எதிர்மறை சக்திகளை விரட்டுவது எப்படி?
நேர்மறை சக்திகள் வருவதற்கு எதிர்மறை சக்திகள் மிகப் பெரிய தடையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
முதலாவதாக வருடத்திற்கு ஒருமுறை வீட்டில் ஏதேனும் ஒரு ஹோமம் செய்வது நல்லது.
இரண்டாவதாக எதிர்மறை சக்திகளை விரட்டுவதில் பசு மாட்டின் கோமியம் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது எனலாம். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை வீட்டிற்கு முன் வெளியில் இருக்கும் இடத்தை வெள்ளிக்கிழமை தோறும் பசு மாட்டின் சாணத்தால் மொழுகுவார்கள். தினமும் வீட்டின் வாசலை காலையில் தெளிக்கும் போதும் சாணம் கலந்து தண்ணீர் தெளிப்பார்கள். தற்போது அது பரவலாக குறைந்து வருகிறது. ஆனாலும் மேற்கு மண்டலத்தில் இப்போதும் இதை கண் கொண்டு பார்க்க முடிகிறது.
சரி விஷயத்திற்கு வருவோம், வெள்ளிக்கிழமை தோறும் பசு மாட்டின் சாணம் அல்லது கோமியம் எடுத்து வந்து தூய மஞ்சள் பொடியுடன் கலந்து வீடு முழுவதும் மாவிலையால் தெளிக்கவும். தெளித்த பின் வீட்டில் தனல் உண்டாக்கி சாம்பிராணி தூபம் போடவும்.
இதை செய்வதன் மூலம் கெட்ட கனவுகள் அகலும். தம்பதிகளுக்குள் அன்னியோன்னியம் ஏற்படும். கண் திருஷ்டி நீங்கும். சுப காரியங்களில் இருக்கக் கூடிய தடைகள் அகலும்.
குறிப்பு:
வெள்ளிக்கிழமை மாலை 6 - 7 செவ்வாய் ஹோரையாகும். முக்குண வேளையை பொறுத்தவரை சாத்வீக வேளையாகும். இந்த நேரத்தில் செய்வது மிகவும் நன்மையைத் தரும்.
தொடரும்....
No comments:
Post a Comment