Monday, May 10, 2021

அனைவருக்கும் ஓர் முக்கியமான அறிவிப்பு:

முக்கியமான விளக்கம்:
அனைவருக்கும் ஓர் முக்கியமான அறிவிப்பு:

நாம் சென்னையில் தற்போது இல்லை. இன்னும் சென்னை வருவதற்கு குறைந்தபட்சம் 3 மாதங்களாகும்.

கடந்த ஒரு 15 நாட்கள் காலமாக எமக்கு வரும் செய்திகள் நல்ல செய்திகளாக இல்லை. உறவினர்கள் - நண்பர்கள் என பலரின் இழப்புகள் தாங்கொன்னாத் துயரத்தை அளிக்கிறது. இதில் நடுத்தர வயதுடைய சிலரின் இழப்புகள் சத்தியமாகவே தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இந்த சூழ்நிலையில் சிலர் எமக்கு போன் செய்து நேரடியாக வரலாமா என கேட்கிறார்கள். வேண்டாம் என்று சொன்னால் கோபம் வருகிறது. எப்படிதான் புரிந்து கொள்ளப் போகிறார்கள் என தெரியவில்லை. அவர்களுக்கு கோபம் வருகிறது. ”எங்களுக்கென்ன நோய் இருக்கும் என நினைக்கிறீர்களா?” என உரிமையோடு வரிந்து கட்டுகிறார்கள். வெளியிலேயே போகாதவர்களுக்கெல்லாம் கூட தொற்று ஏற்படுகிறது. இது எப்படி வருகிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ளவே இயலவில்லை.

கண்டிப்பான முறையில் இந்த ஊரடங்கில் யாரெல்லாம் வாட்ஸ் அப் மற்றும் இமெயில் அனுப்பினார்களோ அவர்களுக்கு பதில் அளிக்கப்படும். ஜாதகம் சாதகமே நிகழ்ச்சியும் கண்டிப்பான முறையில் வெளிவரும்.

மே - 11 - செவ்வாய்கிழமை அமாவாசை முதல் உலக நன்மைக்காக தினசரி சிறப்பு பூஜை செயவதற்கு உத்தேசித்துள்ளோம். நேரடி ஒளிபரப்பு செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்து வருகிறோம்.

இறைவனிடம் மண்டியிட்டு வேண்டிக் கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.

வீட்டிலேயே இருப்போம். பாதுகாப்பாக இருப்போம். அரசாங்கம் சொல்லும் வழிமுறையினை பின்பற்றி நடப்போம்.

நல்லதையே நினைப்போம் - நல்லதையே செய்வோம் - நல்லதே நடக்கும்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
ramjothidar@gmail.com






No comments: