்முதலில் ஊழல் தொடங்கி கைது செய்யப்படும் கைதிகளை மனித உரிமை மீறல் வரை நிறைய நடக்கும். அரபு நாடுகளில் பிரச்சனைகள் அதிகமாகும். அமேரிக்காவிற்கு இந்த காலகட்டம் போராட்டமாகவும் அதிக பிரச்சனையுள்ள காலகட்டம். இது வரபோகும் காலம்.

Saturday, July 29, 2017

மிகப் புண்ணிய நாளான மஹாளய பக்ஷ அமாவாசை அன்று ஒரே இடத்தில் ஸ்ரீகாயத்ரி ஹோமம் - தர்ப்பணம் - கோ பூஜை

மிகப் புண்ணிய நாளான மஹாளய பக்ஷ அமாவாசை அன்று ஒரே இடத்தில் ஸ்ரீகாயத்ரி ஹோமம் - தர்ப்பணம் - கோ பூஜை

இடம்: திருமுல்லைவாயில் - பொத்தூர் கிராமம் - கன்னடபாளையம்
நாள்: 20 செப்டம்பர் 2017
கிழமை: புதன்கிழமை
நேரம்: காலை 5 மணி முதல்

மேலும் விபரங்களுக்கு:
ஸ்ரீவித்யா காயத்ரி அறக்கட்டளை
அம்பத்தூர் - சென்னை
Email: shrividhyagayathri@gmail.com
Web: www.shrividhyagayathri.com
Phone: 89390 41417 / 89390 43436 / 97100 86818

Friday, July 28, 2017

ராகு கேது பெயர்ச்சி ஹோமம் மிகப் பெரிய வெற்றி

ராகு கேது பெயர்ச்சி ஹோமம் மிகப் பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. இந்த நிகழ்வு வெற்றி பெற ஆசீர்வாதம் செய்த எனது குருநாதர் பெருங்குளம் குப்பு ஜோஸ்யர், வெங்கிடாஜல் ஜோஸ்யர் - பெருங்குளம் மாயக்கூத்தர் - பெருங்குளம் திருவழுதீஸ்வரர் - பெருங்குளம் காவல் தெய்வம் பத்திரகாளியம்மன் - எம் குலதெய்வம் சொரிமுத்தையன் ஆகியோருக்கு என் நமஸ்காரம்.
இந்த நிகழ்ச்சி வெற்றி பெற மிகக் கடுமையாக உழைத்த எனது தகப்பனார் பெருங்குளம் சுப்பிரமணிய ஜோஸ்யர், எனது தாயார் - எனது மாமனார் ஸ்ரீமான் பிரகாஷ் சர்மா, எனது மாமியார் ஆகியோருக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
எனது மனைவி ஸ்ரீமதி செல்விக்கு Selvee Prakasam நன்றிகள்.
நிகழ்ச்சியின் முக்கிய விஷயங்கள்:
ஹோமத்தில் மொத்தமாக 6500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.
உலக நன்மைக்காகவும் - மழை வர வேண்டியும் - விவசாயம் செழிக்கவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கும் தாந்த்ரீக ஜோதிடஸ்ரீ வாமனன் சேஷாத்ரிVamanan Sesshadri அவர்கள் வந்திருந்து ஆசீர்வாதம் செய்தார். மாயவரத்தான் அண்ணா மூலமாக அதிகம் பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஹோமம் முழுமைக்கும் ஆசாரியனாக இருந்து அம்பாள் உபாசகர் ஸ்ரீபரணிகுமார் Bharani Kumar ஸ்வாமிஜி அருளினார்.
குரோம்பேட்டை அஸ்ட்ரோ முரளி - மடிப்பாக்கம் ராகேஷ் அண்ணா Ram Prakash, ராம்பிரசாத் அண்ணா Ram Prasad - அம்பத்தூர் கிருஷ்ணகுமார் அண்ணா, ராமநாதன் அண்ணா, தியாகராஜன் அண்ணா, கிருஷ்ணமூர்த்தி அண்ணா ஆகியோர் ஹோமம் முழுமைக்கும் உடனிருந்து உதவினார்கள்.
அன்புத்தம்பி நாகராஜன் Nagarajan Subi, ரவிசேகர் VS Ravi Sekarஆகியோர் என் அருகில் இருந்து அனைத்து விஷயங்களையும் மேற்பார்வை செய்தார்கள்.
அன்புத்தங்கை கிருத்திகா தன் குடும்பத்துடன் இந்த நிகழ்ச்சிக்காக கிட்டத்தட்ட 45 நாட்களுக்கும் மேலாக இதற்காக உழைத்தார்.
அலங்கார நாயகன் அடைக்கப்பன் Adaikappan Alangaram தனது அலங்கார திறமையின் மூலம் அருமையான அலங்காரம் செய்திருந்தார்.
திரு.அருண்பிரசாத் ArUn SuMo அவர்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இந்த நிகழ்விற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
அம்பத்தூர் சாஸ்தா கேட்டரிங் திரு.நாராயணன் மூலமாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் அன்னபிரசாதம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இடைவிடாமல் கொடுக்கப்பட்டது.
ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் தீப ஆராதனை செய்யப்பட்ட போது திருமுல்லைவாயில் சிவனடியார் பெருங்கூட்டத்தின் சிவஸ்ரீ இந்திரா அம்மையாரின் சங்க நாதம் ஒலிக்கப்பட்டது.
மேற்சொன்ன அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
அரை மணி நேரத்திற்கு ஒருமுறை ஸங்கல்பம் செய்யப்பட்டது.
சரியாக 12 மணிக்கு லலிதா ஸகஸ்ரநாமம் பாராயணம் செய்யப்பட்டு - அம்பாளுக்கு ஹோமத்தில் புடவை அர்ப்பணம் செய்யப்பட்டது.
மதியம் 12.30 மணிக்கு அம்பத்தூர் கலாக்ஷேத்ராவின் பரத நாட்டிய நிகழ்ச்சி அரங்கேறியது.
மதியம் 1 மணிக்கு திருப்புகழ் பாராயணம் செய்யப்பட்டது.
மாலை 4.30க்கு அம்மன் அருள் சுந்தராஜ சர்மாவின் அம்மனின் ஆடல் என்ற சொற்பொழிவு நடைபெற்றது.
மாலை 5.00 மணிக்கு மஹாபாரத சிம்மம் மன்னார்குடி GG வெங்கட்ராமன் அவர்களின் சிறப்பு சொற்பொழிவு நடந்தது.
மாலை 5.15க்கு பிரஸ்ணம் பார்க்கப்பட்டது.
மாலை 5.45க்கு ராகுவிற்கும் கேதுவிற்கும் தனித்தனியாக பூர்ணாகுதி நடைபெற்றது.
மாலை 6.15 மணிக்கு ராசிபலன் சொல்ல ஆரம்பித்து நிகழ்ச்சி 7.30 மணிக்கு இனிதே நிறைவடைந்தது.

Sunday, July 23, 2017

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்


மேஷம்



ரிஷபம்



மிதுனம்



கடகம்



சிம்மம்



கன்னி



துலாம்



விருச்சிகம்



தனுசு



மகரம்



கும்பம்



மீனம்



Saturday, July 15, 2017

ஆடி - கார்த்திகை - பங்குனி மாதங்களில் பிறந்தவர்களின் கவனத்திற்கு:

எந்த வருடம் பிறந்தவர்களாக இருந்தாலும் சரி - ஆடி - கார்த்திகை - பங்குனி ஆகிய மாதங்களில் பிறந்தவர்களுக்கு, வரப்போகும் ஆடி மாதத்தில் மிகப் பெரிய நல்ல மாற்றம் காத்திருக்கிறது.



மாற்றம்?

நாளை மறுநாள் பிறக்கப் போகும் ஆடி மாதம் என்பது 18 வருடங்களுக்குப் பிறகு வரப்போகும் மிக கனத்த மாதமாகும். 

சூரியன் + சந்திரன் + செவ்வாய் + புதன் + ராகு ஆகிய கிரகங்கள் சேரப் போகும் மாதம். 




அரசியல் - சினிமா - பொருளாதாரம் - விளையாட்டு போன்ற துறைகளில் பெரிய மாற்றம் நிகழும். 

அதிலும் தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் ராகு கேது பெயர்ச்சிக்குப் பிறகு அரசியலில் மாற்றம் நிகழலாம்.

மேலும் விபரங்களுக்கு:
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
Email: ramjothidar@gmail.com
Web: www.kuppuastro.com
Phone: 89390 41417 / 89390 43436

Thursday, July 13, 2017

கடக ராசியில் பிறந்த கண்மணிகளா

யப்பா கடக ராசியில் பிறந்த கண்மணிகளா வாக்கியப் பஞ்சாங்கப்படி செவ்வாய் நேற்றைக்கு உங்கள் ராசிக்கு வந்திருக்கிறார். ஆகஸ்ட் 28ம் தேதி வரைக்கும் தீ - ஆயுதம் போன்றவற்றில் கவனம் தேவை. பேசும் போதும் - எந்த செயலிலும் இறங்கும் போதும் நிதானம் நிதானம் நிதானம்.





மேலும் விபரங்களுக்கு:
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
Email: ramjothidar@gmail.com
Phone: 89390 41417 / 89390 43436