Wednesday, August 21, 2013

மிக முக்கியமான கேள்வி: வாஸ்து நாள் சந்தேகம்



கேள்வி: வரும் ஆகஸ்டு 22ம் தேதி வாஸ்து நாள் வருகிறது. ஆனால் யோகம் மரணயோகம் என்று இருக்கிறது. எங்கள் வீட்டிற்கு வாஸ்து நாள் செய்யலாமா? 




பதில்: வரும் ஆகஸ்டு மாதம் 22ம் தேதி காலை மணி 7.23க்கு மேல் 7.59 வரை வீடு, மனை, மடம், ஆலயம், கிணறு - வாஸ்து செய்ய நன்று. சில விஷயங்களை நாங்கள் சொல்லப் போகிறேன். ஒரு குழந்தை பிறந்து வீட்டிற்கு புண்யாஹவாசனம் செய்வதற்கு, வாஸ்து நாள் செய்வதற்கு, ஒருவர் இறந்து அவருக்கு செய்யும் 16ம் நாள் ஈமக்கிரியை போன்றவைக்கு லக்னமோ, ராகு காலமோ, எமகண்டமோ, நக்ஷத்திரமோ, யோகமோ, ஹோரையோ, முக்குண வேளையோ அல்லது பஞ்சகமோ பார்க்க வேண்டிய அவசியமில்லை. எனவே தாங்கள் தாராளமாக வாஸ்து நாளைச் செய்யலாம்.

வாழ்த்துக்கள்.

No comments: