Saturday, February 12, 2022

அவரவர் வாழ்க்கை அவரவர் கையில்.....

 

இத்தனை வருட வாழ்க்கையில் ஒரே ஒரு அனுபவம் மட்டும் தினமும் படிக்கிறோம். நாம் ஒருவரை பார்க்கும் விதம் மற்றவர்கள் நம்மை பார்ப்பதில்லை. நிச்சயமாக பார்ப்பதில்லை. சிலர், எவ்வளவோ நேரங்களில் தமக்கு உறுதுணையாகவும் ஆறுதலாகவும் உதவியாகவும் இருக்கும் மனிதர்களை வெகு எளிதாக கடந்து விடுகிறார்கள்.
இத்தனை வருடங்களில் அதுவும் கடந்த 25 வருடங்களில் நாம் கற்றுக் கொண்ட பாடம் இதுதான். சில ஜோதிடர்கள் தம்மிடம் ஜோதிடம் பார்க்க வருபவர்களை ஜாதகம் பார்த்தோமா பலன் சொன்னோமா தக்ஷணை வாங்கினோமா என தட்டி விடுவர். ஆனால் நாம் நம்மிடம் வருபவர்களை சொந்தமாக மட்டும் எண்ணுவோம். எங்கெங்கு செல்கிறோமோ அவர்களுக்காக பிரார்த்தனையும் செய்வோம். எந்த பூஜைகளானாலும் அங்கும் அவர்களுக்காக பிரார்த்தனைகள் செய்வோம்.
ஆனால் சிலர் நம்மை அடுத்த மனிதர்கள் என்று கூட இல்லை அவர்கள் நினைவிலேயே நாம் இல்லை என்று தெரிய வருகிறது. அனைவரையும் மனது வரை கொண்டு சென்று அவர்கள் கஷ்டங்களை நமது கஷ்டங்களாக எண்ணி வருந்திய காலம் கூட உண்டு.
இனி நாம் இது போன்று இருப்பதில்லை என முடிவு செய்து விட்டோம் - யாருக்கு தகுதி இல்லையோ அவர்கள் யாரையும் மனம் வரை கொண்டு செல்லப் போவதில்லை.
அவரவர் வாழ்க்கை அவரவர் கையில்.....
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
ramjothidar@gmail.com

No comments: