Thursday, March 3, 2011

சிவராத்திரி பெருவிழா

மஹா சிவராத்திரியையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு யாகங்கள், பூஜைகள் செய்யப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் ஸ்ரீ ஸாய் நவரத்ன விலாஸ் ஜோதிட நிலையம் சார்பில் அருள்மிகு ஸ்ரீ கோமதி அம்பாள் ஸமேத ஸ்ரீ திருவழுதீஸ்வரர் ஆலயத்தில் பக்தர்களுக்கு இலவசமாக சிறப்பு அர்ச்ச்னை ஆராதனைகள் செய்யப்பட்டன.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. ரமேஷ் குருக்கள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட குருக்கள் ஒன்று கூடி லட்சார்ச்சனை நடந்தது. மாலை 6 மணிக்கு ராஜகோபுரம் எதிரில், 108 தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்கள் அருணாசலேஸ்வரரை போற்றி இசை வழிபாடு நடத்தினர். 24ஏக்கர் பரப்பளவு கொண்ட கோவில் வளாகம் முழுவதும் வண்ணம் கலந்த உப்புகளால் பல வகையான ஓவியங்கள் வரையப்பட்டு ஒரு லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

No comments: