Sunday, March 11, 2012

துலாம் ராசி பலன்கள் - மார்ச் 14 முதல் 31 வரை

துலாம் ராசி பலன்கள் - மார்ச் 14 முதல் 31 வரை
துலாம்: (சித்திரை 3, 4, ஸ்வாதி, விசாகம் 1, 2, 3) அனைவரையும் வாழ வைக்கும் துலாம் ராசி வாசகர்களே, ராசியில் சனி, இரண்டாமிடத்தில் ராகு, ஐந்தாமிடத்தில் புதன், ஆறாமிடத்தில் சூரியன், ஏழாமிடத்தில் குரு, ராசியாதிபதி சுக்கிரன், எட்டாமிடத்தில் கேது, லாபஸ்தானமான பதினொன்றில் செவ்வாய் என கோள்கள் நிலை உள்ளது. மார்ச் 14ம் தியதி விரையஸ்தானத்திற்கு வக்ரகதியில் சனியும், 29ம் தியதி ராசியின் அஷ்டமஸ்தானத்திற்கு ராசியாதிபதி சுக்கிரனும் பெயர்ச்சியாகிறார்கள்.



இரண்டில் ராகு இருந்தாலும், ராசிநாதன் ஏழில் சஞ்சரிக்க அவருடன் குரு இருப்பதும் நல்லது. பொருளாதார பற்றாக்குறை ஏற்படாது. இரண்டாம் அதிபதியும் லாபஸ்தானத்தில் உலவுவதால் வங்கி இருப்பு உயரும். சுயமரியாதை மற்றும் மேன்மைக்கு சற்று பங்கம் வரலாம். கவனம் தேவை. மூன்றுக்குடையவர் ராசியைப் பார்ப்பதால் சகோதரத்திடம் இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் மறைந்து நன்மைகள் ஏற்படும். விலையுயர்ந்த ஆடைகள் ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். உற்றார் உறவினர்களின் வருகை அதிகரித்து சந்தோஷ தருணங்கள் ஏற்படும். வீடு கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு கட்டுவதற்குண்டான கடன் வாங்குவதற்கான வேலைகள் தடையின்றி நடைபெறும். அரசு  மற்றும் அரசு சார்ந்த பணிகளில் தொய்வுகள் ஏற்படலாம். மிக முக்கிய பிரமுகர்கள் மூலம் அதை சரி செய்து கொள்வீர்கள். நேர்மையும் அறிவாற்றலும் மிக்கவர் என பாராட்டுதல்கள் பெறுவீர்கள். வாகனப்பழுதுகள் ஏற்பட்டு செலவுகள் செய்ய நேரிடலாம். ஏழுக்குடையவர் லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வாழ்க்கைத்துணை மூலமாக லாபங்கள் ஏற்படும். திருமணமாகாதவர்கள் செல்வாக்கும் செல்வமும் உடைய வாழ்க்கைத்துணை அமையும். நிறைய நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள். மூத்த சகோதரத்தால் மிகுந்த ஆதாயம் கிடைக்கும். தொழில் வளர்ச்சி பெறும்.

கலைத்துறையினருக்கு அரசாங்க விருதும் பாராட்டும் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் வாய்ந்த பதவிகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள்.


சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 27, 28, 29

பரிகாரம்: ஸ்ரீ மஹாலக்ஷ்மியை வணங்குவதும், மஹலக்ஷ்மி அஷ்டோத்திரம் சொல்வதும் நன்மையை தரும்.


1 comment:

எழிலரசன் said...

அய்யா உங்கள் இலவச சேவைக்கு எனது வாழ்த்துக்கள்