Wednesday, February 22, 2012

கடகம்: மார்ச் 1 - 15 ராசி பலன்கள்

கடகம்: புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் - இயல்பிலேயே தலைமை தாங்கும் பண்புடைய கடக ராசி வாசகர்களே இரண்டாமிடத்தில் செவ்வாய், நான்காமிடத்தில் சனி, ஐந்தில் ராகு, எட்டாமிடத்தில் சூரியன், ஒன்பதாமிடத்தில் புதன், பத்தாமிடத்தில் வியாழன், சுக்கிரன், சந்திரன், பன்னிரெண்டாமிடத்தில் கேது என கோள்களின் இயக்கம் நிலவுகிறது. 12ம் தியதி புதன் கும்பத்திற்கும், 14ம் தியதி தன வாக்கு குடும்பாதிபதி சூரியன் மீனத்திற்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.

தன வாக்கு குடும்ப ஸ்தானம் வலுப்பெற்றிருந்தாலும் தனஸ்தானத்தில் செவ்வாய் உலவுவது சிறப்பில்லை. எனவே குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வாக்கு கொடுப்பதற்கு முன் யோசனை செய்து கொள்ளவும். எனினும் அவர் யோககாரகர் என்பதனால் காரிய வெற்றி மற்றும் பெரும் பொருள் குவியும். எடுத்த செயல்கள், முயற்சிகள் யாவும் இன்னலின்றி முடியும். உடன் இருப்பவர்களால் எற்பட்ட தொல்லைகள் மறையும். சுப காரியங்களில் இதுவரை இருந்த சுணக்க நிலை மாறும்.

விரையஸ்தானாதிபதி புதன் பாக்கியத்திஸ்தானத்தில் உலவுவதால் சில விரையங்களை கொடுக்கத்தான் செய்யும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். வீடு கட்டுவதற்கு இருந்த தடைகள் மாறும். தந்தையின் வியாபாரத்தில் சிறிது கவனம் தேவை. பத்தாமிடத்தில் நிகழும் கிரக சேர்க்கையினால் மிகுந்த நன்மை உண்டாகும். வேலை செய்யுமிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிட்டும். தொழிலில் எதிர்பாராத வகையில் பெரும் லாபம் கிடைக்கும்.

கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கைவரப் பெறும். அரசியலில் உள்ளவர்களுக்கு மனதிலுள்ள எண்ணங்கள் ஈடேறும். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை.

சந்திராஷ்டம தினங்கள்: இல்லை

பரிகாரம்: ஸ்ரீ துர்க்கையை வழிபடவும். செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் அருகிலுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று வாருங்கள்

1 comment:

ஷைலஜா said...

நன்றி மிக.

மைதிலிநராயணன்