Friday, September 22, 2017

நவராத்திரியில் அனைவருக்கும் ஸ்ரீசக்ர டாலர்

அனைவருக்கும் வணக்கம்.

நவராத்திரி என்பது சாக்த - சக்தி வழிபாட்டில் மிக முக்கியமானதாகும். அதிலும் ஒவ்வொரு வருடத்திலும் வரும் நான்கு நவராத்திரிகளில், புரட்டாசி மாதம் வரும் சாரதா நவராத்தியானது முக்கியமானதாகும். 

இந்த நவராத்திரியில் அனைவரின் வேண்டுகோளுக்கிணங்க வெள்ளியில் செய்யப்பட்ட ஸ்ரீசக்ர டாலர் - திரிசதி பூஜை செய்து கொடுக்கிறோம். வெள்ளியில் இருக்கும் டாலரை சிகப்பு கயிற்றில் கட்டி அணிந்து கொள்ளலாம். தொடர்ந்து 15 நாட்கள் பூஜையில் வைத்து தரப்படும் ஸ்ரீசக்ரத்தின் மகிமை வார்த்தைகளில் அடங்காதது. ஸ்ரீசக்கரம் ஒருபக்கமும் - அம்மன் மறுபக்கமும் இருக்கும். 





சரியாக நவராத்திரி முதல் நாள் முதல் பூஜையில் வைத்திருக்கிறோம். அக்டோபர் 7ம் தேதி ஸ்ரீவித்யா சிரோன்மணி ஸ்ரீமான் பரணிகுமார் குருஜி அவர்கள் நவாபரண பூஜை முடித்து அதன்பின் 51 சுமங்கலிகள் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் சொல்லிய பின் ஸ்ரீசக்ர பூஜை முடிவுறும்.

ஸ்ரீசக்ர டாலர் வேண்டும் அன்பர்கள் - தங்களது பெயர், ராசி, நக்ஷத்ரம், முகவரி ஆகியவற்றை இமெயில்/வாட்ஸ்அப் செய்தால் பூஜையில் சங்கல்பம் செய்து பிரசாதம் அக்டோபர் 9ம் திகதி முதல் அனுப்பப்படும்.

ஸ்ரீசக்ர டாலருக்கான காணிக்கை அவரவர்கள் விருப்பப்படி ஏற்றுக் கொள்ளப்படும். 

மேலும் விபரங்களுக்கு:
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 89390 41417
Email: ramjothidar@gmail.com

No comments: