Tuesday, March 5, 2013

பிரார்த்தனை செய்யுங்களேன்

அன்பின் சொந்தங்களே,

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யரின் பணிவான வணக்கங்கள்.

எங்களுக்கு விபத்து ஏற்பட்டு இன்றோடு 21 நாட்கள் கடந்து விட்டது. ரத்தக்காயங்கள் ஆறிவிட்டன. ஆனாலும் வலது கையில் மணிக்கட்டும் கையும் சேரும் இடத்தில் எலும்பு வளைந்திருப்பதாக பண்டாரவிளை வைத்தியர் சொன்னார். எக்ஸ்ரேவிலும் அதுவே வந்தது. கடந்த வாரம் சாப்பிடுவதற்கு மிகவும் கடினமாக இருந்தபோதுதான் சொந்த ஊருக்குச் சென்று பண்டாரவிளை சிங்நாடார் வைத்தியர் பேரன் எங்களது பால்ய தோழரான ரமேஷ் வைத்தியரிடம் சென்று காட்டினோம். வெள்ளிக்கிழமை கட்டு போட்டார். நேற்று முன் முட்டைப்பத்து கட்டு போட்டிருக்கிறார். சாப்பாடு ஸ்பூன் மூலமாகத்தான் சாப்பிட முடிகிறது. இடதுகையால் மட்டுமே தான் தட்டச்சு செய்ய முடிகிறது. திருச்செந்திலதிபனிடமும், எங்களது முன்னோர்களிடமும், பெரியவர்களிடமும் பிரார்த்தனை செய்திருக்கிறோம். கிட்டத்தட்ட அனைத்து ஜோதிட ஆலோசனைகளையும் கேன்சல் செய்திருக்கிறோம். மேலும் 20 நாட்கள் ஆகலாம் என நினைக்கிறோம். அன்பின் சொந்தங்களே எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்களேன்.

எங்களது அலைபேசி எண்: 7845119542

6 comments:

இராஜராஜேஸ்வரி said...

தங்களின் கரம் விரைவில்
பூரண குணம் பெற இறைவனைப்பிரார்த்திக்கிறோம் ஐயா..

sury siva said...

Please go to an Ortho Surgeon and get his valued opinion. Their bandages plaster parrys will set right in about two weeks.

subbu rathinam

Lenin said...

Our prayers are with you for speedy recovery

Arumugam singapore said...

தங்களின் கரம் விரைவில்
பூரண குணம் பெற இறைவனைப்பிரார்த்திக்கிறோம் ஐயா

sowri said...

Our prayers for your speedy recovery

Anonymous said...

Pray for Getting well soon..... are you not aware that this will happen to you? did you not seen your horoscope for planning your future???