Saturday, August 31, 2013

கேள்வி - பதில்: கிழக்கு சூலம் - சுபதினம்

மிக முக்கியமான கேள்வி: திரு.மணிமாறன், சென்னை.

கேள்வி:
வரும் செப்டம்பர் 9ம் தேதி திங்கட்கிழமை அன்று எனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்க உள்ளது. அன்றைய தேதியில் சூலம் கிழக்கு என்று போட்டிருக்கிறது. அதனால் எனக்கு தெரிந்தவர் ஒருவர் நிச்சயம் பண்ணப்போகும் மாப்பிள்ளையும் பெண்ணும் கிழக்கு முகமாக பார்த்து உட்கார கூடாது, எனவே மேற்கில் பார்த்தோ அல்லது வடக்கில் பார்த்தோ உட்கார வைக்க வேண்டும் என்று கூறுகிறார், இது சரியா?



 

பதில்:
கட்டாயமாக கூடாது. நமது பெரியவர்கள் நமக்கு விட்டுச் சென்ற பொக்கிஷங்களில் திசையும் அதை சார்ந்த விஷயங்களும் ஒன்று. எந்த ஒரு சுபகாரியமாக இருந்தாலும் நாம் கிழக்கு முகமாக உட்கார்ந்துதான் செய்தல் வேண்டும். சூரியன் உதிக்கும் திசை கிழக்கு. சூரியன் ஒருவரே பிரம்மம். அவர் இல்லையென்றால் இவ்வுலகம் இயங்காது. எனவே தான் கிழக்கு முகத்தை தேர்ந்தெடுத்தார்கள். மேலும் காந்தவியல் ரீதியாகவும் கிழக்கு திசையில் உட்கார்ந்து தியானம் போன்றவற்றை செய்யும் போது பலன்கள் அதிகமாக கிடைப்பதாகவும் சொல்கிறார்கள். சூலம் என்பது பயணம் செல்வதற்கு மட்டுமே பார்க்க வேண்டும். அந்த சூலம் பார்ப்பது என்பது தற்போதுள்ள நடைமுறையில் நமக்கு எந்தளவிற்கு பயனளிக்கும் என்பதும் தெரியவில்லை. எனவே உங்கள் நிச்சயதார்த்தத்தில் நீங்களும் உங்கள் வருங்கால மனைவியும் கிழக்கு முகமாக உட்கார்ந்தே சாங்கியங்களை செய்வதே உகந்தது.

உங்கள் நிச்சயதார்த்த வைபவம் இனிதே நடைபெற எங்களது ஆசிகள். வாழ்த்துக்கள்.

No comments: