Wednesday, April 13, 2011

அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


அனைவருக்கும் எனது இனிய கர வருஷ தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

பஞ்சாங்கம் வாசிக்க நல்ல நேரம்: 

14-04-2011 - சித்திரை 01 -  வியாழன் - காலை 9- 10.30 - ரிஷப லக்னம்.

அறிவிப்பு:


[1] கரவருட ராசிகள் பலன்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன். இன்னும் 2 நாட்களில் பதிவு செய்கிறேன். மேலும் எனக்கு ”ஒரு நபர் ஒரு கேள்வி” பலன்கள் கேட்டு மின்னஞ்சல் செய்தவர்களுக்கும் நாளை முதல் பலன்கள் அனுப்பப்படும்(14-04-2011).

[2] கர வருட ஜோதிட குறிப்புகளும் தயார் செய்து கொண்டிருக்கிறேன். அதையும் பதிவு செய்கிறேன்.

இவண்,

பெருங்குளம் குப்பு ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்,

ஜோதிடம் எனது தொழிலல்ல, எனது உயிர்.


6 comments:

Anonymous said...

தங்களுக்கும் எங்களது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பலன்களுக்காக காத்திருக்கிறோம்..

பெங்களூரு பாலாஜி.

ஜிங் ஜாங் -விரட்டி. said...

இன்றைய தமிழகம் !

ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம்

ஒருவர் கேட்டார் – “எதற்க்காக இத்தனை கஷ்ட்டப்படுகிறாய்?”

நான் கேட்டேன் – “கஷ்டப் படாமல் எப்படி வாழ்கையை ஓட்ட முடியும்?”

அவர் சிரித்தபடி சொன்னார் – “என்னைப் பார்,

ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டுவிட்டு உறங்கி விடுவேன்.

போரடித்தால் வண்ணத்தொலைக்காட்சியில் திரைப்படம் பார்திடுவேன்.

உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடிடுவேன்,

உயர் சிகிச்சை பெற்றிடுவேன் இராஜமரியாதையுடன் !!”

“உழைக்காமல் எப்படியடா இத்தனையும் முடியும்?”

முதலாமவர் சிரித்தபடி கேட்டார் –

“நான் யார் தெரியுமா??

தமிழ் நாட்டுக் குடிமகன்.”

“என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய்

சமைப்பதற்க்கு எரிவாயுவும் அடுப்பும் இலவசம்.

பொழுதுபோக்கிற்கு வண்ணத்தொலைக்காட்சி மின்சாரத்துடன் இலவசம்

குடும்பத்துடன் உயிர் காக்கும் உயர் சிகிச்சையும் இலவசம்

எதற்க்காக உழைக்கவேண்டும் ?”

நான் கேட்டேன் – “உன் எதிர் கால சந்ததியின் நிலை என்ன?”

பலமாக சிரித்தபடி உரைத்தார் -

“மனைவி பிள்ளை பெற்றால் ரூபாய் 5,000 இலவசம் சிகிச்சையுடன் ..

குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில் ..

படிப்பு சீருடையுடன் உணவும் இலவசம் முட்டையுடன்

பாடப்புத்தகம் இலவசம், படிப்பும் இலவசம், பள்ளி செல்ல பஸ் பாஸும் இலவசம்..

தேவையென்றால் மிதி வண்டியும் இலவசம்.

பெண் பருவமடைந்தால் திருமண உதவித் தொகை ரூபாய் 25,000 இலவசம்

ஒரு பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம் !!”

“தேவையென்றால் மாப்பிள்ளையுடன் செய்தித்தாளில் விளம்பரமும் இலவசம்

மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்கையிலும்

நான் எதற்கு உழைக்க வேண்டும்??”

வியந்து போனேன் நான் !!

என் உயிர் தமிழகமே ! எவ்வளவு காலம் இந்த நிலை தொடரும்?

இலவசம் என்பதற்க்கு இரண்டு பொருள் உண்டு

ஒன்று கையூட்டு , மற்றொன்று யாசகம்

இதில் நீ எந்த வகை? எதை எடுத்துக்கொள்வது?

உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய் – இலவசம் நின்று போனால் உன் நிலை என்ன ஆகும்??

உழைப்பவர் சேமிப்பை களவாடத் தலைப்படுவாய் !!

இதே நிலை தொடர்ந்தால், இலவசம் வளர்ந்தால்,

அமைதிப் பூங்காவாம் தமிழகம், கள்வர் பூமியாய் மாறும் நிலை

இன்னும் வெகு தொலைவில் இல்லை

தமிழா விழித்திடு - உழைத்திடு

இலவசத்தை வெறுத்திடு – அழித்திடு

தமிழகத்தை தரணியில் உயர்த்திடு

நாளைய தமிழகம் நம் கையில்

உடன்பிறப்பே சிந்திப்பாயா?

மனது வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி !!

ஜிங் ஜாங் -விரட்டி. said...

அடுத்த பதிவு "நந்தன வருஷ" புத்தாண்டு பலன்கள் தானா?? இல்ல வர்ற வைகாசியிலாவது ஏதாவது உண்டா??தினமும் ஒரு பதிவு போட வேண்டாமா... டிவி ஜோஸ்ய னெல்லாம் காலங்கார்த்தால வந்து கத்துரான்களே... நீங்க ஏன் எப்பவோ ஒன்றுதான் எழுதிறீங்க??

ஜிங் ஜாங் -விரட்டி. said...

Post a Comment On: பெருங்குளம் ராமகிருஷ்ணன் பக்கங்கள்


"அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்"


1 Comment -

Show Original Post

Anonymous said...

தங்களுக்கும் எங்களது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பலன்களுக்காக காத்திருக்கிறோம்..

பெங்களூரு பாலாஜி.

April 14, 2011 9:44 AM
Your HTML cannot be accepted: Tag is not closed: A

Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.
Choose an identity

Google Account
You will be asked to sign in after submitting your comment.

OpenID

OpenID LiveJournal WordPress

TypePad

AOL
LiveJournal

WordPress

TypePadAIM


Name/URL
Name
URL
Anonymous
Publish Your Comment
Preview

Perungulam Ramakrishnan Josiyar said...

/*
அடுத்த பதிவு "நந்தன வருஷ" புத்தாண்டு பலன்கள் தானா?? இல்ல வர்ற வைகாசியிலாவது ஏதாவது உண்டா??தினமும் ஒரு பதிவு போட வேண்டாமா... டிவி ஜோஸ்ய னெல்லாம் காலங்கார்த்தால வந்து கத்துரான்களே... நீங்க ஏன் எப்பவோ ஒன்றுதான் எழுதிறீங்க??
*/

Hereafter i'll post regularly.

Thanks for your great support.

J.Subramonian said...

We are waiting for Tamil New year palangal