அனைவருக்கும் வணக்கம்.
எங்களுடைய மணநாளிற்கு நேரிலும் - போனிலும் - Facebook - Whatsappலும் வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி.
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்
பரம்பரை ஜோதிடர்
அனைவருக்கும் வணக்கம்.
எங்களுடைய மணநாளிற்கு நேரிலும் - போனிலும் - Facebook - Whatsappலும் வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி.
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்
பரம்பரை ஜோதிடர்
மேதினியில் வைகாசி விசாகத்தோன் வாழியே
வேதத்தைச் செந்தமிழால் விரித்துரைத்தான் வாழியே
ஆதிகுருவாய்ப் புவியிலவதரித்தோன் வாழியே
அனவரதம் சேனையர்கோன் அடிதொழுவோன் வாழியே
நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே
நன்மதுரகவி வணங்கும் நாவீறன் வாழியே
மாதவன்பொற் பாதுகையாய் வளர்ந்தருள்வோன் வாழியே
மகிழ்மாறன் சடகோபன் வையகத்தில் வாழியே
எதேச்சையாக ஒரு வீடியோ பார்க்க நேர்ந்தது. அவர் ஓர் ஜோதிட பேராசிரியர். பல பட்டங்களுக்கு சொந்தக்காரர். ராசிபலன் சொல்லும் ஜோதிடர்கள் அனைவரையும் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ஒரு செய்தியை போகிற போக்கில் சொன்னார். அதாவது ”தமிழ்நாட்டில் இருக்கும் எவருக்குமே ஜோதிடம் தெரியாது. தெலுங்கு பிராமணர்கள் வந்துதான் இங்கு ஜோதிடம் சொல்லி கொடுத்தார்கள். மேலும் இங்கு இருப்பவர்களுக்கு ஜோதிடத்தில் ஒரு அ ஃ கூட தெரியாது. தமிழ்நாட்டில் இருப்பவர்கள் எதற்கும் லாயக்கில்லை” என சொல்லி விட்டு தனது அடுத்த கருத்துக்கு போய் விட்டார். அந்த பேராசிரியர் தான் சொன்னதை தஞ்சாவூர் கோவில் கல்வெட்டில் எழுதி வைத்துவிட வேண்டியதுதான்.
சரி நம்ம விஷயத்திற்கு வருவோம். ரொம்பல்லாம் மெனக்கெட வேண்டாம். இங்கு ஜோதிடம் இருந்தது என சொல்வதற்கு ஒரு சிறிய ஆதாரமே போதுமானது. வானிலை கணிப்பதற்கு கணியர் என்றொரு சாதியும் - அவர்கள் கணித்ததை பலன்கள் சொல்ல வள்ளுவர் என்றொரு சாதியும் இருந்தது, இருக்கிறது. அரசியல் காரணமாக இருவரையும் பிரித்தார்கள். தமிழ் அறிஞர் குணா அவர்கள் எழுதிய வள்ளுவ பார்ப்பாரியம் படிக்க வேண்டும்.
இன்னும் என்னென்னல்லாம் பார்க்க வேண்டி இருக்கிறதோ?
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
எதிர்நீச்சல் - நாகேஷ் நடித்த ஒரு பழைய படம். அதில் ஒரு காட்சி வரும். நாகேஷ் - மனோரமா - சௌகார் ஜானகி மூவரும் பர்வதம் அம்மா மகளைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள். அப்போது சௌகார் கேட்பார் “அந்த பொன்னு என்ன அவ்வளவு அழகா? சினிமா ஸ்டார் மாதிரி இருப்பாளா?”. அதற்கு நாகேஷ் சொல்வார் “அழகா இருப்பான்னு சொன்னேன் அழகுபடுத்திக்குவான்னா சொன்னேன்!”.
இப்படித்தான் இருக்கிறது ஹர்திக் பாண்டியா செய்வது. ஹீரோவாக இருப்பது வேறு - ஹீரோவாக நடிப்பது வேறு. புரட்டாசி ஆயில்யத்தில் பிறந்துள்ள அவருக்கு தற்போது அஷ்டமத்து சனி நடக்கிறது. கவனத்துடன் நடந்து கொள்வது நல்லது.
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ID: 202419
அவன் சொன்னான்
இவன் சொன்னான்னு
குல தெய்வ வழிபாட்டை விட்டு விடாதீர்கள்.
அதுவே என்றும் நம்மை காக்கும்.
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542