Friday, May 14, 2021

கொஞ்சம் சீரியசான பதிவு:

 கொஞ்சம் சீரியசான பதிவு:
அனைத்து உறவுகளுக்கும் வணக்கம். கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது.

திடகாத்திரமான உடற்கட்டு உள்ளவர்களுக்கு ஒன்றும் செய்யாது என்றார்கள் - கொரொனா வந்தது
இயற்கை உணவை சாப்பிடுபவர்களுக்கு வராது என்றார்கள் - வந்தது
தினசரி உடற்பயிற்சி செய்பவர்களுக்கு வராது என்றார்கள் - வந்தது
40 வயதுக்குட்பட்டவர்களுக்கு வராது என்றார்கள் - வந்தது
15 வயதிற்குப்பட்ட குழந்தைகளுக்கு வராது என்றார்கள் - வந்தது
பிஞ்சு குழந்தைகளை தாக்காது என்றார்கள் - தாக்கியது
வந்தாலும் மரண சதவீதம் குறைவு என்றாகள் - சதவீதம் அதிகரித்தது.

இது மற்ற நோய்களை போல் அல்ல - வந்தால் மரணம் நிச்சயம் என்பது போல் இருக்கிறது, தற்போதைய சூழல். கடந்த 5 நாட்களில் மட்டும் எமக்கு வந்த தகவல்களில் கிட்டத்தட்ட 10 பேரின் மரணம் கணிக்க முடியாதது. சுத்தமாக தாங்க முடியவில்லை.

அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை விதித்தாலும் பலரும் அந்த கட்டுப்பாடுகளை மதிப்பதில்லை. இன்று கூட நாம் இருக்கும் இடத்தில் கணக்கெடுத்தால் 200 பேருக்கு மேலாக வாகனங்களில் சுற்றுவதை பார்க்க முடிகிறது. என்ன காரணம் என்றாலும் சரி வெளியில் சுற்றுவதை நிற்பாட்டாதவரை இது குறைவதற்கு வாய்ப்புகள் இல்லை.

கடந்த வருடம் இதே நேரத்தில் கொரொனா குறைவாக இருந்தது - பயம் அதிகமாக இருந்தது - ஆனால் இப்போது கொரொனா அதிகமாக இருக்கிறது - பயம் சுத்தமாகவே இல்லை.

இந்த வியாதி நமக்கு வந்தால் நம்மை மட்டும் பாதிக்காமல் நம்மை சார்ந்தவர்களையும் பாதிக்குமே என்ற உணர்வு கொஞ்சம் கூட இல்லாமல் வெளியில் சுற்றுகிறார்கள். குறைந்த 7 நாட்கள் யாரும் வீட்டினை விட்டு வெளியில் வராதீர்கள் என அரசாங்கம் எச்சரித்தால் பரவாயில்லை என தோன்றுகிறது. கடைசியில் ராணுவத்தை கொண்டு வருவதற்கு மத்திய அரசு யோசித்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளி வருகிறது. இதுவெல்லாம் நமக்கு புதிதாக இருக்கிறது.

மக்களாகிய நாம் ஒன்றிணையாமல் அரசாங்கத்தை குற்றம் சொல்லி ஒன்றும் ஆகப் போவதுமில்லை.

முடிந்தவரை அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுப்போம் - கொரொனாவை வென்றெடுப்போம்.

ஜோதிட குறிப்பு:
நாளை வைகாசி மாதம் பிறக்கிறது. ஜோதிட ரீதியாக சில கிரக கூட்டுகள் சரியில்லாதவை. அதில் முக்கியமானது சூர்யன் + ராகு இணைவு. வரும் வைகாசி 11 - 25 மே 2021 முதல் வைகாசி 20 - 03 ஜூன் 2021 வரை சூர்யன் +  ராகு இணைவு. இதே போல் வைகாசி 20 - 03 ஜூன் 2021 - அன்று செவ்வாய் மாற்றம், மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு செவ்வாய் மாறுகிறார். மகர ராசியில் சனி பகவான் வக்ரமாக இருக்கிறார். செவ்வாய் சனி சம சப்தமம். செவ்வாய் சனி ஒருவரை ஒருவர் பார்க்கிறார்கள். இதுவும் சரியில்லாததே. 27 ஜூலை 2021 அன்று செவ்வாய் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு மாறுகிறார். அதன் பின்னர்தான் இந்த பிரச்சனை கொஞ்ச கொஞ்சமாக குறையும். அதுவரை அனைவரும் அரசு என்ன சொல்கிறதோ அதை கேட்டு நடப்போம்.

ஜெய் ஹிந்த்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
ramjothidar@gmail.com

















No comments: