Wednesday, February 22, 2012

கும்பம்: மார்ச் 1 - 15 ராசி பலன்கள்

கும்பம்: (அவிட்டம் 3, 4, ஸதயம், பூரட்டாதி 1, 2, 3) எதிலும் முழுமையாக ஈடுபடும் கும்ப ராசி வாசகர்களே ராசியில் சூரியன், இரண்டாமிடத்தில் புதன், மூன்றாமிடத்தில் சந்திரன், குரு, சுக்கிரன், நான்காமிடத்தில் கேது, ஏழாமிடத்தில் செவ்வாய், ஒன்பாதமிடத்தில் சனி, பத்தாமிடத்தில் ராகு என கிரக இயக்கம் காணப்படுகிறது. 12ம் தியதி புதன் உங்கள் ராசிக்கும், 14ம் தியதி சூரியன் உங்கள் ராசியிலிருந்து மீனத்திற்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.

ராசிநாதன் சனி சுக்கிரன் வீட்டில் அமர அவரை யோககாரரான சுக்கிரன் பார்க்க மிகவும் சாதகமான நிலையில் உள்ளது. எனினும் ராசியில் சூரியன் இருப்பது உகந்த இடமல்ல. எனவே உடல்நலத்தில் கவனம் தேவை. குடும்பஸ்தானத்தில் அஷ்டமாதிபதி புதன் இருக்க அவரை செவ்வாய் பார்ப்பதும் குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒத்துப்போக வேண்டியதை காட்டுகிறது. மூன்றாமிடத்தில் குரு இருப்பதால் சகோதர சகோதரிகளுடன் உறவு சிறக்கும். உடன்பிறந்தவர்களுக்கு உயர் பதவி கிடைக்கும்.

மன உறுதி அதிகரிக்கும். பயணத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.  பாராட்டுகளும் விருகளும் கிடைக்கும். மத நம்பிக்கை அதிகரிக்கும். ஆன்மீக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். அவர்களுக்கு புதிய வாகனம் வாங்கி கொடுப்பீர்கள். புதிய உத்தியோகம் கிடைக்கும். உங்கள் தொழில் மூலம் பணவரவு அதிகரிக்கும். ஏழில் இருக்கும் செவ்வாயால் எதிரிகள் உங்கள் முன் அடங்குவர். செம்பு, தங்க வியாபாரிகள் பெருத்த லாபம் அடைவர்.

கலைத்துறையில் உள்ளவர்களுக்கு வெளிநாடு பயணங்களால் பணவரவு அதிகரிக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு தைரியம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம்.

சந்திராஷ்டம் தினங்கள்: மார்ச் 09, 10, 11

பரிகாரம்: சனிபகவானுக்கு விளக்கு ஏற்றுவதும், ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் செய்வது நன்மையைத் தரும்.

No comments: