Monday, July 6, 2020

முடிந்தவரை நன்மையே செய்வோம். நல்லதே நடக்கும்.

ஒரு முறை அல்ல நூறு முறை அல்ல ஆயிரம் முறை பதிவிட்டாச்சு. ஆனாலும் சிலருக்கு இன்னும் ஐயம் தீரவில்லை.

காலை ஒரு அம்மா அழைத்திருந்தார். அவர் கூறியதாவது “ஐயா எமது பெண் பூசம் நக்ஷத்ரம். வயது 27. வாக்கிய ரீதியாக இனி கண்டகச்சனி டிசம்பரில் ஆரம்பிக்க இருக்கிறது. அடுத்த மூன்று வருடத்திற்கு அது நடக்கும். அதற்கடுத்து அஷ்டமத்து சனி. அது மூன்று வருடத்திற்கு நடக்கும். எனவே இன்னும் 6 வருடத்திற்குப் பிறகு திருமணம் பார்க்க ஒரு ஜோதிடர் வலியுறுத்தியிருக்கிறார்” என்றார்கள்.



மறுபடியும் மறுபடியும் மறுபடியும் சொல்கிறோம். சனி பகவான் ஜீவாதார பிரச்சனைகளில் கை வைக்க மாட்டார். அதாவது கல்வி - திருமணம் - வேலை வாய்ப்பு - குழந்தை - வீடு மனை போன்ற விஷயங்களில் கை வைக்க மாட்டார். வாக்கு - நோய் இரு விஷயங்களில் சில பிரச்சனைகள் வரலாம். அதுவும் அவரால் அல்ல, நமது பிராப்தத்தால். மேலும் சுத்தி சுத்தி பார்த்தால் - சனி - ராகு - கேது - குரு ஏதாவது நடந்து கொண்டே தான் இருக்கும். அதற்காக திருமணத்தை தள்ளிப் போடக்கூடாது. இதில் குரு பார்வை வந்தாச்சா என தனிக் கேள்வி வேறு உண்டு. 

பொருத்தம் என எடுத்து கொண்டால் இருவரது ஜாதகத்தையும் சேர்த்து ஆராய வேண்டும். தனித்தனியாக ஆராய வேண்டும். 

விதி மதி கதி என ஆராயணும். 2ம் அதிபதி - 5ம் அதிபதி - 9ம் அதிபதி - 7ம் அதிபதி - 11ம் இடம் என அவ்ளோ இருக்கு. Simpleஆ பொருத்தம் இப்போ எல்லாரும் Softwareல் பார்த்து விடுகிறார்கள். இதற்கு தனி பதிவு போடுகிறோம்.

முடிந்தவரை நன்மையே செய்வோம். நல்லதே நடக்கும்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

No comments: