Sunday, March 11, 2012

தனுசு ராசி பலன்கள் - மார்ச் 14 முதல் 31 வரை

தனுசு ராசி பலன்கள் - மார்ச் 14 முதல் 31 வரை
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) விழ விழ மீண்டும் முளைக்கும் தன்னம்பிக்கையை உடைய தனுசு ராசி வாசகர்களே மூன்றாமிடத்தில் புதன், நான்காமிடத்தில் சூரியன், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராசிநாதன் குரு, சுக்கிரன், ஆறாமிடத்தில் கேது, ஒன்பதாமிடத்தில் செவ்வாய், பதினொன்றில் சனி, பன்னிரெண்டாமிடத்தில் ராகு என கிரகங்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். மார்ச் 14ம் தியதி தொழிற்ஸ்தானத்திற்கு வக்ரகதியில் சனியும், 29ம் தியதி ராசியின் 6ம் இடத்திற்கு சுக்கிரனும் பெயர்ச்சியாகிறார்கள்.

உடல்நலம் சீராக இருக்கும். அதிர்ஷ்ட வீட்டில் இருக்கும் குரு ராசியைப் பார்ப்பதும் அவருடன் களத்திரகாரகன் சுக்கிரன் இருப்பது நன்மையான காலகட்டம் என்பதை உணருங்கள். தனஸ்தானாதிபதி சனி ராசியை பார்ப்பதால் பொருளாதார பிரச்சனைகள் ஒன்றன் பின் ஒன்றாக நீங்கும். காரியங்கள் யாவும் துரிதமாக தங்குதடையின்றி இனிதே நடைபெறும். புகழ்மிக்கவர்கள் உங்கள் பின்னால் இருந்து பொருளாதாரம் பெருக வழிவகைகள் செய்வார்கள். குடும்பத்தில் இதுவரை இருந்த தடைபட்ட சுணக்க நிலை மாறும். பொன் பொருள் சேர்க்கையால் சந்தோஷம் அதிர்ஷ்டம் ஏற்படும். பொதுமக்களால் போற்றப்படுவீர்கள். தர்மகாரியங்களிலும் ஆலயத் திருப்பணிகளிலும் ஈடுபடுவீர்கள். மூன்றுக்குடையவர் லாபத்தில் சஞ்சரிப்பதால் தனங்களில் தன்னிறைவு அடைவீர்கள். உடன்பிறப்புகள் தங்கள் தொழிலில் மிகுந்த மேன்மை அடைவார்கள். வீடு வாகனம் நல்ல நண்பர்களைப் பெறுவீர்கள். தங்களது வெளிநாட்டுப் பயணத்தால் நன்மைகளை அடைவீர்கள். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். புனித செயல்களில் ஈடுபடவும் வாய்ப்புகள் உள்ளன. நிலம் மனை போன்றவற்றில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு அந்திய தேச பயணம் ஏற்படவும், அதனால் லாபம் அடையவும் வாய்ப்புகள் உண்டு. அரசியலில் உள்ளவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். மாணவர்கள் நன்கு தேர்ச்சி அடைவார்கள்.

சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 31, ஏப்ரல் 1, 2

பரிகாரம்: ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தியையும், முருகனை வழிபடுங்கள். நன்மைகள் அடையலாம்.

No comments: