கேள்வி:
பிறந்த தேதி: 3-செப்-1982; நேரம்: 2.00 பகல்; ஊர்: திருச்சி
அரசு வேலை கிடைக்குமா? குடும்பத்துடன் இணைந்து வாழ்வேனா?
பதில்:
நீங்கள் பிறந்தது ஆவணி மாதம் 18ம் தேதி. உங்கள் ஜாதகப்படி உங்களுக்கு தனுசு லக்னம் - மூலம் பாத சாரம். கும்ப ராசி - சச்தய நட்சத்திரம். சனி பகவான் தசை - குரு புத்தி நடந்து கொண்டிருக்கிறது. சனி பகவான் உங்கள் ஜாதகப்படி குடும்ப ஸ்தானம் மற்றும் தைரிய ஸ்தானத்திற்குரியவர். அவர் பத்தாம் வீட்டில் புதன் பகவானுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். மேலும் அது அவருக்கு நட்பு வீடாகும். அரசு சம்பந்தப்பட்ட விஷய்ங்களுக்கு அதிபதி சூரிய பகவான். அவர் ஆட்சி நிலையில் இருக்கிறார். தொழில் ஸ்தானம் பத்தாம் வீடு. தொழில் காரகன் சனி பகவான். இரண்டும் இணைந்தே உங்கள் ஜாதகத்தில் இருப்பதால் நீங்கள் முயற்சி எடுத்தால் நிச்சயமாக அரசு வேலை கிடைக்கும். ஜூன் - 06 -2024க்குள் கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. பயனபடுத்திக் கொள்ளுங்கள். மேலும் குடும்பாதிபதியும் சனி பகவானாகவே இருப்பதால் நல்லதே நடக்கும். முன்னோர்கள் வழிபாடு, சிவ வழிபாடு, மேலும் சித்தர்கள் வழிபாடு உங்கள் முயற்சிக்கு கைகொடுக்கும்.
#astrologer #horoscopetoday #dinapalan #ஜோசியர் #tamilastrology
#dailyhoroscope #rasipalan #perungulamramakrishnan
No comments:
Post a Comment