Wednesday, February 22, 2012

கன்னி: மார்ச் 1 - 15 ராசி பலன்கள்

கன்னி:  (உத்திரம் 2, 3 ,4, ஹஸ்தம், சித்திரை 1, 2) உழைப்பினை உலகிற்கு சொல்லும் கன்னி ராசி வாசகர்களே இரண்டாமிடத்தில் சனி, மூன்றாமிடத்தில் ராகு, ஆறாமிடத்தில் சூரியன், ஏழில் ராசிநாதன் புதன், எட்டாமிடத்தில் சந்திரன், குரு, சுக்கிரன், ஒன்பதாமிடத்தில் கேது, பன்னிரெண்டாமிடத்தில் செவ்வாய் என கிரக நிலவரம் உள்ளது. 12ம் தியதி ராசிநாதன் புதன் கும்பத்திற்கும், 14ம் தியதி சூரியன் மீனத்திற்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.

தன விரையஸ்தானமும் சுகஸ்தானமும், குருவின் பார்வையைப் பெறுகின்றன. எனவே பொருள் வரவு நிறைந்திருக்கும். குடும்ப ஸ்தானத்தில் சனி இருப்பதால் குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். எனினும் குரு பார்வை இருப்பதால் உடனடியாக மறையும். மூன்றாம் இடத்தில் ராகு இருப்பதாலும், மூன்றாம் இடத்தை செவ்வாய் பார்ப்பதாலும் உடன் பிறந்தோரிடம் மனக்கசப்பு ஏற்படலாம். எனவே அவர்கலை அனுசரித்து செல்லுங்கள். சுற்றியிருப்பவர்கள் உங்கள் சொல்லை செயலாக்க உங்களுக்கு உதவி புரிவர். வீண் குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். குறுகிய பிரயாணமோ நீண்ட பிரயாணமோ எதுவாகினும் கவனமுடன் இருங்கள்.

பூமி யோகம் உண்டு. பழைய வீட்டை புதுப்பிக்கும் எண்ணம் உள்ளவர்களுக்கு உதவிகள் வந்து சேரும். தாய் வழி ஆதரவு அதிகரிக்கும். வாகன் மாற்றம் செய்யும் சூழல் ஏற்படும். வாகனங்களை பிரயோகபடுத்தும் முன் சரி பார்த்து பின்னர் உபயோகப்படுத்தவும். இல்லம் தேடி வரும் விருந்தினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

ஆடை ஆபரணங்களுக்கு செலவு செய்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்ரம் நிகழும். தொல்லை தந்தவர்கள் விலகிச் செல்வார்கள். பிரபலங்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் வளர்ச்சி பெருகும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

கலை துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்கள் சில சிரமங்களை சந்திக்க நேரிடலாம். மாணவர்கள் பாராட்டும் பரிசும் பெறுவதற்கு ஏற்ற காலமிது.

சந்திராஷ்டம் தினங்கள்: இல்லை

பரிகாரம்: திருமாலை புதன் தோறும் வழிபடுங்கள். வராஹி தேவியை தரிசனம் செய்யுங்கள்.

No comments: