Thursday, October 7, 2010

முன்னோர்கள் வழிபாடு - 2ம் பாகம்

கேள்வி: தாய் தந்தை இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?

பதில்: கண்டிப்பாக தர்ப்பணம் கிடையாது. ஆனால் விரதம் அனுஷ்டிக்கலாம். பெரியவர்களை வணங்கலாம். தாய் தந்தையரை வணங்கலாம். உங்கள் வீட்டில் இறந்த பெரியவர்களை நினைத்து மனமாற வணங்குங்கள். நீங்கள் இந்த பூமிக்கு வர அவர்கள்தான் காரணம். எனவே பெரியவர்களை எக்காரணம் கொண்டும் திட்டாதீர்கள்.

வணங்கும் முறை:

வீட்டில் மண் விளக்கில் நெய் தீபம் ஏற்றி ஒரு 5 நிமிடம் மனமாற இறந்த பெரியவர்களை நினைத்து வணங்குங்கள். தாய்தந்தையரிடம் ஆசிர்வாதம் வாங்குங்கள். இது போதும்.

கேள்வி: திவசம் கொடுக்க இயலாதவர்கள் அரிசி வாழைக்காய் கொடுக்கலாம் என்று சொல்கிறார்களே...
அப்படிச் செய்யலாமா? அது திவசம் செய்வதற்கு ஈடானதுதானா?

பதில்: அரிசி வாழைக்காய் கொடுத்தாலும் தர்ப்பணம் கட்டாயம் உண்டு.

முடிந்தது.

குறிப்பு: இது தொடர்பான சந்தேகங்களை தனி மடலில் இடுங்கள். என் சிற்றறிவுக்கு எட்டிய வரை பதிலளிக்க முயல்கிறேன்.

எனது மெயில் முகவரி: ramjothidar@gmail.com

No comments: