Wednesday, February 22, 2012

ரிஷபம் - மார்ச் 1 - 15 ராசி பலன்கள்

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4ம் பாதம், ரோகினி, மிருகசீரிஷம் 1, 2ம் பாதம்
அனைவரையும் தனது நேர்மையால் கவர்ந்து இழுக்கும் ரிஷப ராசி வாசகர்களே ராசியில் கேது, நான்கில் செவ்வாய், ஆறில் சனி, ஏழில் ராகு, பத்தாமிடத்தில் சூரியன், பதினொன்றில் புதன், பன்னிரெண்டில் வியாழன், சந்திரன், ராசிநாதன் சுக்கிரனுமாக நவநாயகர்கள் வலம் வருகிறார்கள். மார்ச் 12ம் தியதி புதன் வக்ரமாகி பத்தாம் இடத்திற்கும், மார்ச் 14ம் தியதி பதினொன்றாம் ஸ்தானமாகிய லாபஸ்தானத்திற்கு சூரியனும் பெயர்ச்சியாகிறார்கள்.

ராசியில் கேது இருப்பினும் சுகஸ்தானம் வலிமை பெற்றிருப்பதால் சுகம் பெருகும். மகிழ்ச்சி கூடும். பொருள் வரவு அதிகரிக்கும். பழைய பாக்கிகள் எளிதில் வசூலாகும். புகழ் தேடி வரும். ஒரு பெரிய அரசியல் கட்சி அல்லது அரசாங்கத்தின் அனுகூலம் கிடைக்கப் பெறுவீர்கள்.

குல தெய்வ ஆராதனைகளிலும், புனிதப் பயணங்களிலும் ஈடுபடுவீர்கள். தாய் வழி உறவினர்களால் நன்மை ஏற்படும். ஆடை ஆபரணங்கள் சேரும் காலமிது. உடன்பிறப்புகளால் நன்மை கிட்டும். விளையாட்டுதுறையில் உள்ளவர்களுக்கு பரிசும், பாராட்டுதல்களும் கிடைக்கும். பயணங்களால் மகிழ்ச்சியும், ஆதாயமும் கிடைக்கும்.

நான்காமிடத்தை குரு பார்ப்பதாலும், நான்காம் வீட்டிற்குடையோன் நான்காம் வீட்டைப் பார்ப்பதாலும் நிலம், வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கை கூடி வரும். குழந்தைகளின் கல்வி, நடத்தை ஆகியன நன்றாக இருக்கும். நீதிமன்ற வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். வேதாந்த விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும்.

கலைத்துறையில் உள்ளவர்களுக்கு பாராட்டுகள் வரும். வெளிநாடு பயணங்களும் இனிதே அமையும். அரசியலில் உள்ளவர்களுக்கு எதிர் பார்த்த ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி பெறுவர்.

சந்திராஷ்டம நாட்கள்: இல்லை

பரிகாரம்: ஸ்ரீ சுதர்சனரை வழிபடுவது.

No comments: