Wednesday, May 31, 2017

ஊரின் வாஸ்து - தொகுப்பு ஏழு

ஊரின் வாஸ்து - தொகுப்பு ஏழு
ஊரில் ஏதேனும் விழாக்காலங்கள் என்று வரும் போது அந்த ஊரில் எந்த தானியம் அதிகமாக விளைகிறதோ அதையே பிரசாதமாக ஊரின் பிரதான தேவதைக்கு நைவேத்யம் செய்வார்கள். எட்டு திசைகளிலும் இருக்கும் காவல் தெய்வங்களுக்கு பலி கொடுப்பார்கள். அதிலும் முக்கியமாக ஈசான்யம் மற்றும் கன்னி மூலையில் இருக்கும் தெய்வங்களுக்கு கட்டாயமான முறையில் பலி உண்டு.




ஊரின் தண்ணீர் பாசனத்திற்கு ஈசான்ய மூலையில் உறுதியாக நீர் ஆதாரத்தை ஏற்படுத்தி இருப்பார்கள். அந்த நீராதாரம் அந்த ஊருக்கு மட்டுமன்றி அந்த ஊரின் அக்கம் பக்கத்து சிற்றூர்களுக்கும் கிடைக்குமாறு வழிவகை செய்வார்கள். சிற்றூர்களில் இருக்கும் மக்கள் தாங்கள் தெரிவிக்கும் நன்றியாக பிரதான ஊரின் கோவிலில் நடைபெறும் உற்சவத்தின் போது கலந்து கொள்வார்கள். பிரதான ஊரின் ஒவ்வொரு திசையிலும் அதிகபட்சமாக 6 ஊர்கள் வரை ஸ்தாபனம் செய்தார்கள். அதே போன்று பிரதான ஊரின் கொடி மரம் எட்டு திசையிலும் ஸ்தாபனம் செய்யப்பட்ட ஊர்களை வியாபித்துக் கொள்ளும்.

சிற்றூர்களில் உருவாக்கப்படும் சிறு கோவில்கள் - அது குடி மக்கள் கோவிலாக இருந்தாலும் சரி, ஊர்க் கோவிலாக இருந்தாலும் சரி, அனைத்து கோவில்களும் பிரதான ஊரின் கொடி மர தேவதைக்கு அடங்க வேண்டும்.

குறிப்பு:
குடி மக்கள் கோவில் என்பது ஒவ்வொரு சாதி குழுவிற்கும் அவர்களாகவே அமைத்துக் கொள்ளும் கோவில். ஊர்க் கோவில் என்பது அந்த ஊரிலுள்ள அனைத்து சாதியினருக்கும் பொதுவான கோவில்.

Friday, May 26, 2017

ஜோதிட பலன் - தமிழ்நாடு




தமிழகத்தை பொறுத்தமட்டில் வரும் ஜூன் மாதம் 8ம் தேதி வைகாசி 25ம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 8.42க்கு மேல் வானிலையில் மிகப் பெரிய மாற்றம் இருக்கும். வெயிலின் உக்ரம் குறையும். காய்கறிகளின் விலை குறையும். அரசியல் ரீதியாக சிறிய மாற்றம் இருக்கும். ஆட்சி மாற்றம் இருக்காது. 

குறிப்பு: 
[1] அன்றைய தினம் காஞ்சி மஹாபெரியவர் ஜெயந்தி. 
[2] அனுஷ நக்ஷத்ரத்தில் பிறந்தவர்களுக்கு பொற்காலம் பிறக்கப் போகிறது.

ஜோதிட பலன் - இந்தியா




8 ஜூன் 2017 முதல் 17 ஜூலை 2017க்குள்ளாக மத்திய அரசாங்கம் மக்களுக்காக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடும்.

Friday, April 28, 2017

எப்போதுதான் அரசியல் சூழ்நிலை சரியாகும்

”எப்போதுதான் அரசியல் சூழ்நிலை சரியாகும்?” ஒரு அன்பர் கேட்ட கேள்வி.


தற்போதிருக்கும் சூழ்நிலையில் வாக்கியப்படி சிம்ம ராசியில் ராகு - கும்ப ராசியில் கேது - கன்னி ராசியில் குரு - விருச்சிக ராசியில் சனி என முக்கிய கிரகங்கள் சஞ்சாரம் செய்கிறார்கள். ஜூலை 27ம் தேதி ராகு கேது பெயர்ச்சிக்குப் பின் தமிழக அரசியலில் மிக முக்கிய மாற்றம் ஏற்படும். செப்டம்பர் 2ம் அன்று குரு மாற்றம் நிகழ்வதால் அரசியலில் ஸ்திரத்தன்மை ஏற்படும். டிசம்பர் மாதம் நிகழும் சனிப் பெயர்ச்சிக்குப் பிறகு மற்றவர்களின் தலையீடு இல்லாமல் இருக்கும்.

அக்னி நக்ஷத்ரம் - செய்யக்கூடாதவை - செய்யக்கூடியவை

அக்னி நக்ஷத்ரம் - செய்யக்கூடாதவை - செய்யக்கூடியவை:
அருளிச் செய்தவர்: எம்முடைய குருநாதர் பெருங்குளம் வெங்கிடாஜல ஜோஸ்யர்



அக்னி நக்ஷத்ர காலங்களில் செய்யக்கூடாதவை:
புதுமனை புகுதல்
அஸ்திவாரம் தோண்டுதல்
கிணறு வெட்டுதல்
கோவில் கும்பாபிஷேகம் செய்தல்
தேவதையை பாலாலயம் செய்தல்
கிரகங்களை கட்டுதல்
மாட்டுக் கொட்டகை அமைத்தல்
மந்திர உபதேசம் வாங்குதல் (ஒருவேளை கிரஹண காலமாய் இருந்தால் வாங்கிக் கொள்ளலாம்)


அக்னி நக்ஷத்ர காலங்களில் செய்யத் தகுந்தவை:
புதிய வீடு பதிவு செய்தல்
வாடகை வீட்டிற்குச் செல்லுதல்
பத்திரம் தயாரித்தல்
ஒப்பந்தம் போட்டுக் கொள்ளுதல்
புதிய வியாபார நிறுவனம் தொடங்குதல்
புதிய கல்வி ஆரம்பித்தல்
புதிய வாகனம் வாங்குவது
புதிய வேலையில் சேருவது
மகான்கள் தரிசனம்

பொன்னுருக்கி விடுதல்
ஆக்குப்பிறை போடுதல்
மணவறை போடுதல்
திருமணம்
நிச்சயதார்த்தம்
ஒப்புதல் தாம்பூலம்
பட்டு எடுத்தல்
நகைகள் வாங்குதல்
மாப்பிள்ளை பெண் பார்த்தல்



கும்பாபிஷேக பணிகளை செய்தல்
யாகசாலை அமைத்தல்
ஸ்வாமி சிலைகள் வாங்குதல்
ஸ்வாமி சிலைகளை தான்யவாசம் - ஜல வாசம் செய்தல்
தேவதைக்கு ப்ரஸ்ணம் பார்த்தல்

சுபநிகழ்ச்சிகளுக்கு முகூர்த்தம் குறித்தல்
ஜாதகம் எழுதுதல்

குலதெய்வ நேர்ச்சைகளை செய்தல்
புண்ணிய நதிகளில் நீராடல்
புண்ணிய க்ஷேத்திரங்களுக்கு சென்று வருதல்
பித்ரு கர்மாக்களை செய்தல்

எண்ணை ஸ்நானம் செய்தல்

குழந்தையை தொட்டிலில் இடுவது
குழந்தைக்கு பெயர் சூட்டுதல்
காது குத்துதல்










Tuesday, April 4, 2017

திருவாதிரை நக்ஷத்ரங்களில் பிறந்தவர்களின் பொது பலன் மற்றும் பரிகாரம்:

திருவாதிரை நக்ஷத்ரங்களில் பிறந்தவர்களின் பொது பலன் மற்றும் பரிகாரம்:
நடராஜரின் நக்ஷத்ரமான திருவாதிரை நக்ஷத்ரங்களில் பிறந்தவர்கள் நீண்ட யோசனைக்குப் பிறகே எந்த முடிவையும் எடுப்பார்கள். அவ்வப்போது எடுத்த முடிவுகளில் மாற்றமும் இருக்கும். தேவையில்லாத இடங்களில் தேவையற்ற கோபத்தைக் காண்பிப்பவர்கள். சுயமரியாதை அதிகமாக இருப்பவர்கள். அதிக சிரத்தை எடுத்து எந்த காரியத்தையும் செய்பவர்கள். இவர்களுக்கு திருமண வாழ்க்கைக்குப் பிறகு இரண்டாவது வாழ்க்கை தொடங்கும். சிக்கனத்தைக் கடைபிடிப்பது இவர்களுக்கு நன்மை தரும். படிப்பை விட அனுபவ அறிவில் அதிக ஆர்வம் உடையவர்கள். இவர்களுக்கு கை மணிக்கட்டில் நாக ரேகை ஓடும். திருவாதிரை இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் வாதாடுவதில் வல்லவர்கள். திருவாதிரை நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் அதிக பொதுநலச் சிந்தனை உடையவர்கள். பொதுவில் தந்தை வழி பாட்டனாரின் இயல்பை ஒத்தவர்களாக இருப்பார்கள். 





இவர்களுக்கு வரும் ஹேவிளம்பி வருடம் பல பொன்னான வாய்ப்புகளைத் தர காத்திருக்கிறது. வரும் 2017 ஜூலை முதல் 2020 ஜூலை வரை இவர்களுக்கு பொற்காலம். சோம்பலைத் தவிர்த்து உழைப்பில் கவனம் செலுத்தினால் வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு இவர்களால் செல்ல முடியும்.

அடிக்கடி ஸ்ரீதுர்க்கை அம்மனை சேவிப்பது - நாகர்களுக்கு அபிஷேகம் செய்வது என்பது நல்ல பரிகாரமாக இருக்கும். மாதா மாதம் திருவாதிரை நக்ஷத்ரம் தோறும் சிவபுராணம் படிப்பதன் மூலம் பல நன்மைகளைப் பெறலாம். மனதைரியம் ஏற்படுவதற்கு தினமும் ஸ்ரீநரசிம்மரை வணங்குவது நல்லது, 

கட்டாயமாக திங்கள்கிழமையை இவர்கள் தவிர்ப்பது நல்லது.

Friday, March 31, 2017

பொதுவான பலன் மற்றும் பரிகாரங்கள்:ரேவதி

ரேவதி நக்ஷத்ரக்காரர்களுக்கான பொதுவான பலன் மற்றும் பரிகாரம்:

சுயநலமில்லாதவர்கள். அனைவரும் நன்றாக வாழ வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். கொடுத்த வாக்கினை எப்பாடுபட்டாவது காப்பாற்ற வேண்டும் என எண்ணுபவர்கள். குடும்ப வாழ்க்கையில் சிறு சிறு பிரச்சனைகள் இருக்கும். அதிக நண்பர்கள் இருப்பார்கள்.

வரும் ஹேவிளம்பி வருஷம் ஆவணி மாதத்திற்குப் பிறகு குடும்ப வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

இவர்கள் தினமும் பெருமாள் ஆலயத்திற்கும் அம்மன் ஆலயத்திற்கும் சென்று வழிபாடு செய்வது நன்மையைத் தரும்.

அதிர்ஷ்ட தினங்கள்: திங்கள் - வியாழன் - வெள்ளி

Wednesday, March 29, 2017

பொதுவான பலன் மற்றும் பரிகாரங்கள்: ஸ்வாதி

பொதுவான பலன் மற்றும் பரிகாரங்கள்:
ஸ்வாதி நக்ஷத்ரகாரர்கள் எடுத்த முடிவை யாருக்காகவும் மாற்றிக் கொள்ளாதவர்கள். கலந்துரையாடினாலும் கடைசியில் தான் தேர்ந்தெடுத்ததையே செய்வார்கள். இவர்கள் திருமணத்திற்குப் பிறகு யோகங்களை அனுபவிப்பார்கள்.
தினமும் நரஸிம்மரையும் - நாக தேவதையையும் வணங்கி வர இவர்களுக்கு இன்னல்கள் அகலும்.
திங்கள் - புதன் - வெள்ளி அதிர்ஷ்ட நாட்களாகும்.