Tuesday, April 4, 2017

திருவாதிரை நக்ஷத்ரங்களில் பிறந்தவர்களின் பொது பலன் மற்றும் பரிகாரம்:

திருவாதிரை நக்ஷத்ரங்களில் பிறந்தவர்களின் பொது பலன் மற்றும் பரிகாரம்:
நடராஜரின் நக்ஷத்ரமான திருவாதிரை நக்ஷத்ரங்களில் பிறந்தவர்கள் நீண்ட யோசனைக்குப் பிறகே எந்த முடிவையும் எடுப்பார்கள். அவ்வப்போது எடுத்த முடிவுகளில் மாற்றமும் இருக்கும். தேவையில்லாத இடங்களில் தேவையற்ற கோபத்தைக் காண்பிப்பவர்கள். சுயமரியாதை அதிகமாக இருப்பவர்கள். அதிக சிரத்தை எடுத்து எந்த காரியத்தையும் செய்பவர்கள். இவர்களுக்கு திருமண வாழ்க்கைக்குப் பிறகு இரண்டாவது வாழ்க்கை தொடங்கும். சிக்கனத்தைக் கடைபிடிப்பது இவர்களுக்கு நன்மை தரும். படிப்பை விட அனுபவ அறிவில் அதிக ஆர்வம் உடையவர்கள். இவர்களுக்கு கை மணிக்கட்டில் நாக ரேகை ஓடும். திருவாதிரை இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் வாதாடுவதில் வல்லவர்கள். திருவாதிரை நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் அதிக பொதுநலச் சிந்தனை உடையவர்கள். பொதுவில் தந்தை வழி பாட்டனாரின் இயல்பை ஒத்தவர்களாக இருப்பார்கள். 





இவர்களுக்கு வரும் ஹேவிளம்பி வருடம் பல பொன்னான வாய்ப்புகளைத் தர காத்திருக்கிறது. வரும் 2017 ஜூலை முதல் 2020 ஜூலை வரை இவர்களுக்கு பொற்காலம். சோம்பலைத் தவிர்த்து உழைப்பில் கவனம் செலுத்தினால் வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு இவர்களால் செல்ல முடியும்.

அடிக்கடி ஸ்ரீதுர்க்கை அம்மனை சேவிப்பது - நாகர்களுக்கு அபிஷேகம் செய்வது என்பது நல்ல பரிகாரமாக இருக்கும். மாதா மாதம் திருவாதிரை நக்ஷத்ரம் தோறும் சிவபுராணம் படிப்பதன் மூலம் பல நன்மைகளைப் பெறலாம். மனதைரியம் ஏற்படுவதற்கு தினமும் ஸ்ரீநரசிம்மரை வணங்குவது நல்லது, 

கட்டாயமாக திங்கள்கிழமையை இவர்கள் தவிர்ப்பது நல்லது.

No comments: