Wednesday, December 5, 2012

கும்பம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள் -பாகம் பதிமூன்று

கும்பம்:

அடுத்தவரின் மனதை எளிதில் அறிந்து கொள்ளும் கும்ப ராசி அன்பர்களே நீங்கள் பிறரின் நிறைகளை எந்த அளவிற்கு காண்பீர்களோ அதே போன்று குறைகளையும் கண்டு கொள்வீர்கள்.

இதுவரை உங்களது ராசிப்படி சுகஸ்தான நான்காமிடத்தில் கேதுவும், தொழில்ஸ்தானமான பத்தாம் இடத்தில் ராகுவும் இருந்து வந்தார்கள். இனி கேது தைரியவீரிய ஸ்தான மூன்றாமிடதிற்கும், ராகு பாக்கியஸ்தான ஒன்பதாமிடத்திற்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

கிரகங்களின் பார்வை:
ராகு தைரியவீர்ய மூன்றாம் இடத்தையும், களத்திரஸ்தான ஏழாமிடத்தையும், லாபஸ்தான பதினொன்றாமிடத்தையும் பார்க்கிறார்.
கேது ராசியையும், பஞ்சம பூர்வ புண்ணிய ஐந்தாமிடத்தையும், பாக்கியஸ்தானமான ஒன்பதாமிடத்தையும் பார்க்கிறார்.

குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். வாழ்க்கைத்துணை வழி சொந்தங்கள் மூலம் உதவிகள் வந்து சேரும். சிலர் வீடு மாற்ற வேண்டி வரும். மே 2013க்குப் பிறகு திருமணம் நல்ல முறையில் கைகூடும். உங்கள் சகோதர, சகோதரிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை வளரும். அவர்களுடன் சேர்ந்து இனிய பயணங்களைச் செய்வீர்கள். உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். உடல் நலம் சீராகும். வருமானம் சிறப்பாக இருக்கும். உங்களின் பெருந்தன்மையை அனைவரும் பாராட்டுவார்கள். அதேநேரம் ஆடம்பரக் கேளிக்கைகளுக்காக செலவு செய்வதைக் குறைத்துக் கொள்ளவும். சில நேரங்களில் யோசிக்காமல் பேசி வம்பில் மாட்டிக் கொள்ள நேரலாம். "யா காவாராயினும் நா காக்க' என்ற வள்ளுவர் வாய் மொழியை எப்போதும் நினைவில் நிறுத்துதல் நலம் பயக்கும். மறைமுக எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மற்றபடி உங்களின் பதவியால் சில ஆதாயங்கள் கிடைத்து, மகிழ்ச்சி உண்டாகும். இதன் மூலம் பொதுநலக் காரியங்களுக்குச் செலவு செய்வீர்கள். திட்டமிட்ட வேலைகளைத் தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை, சில நேரங்களில் உருவாகலாம். எனவே உங்கள் காரியங்களில் கவனமாக இருக்கவும். மற்றபடி நேர்மையான எண்ணங்களால் உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்று நடத்த நல்வாய்ப்பு உருவாகும். இதனால் மனதில் இருந்த காரணமில்லாத வருத்தங்களும், குழப்பங்களும் மறையும். உங்கள் பணிகளை விரைவில் செய்து முடிப்பீர்கள். சமூகத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை உயரும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உங்களின் எண்ணங்களும், செயல்களும் உங்களுக்கு வாழ்வில் உயர்ந்த இடத்தைப் பெற்றுத் தரும். கடினமாக உழைப்பும், அதற்கேற்ற பெரும் பலனும் கிடைக்கும். அதேநேரம் ஓய்வெடுக்க முடியாமல் போவதால் உடலில் சோர்வு உண்டாகும். எனவே சரியான நேரத்தில் ஆகாரத்தை உட்கொண்டு உடல் வலிமையைத் தக்க வைத்துக் கொள்ளவும். உங்களின் உடல் ஆரோக்யத்தில் சிறு பாதிப்புகளை ஏற்படலாம். ஆயினும் கவலைப்படத் தேவையில்லை. வாகனங்களுக்கு பராமரிப்புச் செலவுகள் செய்ய நேரிடும். தவிர்க்க இயலாத காரணங்களால் சகோதர, சகோதரிகளுக்குப் பணம் செலவழிப்பீர்கள். ஆனாலும் புதியவர்களின் நட்பால் கைப்பொருளை இழக்க நேரிடும் என்பதால் அதிக அறிமுகமில்லாதோரிடம் கவனமாக இருக்கவும்.  சுக போக வசதிகளை அனுபவிப்பீர்கள். பயணங்களில் அதிர்ஷ்ட தேவதை தரிசனம் தருவாள். இதனால் பொருளாதார வளமும், சேமிப்பும் உயரும். அரசாங்க உதவிகளும் கிடைக்கும். உங்களின் ஆசைகள் ஒன்றன் பின் ஒன்றாகப் பூர்த்தியடையும். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் சிறப்பாக முடியும். எதிர்பார்த்த பதவி உயர்வும், ஊதிய உயர்வும் பெறுவீர்கள். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவாலும், நட்பாலும் அலுவலகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். சில முக்கியப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பீர்கள். மற்றபடி உங்கள் வேலைகளை முன் கூட்டியே யோசித்துச் செய்தால் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். வியாபாரிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் வாணிபத்தில் ஈடுபடவும். எதையும் ஒரு முறைக்கு இரு முறை யோசித்துச் செயல்படுவது அவசியம். மற்றவர்களிடம் பண விஷயங்களில் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளவும். மற்றபடி வியாபாரத்தை சீரமைப்பதற்கு நீங்கள் சுயமாக மேற்கொள்ளும் முயற்சிகள் நிச்சயம் வெற்றியடையும். விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும். என்றாலும் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்ள எடுக்கும் முயற்சிகளில் தடை ஏற்படும். அதனால் கொள்முதல் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தவும். விவசாயக் கூலி வேலை செய்வோரோடு அனுசரித்துச் செல்லவும். அரசு மானியங்கள் உதவிக்கு வரும்; பழைய கடன்களும் வசூலாகும். அரசியல்வாதிகள், மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால் அதன் முழுப் பலன்களையும் அனுபவிக்க இயலாத அளவிற்கு மற்றவர்களால் சிறு குறுக்கீடுகளும் தோன்றும். எனினும் மனம் தளராமல் எதிரிகளைச் சமாளிப்பீர்கள். கடினமான வேலைகளையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். இதனால் புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். பயணங்களால் நன்மைகள் உண்டாகும். தொண்டர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையில் செல்லும். புதிய நட்புகளால் நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சக கலைஞர்களும், ரசிகர்களும் உங்களுக்கு நிறைவான ஆதரவு தருவார்கள். சுக ஸ்தானத்திலுள்ள கேது பகவானால் கடினமாக உழைத்து, உங்கள் முழுத் திறமையையும்  வெளிக்கொணர்வீர்கள். வருமானமும் சீராகவே இருக்கும். பெண்மணிகள், மன நிம்மதியைக் காண்பீர்கள். தர்ம காரியங்களிலும், தெய்வ வழிபாட்டிலும் ஈடுபடுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான ஆரம்பகட்ட வேலைகளைத் துவக்குவீர்கள். குடும்பத்தினருடன் சந்தோஷமாகப் பொழுதைக் கழிப்பீர்கள். கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பப் பொறுப்புகளை திருப்திகரமாக நிறைவேற்றி மகிழ்ச்சி அடைவீர்கள்.
மாணவமணிகள் உற்சாகமான மனநிலையுடன் கல்வியில் ஈடுபடுவீர்கள். உடல் வலிமை பெற தக்க பயிற்சிகளில் ஈடுபடவும். வருங்காலத் திட்டங்களுக்காக அடித்தளம் போடுங்கள். விளையாட்டுகளிலும் வெற்றிகளைப் பெறுவீர்கள். உங்களின் தன்னம்பிக்கை படிப்படியாக உயரும்.


பரிகாரம்: அருகிலிருக்கும் கோவிலில் உள்ள நவக்கிரங்களுக்கு அர்ச்சனை செய்யுங்கள். 

சொல்ல வேண்டிய மந்திரம்: ஸ்ரீதுர்க்கா ஸூக்தம் பாராயணம் செய்யலாம்.



லக்ன ரீதியான பலன்கள்:
லக்னம் இராசி பலன்கள் பரிகாரம்
மேஷம் கும்பம் 60/100 சஷ்டி கவசம் படிப்பது
ரிஷபம் கும்பம் 55/100 ஸ்ரீமஹால்க்ஷ்மி அஷ்டகம் சொல்வது
மிதுனம் கும்பம் 55/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது
கடகம் கும்பம் 70/100 ஸ்ரீசௌந்தர்யலஹரி சொல்வது
ஸிம்ஹம் கும்பம் 60/100 ஆதித்யஹ்ருதயம், மஹாலக்ஷிமி காயத்ரி, நாராயண காயத்ரி, நவக்ரஹ காயத்ரி சொல்வது
கன்னி கும்பம் 50/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது, மகான்களை வழிபடவும்
துலாம் கும்பம் 55/100 நவக்ரஹ ஸூக்தம் சொல்வது, ஸ்ரீஸூக்தம் சொல்வது.
விருச்சிகம் கும்பம் 65/100 கணபதி பூஜை மற்றும துர்ஹா ஸூக்தம் சொல்வது, முடிந்த வரையில் அம்பாள் நாமாவை சொல்வது
தனுசு கும்பம் 60/100 கோளறு பதிகம் சொல்லுங்கள், ஹனுமன் வழிபாடு
மகரம். கும்பம் 60/100 குலதெய்வ வழிபாடு செய்வது மற்றும் முன்னோர்களை வழிபடுவது.
கும்பம் கும்பம் 50/100 ஸ்ரீதுர்க்கா ஸூக்தம் பாராயணம் செய்யலாம்.
மீனம் கும்பம் 55/100 தன்வந்திரி ஸ்லோகம், காயத்ரி சொல்வது மற்றும் கணபதி உபநிஷத் சொல்வது
லக்னமே தெரியாது கும்பம் 50/100 ஸ்ரீதுர்க்கா ஸூக்தம் பாராயணம் செய்யலாம்.
குறிப்பு: [1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது?
நீங்கள் கும்பம் இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் கும்பம் இராசியில் பிறந்து கடகம் லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு 65% சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்: ஸ்ரீசௌந்தர்யலஹரி சொல்வது. எனக்கு லக்னமேத் தெரியாது ஆனால் கும்பம் இராசி என்பவர்கள் ஸ்ரீதுர்க்கா ஸூக்தம் பாராயணம் செய்யலாம்.

[2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.
நக்ஷத்திர வாரியாக சில குறிப்புகள்:
* நக்ஷத்திரங்கள்
பலன்கள் அவிட்டம் 3,4 ஸதயம் பூரட்டாதி் 1,2,3
இராசி கும்பம் கும்பம் கும்பம்
இராசியாதிபதி சனி சனி சனி
நக்ஷத்திர அதிபதி செவ்வாய் இராகு குரு
அதிதேவதைகள் வஸுக்கள் வருணன் அஜைகபாத்
கணம் இராக்ஷஸ கணம் இராக்ஷஸ கணம் மனுஷ கணம்
நாடி மத்ய பார்ஸுவ - வலது பார்ஸுவ - வலது
மிருகம் பெண் சிங்கம் பெண் குதிரை சிங்கம்
பக்ஷி வண்டு அண்டங்காக்கை உள்ளான்
விருக்ஷம் வன்னி கடம்பு மாமரம்(தோமா)
இரஜ்ஜு சிரோ கழுத்து இரஜ்ஜு வயிறு
வேதை நக்ஷத்ரம் மிருகசீர்ஷம், சித்திரை ஹஸ்தம் உத்திரம்
அதிர்ஷ்டம் தரும் எண்கள் 1, 3, 4, 5, 7, 9 1, 3, 4, 6, 7, 9 1, 3, 6, 7, 9
அதிர்ஷ்டம் தரும் திசைகள் கிழக்கு, தெற்கு கிழக்கு, தெற்கு கிழக்கு, தெற்கு
குறிப்பு:
அதிர்ஷ்டம் தரும் எண்களும், திசைகளும் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும். இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவானவையே.

No comments: