Tuesday, November 14, 2017

மிக மிக மிக முக்கியமான அறிவிப்பு:

எந்த விஷயமானாலும் உதாரணமாக ராசிக்கல், தில ஹோமம், மற்ற பரிகார ஹோமங்கள், ஏனைய ஜோதிட பரிகாரங்கள் - எதுவானாலும் நானாக செய்து கொடுக்கிறேன் என சொல்லுவதில்லை. கமிஷன் பெற்றுக் கொள்வதும் இல்லை.

முதலில் நாம் தேவையில்லாமல் பரிகாரங்கள் சொல்லுவதில்லை. அதிகபட்சமாக நாம் சொல்லக்கூடிய பரிகாரம் வீட்டில் தானே செய்யக்கூடியவையாக இருக்கும். முதலில் ஜோதிடர் என்பவர் பரிகாரம் சொல்லக்கூடியவராகத்தான் இருக்க வேண்டுமே தவிர செய்து கொடுப்பவராக இருக்கக் கூடாது.

புரோகிதர் பரம்பரையில் வந்ததால் காம்யார்த ஹோமங்கள் - கும்பாபிஷேகங்கள் செய்து வைக்கிறேன்.

அதே போல் கீழ்க்காணும் விஷயங்கள் செய்வதில்லை.


குறிப்பு:
[1] கமிஷன் வாங்கிக் கொண்டு ராசிக்கல் வாங்கி கொடுப்பது இல்லை.

[2] உங்களுக்கு இந்த தோஷம் - அதனால் இந்த பரிகாரம் செய்யுங்கள் -அதை நான் செய்து கொடுக்கிறேன் என சொல்லுவதில்லை.

[3] இதே போல் இவரிடம் சென்று நீங்கள் பரிகாரம் செய்து கொள்ளுங்கள் என சொல்லுவதில்லை.

[4] திருக்கடையூரில் திருமணம் செய்து வைப்பதற்கு எனக்கு யாரையும் தெரியாது. அவர்களிடம் கமிஷன் பெற்றுக் கொண்டு திருமணம் செய்து வைக்கவும் தெரியாது.

[5] ராமேஸ்வரம் - திருப்புல்லாணியில் தில ஹோமம் செய்து வைப்பதற்கும் - ஸ்நான ஸங்கல்பம் செய்து வைப்பதற்கும் எனக்கு நன்கு தெரிந்த அண்ணன்மார்கள் இருக்கிறார்கள். கேட்டுக் கொண்டால் மட்டும் அவர்களுடைய தொடர்பு எண் கொடுப்பது வழக்கம். அவர்களிடம் அபிமானத்தை தவிர எந்த சன்மானத்தையும் பெற்றுக் கொள்வதில்லை.

[6] திருச்செந்தூர் எமது சொந்த ஊர், ஆனால் இந்நாள் வரை யாருக்காவது அங்கு உதவி தேவைப்பட்டால் எனது பெற்றோரை அனுப்புவேனே தவிர அங்கு யாரையும் Refer செய்வதில்லை.

No comments: