Monday, June 1, 2020

ஜோதிட உண்மை - 06: ஐந்தாமிடத்தில் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால்

ஜோதிட உண்மை - 06:
செய்தி:
ஐந்தாமிடத்தில் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால் குழந்தை பிறக்காது.

உண்மை:
ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரத்திற்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ஐந்தாமிடத்தில் ராகுவோ அல்லது கேதுவோ கட்டாயமாக இருக்கும். குழந்தை பிறப்பதற்கு வெறும் ராகுவோ அல்லது கேதுவோ மட்டும் காரணமல்ல. ஏனைய விஷயங்களையும் பார்க்க வேண்டும்.  திருமணப் பொருத்தம் பார்க்கும் போதும் சரி - திருமணமானாலும் சரி. 



ஒரு பெண்ணிற்கு லக்னம் - லக்னாதிபதி - பஞ்சமாதிபதி - பாக்கியாதிபதி - முக்கியமாக சந்தாண காரகனான குரு - மற்றும் செவ்வாய் - இத்தனை பேருடைய நிலையையும் ஆராய்ந்து பின் கணவருடைய ஜாதகம் அனைத்தையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். ஷட் பலம் நிர்ணயம் பண்ண வேண்டும். அஷ்டவர்க்கம் பார்க்க வேண்டும். கோச்சார ரீதியாக எவ்வாறு உள்ளது என கவனிக்க வேண்டும்.

குறிப்பு: 
[1] இவையெல்லாம் பார்ப்பதற்கு குறைந்தது அரை மணி நேரமாகும். பார்த்தவுடன் சொல்ல இயலாது.

[2] எமக்குத் தெரிந்து ஐந்தில் ராகு இருப்பவருக்கு 6 குழந்தைகள் இருக்கிறார்கள்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

No comments: