Saturday, December 8, 2012

சுப்ரபாத சேவை டிக்கெட்: கூடுதலாக விற்க முடிவு


திருமலை ஏழுமலையானின் சுப்ரபாத சேவை டிக்கெட்டுகள் இனிமேல் இணையதளம் மூலம் கூடுதலாக விற்பனை செய்யப்படும் என்று திருமலை-திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி எல்.வி.சுப்பிரமணியம் கூறினார்.




திருமலையில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற, தொலைபேசி மூலம் பக்தர்கள் குறைகேட்கும் நிகழ்ச்சியில் பல ஊர்களிலிருந்தும் பக்தர்கள் யோசனை தெரிவித்தனர். குறைகளையும் அவர்கள் கூறினர். அவர்களுக்கு செயல் அதிகாரி பதில் அளித்தார்.
பக்தர்களிடம் கனிவாக நடந்து கொள்ள ஏழுமலையான் சந்நிதியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றார்.
வைகுண்ட ஏகாதசி, துவாதசி சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் பக்தர்கள் குறைகேட்கும் நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும் அம்சங்கள் சப்தகிரி மாத இதழில் இனி வெளியிடப்படும். அதிக அளவில் பக்தர்களுக்கு இணையதளம் மூலம் சுப்ரபாத சேவை டிக்கெட்டுகள் அளிக்கப்படும் என்றார்.
காசியில் சிதிலமடைந்துள்ள விஷ்ணு ஆலயங்களுக்கு புனர்நிர்மாணப் பணிகள் நடைபெறும். வைகுண்ட ஏகாதசி அன்று அங்கப்பிரதட்சணம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. கோயிலுக்குள் உள்ள யோக நரசிம்ம ஸ்வாமிக்கு நரசிம்ம ஜெயந்தி அன்று மட்டுமே அபிஷேகம் நடைபெறும். அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் தேவஸ்தான வானொலி மூலம் ஆன்மிக நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படும். பக்தர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு தேவஸ்தான ஊழியர்கள் பணிபுரியும் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் நிகழ்ச்சியில் பக்தர்களிடம் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
மேலும் அந்தமான், போர்ட் பிளேரிலிருந்து ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை ஜ்ஜ்ஜ்.ள்ங்ஸ்ஹர்ய்ப்ண்ய்ங்.ஸ்ரீர்ம் என்ற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார். வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதியில் உள்ள இ-தர்ஷன் கவுன்ட்டரில் வழங்கப்படும் ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் வரிசையை தேவஸ்தான செயல் இணை அதிகாரி சின்னங்காரி ரமணா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.

No comments: