Wednesday, July 8, 2020

பயம் வேண்டாம் - தைரியம் அவசியம்.

பயம் வேண்டாம் - தைரியம் அவசியம்.


கொரோனா ஒரு பக்கம் வாட்டி வதைக்க - இந்த வருடம் 2015 போன்று மழை வந்து சென்னை அழியும் என புதுசாக கிளம்பியிருக்கிறார்கள். சொன்னவர்கள் யாரென்று பார்த்தால் புது வருடம் பிறந்த போது மழை குறைவாக இருக்கும் என்று சொன்னவர்கள். அனைத்து வகையான உயிர்களும் பாதிக்கப்படும் என்று வேறு சொன்னார்கள். இப்போது மழை பெய்து சென்னை அழியும் என்று சொல்லியிருக்கிறார்கள். இன்னொருவர் என்னவென்றால் 2021ல் இதை விட பெரிய வியாதி வந்து அனைத்து மக்களும் மடிவார்கள் என்கிறார். அனைத்து மக்களும் மடிந்து இவர் மட்டும் வாழ்வார் போல.



முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த சார்வரி வருஷமும் சரி அடுத்து வரக்கூடிய பிலவ வருஷமும் சரி - வருஷம் பிறக்கும் நேரம் சனியினுடைய ஆதிக்கம் இருப்பதால் மக்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்படலாம், அவ்வளவே. ஆனாலும் கடவுளுடைய கிருபையால் உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் மீண்டெழும். இது வரலாறு.

வரலாறு மீண்டும் திரும்பும். அனைவரும் அவரவர் கடமையை சரி வரச் செய்வோம்.

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

No comments: