Wednesday, August 29, 2018

திதி நிர்ணயம் - பகுதி மூன்று

திதி நிர்ணயம் - பகுதி மூன்று

29 ஆகஸ்டு 2018 - புதன்கிழமை - சென்னை அயனாம்சத்திற்குரிய வாக்கிய பஞ்சாங்கப்படி -  திதி திருதியை: 36.31 நாழிகை

எப்படி ஒரு நாளுடைய திதியை நிர்ணயம் செய்வது? - வருஷாதி நூல் பிரமாணம்

பஞ்சாங்க தினசுத்தியில் திதி நிர்ணயம் செய்வதே அவசியமானது. ஒரு திதியானது அபரான்ன காலத்திற்கு மேல் வியாபித்திருக்குமானால் அந்த திதியே அன்றைய திதியாகும். அதாவது 24 நாழிகைக்கு மேல் வியாபித்திருக்கும் திதியே அன்றைய திதியாகும்.

இன்றைய நாளில் திருதியை திதி 36.31 நாழிகை வரை இருக்கும் போது இன்றைய திதி திருதியையா அல்லது சதுர்த்தியா?

திதி நிர்ணயம்படி இன்று திருதியையாக இருக்கும் போது - எப்படி சதுர்த்தியாக இருக்க முடியும்? அப்படியென்றால் இன்றைய நாளை எப்படி சதுர்த்தி என்று அறிவிக்கலாம்? அதையும் நம்பும் சில ஜனங்கள் இன்றைய நாளை சங்கடஹர சதுர்த்தியாக கொண்டாடியாச்சு. அப்படியென்றால் நாளை சதுர்த்தி 36.24 வரை இருக்கிறதே. நாளைதான் சதுர்த்தி திதி எனவே நாளைதான் சங்கடஹர சதுர்த்தி. நாளைதான் மஹா சங்கடஹர சதுர்த்தி. குழம்ப வேண்டாம்.

குறிப்பு மற்றும் வேண்டுகோள்:
திதி நிர்ணயம் செய்வதிலும் - விசேஷங்கள் நிர்ணயம் செய்வதற்காகவும் பஞ்சாங்க சதஸ் நடக்கிறது. அப்போதெல்லாம் டீவியில் தலை காட்ட ஷூட்டிங்கில் கலந்து கொள்வது போல் இது போன்ற சதஸிலும் கலந்து கொள்வது அவசியம். குறைந்தபட்சம் திதி நிர்ணயம் செய்யவாவது தெரிந்து கொண்டு மக்களை வழி நடத்தவும்.


பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

No comments: