Saturday, December 8, 2012

பாண்டமங்கலம் கால பைரவருக்கு சிறப்பு லட்சார்ச்சனை

பரமத்திவேலூர் வட்டம், பாண்டமங்கலம் காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் உள்ள மகா கால பைரவருக்கு வியாழக்கிழமை இரவு சிறப்பு லட்சார்ச்சனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


கார்த்திகை மாதம் பூர நட்சத்திரத்தில் தேய்பிறை அஷ்டமியில் மகா கால பைரவர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு பாண்டமங்கலம் காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் உள்ள பைரவருக்கு, செவ்வாய்க்கிழமை சிறப்பு யாக வேள்வி தொடங்கி வியாழக்கிழமை வரை நடைபெற்றது. முன்னதாக திங்கள்கிழமை மாலை 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. வியாழக்கிழமை மாலை கலாச அபிஷேகம், யாக வேள்வி மற்றும் 18 வகையான மூலிகைகளால் அபிஷேகங்களும் நடைபெற்றன.
பின்னர், பைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மகா தீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரை தரிசித்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பாண்டமங்கலம் கால பைரவர் வழிபாட்டுக் குழுவினர் செய்திருந்தனர்.

No comments: